Tuesday, June 07, 2016

பரசுராமரும் இறப்பார்! - துரோண பர்வம் பகுதி – 070

Even Parashurama will die! | Drona-Parva-Section-070 | Mahabharata In Tamil

(அபிமன்யுவத பர்வம் – 40)

பதிவின் சுருக்கம் : ஜமதக்னியின் மகனான பரசுராமரின் கதையைச் சொன்ன நாரதர்; இருபத்தோரு முறை உலகை க்ஷத்திரியர்களற்றதாகச் செய்த பரசுராமர்; அவர் செய்த வேள்விகள்; அவர் அளித்த கொடைகள்; அவரும் இறப்பார் என்று சொன்ன நாரதர்…


நாரதர் {சிருஞ்சயனிடம்} சொன்னார், "வீரர்கள் அனைவராலும் வழிபடப்படும் வீரரும், பெரும் புகழைக் கொண்டவரும், ஜமதக்னியின் மகனும், பெரும் தவசியுமான ராமரும் {பரசுராமரும்} (தன் வாழ்நாள் காலத்தில்) மனநிறைவடையாமலே உயிரை இழக்கப் போகிறார். அவர் {பரசுராமர்}, பூமியில் உள்ள தீமைகள் அனைத்தையும் வேரோடு அழித்துவிட்டு, புராதன யுகத்தை {மீண்டும்} ஏற்படச் செய்தவராவார். நிகரற்ற செழிப்பை அடைந்த அவரிடம் எந்தக் களங்கமும் காணப்படவில்லை. க்ஷத்திரியர்களால் தன் தந்தை கொல்லப்பட்டு, தன் கன்று திருடப்பட்ட பிறகு, அதுவரை எந்த எதிரியிடமும் தோற்காத கார்த்தவீரியனை எந்தத் தற்புகழ்ச்சியும் செய்யாமல் கொன்றார்.


ஏற்கனவே மரணத்தின் கோரப்பற்களுக்கிடையில் இருந்த ஆறு லட்சத்து நாற்பதாயிரம் {6,40,000} க்ஷத்திரியர்களைத் தன் வில்லால் கொன்றார். அந்தப் படுகொலையில், பிராமணர்களை வெறுப்பவர்களான தந்தகூர நாட்டைச் சேர்ந்த பதினாலாயிரம் க்ஷத்திரியர்களைக் கொன்றார். உலக்கையினால் ஆயிரம் பேரையும், வாளால் ஆயிரம் பேரையும், தூக்கிட்டு {மரத்தில் சுருக்கிட்டு} ஆயிரம் பேரையும் கொன்றார் [1].

[1] பம்பாய்ப் பதிப்பில் இன்னும் அதிகம் இருக்கிறது என்றும், வங்கப் பதிப்புகளில் அவை இல்லை என்றும் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில் இன்னும் அதிகமாக இருக்கிறது, அது பின்வருமாறு: “அவர் மீண்டும் தந்தகூரமென்கிற தேசத்தில் பிராமணர்களை வெறுப்பவர்களான வேறு பதினாலாயிரம் க்ஷத்திரியர்களை நிக்ரஹித்துச் சம்ஹாரம் செய்தார்; உலக்கையினால் ஆயிரம் பேர்களை அடித்தார்; ஆயிரம் பேர்களைக் கத்தியினால் வெட்டினார்; ஆயிரம் பேர்களை மரத்தில் சுருக்கிட்டுத் தூக்கினார்; ஆயிரம் பெயர்களை ஜலத்தில் அமிழ்த்தினார்; ஆயிரம் பேர்களைப் பற்களையுடைத்து அவ்வாறே காதுகளையும் இழந்தவர்களாச் செய்தார். பிறகு, ஏழாயிரம் பேர்களை உக்கிரமான புகையைக் குடிக்கும்படி செய்தார். மீதியுள்ள எதிரிகளைக் கட்டி வைத்துக் கொன்றும், அவர்களுடைய தலையைப் பிளந்தார். குணாவதிக்கு வடபுறத்தில் காண்டவவனத்திற்குத் தெற்கிலும் மலைச்சார்பில் லட்சக்கணக்கான ஹேஹய தேசத்து வீரர்கள் யுத்தத்தில் கொல்லப்பட்டனர்” என்று இருக்கிறது.

விவேகியான ஜமதக்னி மகன் {பரசுராமர்}, தன் தந்தையின் படுகொலையைக் கண்டு சினம் கொண்டதால், தங்கள் தேர்கள், குதிரைகள் மற்றும் யானைகளுடன் கூடிய வீரமிக்கப் போர்வீரர்கள் களத்தில் கொல்லப்பட்டுக் கிடந்தனர். அந்தச் சந்தர்ப்பத்தில் ராமர் {பரசுராமர்}, பத்தாயிரம் {10000} க்ஷத்திரியர்களைத் தன் கோடரியால் கொன்றார். (தன் எதிரிகள்) பேசிய மூர்க்கமான பேச்சுகளை அவரால் அமைதியாகத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

பிராமணர்களில் முதன்மையானோரில் பலர், எப்போதெல்லாம் பிருகு குலத்தின் ராமர் பெயரைச் சொல்லித் துன்பக் குரலை எழுப்பினரோ, அப்போதெல்லாம் அந்த ஜமதக்னியின் வீர மகன் {பரசுராமர்}, ஆயிரமாயிரமாக இருந்த காஸ்மீரர்கள், தரதர்கள், குந்திகள், க்ஷுத்ரகர்கள், மாலவர்கள், அங்கர்கள், வங்கர்கள், கலிங்கர்கள், விதேஹர்கள், தாம்ரலிப்தகர்கள், ரக்ஷோவாஹர்கள், வீதஹோத்ரர்கள், திரிகர்த்தர்கள், மார்த்திகாவதர்கள், சிபிக்கள் ஆகியோர் அனைவரையும் தன் கூர்மையான கணைகளால் கொன்றார்.

மாகாணத்துக்கு மாகாணம் அடுத்தடுத்து சென்று க்ஷத்திரியர்களை ஆயிரக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் இப்படியே கொன்றார். குருதிப்பெருவெள்ளத்தை உண்டாக்கி, இந்திரகோபங்களைப் போலவோ, பந்துஜீவம் {Vandujiva} என்ற காட்டுப்பழத்தைப் போலவோ சிவப்பான குருதியால் பல தடாகங்களை நிறைத்து [2], (பூமியின்) பதினெட்டுத் தீவுகள் அனைத்தையும் தன் ஆளுகைக்குள் கொண்டு வந்த அந்தப் பிருகுகுல மகன் {பரசுராமர்}, பிராமணர்களுக்கு அபரிமிதமான பரிசுகளை வழங்கிப் பெரும் புண்ணியத்தைத் தரும் நூறு வேள்விகளைச் செய்தார்.

[2] வேறொரு பதிப்பில் இவ்வரி, “கோடிக்கணக்காகவும், லட்சக்கணக்காவும், ஆயிரக்கணக்காகவும் கொல்லப்பட்ட க்ஷத்ரியர்களுடைய பட்டுப்பூச்சிக்கும், செம்பருத்திப் பூவிற்கும் சமமான நிறமுள்ள ரத்த வெள்ளங்களால் தடாகங்களை நிரப்பினர்” என்று இருக்கிறது.

ஜமதக்னியின் மகனான ராமர் {பரசுராமர்}, விதிப்படி அமைக்கப்பட்டதும், முழுவதும் தங்கத்தாலானதும், பதினெட்டு நாளங்கள் உயரம் {முப்பத்திரண்டு முழம்} கொண்டதுமான வேள்விப்பீடத்தையும், பல்வேறு விதங்களிலான ரத்தினங்கள் மற்றும் கற்கள் நிறைந்ததும், நூற்றுக்கணக்கான கொடிமரங்களால் அலங்கரிக்கப்பட்டதும், வீட்டு மற்றும் காட்டு விலங்குகளால் நிறைந்ததுமான இந்தப் பூமியையும் கசியபருக்கு வேள்விக் கொடையாக அளித்தார். மேலும் ராமர் {பரசுராமர்}, அவருக்கு {கசியபருக்கு} தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மகத்தான யானைகளையும் அளித்தார். உண்மையில், பூமியைக் கள்வர்கள் அனைவரிடமும் இருந்து விடுவித்து, அவளை {பூமாதேவியை} அருள் நிறைந்த நேர்மையான மனிதர்களால் நிறைத்த ராமர் {பரசுராமர்}, தனது பெரும் குதிரை வேள்வியில் கசியபருக்கு அவளை {பூமியைத்} தானமாக அளித்தார்.

இருபத்தோரு முறை பூமியை க்ஷத்திரியர்களற்றதாக்கி, நூற்றுக்கணக்கான வேள்விகளைச் செய்த அந்தப் பலங்கொண்ட வீரர் {பரசுராமர்}, அவளை {பூமியைப்} பிராமணர்களுக்குத் தானமளித்தார். ஏழு தீவுகளுடன் கூடிய இந்தப் பூமியை மரீசிக்குக் {மரீசியின் மகனான கசியபருக்குக்} கொடுத்தார். அப்போது கசியபர் ராமரிடம் {பரசுராமரிடம்}, “என் உத்தரவின் பேரில் இந்தப் பூமியை விட்டுப் போவாயாக” என்றார். கசியபரின் வார்த்தையின் பேரில், அந்தப் பிராமணரின் {கசியபரின்} உத்தரவுக்குக் கீழ்ப்படிய விரும்பிய அந்தப் போர்வீரர்களில் முதன்மையானவர் {பரசுராமர்}, தன் கணைகளால் பெருங்கடலையே ஒதுங்கச் செய்து, மகேந்திரம் என்று அழைக்கப்பட்ட மலைகளில் சிறந்த மலைக்குச் சென்று அங்கேயே தொடர்ந்து வாழத் தொடங்கினார்.

இத்தகு எண்ணிலா குணங்களைக் கொண்டவரும், பெரும் காந்தியைக் கொண்டவரும், பிருகுக்களின் {பிருகு குலத்தவரின்} புகழை அதிகரித்தவருமான அந்தப் புகழ்பெற்ற ஜமதக்னியின் மகனே கூட இறக்கவே செய்வார். அவர் உன் மகனுக்கும் {சுவர்ணஷ்டீவினுக்கும்} மேம்பட்டவராவார் (மேம்பட்டவரான அவரும் இறப்பார்). எனவே, எந்த வேள்வியையும் செய்யாத, வேள்விக் கொடை எதையும் அளிக்காத உன் மகனுக்காக {சுவர்ணஷ்டீவினுக்காக} நீ வருந்தாதே. நான்கு முக்கிய அறங்களை {தவத்துறவுகள், உண்மை, கருணை, ஈகை ஆகியவற்றைப்} பொறுத்தவரை, உனக்கு மேம்பட்டவர்களும், மனிதர்களில் முதன்மையானோருமான இவர்கள் யாவரும் இறந்தார்கள், ஓ! சிருஞ்சயா, இவர்களைப் போன்றோரும் இறப்பார்கள்” {என்றார் நாரதர்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்