Wednesday, June 08, 2016

யுதிஷ்டிரனின் கவலை! - துரோண பர்வம் பகுதி – 071

The melancholy of Yudhishthira! | Drona-Parva-Section-071 | Mahabharata In Tamil

(அபிமன்யுவத பர்வம் – 41)

பதிவின் சுருக்கம் : நாரதரின் விளக்கத்தால் நிறைவடைந்த சிருஞ்சயன்; சிருஞ்சயன் மகனை உயிர்மீட்டளித்த நாரதர்; அபிமன்யுவின் நற்கதியைச் சொல்லி அவனை மீட்க முடியாது என யுதிஷ்டிரனிடம் சொன்ன வியாசர்; தனஞ்செயனை நினைத்து வருந்திய யுதிஷ்டிரன்…


வியாசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "(கேட்பவரின்) வாழ்நாளை அதிகரிக்க வல்லவையான இந்தப் பதினாறு {16} மன்னர்களின் புனிதமான வரலாற்றைக் கேட்ட பிறகு, மன்னன் சிருஞ்சயன் எதையும் சொல்லாமல் அமைதியாக இருந்தான். சிறப்புமிக்க முனிவரான நாரதர், இப்படி அமைதியாக அமர்ந்திருந்த அவனிடம் {சிருஞ்சயனிடம்}, "ஓ! பெரும் பிரகாசம் கொண்டவனே {சிருஞ்சயா}, என்னால் உரைக்கப்பட்ட வரலாறுகளைக் கேட்டாயா? அவற்றின் கருத்துகளை நீ புரிந்து கொண்டாயா? அல்லது சூத்திர மனைவியைக் கொண்ட மறுபிறப்பாளர் {பிராமணர்} ஒருவரால் செய்யப்பட்ட சிராத்தம் போல அவை அனைத்தும் தொலைந்தனவா?" என்று கேட்டார் {நாரதர்}.


இப்படிச் சொல்லப்பட்ட சிருஞ்சயன் கூப்பிய கரங்களுடன் {நாரதரிடம்}, "ஓ! தவத்தைச் செல்வமாகக் கொண்டவரே {நாரதரே}, பிராமணர்களுக்கு அபரிமிதமான பரிசுகளை வழங்கிப் பெரும் வேள்விகளைச் செய்திருக்கும் பழங்காலத்தின் இந்த அரச முனிகள் அனைவரின் புகழத்தக்க அற்புதமான வரலாறுகளையும் கேட்டுச் சூரியனின் கதிர்களால் விலகிய இருளைப் போல என் துன்பமனைத்தும் அற்புதமான வகையில் மறைந்தன. நான் இப்போது என் பாவங்களனைத்தில் இருந்தும் தூய்மையடைந்தேன், இப்போது நான் எந்த வலியையும் உணரவில்லை {துன்பமடையவில்லை}. நான் இப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்குச் சொல்வீராக" என்று {நாரதரிடம்} பதிலுரைத்தான் {சிருஞ்சயன்}.

நாரதர் {சிருஞ்சயனிடம்}, "உன் துன்பம் விலகியது நற்பேறாலேயே. நீ விரும்பும் வரத்தைக் கேட்பாயாக. நீ கேட்கும் அனைத்தையும் நீ அடைவாய். உண்மையற்ற எதையும் நாம் சொல்வதில்லை" என்றார்.

சிருஞ்சயன் {நாரதரிடம்}, "ஓ! புனிதமானவரே {நாரதரே}, நீர் என்னிடம் நிறைவுடன் இருக்கிறீர் என்பதிலேயே நான் மகிழ்கிறேன் {நிறைவடைகிறேன்}. ஓ! புனிதமானவரே, நீர் எவனுடன் நிறைவுடன் இருக்கிறீரோ, அவனால் இங்கே அடையமுடியாதது எதுவுமில்லை" என்றான்.

நாரதர் {சிருஞ்சயனிடம்}, "வேள்வியில் கொல்லப்படும் விலங்கைப் போலக் கள்வர்களால் வீணாகக் கொல்லப்பட்ட உன் மகனைக் {சுவர்ணஷ்டீவினைக்} கடினமான நரகத்தில் இருந்து மீட்டு மீண்டும் உனக்குத் தருகிறேன்" என்று சொன்னார்.

வியாசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "பிறகு, (துயரில் வாடும் தந்தையிடம் {சிருஞ்சயனிடம்}) மனம் நிறைந்த முனிவரால் {நாரதரால்} அளிக்கப்பட்ட பிள்ளையான அந்தச் சிருஞ்சயன் மகன் {சுவர்ணஷ்டீவின்} அற்புதமான காந்தி கொண்டவனாக, குபேரனின் மகனுக்கு ஒப்பானவனுமாகத் தோன்றினான். மன்னன் சிருஞ்சயன் மீண்டும் தன் மகனைச் சந்தித்ததால் மிகவும் மகிழ்ந்தான். மேலும் அவன் புண்ணியத்தைத் தரும் பல வேள்விகளைச் செய்து அந்த வேள்விகளின் முடிவில் அபரிமிதமான வேள்விக் கொடைகளைத் தானமளித்தான்.

அந்தச் சிருஞ்சயன் மகன் {சுவர்ணஷ்டீவின்} தான் பிறந்த நோக்கத்தை நிறைவேற்றவில்லை. அவன் எந்த வேள்வியையும் செய்யவில்லை, மேலும் அவனுக்குப் பிள்ளையும் இல்லை. துணிச்சலற்ற நிலையில், போரில் அல்லாமல் இரங்கத்தக்க வகையில் அவன் அழிந்தான். இதன் காரணமாகவே அவனை மீண்டும் உயிரோடு கொண்டு வர முடிந்தது. அபிமன்யுவைப் பொறுத்தவரை அவன் துணிச்சல்மிக்கவனாகவும், வீரம் நிறைந்தவனாகவும் இருந்தான். தன் வாழ்வின் நோக்கங்களை நிறைவு செய்த அந்தச் சுபத்திரையின் துணிச்சல் மிக்க மகன் {அபிமன்யு}, தன் எதிரிகளை ஆயிரக்கணக்கில் சிதறடித்து, போர்க்களத்தில் விழுந்து இந்த உலகத்தைவிட்டுச் சென்றான் [1].

[1] வேறொரு பதிப்பில் இந்தப் பத்தி, "புருஷார்த்தங்களை இழந்தவனும், பயப்படுகிறவனும், யுத்தஸன்னாஹத்தை அறியாதவனும், யாகஞ்செய்யாதவனும், குழந்தையில்லாதவனுமான அந்தச் சிருஞ்சய குமாரன் அவரால் திரும்பவும் பிழைத்தான். சூரனும், வீரனும் கிருதார்த்தனுமான அபிமன்யுவோ ஆயிரக்கணக்கான சத்துருக்களைக் கொன்று யுத்தரங்கத்தில் முன்புறத்தில் அடிக்கப்பட்டுச் சுவர்க்கத்தை அடைந்தான்" என்று இருக்கிறது

{வேறு எதனாலும்} அடைவதற்கரியதும், பிரம்மச்சரியம், ஞானம், சாத்திர அறிவு, முதன்மையான வேள்விகள் ஆகியவற்றால் அடையத்தக்கதுமான உலகங்களை உன் மகன் {அபிமன்யு} அடைந்தான். தங்கள் அறச்செயல்களின் மூலம் சொர்க்கத்தை அடையவே எப்போதும் அறிவாளிகள் விரும்புவர். சொர்க்கத்தில் வாழ்பவர்கள் இந்த உலகத்தை விரும்ப மாட்டார்கள். எனவே, விரும்பிய எந்தப் பொருளும் அர்ஜுனன் மகனால் {அபிமன்யுவால்} அடையப்படாமல் இல்லை ஆகையால், போரில் கொல்லப்பட்டு இப்போது சொர்க்கத்தில் வசித்து வரும் அவனை {அபிமன்யுவை} மீண்டும் உலகத்திற்குக் கொண்டு வர முடியாது.

கண்களை மூடி ஆழமான சிந்தனையில் உள்ள யோகியரோ, பெரும் வேள்விகளைச் செய்தவர்களோ, பெரும் தவத்தகுதியைக் கொண்டோரோ அடையும் நிலையான இலக்கை உன் மகன் {அபிமன்யு} அடைந்துவிட்டான். மரணத்திற்குப் பிறகு புது உடலை அடைந்த அந்த வீரன் {அபிமன்யு}, அழியாத கதிர்களால் ஆன தன்னொளியுடன் ஒரு மன்னனைப் போலப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறான். உண்மையில், மறுபிறப்பாளர்கள் {பிராமணர்கள்} அனைவராலும் விரும்பப்படுவதும் சந்திரனின் சாரம் கொண்டதுமான தன் சொந்த உடலையே அபிமன்யு மீண்டும் அடைந்திருக்கிறான். உன் துயரத்திற்கு அவன் தகுந்தவனல்ல. இஃதை அறிந்து, அமைதியடைந்து உன் எதிரிகளைக் கொல்வாயாக. மனோபலம் உனதாகட்டும்.

ஓ! பாவமற்றவனே {யுதிஷ்டிரா}, உயிரோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கே நமது துயரம் தேவைப்படுகிறது, சொர்க்கத்தை அடைந்தவர்களுக்கு அது தேவைப்படாது. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, வாழ்ந்து கொண்டிருப்போர் எவனுக்காக {இறந்து போன யாருக்காக} வருந்துகிறார்களோ, அவனது பாவங்கள் அதிகரிக்கின்றன. எனவே, விவேகியான ஒருவன், வருந்துவதைக் கைவிட்டு, (இறந்து போனவரின்) நன்மைக்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதன், (இறந்தவனின்) இன்பம், மகிமை மற்றும் மகிழ்ச்சியைக் குறித்தே சிந்திக்க வேண்டும். இஃதை அறிந்த ஞானியர், துயரம் வலி மிகுந்தது என்பதால் துயருறுவதில் ஈடுபடுவதில்லை. இஃதை உண்மையென அறிந்து கொண்டு எழுவாயாக! (உன் நோக்கத்தை அடைய) முயற்சிப்பாயாக! வருந்தாதே.

மரணத்தின் {மரணதேவியின்} தோற்றத்தையும், அவளது ஒப்பற்ற நோன்புகளையும், அனைத்து உயிர்களிடமும் அவள் கொண்ட பாரபட்சமற்ற நடத்தையை நீ கேட்டாய். செழிப்பு நிலையில்லாதது என்பதை நீ கேட்டாய். சிருஞ்சயனின் இறந்த போன மகன் {சுவர்ணஷ்டீவின்} மீட்கப்பட்டான் என்பதையும் நீ கேட்டாய். ஓ! கல்விமானான மன்னா {யுதிஷ்டிரா}, வருந்தாதே. அமைதி உனதாகட்டும். நான் செல்கிறேன்!" என்று சொன்ன அந்தப் புனிதமான வியாசர், அங்கேயே அப்போதே மறைந்து போனார்.

பேச்சின் தலைவரும், மேகமூண்ட ஆகாயத்தின் நிறத்தைக் கொண்டவரும், புத்திமான்களுள் முதன்மையானவரும், புனிதமானவருமான அந்த வியாசர் சென்றதும், யுதிஷ்டிரன், அறவழிகளில் செல்வத்தை அடைந்தவர்களும், சக்தியில் பெரும் இந்திரனுக்கே நிகரானவர்களுமான பழங்காலத்தின் பெரும் ஏகாதிபதிகளான இவர்கள் அனைவரின் வேள்வித்தகுதி மற்றும் செழிப்பைக் கேட்டதன் விளைவாக ஆறுதலை அடைந்து, அந்த ஒப்பற்ற மனிதர்களை மனப்பூர்வமாகப் பாராட்டி துன்பத்தில் இருந்து விடுபட்டான். எனினும், துக்கம் நிறைந்த இதயத்தோடு கூடிய அவன் {யுதிஷ்டிரன்}, "தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} என்ன சொல்லப் போகிறோம்?" என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான்" {என்றான் சஞ்சயன் திருதராஷ்டிரனிடம்}.

******************அபிமன்யுவத பர்வம் முற்றும்******************


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்