Tuesday, June 14, 2016

சுபத்திரைக்கு ஆறுதல் கூறிய கிருஷ்ணன்! - துரோண பர்வம் பகுதி – 077

Krishna consoled Subhadra! | Drona-Parva-Section-077 | Mahabharata In Tamil

(பிரதிஜ்ஞா பர்வம் – 06)

பதிவின் சுருக்கம் : அர்ஜுனனும், கிருஷ்ணனும் கோபமாக இருப்பதை நினைத்துக் கவலையடைந்த தேவர்கள்; கௌரவர்களுக்குத் தெரிந்த தீய சகுனங்கள்; சுபத்திரைக்கு ஆறுதலளிக்கக் கிருஷ்ணனை அனுப்பிய அர்ஜுனன்; கிருஷ்ணனின் ஆறுதல் வார்த்தைகள்…


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "வாசுதேவன் {கிருஷ்ணன்} மற்றும் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகிய இருவரும், கவலை மற்றும் துயரத்தால் பீடிக்கப்பட்டு, இரு பாம்புகளென அடிக்கடி பெருமூச்சைவிட்டுக் கொண்டே இரவில் தூங்காதிருந்தனர். நரன் மற்றும் நாராயணன் ஆகிய அந்த இருவரும் சினத்தில் இருப்பதை அறிந்த தேவர்களும், வாசவனும் {இந்திரனும்} “என்ன ஆகப்போகிறதோ?” என்றெண்ணி மிகவும் கவலையடைந்தனர்.


வறண்ட காற்று ஆபத்தை முன்னறிவித்தபடியே கடுமையாக வீசத் தொடங்கியது. சூரிய வட்டிலில் தலையற்ற முண்டமும், கதாயுதமும் {பரிகமும்} தோன்றின. மேகமற்றிருந்தாலும், மின்னலின் கீற்றுகளோடு கலந்த உரத்த இடிமுழக்கங்கள் அடிக்கடி கேட்கப்பட்டன. மலைகள், நீர்நிலைகள் மற்றும் காடுகளுடன் கூடிய பூமாதேவி குலுங்கினாள். மகரங்களின் வசிப்பிடமான கடல்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} கொந்தளித்துப் பெருகியது. வழக்கமாக ஓடும் திசைக்கு எதிராக ஆறுகள் பாய்ந்தன. தேர்வீரர்கள், குதிரைகள் மற்றும் யானைகளின் கீழ் உதடுகளும், மேல் உதடுகளும் துடிக்கத் தொடங்கின. மனித ஊனுண்ணிகளை மகிழ்ச்சிப்படுத்தும்படியும், யமனின் ஆட்சிப்பகுதியில் உள்ளோர் பெருமளவில் அதிகரிக்கப் போவதை முன்னறிவித்தபடியும், விலங்குகள் (போர்க்களத்தில்) மலமும் சிறுநீரும் கழித்தவாறே துன்பத்துடன் உரக்கக் கதறின. மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்த செய்யும் இந்தக் கடும் சகுனங்களைக் கண்டும், வலிமைமிக்க அர்ஜுனனின் கடும் சபதத்தைக் கேட்டும், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே} உமது வீரர்கள் அனைவரும் மிகவும் கலக்கமடைந்தனர்.

அப்போது, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பாகசாசனனின் {இந்திரன்} மகன் {அர்ஜுனன்} கிருஷ்ணனிடம், “தன் மருமகளோடு {உத்தரையோடு} இருக்கும் உன் தங்கை சுபத்திரையைத் தேற்றச் செல்வாயாக. ஓ! மாதவா {கிருஷ்ணா} மருமகளையும் {உத்தரையையும்}, அவளது தோழிகளையும் தேற்றுவாயாக. ஓ! தலைவா {கிருஷ்ணா}, உண்மை நிறைந்த ஆறுதல் வார்த்தைகளால் அவர்களைத் தேற்றுவாயாக” என்றான் {அர்ஜுனன்}. இப்படிச் சொல்லப்பட்ட வாசுதேவன் {கிருஷ்ணன்} உற்சாகமற்ற இதயத்தோடு அர்ஜுனன் வசிப்பிடத்திற்குச் சென்று, தன் மகனின் {அபிமன்யுவின்} மரணத்தால் ஏற்பட்ட துயரால் பீடிக்கப்பட்டுக் கவலையில் இருந்த தன் தங்கையைத் {சுபத்திரையைத்} தேற்றத் தொடங்கினான்.

வாசுதேவன் {கிருஷ்ணன் சுபத்திரையிடம்}, ”ஓ! விருஷ்ணி குலத்துப் பெண்ணே {சுபத்திரையே}, உனது மருமகளுடன் {உத்தரையுடன்} சேர்ந்து உன் மகனுக்காகத் {அபிமன்யுவிற்காகத்} துயரப்படாதே. ஓ! மருண்டவளே, அனைத்து உயிரினங்களுக்கும் காலத்தால் நிர்ணயிக்கப்பட்ட ஒரு முடிவு உண்டு. பெருமைமிக்கப் பரம்பரையில் பிறந்த வீரனுக்கு, அதிலும் குறிப்பாக க்ஷத்திரியனுக்கு உரிய முடிவையே உன் மகன் அடைந்திருக்கிறான். எனவே நீ வருந்தாதே. பெரும் விவேகமும், தன் தந்தைக்கு இணையான ஆற்றலையும் கொண்ட அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {அபிமன்யு}, க்ஷத்திரிய வழக்கத்தின்படியே, வீரர்கள் ஆசைப்படும் ஒரு முடிவை அடைந்திருப்பது நற்பேறாலேயே.

எண்ணற்ற எதிரிகளை வீழ்த்தி, அவர்களை யமனின் முன்னிலைக்கு அனுப்பி வைத்த அவன் {அபிமன்யு}, அனைத்து விருப்பங்களையும் அருள்பவையும், அறவோருக்கு உரியவையுமான நித்தியமான உலகங்களை அடைந்திருக்கிறான். தவம், பிரம்மச்சரியம், சாத்திர அறிவு, ஞானம் ஆகியவற்றால் அறவோர் அடையும் முடிவையே உன் மகனும் அடைந்திருக்கிறான். வீரனின் தாயும், வீரனின் மனைவியும், வீரனின் மகளும், வீரர்களுக்கு உறவினருமான நீ, ஓ! இனியவளே {சுபத்திரையே}, உயர்ந்த முடிவை அடைந்திருக்கும் உன் மகனுக்காக {அபிமன்யுவிற்காக} வருந்தலாகாது.

ஓ! அழகான பெண்ணே, ஒரு குழந்தையைக் கொன்றவனும், பாவகரக் காரியத்தைச் செய்தவனுமான அந்தச் சிந்துக்களின் இழிந்த ஆட்சியாளன் {ஜெயத்ரதன்}, இந்த இரவு கடந்ததும், தன் நண்பர்கள் மற்றும் உறவினருடன் சேர்ந்து தன் வெறியின் கனியை அடையப்போகிறான். அவன் {ஜெயத்ரதன்}, இந்திரனின் வசிப்பிடத்திற்கே சென்றாலும், பார்த்தனின் {அர்ஜுனனின்} கரங்களில் இருந்து தப்ப மாட்டான். அந்தச் சிந்துவின் {சைந்தவனின்} தலை அவனது உடலில் இருந்து வெட்டப்பட்டுச் சமந்தபஞ்சகத்திற்கு {குருசேத்திரத்திற்கு} வெளியே உருண்டது என்பதை நாளை நீ கேட்பாய்! உன் கவலையை விடுவாயாக; வருந்தாதே.

க்ஷத்திரியன் ஒருவனின் கடமைகளைத் தன் முன் கொண்ட உன் வீர மகன் {அபிமன்யு}, ஆயுதம் தாங்குவதைத் தொழிலாகக் கொண்ட பிறரும், அறவோரும் அடையும் முடிவையே {கதியையே} அடைந்திருக்கிறான். ஓ! அழகான பெண்ணே, அகன்ற மார்பு மற்றும் வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், பின்வாங்காதவனும், தேர்வீரர்களை நசுக்குபவனுமான உன் மகன் {அபிமன்யு} சொர்க்கத்திற்குச் சென்றிருக்கிறான். (உன் இதயத்திலிருந்து) இந்நோயை விரட்டுவாயாக.

தன் தந்தைமார், தாய்வழி உறவினர், பெரும் ஆற்றலைக் கொண்ட வலிமைமிக்கத் தேர்வீரர்கள் ஆகியோருக்கு கீழ்ப்படிந்த அந்த வீரன் {அபிமன்யு}, ஆயிரக்கணக்கான எதிரிகளைக் கொன்ற பிறகே மரணத்துக்கு இரையானான். ஓ! ராணி {சுபத்திரையே}, உன் மருமகளை {உத்தரையைத்} தேற்றுவாயாக. ஓ! க்ஷத்திரியப் பெண்ணே, அதிகமாக வருந்தாதே. ஓ! மகளே {தங்கை சுபத்திரையே}, நாளை நீ இனிய செய்தியைக் கேட்கவிருப்பதால் உன் துயரை விரட்டுவாயாக.

பார்த்தன் {அர்ஜுனன்} ஏற்ற உறுதிமொழி {சபதம்} சாதிக்கப்பட வேண்டும். அது வேறுவகையிலாகாது. உன் கணவன் {அர்ஜுனன்} செய்ய முயன்றது எதுவும் சாதிக்கப்படாமல் நீண்டதில்லை. மனிதர்கள் அனைவரும், பாம்புகள், பிசாசங்கள், இரவுலாவிகள் அனைவரும், பறவைகள், தேவர்கள் அனைவரும், அசுரர்கள் ஆகியோரும் போர்க்களத்தில் சிந்துக்களின் ஆட்சியாளனுக்கு {ஜெயத்ரதனுக்கு} உதவினாலும் கூட, அவன் {ஜெயத்ரதன்} நாளை இருக்கமாட்டான்” என்றான் {கிருஷ்ணன்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்