Sunday, July 03, 2016

புறமுதுகிட்ட சகுனி! - துரோண பர்வம் பகுதி – 095

Sakuni turned his back! | Drona-Parva-Section-095 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 11)

பதிவின் சுருக்கம் : துரோணரோடு மோதிய பாண்டவப்படையினர்; விராடனுடன் விந்தானுவிந்தர்களும், சிகண்டி மற்றும் திரௌபதியின் மகன்களோடு பாஹ்லீகனும், காசி இளவரசனோடு சைப்யனும், சாத்யகியோடு துச்சாசனனும், குந்திபோஜன் மற்றும் கடோத்கசனோடு அலம்புசனும், நகுலன் மற்றும் சகாதேவனோடு சகுனியும், யுதிஷ்டிரனோடு சல்லியனும், பீமசேனனுடன் விவிம்சதி, சித்திரசேனன் மற்றும் விகர்ணன் ஆகியோர் மோதியது...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! மன்னா, குருக்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில் நடைபெற்ற அந்த அற்புதமான போரை விவரமாகச் சொல்கிறேன் கேளும். தமது வியூகத்தின் வாயிலில் {முகப்பில்} நின்று கொண்டிருந்த பரத்வாஜரின் மகனை {துரோணரை} அணுகிய பார்த்தர்கள், துரோணரின் படைப்பிரிவைப் பிளப்பதற்காக மூர்க்கமாகப் போரிட்டனர். துரோணரும் தம் படைகளின் துணையுடன், தமது வியூகத்தைப் பாதுகாக்க விரும்பி, புகழடைய முயன்று கொண்டிருந்த பார்த்தர்களுடன் போரிட்டார்.


கோபத்தால் தூண்டப்பட்ட அவந்தியின் விந்தனும், அனுவிந்தனும், உமது மகனுக்கு {துரியோதனனுக்கு} நன்மை செய்ய விரும்பி, பத்து கணைகளால் விராடனைத் தாக்கினர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, விராடனும், போரில் பெரும் ஆற்றலுடன் திகழ்ந்த அவ்வீரர்கள் இருவரையும் அணுகி, அவர்களுடனும், அவர்களைப் பின்தொடர்ந்து வந்தவர்களுடனும் போரிட்டான். அவர்களுக்குள் நடைபெற்றதும், எல்லைகடந்த கடுமை கொண்டதுமான அந்தப் போரில் இரத்தம் தண்ணீராக ஓடியது. காட்டில் சிங்கத்திற்கும், மதங்கொண்ட, வலிமைமிக்க இரு யானைகளுக்கு இடையில் நேரும் மோதலுக்கு ஒப்பாக அஃது இருந்தது.

யக்ஞசேனனின் {துருபதனின்} வலிமைமிக்க மகன் {சிகண்டி}, உயிர்நிலைகளையே துளைக்கவல்ல, கடுமையான, கூரிய கணைகளால் அந்தப் போரில் மன்னன் பாஹ்லீகனைப் பலமாகத் தாக்கினான். கோபத்தால் நிறைந்த பாஹ்லீகனும், தங்கச் சிறகுகளைக் கொண்டவரையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான ஒன்பது நேரான கணைகளால் யக்ஞசேனன் மகனை {சிகண்டியை} ஆழமாகத் துளைத்தான். அடர்த்தியான கணைகள் மற்றும் ஈட்டிகளின் மழையுடன் அவ்வீரர்கள் இருவருக்கும் இடையில் நடைபெற்ற அந்தப் போரானது மிகக் கடுமையடைந்தது. மருண்டோரின் அச்சங்களையும், வீரர்களின் இன்பத்தையும் அஃது அதிகரித்தது. அவர்களால் ஏவப்பட்ட கணைகள் ஆகாயத்தையும், திசைப்புள்ளிகள் அனைத்தையும் முழுமையாக மறைத்து, எதுவும் தெளிவாகக் காணமுடியாதபடி ஆக்கின.

துருப்புகளுக்குத் தலைமையில் நின்ற கோவாசனர்களின் மன்னன் சைப்பியன், அந்தப் போரில், யானையொன்று மற்றொரு யானையோடு போரிடுவதைப் போல வலிமைமிக்கத் தேர்வீரனான காசிகளின் இளவரசனோடு போரிட்டான். பாஹ்லீகர்களின் மன்னன் கோபத்தால் தூண்டப்பட்டு, ஐந்து புலன்களுக்கு எதிராகப் போராடும் மனத்தைப் போல வலிமைமிக்கத் தேர்வீரர்களான திரௌபதியின் மகன்கள் ஐயவரை எதிர்த்துப் போரிட்டான். அந்த இளவரசர்கள் ஐவரும், ஓ! உடல்படைத்தோரில் முதன்மையானவரே, உடலோடு எப்போதும் போராடும் புலன்நுகர்பொருட்களைப் போல அனைத்துப் பங்கங்களில் இருந்தும் தங்கள் கணைகளை ஏவி, அந்த எதிரியோடு {பாஹ்லீகனோடு} போரிட்டனர்.

உமது மகன் துச்சாசனன், கூர்முனைகள் கொண்ட ஒன்பது நேரான கணைகளால் விருஷ்ணி குலத்து சாத்யகியைத் தாக்கினான். பெரும் வில்லாளியான அந்தப் பலவானால் {துச்சாசனனால்} ஆழத் துளைக்கப்பட்டவனும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றல் கொண்டவனுமான சாத்யகி தன் புலனுணர்வை ஓரளவுக்கு இழந்தான் {சிறிது மயக்கமடைந்தான்}. விரைவில் தேற்றமடைந்த அந்த விருஷ்ணி குலத்தோன் {சாத்யகி}, கங்க இறகுகளிலான சிறகமைந்த பத்து கணைகளால் அந்த வலிமைமிக்க வில்லாளியான உமது மகனை {துச்சாசனனை} விரைவாகத் துளைத்தான். ஒருவரையொருவர் ஆழமாகத் துளைத்துக் கொண்டு, தங்கள் ஒவ்வொருவரின் கணைகளாலும் பீடிக்கப்பட்ட அவர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இரண்டு கின்சுகங்களை {பலாச மரங்களைப்} போல அபாரமாகத் தெரிந்தனர்.

குந்திபோஜனின் கணைகளால் பீடிக்கப்பட்ட {ராட்சசன்} அலம்புசன், கோபத்தால் நிறைந்து அழகாகப் பூத்துக் குலுங்கும் கின்சுகத்தை {பலாச மரத்தைப்} போலத் தெரிந்தான். பிறகு அந்த ராட்சசன், பல கணைகளால் குந்திபோஜனைத் துளைத்துத் தன் படையின் தலைமையில் நின்று பயங்கரக் கூச்சல்களையிட்டான். அந்த வீரர்கள் அந்தப் போரில் தங்களுக்குள் மோதிக் கொண்ட போது, பழங்காலத்தின் சக்ரனையும் {இந்திரனையும்}, அசுரன் ஜம்பனையும் போலத் துருப்புகள் அனைத்திற்கும் தெரிந்தனர். மாத்ரியின் மகன்கள் இருவரும் {நகுலனும், சகாதேவனும்}, கோபத்தால் நிறைந்து, தங்களுக்கு எதிராகப் பெரும் குற்றமிழைத்திருந்த காந்தார இளவரசன் சகுனியைத் தங்கள் கணைகளால் கடுமையாகத் தாக்கினர்.

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அங்கே நடந்த படுகொலைகள் பயங்கரமானவையாக இருந்தன. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உம்மால் தோற்றுவிக்கப்பட்டு, கர்ணனால் வளர்க்கப்பட்டு, உமது மகன்களால் பாதுகாக்கப்பட்டதுமான (பாண்டவர்களின்) கோப நெருப்பு இப்போது பெருகி மொத்த உலகத்தையும் எரிக்கத் தயாராக இருக்கிறது. பாண்டு மகன்கள் இருவரின் கணைகளால் களத்தைவிட்டு புறங்காட்டி ஓட நிர்பந்திப்பட்ட சகுனி தன் ஆற்றலை வெளிப்படுத்த இயலாமல் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை அறியாதிருந்தான். அவன் புறமுதுகிட்டதைக் கண்டவர்களும் வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான அந்தப் பாண்டுவின் மகன்கள் இருவரும் {நகுல, சகாதேவர்கள்}, பெரும் மலையின் மீது மழைத்தாரைகளைப் பொழியும் இரு மேகத் திரள்களைப் போல அவன் {சகுனி} மீது மீண்டும் தங்கள் கணைகளைப் பொழிந்தனர். எண்ணற்ற நேரான கணைகளால் தாக்கப்பட்ட அந்தச் சுபலனின் மகன் {சகுனி}, வேகமான தன் குதிரைகளால் சுமக்கப்பட்டுத் துரோணரின் படைப்பிரிவை நோக்கி ஓடினான்.

துணிச்சல்மிக்கக் கடோத்கசன், அந்தப் போரில் ராட்சசன் அலம்புசனை நோக்கி தன்னால் இயன்றதைவிடச் சற்றே குறைவான மூர்க்கத்துடன் விரைந்தான். பழங்காலத்தில் ராமனுக்கும், ராவணனுக்கும் இடையில் நடந்ததைப் போல அந்த இருவருக்கிடையில் நடந்த அந்தப் போர் காண்பதற்கு அச்சமூட்டுவதாக இருந்தது. மன்னன் யுதிஷ்டிரன், அந்தப் போரில் ஐநூறு கணைகளால் மத்ரர்களின் ஆட்சியாளனைத் {சல்லியனைத்} துளைத்துவிட்டு, மேலும் ஏழாலும் அவனை மீண்டும் துளைத்தான். அதன்பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பழங்காலத்தில் அசுரன் சம்பரனுக்கும் தேவர்கள் தலைவனுக்கும் {இந்திரனுக்கும்} இடையில் நடைபெற்றதற்கு ஒப்பாக அவர்களுக்குள் நடந்த மிக அற்புதமான போரானது தொடங்கியது. உமது மகன்களான விவிம்சதி, சித்திரசேனன் மற்றும் விகர்ணன் ஆகியோர் பெரும் படை சூழ பீமசேனனுடன் போரிட்டனர்" {என்றான் சஞ்சயன்} [1].

[1] பெரும்பாலும் பகுதி 94ல் சொல்லப்பட்ட செய்திகளே பகுதி 95லும் மீண்டும் கூறப்பட்டிருக்கிறது. ஒருவேளை பகுதி 94 இடைசெருகலாக இருக்கலாம். இஃது ஆய்வுக்குரியதே.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்