Tuesday, July 05, 2016

திருஷ்டத்யும்னனைக் காத்த சாத்யகி! - துரோண பர்வம் பகுதி – 096

Satyaki rescued Dhrishtadyumna! | Drona-Parva-Section-096 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 12)

பதிவின் சுருக்கம் : பீமசேனன் ஜலசந்தனையும், யுதிஷ்டிரன் கிருதவர்மனையும், திருஷ்டத்யும்னன் துரோணரையும் எதிர்த்து விரைந்தது. துரோணரும் திருஷ்டத்யும்னனும் ஏற்படுத்திய பேரழிவு; போர்க்களத்தின் வர்ணனை; துரோணரின் மரணக்கணையில் இருந்து திருஷ்டத்யும்னனைக் காத்த சாத்யகி...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் அந்தக் கடும்போர் தொடங்கிய போது, மூன்று பிரிவுகளாகப் பிரிந்திருந்த கௌரவர்களை எதிர்த்துப் பாண்டவர்கள் விரைந்தனர். அந்தப் போரில் பீமசேனன் வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட ஜலசந்தனை எதிர்த்தும், யுதிஷ்டிரன் தன் துருப்புகளின் தலைமையில் நின்று கிருதவர்மனை எதிர்த்தும் விரைந்தனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யும்னன், சூரியன் தன் கதிர்களை ஏவுவதைப் போலே தன் கணைகளை இறைத்தபடி துரோணரை எதிர்த்து விரைந்தான். அப்போது, போரிடும் ஆவலுடன் கோபத்தால் நிறைந்திருந்த குருக்கள் மற்றும் பாண்டவர்களின் வில்லாளிகள் அனைவருக்கும் இடையில் அந்தப் போர் தொடங்கியது.


வீரர்கள் அனைவரும் அச்சமற்ற வகையில் ஒருவருடன் ஒருவர் போரிட்டதால் பயங்கரப் படுகொலைகள் நேர்ந்த போது, வலிமைமிக்கத் துரோணர் பாஞ்சாலர்களின் வலிமைமிக்க இளவரசனுடன் {திருஷ்டத்யும்னனுடன்} போரிட்டார். அம்மோதலில் அவர் {துரோணர்} ஏவிய கணைகளின் மேகங்கள் காண்போர் அனைவரையும் ஆச்சரியத்தில் நிறைத்தன. துரோணரும், பாஞ்சாலர்களின் இளவரசனும், தாமரைக்காட்டுக்கு ஒப்பாகத் தெரியும்படி ஆயிரக்கணக்கில் மனிதர்களின் தலைகளை வெட்டி போர்க்களத்தில் அவற்றை {தலைகளை} இறைத்தனர்.

ஒவ்வொரு படைப்பிரிவிலும், ஆடைகள், ஆபரணங்கள், ஆயுதங்கள், கொடிமரங்கள், கவசங்கள் ஆகியன விரைவில் தரையில் விரவிக் கிடந்தன. குருதிக் கறை படிந்த தங்கக் கவசங்கள் மின்னலுடன் கூடிய மேகங்களைப் போலத் தெரிந்தன. வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பிறர், முழுமையாக ஆறு முழ நீளம் கொண்ட தங்கள் பெரிய விற்களை வளைத்தபடி தங்கள் கணைகளால் யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்களை வீழ்த்தினர். துணிவுள்ள உயர் ஆன்ம வீரர்களுக்கு இடையில் நடைபெற்ற அந்தப் பயங்கர ஆயுத மோதலில், வாள்கள், கேடயங்கள், விற்கள், தலைகள், கவசங்கள் ஆகியன எங்கும் விரவி கிடப்பது காணப்பட்டது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} எண்ணற்ற தலையில்லா முண்டங்கள், போர்க்களத்தின் மத்தியில் எழும்புவது காணப்பட்டது. ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, கழுகுகள், கங்கங்கள், நரிகள் ஆகியவையும், ஊனுண்ணும் விலங்குகள் பிறவும், வீழ்ந்துவிட்ட மனிதர்கள், குதிரைகள் மற்றும் யானைகளின் சதையை உண்டு, அவற்றின் குருதியைக் குடித்து, அல்லது அவற்றின் மயிர்களைப் பிடித்து இழுத்து, அல்லது அவற்றின் மஜ்ஜையை நக்கி, அல்லது அவற்றைக் கொத்தி, அவற்றின் உடல்களையும், அறுபட்ட அங்கங்களையும் இழுத்துக் கொண்டு, அல்லது அவற்றின் தலைகளைத் தரையில் உருட்டிக் கொண்டும் அங்கே இருந்தன.

போரில் திறம்வாய்ந்தவர்களும், ஆயுதங்களில் சாதித்தவர்களுமான போர்வீரர்கள், போரிட உறுதியாகத் தீர்மானித்து, புகழை மட்டுமே வேண்டி அந்தப் போரில் தீவிரமாகப் போரிட்டனர். களத்ததில் திரிந்த போராளிகள் பலர், வாள்வீரர்களின் பல்வேறு பரிமாணங்களைச் செய்து காட்டினர். போர்க்களத்தில் நுழைந்த மனிதர்கள் சினத்தால் நிறைந்து, கத்திகள், ஈட்டிகள், வேல்கள், சூலங்கள், போர்க்கோடரிகள், கதாயுதங்கள், பரிகங்கள் மற்றும் பிற வகை ஆயுதங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தியும், வெறுங்கைகளாலும் கூட ஒருவரையொருவர் கொன்றனர். தேர்வீரர்கள் தேர்வீரர்களுடனும், குதிரைவீரர்கள், குதிரைவீரர்களுடனும், யானைகள், முதன்மையான யானைகளுடனும், காலாட்படை வீரர்கள் காலாட்படைவீரர்களுடனும் போரிட்டனர். முற்றிலும் பித்துப் பிடித்த மதங்கொண்ட யானைகள் பல உரக்கப் பிளிறிக் கொண்டு, விளையாட்டுக்களங்களில் செய்வதைப் போல ஒன்றையொன்று கொன்றன.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருவரையொருவர் கருதிப்பாராமல் போராளிகளுக்குள் நடைபெற்ற அந்தப் போரில், திருஷ்டத்யும்னன் தன் குதிரைகளோடு துரோணரின் குதிரைகளைக் கலக்க {மோதச்} செய்தான். காற்றின் வேகத்தைக் கொண்டவையும், புறாக்களின் வெண்மையைக் கொண்டவையும் {திருஷ்டத்யும்னனின் குதிரைகளும்}, இரத்தச் சிவப்பானவையுமான {துரோணரின் குதிரைகளுமான} அந்தக் குதிரைகள் போரில் ஒன்றோடொன்று கலந்து மிக அழகாகத் தெரிந்தன. உண்மையில் அவை, மின்னலோடு கூடிய மேகங்களைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தன. ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பகைவீரர்களைக் கொல்பவனும், பிருஷதன் மகனுமான வீர திருஷ்டத்யும்னன், மிக அருகே வந்துவிட்ட துரோணரைக் கண்டு, தன் வில்லை விட்டுவிட்டு, கடுஞ்சாதனையைச் செய்வதற்காகத் தன் வாளையும் கேடயத்தையும் எடுத்துக் கொண்டான். அவன் {திருஷ்டத்யும்னன்} துரோணருடைய தேரின் ஏற்காலைப் பிடித்து அதற்குள் {துரோணரின் தேருக்குள்} நுழைந்தான். அவன் சில வேளைகளில் நுகத்தடியின் மத்தியிலும், சில வேளைகளில் அதன் இணைப்புகளிலும், சில வேளைகளில் குதிரைகளுக்குப் பின்பும் நின்றான். அப்படி அவன் {திருஷ்டத்யும்னன்} கையில் வாளுடன், துரோணரின் சிவப்பு குதிரைகளின் முதுகில் விரைவாக ஏறி நகர்ந்து கொண்டிருந்த போது, பின்னவரால் {துரோணரால்} அவனைத் தாக்குவதற்குத் தகுந்த வாய்ப்பைக் கண்டறியமுடியவில்லை. இவை அனைத்தும் எங்களுக்கு அற்புதம் நிறைந்ததாகத் தெரிந்தன. உண்மையில், உணவு மீது கொண்ட விருப்பத்தின் காரணமாகப் பருந்தானது காட்டுக்குள் பாய்வதைப் போலவே துரோணரின் அழிவுக்காகத் தன் தேரில் இருந்து பாய்ந்த திருஷ்டத்யும்னனின் பாய்ச்சலும் தெரிந்தது.

அப்போது துரோணர், நூறு சந்திரன்களுடன் அலங்கரிக்கப்பட்டிருந்த துருபதன் மகனின் {திருஷ்டத்யும்னனின்} கேடயத்தை ஒரு நூறு கணைகளால் அறுத்து, மேலும் பத்து கணைகளால் அவனது வாளையும் அறுத்தார். பிறகு அந்த வலிமைமிக்கத் துரோணர், அறுபத்துநான்கு கணைகளால் தம் எதிராளியின் குதிரைகளைக் கொன்றார். மேலும் இரண்டு பல்லங்களால் பின்னவனின் {திருஷ்டத்யும்னனின்} கொடிமரத்தையும் குடையையும் அறுத்து, பிறகு அவனது பார்ஷினி தேரோட்டிகள் இருவரையும் கொன்றார். மேலும் பெரும் வேகத்தோடு தம் வில்லின் நாணைத் தமது காது வரை இழுத்து, (எதிரியின் மீது) வஜ்ரத்தை வீசும் வஜ்ரதாரியைப் போல அவன் {திருஷ்டத்யும்னன்} மீது மரணக் கணையொன்றை ஏவினார்.

ஆனால், சாத்யகி, பதினான்கு கூரிய கணைகளால் துரோணரின் அந்த மரணக்கணையை அறுத்தான். இப்படியே அந்த விருஷ்ணி வீரன் {சாத்யகி}, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, காட்டு மன்னனிடம் {சிங்கத்திடம்} அகப்பட்ட மானைப் போல, ஆசான்களில் முதன்மையான அந்த மனிதர்களில் சிங்கத்திடம் {துரோணரிடம்} அகப்பட்ட திருஷ்டத்யும்னனை மீட்டான். இப்படியே அந்தச் சிநிக்களின் காளை {சாத்யகி}, பாஞ்சாலர்களின் இளவரசனை {திருஷ்டத்யும்னனைக்} காத்தான். அந்தப் பயங்கரப் போரில் பாஞ்சாலர்களின் இளவரசனைக் காத்த சாத்யகியைக் கண்ட துரோணர், அவன் {சாத்யகி} மீது இருபத்தாறு கணைகளை விரைவாக ஏவினார். சிநியின் பேரனும் {சாத்யகியும்}, துரோணர் சிருஞ்சயர்களை விழுங்குவதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, பதிலுக்கு இருபத்தாறு கணைகளால் பின்னவரின் {துரோணரின்} நடுமார்பில் துளைத்தான். அப்போது துரோணரை அந்தச் சாத்வத வீரன் {சாத்யகி} எதிர்த்துச் சென்ற போது, வெற்றியை விரும்பிய பாஞ்சாலத் தேர்வீரர்கள் அனைவரும், திருஷ்டத்யும்னனைப்  போரில் இருந்து விரைவாக விலக்கிச் சென்றனர்" {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்