Tuesday, September 06, 2016

சாத்யகியைக் கண்ட கிருஷ்ணார்ஜுனர்கள்! - துரோண பர்வம் பகுதி – 140

Krishna and Arjuna beheld Satyaki! | Drona-Parva-Section-140 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 56)

பதிவின் சுருக்கம் : சாத்யகியிடம் இருந்து தப்பி ஓடிய திரிகர்த்தர்கள்; சூரசேனர்கள், கலிங்கர்கள் ஆகியோரைக் கடந்து அர்ஜுனனை நோக்கிச் சென்ற சாத்யகி; சாத்யகியைப் புகழ்ந்த கிருஷ்ணன்; யுதிஷ்டிரன் மீது கொண்ட கவலையின் நிமித்தமாகச் சாத்யகியின் வருகையால் மகிழாத அர்ஜுனன்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அப்போது, தங்கக் கொடிமரங்களைக் கொண்டவர்களான திரிகர்த்த நாட்டின் பெரும் வில்லாளிகள், சாதனைக்குத் தகுந்த அனைத்து பெரும் செயல்களையும் சாதித்த போர்வீரனும், தனஞ்சயனின் {அர்ஜுனனின்} வெற்றியை விரும்பி, கடல் போன்று எல்லையற்ற அந்தப் படைக்குள் ஊடுருவி, துச்சாசனனின் தேரை எதிர்த்து விரைந்து வருபவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான சாத்யகியை அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டனர் .(1, 2)

தேர்களின் பெருங்கூட்டத்தால் அனைத்துப் பக்கங்களிலும் அவனது {சாத்யகியினது} வழியைத் தடுத்த அந்தப் பெரும் வில்லாளிகள், சினத்தால் தூண்டப்பட்டுக் கணைமாரியால் அவனை {சாத்யகியை} மறைத்தனர்.(3)

கரைகளற்ற கடலுக்கு ஒப்பானதும், உள்ளங்கையொலிகளால் நிறைக்கப்பட்டதும், வாள்கள், ஈட்டிகள் மற்றும் கதாயுதங்கள் ஆகியவை நிரம்பியதுமான அந்தப் பாரதப் படைக்கு மத்தியில் ஊடுருவிச் சென்றவனும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனுமான சாத்யகி, அந்தப் போரில் பிரகாசமாக ஒளிர்ந்தவர்களும், தன் எதிரிகளுமான அந்த ஐம்பது {50} (திரிகர்த்த) இளவரசர்களையும் தனியாகவே வென்றான்.(4,5)


போரில், அந்நிகழ்வின் போது, சிநியின் பேரனுடைய {சத்யகியின்} நடத்தை மிக அற்புதமாக இருந்ததை நாங்கள் கண்டோம். மேற்கில் அவனைக் {சாத்யகியைக்} கண்டவுடனேயே கிழக்கிலும் அவனைக் கண்டோம் என்ற அளவுக்கு அவனது (நகர்வுகளின்) நளினம் மிகச் சிறப்பாக இருந்தது.(6)

நூறு போர்வீர்களைத் தனக்குள் கொண்டவனைப் போல, வடக்கிலும், தெற்கிலும், கிழக்கிலும் மேற்கிலும், இன்னும் பிற துணைத் திசைகளிலும் ஆடிக்கொண்டே திரிபவனாக அந்த வீரன் {சாத்யகி} தெரிந்தான்.(7)

சிங்கத்தின் விளையாட்டு நடையுடன் கூடிய சாத்யகியைக் கண்ட திரிகர்த்த வீரர்கள், அவனது ஆற்றலைத் தாங்கிக் கொள்ள முடியாமல், தங்கள் படையை (தங்கள் நாட்டினரின் படைப்பிரிவுகளை) நோக்கி தப்பி ஓடினர்.(8)

அப்போது சூரசேனர்களில் துணிச்சல்மிக்கப் போர்வீரர்கள் யானையை அங்குசத்தால் தாக்கும் பாகனைப் போலத் தங்கள் கணைமாரிகளால் சாத்யகியைத் தாக்கி அவனைத் தடுக்க முயன்றனர்.(9)

நினைத்துப் பார்க்க முடியாத அளவு ஆற்றலைக் கொண்ட வீரனான அந்த உயர் ஆன்ம சாத்யகி, அவர்களுடன் குறுகிய காலம் போராடிய பிறகு, கலிங்கர்களுடன் போரிடத் தொடங்கினான்.(10)

பிறகு, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட சாத்யகி, கடக்கப்பட முடியாத அந்தக் கலிங்கப் படைப்பிரிவைக் கடந்து, பிருதையின் {குந்தியிப்} மகனான தனஞ்சயனின் {அர்ஜுனனின்} அருகே சென்றான்.(11) நீரில் நீந்திக் களைத்தவன் நிலத்தை அடைவதைப் போல யுயுதானன் {சாத்யகி}, மனிதர்களில் புலியான தனஞ்சயனை {அர்ஜுனனைக்} கண்டு ஆறுதல் அடைந்தான்.(12)

அவன் {சாத்யகி} வருவதைக் கண்ட கேசவன் {கிருஷ்ணன்}, பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்}, “ஓ! பார்த்தா {அர்ஜுனா}, அதோ சிநியின் பேரன் {சாத்யகி} உன்னைத் தேடி வருகிறான்.(13)

ஓ! கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனே {அர்ஜுனா}, அவன் {சாத்யகி} உன் சீடனும், நண்பனுமாவான். அந்த மனிதர்களில் காளை {சாத்யகி}, போர் வீரர்கள் அனைவரையும் துரும்பாகக் கருதி அவர்களை வென்றிருக்கிறான்.(14)

உன் உயிரைப் போல உன் அன்புக்குரியவனான அந்தச் சாத்யகி, ஓ! கிரீடி {அர்ஜுனா}, கௌரவப் போர்வீரர்களுக்குப் பயங்கரக் காயங்களை ஏற்படுத்தியபடியே உன்னிடம் வருகிறான்.(15)

இந்தச் சாத்யகி, ஓ! பல்குனா {அர்ஜுனா}, தன் கணைகளால் துரோணரையும், போஜ குலத்தின் கிருதவர்மனையும் நசுக்கிய பிறகு உன்னிடம் வருகிறான்.(16)

ஓ! பல்குனா {அர்ஜுனா}, ஆயுதங்களில் திறன் கொண்டவனும், துணிச்சல்மிக்கவனுமான இந்தச் சாத்யகி, யுதிஷ்டிரரின் நன்மையைக் கருதி, போர்வீரர்களில் முதன்மையானோர் பலரைக் கொன்றுவிட்டு உன்னிடம் வருகிறான்.(17)

ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, வலிமைமிக்கச் சாத்யகி, (கௌரவத்) துருப்புகளுக்கு மத்தியில் அடைவதற்கு மிக அரிய சாதனைகளைச் செய்துவிட்டு, உன்னைக் காணவிரும்பி இதோ உன்னிடம் வருகிறான்.(18)

ஓ! பார்த்தா {அர்ஜுனா}, போரில் தனித்தேரில் {தனியாக} வந்த சாத்யகி, ஆசானின் {துரோணரின்} தலைமையிலான வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலருடன் போரிட்டுவிட்டு உன்னிடம் வருகிறான்.(19)

ஓ! பார்த்தா, தர்மனின் மகனால் {யுதிஷ்டிரரால்} அனுப்பப்பட்ட இந்தச் சாத்யகி, தன் சொந்த கரங்களின் வலிமையை நம்பி கௌரவப் படையைப் பிளந்து கொண்டு உன்னிடம் வருகிறான்.(20)

ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, எவனுக்கு ஒப்பாகக் கௌரவர்களில் எந்தப் போர்வீரனும் இல்லையோ, போரில் வெல்லப்பட முடியாதவனான அந்தச் சாத்யகி உன்னிடம் வருகிறான்.(21)

இந்தச் சாத்யகி, ஓ! பார்த்தா {அர்ஜுனா}, கணக்கற்ற போர்வீரர்களைக் கொன்றுவிட்டு, பசுக்கூட்டத்தின் மத்தியில் இருந்து வரும் சிங்கத்தைப் போல, கௌரவத் துருப்புகளுக்கு மத்தியில் இருந்து விடுபட்டு உன்னிடம் வருகிறான்(22).

இந்தச் சாத்யகி, ஓ! பார்த்தா{அர்ஜுனா}, ஆயிரக்கணக்கான மன்னர்களின் தாமரை மலர்களைப் போன்ற அழகான முகங்களைப் பூமியில் பரவச் செய்தபடி உன்னிடம் வருகிறான்.(23)

தம்பிகளுடன் கூடிய துரியோதனனைப் போரில் வென்ற சாத்யகி, ஜலசந்தனைக் கொன்றுவிட்டு விரைவாக வருகிறான்.(24) கௌரவர்களைத் துரும்பாகக் கருதிய சாத்யகி, குருதியைச் சேறாகக் கொண்ட இரத்த ஆற்றை உண்டாக்கிவிட்டு உன்னிடம் வருகிறான்” என்றான் {கிருஷ்ணன்}.(25)

மகிழ்ச்சியற்ற அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, கேசவனிடம் {கிருஷ்ணனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான். “ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, சாத்யகியின் வருகை எனக்குச் சிறிதும் ஏற்புடையதாக இல்லை.(26)

ஓ! கேசவா {கிருஷ்ணா}, நீதிமானான மன்னர் யுதிஷ்டிரர் எவ்வாறு இருக்கிறார் என்பதை நான் அறியவில்லை. இப்போது அவர் {யுதிஷ்டிரர்} சாத்வதனிடம் {சாத்யகியிடம்} இருந்து பிரிந்திருப்பதால், அவர் {யுதிஷ்டிரர்} உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்று நான் ஐயுறுகிறேன்.(27)

ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, இந்தச் சாத்யகி மன்னரை {யுதிஷ்டிரரைப்} பாதுகாத்திருக்க வேண்டும். ஓ! கிருஷ்ணா, அப்படியிருக்கையில் யுதிஷ்டிரரை விட்டு விட்டு என்னைத் தேடி இவன் ஏன் வருகிறான்?(28)

ஆகவே, மன்னர் {யுதிஷ்டிரர்} துரோணரிடம் கைவிடப்பட்டிருக்கிறார். சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} இன்னும் கொல்லப்படவில்லை. அதோ, பூரிஸ்ரவஸ் சாத்யகியை எதிர்த்துப் போரிடச் செல்கிறான்.(29)

ஜெயத்ரதன் நிமித்தமாக என்மீது கனமான சுமை உள்ளது. மன்னர் {யுதிஷ்டிரர்} எவ்வாறு இருக்கிறார் என்பதை நான் அறியவேண்டும், சாத்யகியையும் நான் பாதுகாக்க வேண்டும்.(30)

மேலும், ஜெயத்ரதனையும் நான் கொல்ல வேண்டும். சூரியனோ கீழே சாய்கிறான். வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட சாத்யகியைப் பொறுத்தவரை, அவன் களைத்திருக்கிறான், அவனது ஆயுதங்களும் தீர்ந்துவிட்டன.(31)

ஓ! மாதவா {கிருஷ்ணா}, அவனது குதிரைகளும், அவற்றின் சாரதியும் கூடக் களைத்துப் போயிருக்கின்றனர். மறுபுறம், பூரிஸ்ரவசோ களைப்பற்றவனாக இருக்கிறான். ஓ! கேசவா {கிருஷ்ணா}, அவன் {பூரிஸ்ரவஸ்} தனக்குப் பின்னால் அவனை ஆதரிப்பவர்களையும் கொண்டிருக்கிறான்.(32)

இம்மோதலில் சாத்யகிக்கு வெற்றி அடைவானா? கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனும், சிநிக்களில் காளையும், பெரும் சக்தி கொண்டவனுமான அந்தச் சாத்யகி, பெருங்கடலையே கடந்த பிறகு, பசுவின் குளம்படியை [1] (தன் முன்} அடைந்து அடிபணிந்துவிடுவானா?(33)

[1] பசுவின் கால் குளம்படியால் ஏற்படும் சிறு தடம் எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

குருக்களில் முதன்மையானவனும், ஆயுதங்களில் திறம் கொண்டவனுமான அந்தப் பூரிஸ்ரவசுடன் மோதி, சாத்யகி நற்பேறை அடைவானா? ஓ! கேசவா, நீதிமானான மன்னர் யுதிஷ்டிரர் செய்த பிழை என்றே இதை நான் கருதுகிறேன்.(34, 35)

அவர் {யுதிஷ்டிரர்}, ஆசானை {துரோணரைக்} குறித்த அச்சமனைத்தையும் கைவிட்டு (தன் பக்கத்தில் இருந்த) சாத்யகியை அனுப்பியிருக்கிறார். வானுலாவும் பருந்தொன்று இறைச்சித் துண்டை நோக்கி செல்வதைப் போலவே, நீதிமானான மன்னர் யுதிஷ்டிரரைப் பிடிக்கவே துரோணர் எப்போதும் முயல்வார். ஆபத்துகள் அனைத்தில் இருந்தும் மன்னர் {யுதிஷ்டிரர்} விடுபட்டிருப்பாரா?” {என்றான் அர்ஜுனன்}.(36)
--------------------------------------------------------------------------------------------------------------
துரோண பர்வம் பகுதி – 140ல்  வரும் மொத்த சுலோகங்கள் 36


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்