Saturday, September 03, 2016

மன்னன் அலம்புசனைக் கொன்ற சாத்யகி! - துரோண பர்வம் பகுதி – 139

Satyaki killed King Alamvusha! | Drona-Parva-Section-139 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 55)

பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரன் கவலை; சாத்யகிக்கும் அலம்புசனுக்கும் இடையில் நடந்த மோதல்; அலம்புசனைக் கொன்ற சாத்யகி; துச்சாசனன் தலைமையிலான திருதராஷ்டிர மகன்கள் சாத்யகியை எதிர்த்து விரைந்தது; அவர்கள் அனைவரையும் தடுத்த சாத்யகி, துச்சாசனனைக் குதிரைகளற்றவனாக ஆக்கியது...


திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "ஓ! சஞ்சயா, சுடர்மிக்க என்புகழ் நாளுக்கு நாள் மங்குகிறது. என் போர்வீரர்களில் மிகப் பலர் வீழ்ந்துவிட்டனர். இவையாவும் காலத்தால் கொண்டுவரப்பட்ட எதிர்வினைகளால் ஏற்படுகின்றன என நான் நினைக்கிறேன்.(1) துரோணராலும், கர்ணனாலும் பாதுகாக்கப்படுவதும், அதன் காரணமாகத் தேவர்களாலும் ஊடுருவப்பட முடியாததுமான என் படைக்குள் சினத்தால் தூண்டப்பட்ட தனஞ்சயன் {அர்ஜுனன்} நுழைந்துவிட்டான்.(2) கிருஷ்ணன் மற்றும் பீமன் என்ற சுடர்மிக்க இரு சக்திகளுடனும், சிநிக்களின் காளையுடனும் {சாத்யகியுடனும்} இணைந்ததால், அவனது {அர்ஜுனனின்} ஆற்றல் பெருகியிருக்கிறது.(3) தனஞ்சயனின் {அர்ஜுனனின்} நுழைவைக் கேட்டதில் இருந்து, உலர்ந்த புற்குவியலை எரிக்கும் நெருப்பைப் போலத் துயரம் என் இதயத்தை எரிக்கிறது.


இந்தப் பூமியின் மன்னர்கள் அனைவரும், அவர்களோடு கூடிய சிந்துக்களின் ஆட்சியாளனும் {ஜெயத்ரதனும்} பொல்லாத விதியால் {தீயூழால்} பாதிக்கப்படுவதை நான் காண்கிறேன்.(4) கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனுக்கு (அர்ஜுனனுக்குத்) தீங்கிழைத்துவிட்டு, அந்தச் சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} அர்ஜுனனின் பார்வையில் படும்போது, தன் உயிரை {அவனால்} எவ்வாறு காத்துக் கொள்ள முடியும்?(5) இந்தச் சூழ்நிலையைப் பார்க்கையில், ஓ! சஞ்சயா, சிந்துக்களின் ஆட்சியாளன் ஏற்கனவே இறந்துவிட்டதாகவே நான் ஊகிக்கிறேன். எனினும், அந்தப் போர் எவ்வாறு நடந்தது என்பதை எனக்குச் சொல்வாயாக. விவரிப்பதில் நீ திறன்கொண்டவனாக இருக்கிறாய், ஓ! சஞ்சயா, தாமரைகள் நிறைந்த தடாகத்துக்குள் பாயும் ஒரு யானையைப் போலத் திடமான தீர்மானத்துடன் தனஞ்சயனுக்காகப் {அர்ஜுனனுக்காக} போராட, அந்தப் பரந்த படைக்குள் மீண்டும் மீண்டும் அதனைக் கலங்கடித்தபடி நுழைந்தவனும், விருஷ்ணி வீரனுமான சாத்யகி எவ்வாறு போரிட்டான் என்பதை எனக்கு உண்மையாகச் சொல்வாயாக” என்றான் {திருதராஷ்டிரன்}.(7,8)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மனிதர்களில் முதன்மையான அந்தப் பீமன், பல வீரர்களுக்கு மத்தியில் கர்ணனின் கணைகளால் பீடிக்கப்பட்டுச் சென்று கொண்டிருப்பதைக் கண்ட அந்தச் சிநிக்களில் முதன்மையான போர்வீரன் {சாத்யகி}, தன் தேரில் அவனைப் {பீமனைப்} பின் தொடர்ந்து சென்றான்.(9) கோடையின் முடிவில் {தோன்றும்} கார்முகில்களைப் போலக் கர்ஜித்துக் கொண்டும், கூதிர்காலத்துக் கதிரவனைப் போலக் கதிரொளி வீசிக் கொண்டும் சென்ற அவன் {சாத்யகி}, தன் உறுதிமிக்க வில்லால் உமது மகனின் {துரியோதனனின்} படையைத் கொல்லத் தொடங்கி, அதை {அந்தப் படையை} மீண்டும் மீண்டும் நடுங்கச் செய்தான்.(10) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} அந்த மதுகுலத்தின் முதன்மையானவன் {சாத்யகி}, வெள்ளி நிறக் குதிரைகளால் இழுக்கப்பட்ட தேரில், முழங்கிக் கொண்டே களத்தில் இப்படிச் சென்று கொண்டிருந்தபோது, உமது போர்வீரர்களில் எவராலும் அவனது {சாத்யகியின்} முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.(11)

அப்போது மன்னர்களில் முதன்மையானவனும், போரில் எப்போதும் பின்வாங்கதவனும், வில் தரித்துத் தங்கக் கவசம் பூண்டவனுமான அலம்புசன் [1], சினத்தால் தூண்டப்பட்டு, மதுகுலத்தின் முதன்மையான போர்வீரனான அந்தச் சாத்யகியின் முன்னேற்றத்தை விரைந்து சென்று தடுத்தான்.(12) பிறகு அவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலானது, ஓ! பாரதே {திருதராஷ்டிரரே}, இது வரை எப்போதும் நடக்காததைப் போல இருந்தது. போரிடுவதை நிறுத்திய எதிரிகளும், உமது வீரர்கள் அனைவரும், போரின் ரத்தினங்களான அவ்விருவரின் மோதலைக் காணும் பார்வையாளர்கள் ஆனார்கள்.(13)

[1] துரோண பர்வம் பகுதி 108ல் கடோத்கசனால் கொல்லப்பட்ட ராட்சசன் அலம்புசன் வேறு, இவன் வேறு, இவன் கௌரவர் தரப்பில் போரிட்ட வேறொரு மன்னனாவான். இந்த இருவரையும் தவிரத் துரோண பர்வம் பகுதி 164ல் ராட்சச இளவரசனான மற்றொரு அலம்புசனும் வருகிறான். இந்த மூவரையும் தவிரத் துரோண பர்வம் பகுதி 174ல் ராட்சசன் ஜடாசுரனின் மகனான அலம்புசன் என்று மற்றொருவனும் வருகிறான். எனவே மகாபாரதத்தில் குறைந்தது நான்கு அலம்புசர்களாவது குறிப்பிடப்படுகின்றனர்.

அப்போது மன்னர்களில் முதன்மையானவனான அந்த அலம்புசன், பத்து கணைகளால் மிகப் பலமாகச் சாத்யகியைத் துளைத்தான். எனினும், அந்தச் சிநி குலத்துக் காளை {சாத்யகி}, அந்தக் கணைகள் யாவும் தன்னை அடையும் முன்பே அவற்றைத் தன் கணைகளால் வெட்டினான்.(14) மீண்டும் அலம்புசன், அழகிய சிறகுகளைக் கொண்டவையும், நெருப்பு போலச் சுடர்விடுபவையும், காதுவரை இழுக்கப்பட்டுத் தன் வில்லில் இருந்து ஏவப்பட்டவையுமான மூன்று கூரிய கணைகளால் சாத்யகியைத் தாக்கினான். இவை சாத்யகியின் கவசத்தைத் துளைத்து, அவனது உடலுக்குள் ஊடுருவின.(15) நெருப்பு அல்லது காற்றின் சக்தியுடன் கூடிய அந்தச் சுடர்மிக்கக் கூரிய கணைகளால் சாத்யகியைத் துளைத்த பிறகு, அந்த அலம்புசன், வெள்ளியைப் போல வெண்மையாக இருந்த சாத்யகியின் குதிரைகளை நான்கு கணைகளால் மிகப்பலமாகத் தாக்கினான்.

அவனால் {அலம்புசனால்} இப்படித் தாக்கப்பட்டவனும், பெரும் சுறுசுறுப்பைக் கொண்டவனும், சக்கரதாரியை (கேசவனை {கிருஷ்ணனைப்}) போன்றவனுமான அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, பெரும் வேகம் கொண்ட நான்கு கணைகளால் அலம்புசனின் நான்கு குதிரைகளைக் கொன்றான்.(17) அலம்புசனது தேரோட்டியின் தலையை வெட்டிய பிறகு, அவன் {சாத்யகி}, யுக நெருப்பைப் போன்ற கடுமையான ஒரு பல்லத்தால், முழு நிலவைப் போல அழகானதும், சிறந்த காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டதுமான அலம்புசனின் தலையைப் அவனின்  உடலில் இருந்து வெட்டினான்.(18) பல மன்னர்களின் வழித்தோன்றலான {ராஜவம்சத்தில் பிறந்தவனான} அவனை {அலம்புசனைக்} கொன்ற பிறகு, பகைவரின் படைகளைக் கலங்கடிக்கவல்ல வீரனான அந்த யதுக்களின் காளை {சாத்யகி}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எதிரியின் துருப்புகளைத் தடுத்தபடியே அர்ஜுனனை நோக்கிச் சென்றான்.(19)

உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அப்படி அந்த விருஷ்ணி வீரன் {சாத்யகி}, அர்ஜுனனை அடுத்து எதிரியின் மத்தியில் சென்ற போது, சேர்ந்திருக்கும் மேகத் திரள்களைச் சிதறடிக்கும் சூறாவளியைப் போலத் தன் கணைகளால் குரு படையை மீண்டும் மீண்டும் அழித்தபடியே காணப்பட்டான்.(20) அந்த மனிதர்களில் காளை {சாத்யகி} எங்கெல்லாம் செல்ல விரும்பினானோ அங்கெல்லாம், சிந்து இனத்தைச் சேர்ந்தவையும், நன்கு பயிற்சி அளிக்கப்பட்டவையும், வசப்படுத்தப்பட்டவையும், பசுவின் பால், அல்லது குருக்கத்தி மலர், அல்லது நிலவு, அல்லது பனியைப் போன்ற வெண்மையானவையும், தங்க இழைகளால் அலங்கரிக்கப்பட்டவையுமான குதிரைகளால் அவன் {சாத்யகி} சுமந்து செல்லப்பட்டான்.(21)

அப்போது, ஓ! ஆஜமீட குலத்தைச் சேர்ந்தவரே {திருதராஷ்டிரரே}, உமது படையின் பிற வீரர்களோடு ஒன்று சேர்ந்த உமது மகன்கள், போர்வீரர்களில் முதன்மையான அந்தத் துச்சாசனனைத் தங்கள் தலைமையாகக் கொண்டு, சாத்யகியை எதிர்த்து வேகமாக விரைந்தனர்.(22) படைப்பிரிவுகளின் தலைவர்களான அவர்கள், அந்தப் போரில் சிநியின் பேரனை {சாத்யகியை} அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டு, அவனைத் தாக்கத் தொடங்கினர். சாத்வதர்களில் முதன்மையான அந்த வீரச் சாத்யகியும், கணை மாரிகளால் அவர்கள் யாவரையும் தடுத்தான்.(23) தன் கடுங்கணைகளால் அவர்கள் அனைவரையும் தடுத்தவனும், எதிரிகளைக் கொல்பவனுமான அந்தச் சிநியின் பேரன், ஓ! ஆஜமீடரே {திருதராஷ்டிரரே}, தன் வில்லைப் பலமாக உயர்த்தி, துச்சாசனனின் குதிரைகளைக் கொன்றான். அப்போது அந்தப் போரில் அர்ஜுனனும், கிருஷ்ணனும், அந்த மனிதர்களில் முதன்மையானவனை {சாத்யகியைக்} கண்டு மகிழ்ச்சியால் நிறைந்தனர்” {என்றான் சஞ்சயன்}.(24)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்