Sunday, February 17, 2013

கதிரவனின் சாரதியாக அருணன்! | ஆதிபர்வம் - பகுதி 24

Aruna became the charioteer of Surya! | Adi Parva - Section 24 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 12)

பதிவின் சுருக்கம் : தன் பெரிய உடலைச் சுருக்கிக் கொண்ட கருடன்; சூரியனின் கோபம்; உலகைச் சுட்டெரித்த சூரியன்; சூரியனின் தேரோட்டியான அருணன்...

கதிரவனும் அருணனும்
சௌதி சொன்னார், "அனைத்தையும் கேட்டுவிட்டு, அந்த அழகான இறகுகளுடைய பறவையானவன் தனது உடலைக் கண்டு, தன் உருவத்தைச் சுருக்கிக் கொண்டான்.(1)

அந்தப் பறவையான கருடன், "எவ்வுயிரும் அச்சப்பட வேண்டாம், எனது பயங்கர உருவைக் கண்டு நீங்கள் அச்சத்திலிருப்பதால், எனது சக்தியைச் சுருக்கிக்கொள்கிறேன்" என்றான்."(2)

சௌதி தொடர்ந்தார், "விருப்பப்பட்ட இடத்திற்குத் தங்குதடையின்றிச் செல்லக்கூடியவனும், எவ்வளவு சக்தியையும் விருப்பப்பட்ட அளவுக்குப் பெருக்கிக் கொள்ளக்கூடியவனுமான அந்தப் பறவையானவன் {கருடன்}, {தனது அண்ணன்} அருணனை முதுகில் ஏற்றிக் கொண்டு தனது தந்தையின் {கசியபரின்} இல்லத்தைத் தொடர்ந்து, பெருங்கடலுக்கு அக்கரையில் இருக்கும் தனது அன்னையின் {வினதையின்} பக்கத்தில் உள்ள கடற்கரையில் வந்து சேர்ந்தான். கதிரவனோ உலகங்களைத் தனது கொடுங்கதிர்களால் சுட்டெரிக்கத் தீர்மானிக்கும் நேரத்தில் பெரும் காந்திமிக்க அருணனைக் கிழக்குப் பகுதியில் அமர்த்தியிருந்தான்".(3,4)



சௌனகர் சொன்னார், "போற்றத்தக்க கதிரவன் எப்போது உலகங்களை எரிக்கத் தீர்மானித்தான்? அப்படி அவன் கோபத்தைத் தூண்டி விடும்படியாகத் தேவர்கள் அவனுக்கு என்ன தவறு செய்தார்கள்?[1]"(5)

[1] ருரு கேட்பதாகவும், பிரமதி சொல்வதாகவும் மன்மதநாததத்தரின் பதிப்பில் உள்ளது. கும்பகோணம் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில் இந்தப் பகுதியே இல்லை.

சௌதி, "ஓ பாவங்களற்றவரே, அமுதத்துக்காகப் பாற்கடலைக் கடையும்போது ராகு தேவர்களின் பக்கம் நின்று அமுதத்தைப் பருகியதை, சூரியனும் சந்திரனும் காட்டிக் கொடுத்தனர். அப்போதிருந்தே அவன் {ராகு} அந்தத் தேவர்கள் மீது பகை கொண்டான்.(6) {அதுமுதல்} ராகு தன் எதிரியை {சூரியனை} விழுங்குவதால் கோபங்கொண்ட அவன் {சூரியன்}, ‘இந்த ராகுவின் பகையானது தேவர்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்ற என் ஆவலிலிருந்தே தொடங்கியது.(7) அதன் பலனை நான் மட்டுமே அனுபவிக்கிறேன். உண்மையில் இத்தருணத்தில் எனக்கு எந்த உதவியும் கிட்டவில்லை.(8) அனைத்து சொர்க்கவாசிகளின் முன்னிலையிலேயே நான் விழுங்கப்படப்போகிறேன், அதை அவர்களும் அமைதியாக அனுமதிக்கப்போகின்றனர். எனவே, நான் உலகங்களை அழிக்கப் போகிறேன்’ என்று உறுதி கொண்ட கதிரவன்,(9) மேற்கு மலைகளுக்குச் சென்றான். அந்த இடத்திலிருந்தே உலகத்தை அழிக்கத் தனது வெப்பத்தை அனைத்து இடங்களிலும் வெளிப்படுத்தினான்.(10)

தேவர்களிடம் சென்ற பெரும் முனிவர்கள், "இதோ, நடு இரவில் ஒவ்வொரு இதயத்தையும் அச்சமூட்டியபடியும், மூன்று உலகங்களையும் அழிக்கும்படியும் இந்தப் பெரும் வெப்பம் உண்டாகிறது" என்றனர்.(11) தேவர்கள், முனிவர்களையும் அழைத்துக் கொண்டு பெருந்தகப்பனிடம் சென்று "இன்று ஏன் இந்த வெப்பம் அதிகமாகி அச்சமூட்டுகிறது?(12) கதிரவன் இன்னும் உதிக்கவில்லை, எனினும் (உலக) அழிவு தெளிவாகத் தெரிகிறது. ஓ தலைவா {பிரம்மனே}, அவன் {சூரியன்} உதித்தால் என்ன நடக்கும்?" என்றனர்.(13) அதற்குப் பெருந்தகப்பன் {பிரம்மன்}, "உண்மையாக இன்று கதிரவன் உலக அழிவுக்காகவே உதிக்கத் தயாராகிறான். எப்போது அவன் காட்சி தருவானோ அப்போதே அனைத்தையும் சாம்பற்குவியலாக எரித்துவிடுவான்.(14) ஏற்கனவே அதைத் திருத்த நான் {பிரம்மன்} நடவடிக்கை எடுத்துவிட்டேன்.(15)

கசியபரின் புத்திசாலி மகனான அருணனை அனைவரும் அறிவார்கள். தனது பெருத்த உடலுடன், பெரியகாந்தியுடனும் கூடிய அவன் {அருணன்}, கதிரவன் முன்பு நின்று, அவனுக்குச் தேரோட்டியாக இருந்து, முன்னவனின் {சூரியனின்} சக்தியையெல்லாம் எடுத்துவிடுவான். இந்த நடவடிக்கை உலகத்தின் நன்மையையும், முனிவர்கள் மற்றும் தேவலோகவாசிகளின் நன்மையையும் உறுதிசெய்யும்.” என்றான்.(16,17)

சௌதி தொடர்ந்தார், "அருணன், பெருந்தகப்பனின் {பிரம்மனின்} கட்டளைப்படி, என்னென்ன செய்யவேண்டுமோ அவையனைத்தையும் செய்தான். அருணனின் உடலால் திரையிடப்பட்டுக் கதிரவன் உதித்தான்.(18) நான் {சௌதி} இதுவரை கதிரவன் ஏன் கோபங்கொண்டான்? கருடனின் தமையனான அருணன் எப்படி அவனது தேரோட்டியாக நியமிக்கப்பட்டான்? என்பதைச் சொன்னேன். சிறிது நேரத்திற்கு முன்பு நீங்கள் {நைமிசாரண்யத்தில் 12 வருட வேள்வியில் பங்கெடுத்த ஆன்மிகவாதிகளும், சௌனகரும்} கேட்ட அடுத்தக் கேள்விக்கான {விளக்கத்தை} அடுத்துக் கேளுங்கள்" {என்றார் சௌதி}.(19)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்