Saturday, July 26, 2014

பெற்றோரை மதிப்பதே உயரறம்! - வனபர்வம் பகுதி 214

Honouring the parents is the highest virtue!  | Vana Parva - Section 214 | Mahabharata In Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

தர்மவியாதன் கௌசிகரைத் தந்தை தாய்க்குப் பணிவிடை செய்யச் சொல்லி அறிவுறுத்தியது; அவன் ஏன் சூத்திர வர்க்கத்தில் பிறந்தான் என்ற காரணத்தையும் சொல்ல ஆரம்பித்தது…

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "தன் பெற்றோரை (இருவரையும்) தான் நினைக்கும் உயர்ந்த குருக்கள் என அந்த அந்தணரிடம் அறிமுகப்படுத்திய அந்த அறம் சார்ந்த வேடன் {தர்மவியாதன்}, "எனது அக ஆன்மப் பார்வையை விரிவடையச் செய்யும், இந்த அறத்தின் சக்தியைக் குறித்துக் கொள்ளும். கணவனுக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த, சுயக்கட்டுப்பாடுடைய, சத்தியவதியான அந்தப் பெண்ணால், "மிதிலைக்குச் செல்லும்; அங்கே அறத்தின் புதிர்களை உமக்கு விளக்கவல்ல ஒரு வேடன் வாழ்ந்து வருகிறான்" என்று இதற்காகவே உமக்குச் சொல்லப்பட்டது" என்றான்.


அந்த அந்தணர் {கௌசிகர்}, "ஓ! பக்திமானே, உனது அறக் கடமைகளை நிறைவேற்றுவதில் நிலையாக இருக்கும் உன்னைக் கண்ட பிறகு, கணவனுக்கு உண்மையாக இருக்கும், நல்ல குணம் கொண்ட அந்த உண்மை நிறைந்த மங்கை என்னைக் குறித்து சொன்ன வார்த்தைகளையும் நினைத்துப் பார்த்து, நீ உண்மையில் அனைத்து உயர்ந்த குணங்களையும் கொண்டவன் என்று உறுதியடைகிறேன்" என்றார். வேடன் {தர்மவியாதன்},  "என் தலைவா {கௌசிகரே}, கணவருக்கு நன்றியுடன் இருக்கும் அந்த மங்கை, என்னைக் குறித்து உம்மிடம் சொன்னவை, உண்மைச் செய்திகளின் {அடிப்படையில்} முழு ஞானம் கொண்டவை என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. ஓ அந்தணரே {கௌசிகரே}, நான் உமக்குச் சாதகமான அனைத்தையும் குறித்து விவரித்துவிட்டேன். நல்ல ஐயா {கௌசிகரே}, இப்போது நான் சொல்வதைக் கேளும். நான் உமக்கு நன்மையானதைச் சொல்கிறேன். ஓ! நல்ல அந்தணரே {கௌசிகரே}, நேர்மையான குணம் கொண்ட நீர், உமது தாய்க்கும் தந்தைக்கும் தகாததைச் செய்திருக்கிறீர். வேதங்களைக் கற்கும் காரணத்திற்காக, நீர், அவர்களின் அனுமதியின்றி வீட்டை விட்டு வெளியே வந்தீர். அக்காரியத்தில் நீர் முறையாக நடந்து கொள்ளவில்லை. வயது முதிர்ந்த துறவிகளான உமது பெற்றோர், உமது இழப்பால் ஏற்பட்ட துயரத்தில் முழுமையானக் குருடர்களானார்கள். விரைவாக இல்லம் திரும்பி அவர்களைச் சமாதானப் படுத்தும். இந்த அறம் உம்மை எப்போதும் கைவிடாதிருக்கட்டும். உயர்ந்த மனம் கொண்டு, தவத்தகுதி கொண்டு, அறத்திற்கு எப்போதும் உம்மை அர்ப்பணித்தீர். ஆனால் இவை அனைத்தும் உமக்குப் பயனில்லாமல் போகும். காலங்கடத்தாமல் விரைவாகத் திரும்பி உமது பெற்றோரைச் சமாதானப் படுத்தும். எனது சொற்களுக்குச் சிறிது மதிப்பு கொடும். மாறுபட்டு நடக்காதீர்; ஓ! அந்தண முனிவரே {கௌசிகரே}, நான் உமது நன்மைக்காகவே சொல்கிறேன், இந்நாளே விரைவாக உமது இல்லத்திற்குத் திரும்பும்" என்றான் {வேடன் தர்மவியாதன்}.

அதற்கு அந்த அந்தணர் {கௌசிகர்}, "நீ சொன்னது உண்மையே, ஐயமில்லை; ஓ! பக்திமானே நீ செழிப்பை அடைவாயாக; நான் உன்னிடம் மிகவும் திருப்தி அடைந்தேன்" என்றார். வேடன், "ஓ! அந்தணரே {கௌசிகரே}, சுத்தமான மனம் கொண்டவர்களாலும் அடைவதற்குக் கடினமான, தெய்வீகமான, பழமையான, நித்தியமான அறங்களை விடாமுயற்சியுடன் பயில்வதால், நீர் (எனக்கு) தெய்வீகமானவரைப் போலத் தோன்றுகிறீர். உமது தந்தை மற்றும் தாயின் பக்கத்திற்குச் செல்லும். விரைவாகச் சென்று, உமது பெற்றோரை வணங்குவதில் விடாமுயற்சி கொள்ளும்; இதைவிடப் பெரிய அறம் ஏதும் இருக்கிறதா என்பதை நான் அறியவில்லை" என்றான் {வேடன் தர்மவியாதன்}.

அதற்கு அந்த அந்தணர் {கௌசிகர்}, "என்னுடைய சிறு நற்பேறின் நிமித்தமாகவே நான் இங்கே வந்தேன், ஒரு சிறு நற்பேறின் காரணமாகவே நான் உன்னுடன் நட்பு கொண்டேன். அறத்தின் புதிர்களை இவ்வளவு அழகாக விளக்கக்கூடிய மனிதனை நமக்கு மத்தியில் கண்டுபிடிப்பது மிகவும் கடினமானதாகும்; ஆயிரக்கணக்கான மனிதர்களில் அறத்தின் அறிவியலை நன்கு அறிந்த ஒரு மனிதன் கிடைப்பது அரிதானது. ஓ! பெரும் மனிதா, உனது நட்பை அடைந்ததால், நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நீ செழிப்புடன் இருப்பாயாக. நான் நரகக்குழிக்குள் விழுந்து கொண்டிருந்தேன். ஆனால் நீ என்னைத் தூக்கி விட்டாய். இது இப்படி நடக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது. (நான் எதிர்பாராமல்) நீ என் வழியில் வந்தாய்.

ஓ! பெரும் மனிதா, {சொர்க்கத்தில் இருந்து} விழுந்த மன்னன் யயாதி, தனது பேரப்பிள்ளைகளின் {தனது மகள்களின் பிள்ளைகளின்} மூலம் காக்கப்பட்டதைப் போல, நானும் உன்னால் காக்கப்பட்டேன் என்பதை அறிந்து கொள். உனது அறிவுரையின் படி நடந்து, நான் எனது தந்தையையும், தாயையும் மதித்து நடப்பேன். சுத்தமில்லாத இதயம் கொண்ட மனிதனால் பாவம் மற்றும் நீதி ஆகியவற்றைக் குறித்து அறியவே முடியாது. நித்தியமான அறத்தின் புதிர்களைக் குறித்துச் சூத்திர வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு மனிதன் கற்பது என்பது மிகவும் கடினமானது. நான் உன்னைச் சூத்திரனாகக் கருதவில்லை. இக்காரியத்தைப் பொறுத்தவரை நிச்சயம் ஏதோ மர்மம் இருக்கிறது. நீ இந்தச் சூத்திர நிலையை, உனது கடந்த கால {பூர்வ ஜென்} கர்மாவின் கனியாக அடைந்திருக்க வேண்டும். ஓ! பெருங்குணம் கொண்டவனே, நான் இக்காரியத்தின் உண்மையை அறிய பெரிதும் விரும்புகிறேன். இதனை எனக்குக் கவனத்துடனும், உனது விருப்பத்தின் பேரில் கூறுவாயாக" என்று கேட்டார் {கௌசிகர்}.

அதற்கு வேடன் {தர்மவியாதன்}, "ஓ! நல்ல அந்தணரே {கௌசிகரே}, எனது எல்லாவகை மதிப்புக்கும் அந்தணர்கள் தகுதி வாய்ந்தவர்களே. ஓ! பாவற்றவரே, எனது முற்பிறவியின் கதையைக் கேளும். ஓ! அற்புதமான அந்தணரின் மகனே {கௌசிகரே}, நான் முற்பிறவியில் வேதங்களை நன்கு படித்த, வேதாங்கங்களில் சாதித்த ஓர் அந்தண மாணவனாக இருந்தேன். எனது தவறால் நான் இந்தத் தற்போதைய என் தாழ்ந்த நிலையை அடைந்தேன். தனுர் வேத அறிவியலை (வில்வித்தை அறிவியலை) அறிந்த ஒரு குறிப்பட்ட மன்னன் எனக்கு நண்பனாக இருந்தான். ஓ! அந்தணரே {கௌசிகரே} அவனது நட்பால் நானும் வில்வித்தையில் நிபுணனாக இருந்தேன். ஒரு நாள் அம்மன்னன், தனது அமைச்சர்களுடனும் சிறந்த வீரர்களுடனும் வேட்டைக்குச் சென்றான்.

ஒரு ஆசிரமத்தினருகே அவன் பெரிய எண்ணிக்கையிலான மான்களைக் கொன்றான். ஓ! நல்ல அந்தணரே {கௌசிகரே}, நானும் ஒரு கொடுங்கணையை அடித்தேன். வளைந்த கணுக்களுள்ள அந்தக் கணையால் ஒரு முனிவர் காயப்பட்டார். அவர் தரையில் விழுந்து சத்தமாக, "நான் எவருக்கும் தீங்கிழைக்கவில்லையே, எந்தப் பாவி இந்தக் காரியதைதச் செய்தான்" என்று கதறினார். என் தலைவா {கௌசிகரே}, அவரை மானென்று கருதிய நான் அவரிடம் சென்றேன். அங்கு அவர் எனது கணையால் உடல் துளைக்கப்பட்டுக் கிடப்பதைக் கண்டேன். இத்தீயக் காரியத்தின் விளைவாக நான் (மனதால்) மிகவும் வருந்தினேன். தரையில் விழுந்து, சத்தமாக அழுது கொண்டிருந்த அந்தக் கடும் தவத்தகுதி படைத்த முனிவரிடம் நான், "ஓ! முனிவரே! அறியாமல் நான் இதைச் செய்துவிட்டேன்" என்று சொல்லி, மீண்டும், "இந்த மீறல் அனைத்தையும் மன்னிப்பதே முறையானது என்பதை நினைத்துப் பாரும்" என்றேன். ஆனால், ஓ! அந்தணரே {கௌசிகரே}, கோபம் மூண்ட அந்த முனிவர், "நீ கொடூர வேடனாகச் சூத்திர வர்க்கத்தில் பிறக்கக் கடவாய்" என்று சொன்னார். 

இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்