Saturday, August 02, 2014

அத்புதனும்! சுவாஹாவும்!! - வனபர்வம் பகுதி 223

Adbhuta and Swaha!  | Vana Parva - Section 223 | Mahabharata In Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

பிரஜாபதியின் மகளான தேவசேனை, இந்திரனிடம் ஒரு பலமிக்கக் கணவனை வேண்டுவது; சூரியனும் சந்திரனும் சேர்ந்த ரௌத்திர முகூர்த்தத்தில் உண்டாகும் குழந்தையே அவளுக்குச் சிறந்த கணவனாக இருப்பான் என்று இந்திரன் பிரம்மனிடம் கோருவது; அத்புதன் என்ற நெருப்பானவன் சப்த ரிஷிகளின் மனைவியரிடத்தில் மையல் கொள்வது; காமத்தால் எரிந்த  அவன் தன்னை அழித்துக் கொள்ளக் கானகம் சென்றது; அவன் மீது மையல் கொண்ட சுவாகா அவனை அடைய ஒரு தந்திரத்தைச் சிந்தித்தது...

அந்த மங்கை {இந்திரனிடம்}, "நான் (அனைத்து உயிர்களின் தலைவனான பிரம்மனின்) பிரஜாபதியின் மகள். என் பெயர் தேவசேனை. எனது தங்கையான தைத்தியசேனை இந்தக் கேசினால் நாசம் செய்யப்பட்டாள் {ravished}. நாங்கள் இரு சகோதரிகளும் எங்கள் பணிப்பெண்களுடன் இந்த மானஸ மலைகளில் இன்பமாக இருப்பதற்காகப் பிரஜாபதியின் அனுமதி பெற்று இங்கு வருவது வழக்கம். பெரும் அசுரனான கேசின் எங்களுக்குத் தினமும் தனது மரியாதையைச் செலுத்திவந்தான். ஓ! பகனை விழ்த்தியவனே {இந்திரா}, தைத்தியசேனை அவனுக்கு {அசுரன் கேசினுக்குச்} செவிமடுத்தாள். ஆனால் நான் அப்படிச் செய்யவில்லை. எனவே, தைத்தியசேனை அவனாள் எடுத்துச் செல்லப்பட்டாள். ஆனால், ஓ! சிறப்புமிக்கவனே {இந்திரா}, நீ உனது பலத்தால் என்னைக் காத்தாய். இப்போது, ஓ! தேவர்களின் தலைவா {இந்திரா}, நீ எனக்கு யாராலும் வெல்லமுடியாத கணவனைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என விரும்புகிறேன்" என்றாள் {தேவசேனை}. இதற்கு இந்திரன் {தேவசேனையிடம்}, "நீ எனக்குச் சித்தியின் மகளாவாய். உனது அன்னை, எனது தாயான தாக்ஷாயணிக்கு {தக்ஷனின் மகள் என்பதால் தாக்ஷாயணி} சகோதரி ஆவாள். இப்போது நான் உனது பராக்கிரமத்தைக் {பலத்தைக்} குறித்துக் கேட்க விரும்புகிறேன்" என்றான்.


அதற்கு அந்த மங்கை {தேவசேனை - இந்திரனிடம்}, "ஓ! நீண்ட கரங்களைக் கொண்ட வீரனே {இந்திரா}, நான் அபலம்[1] (பலமில்லாதவள்), ஆனால் எனது கணவர் பலமிக்கவராக இருக்க வேண்டும். என் தந்தையுடைய வரத்தின் பலத்தால், அவர் தேவர்களாலும், அசுரர்களாலும் மதிக்கப்படுவார்" என்றாள். இந்திரன் {தேவசேனையிடம்}, "ஓ! களங்கமற்றவளே {தேவசேனா}, உனது கணவன் என்ன மாதிரியான பலத்தைப் பெற்றிருக்க வேண்டும் என நீ விரும்புகிறாய் என நான் கேட்க விரும்புகிறேன்" என்றான். அதற்கு அந்த மங்கை {தேவசேனை - இந்திரனிடம்}, "ஆண்மையும், புகழும், சக்தியும் வாய்ந்து, பிரம்மத்துக்கு அர்ப்பணிப்புடன் தேவர்கள், அசுரர்கள், யக்ஷர்கள், கின்னரர்கள், உரகர்கள், ராட்சசர்கள், தீய மனம் கொண்ட தைத்தியர்கள் ஆகியோர் அனைவரையும் வீழ்த்த வல்ல, அனைத்து உலகங்களையும் அடக்கவல்லவரே எனது கணவராகலாம்", என்றாள் {தேவசேனை}.

[1] அபலம் என்பது பெண்களுக்குப் பொதுவான பெயர். பலம் அல்லது சக்தி இல்லாதவன்/ள் என்று அதற்குப் பொருள். இச்சொல் உரிச்சொல்லாகவும் பயன்படுத்தப்படுகிறது என்கிறார் கங்குலி. {உரிய சொல் என்ற பொருளில் அது உரிச்சொல் எனப் பெயர்பெற்றது. உ-ம்: ஓடு என்பதை வேகமாக ஓடு என்று சொல்லலாம். இங்கு வேகமாக என்பது உரிச்சொல். இது {வேகமாக என்ற சொல்} செயலைக் குறிப்பதால் வினை உரிச்சொல் என்றும் வினையடை என்றுப் கூறப்படும். உயரமான பெண் என்றால், அதில் வரும் உயரமான என்ற சொல், தொடர்ந்து வரும் பெயர்ச்சொல்லுக்கு மேலும் விளக்கம் தருவதால், அது பெயர் உரிச்சொல் என்றும் பெயரடை என்றும் கூறப்படும்.}

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "அவளது பேச்சைக் கேட்ட இந்திரன் பெரும் துன்பத்துக்குள்ளாகி, தனக்குள்ளேயே, "இந்த மங்கையின் {தேவசேனையின்} விவரிப்புக்கு ஏற்ற ஒருவன் {கணவன்} இல்லையே" என்று ஆழ்ந்து சிந்தித்தான். சூரியனைப் போன்ற பிரகாசம் கொண்ட அந்தத் தேவன் {இந்திரன்}, உதய மலையில் [2] உதிக்கும் சூரியனையும், அந்தச் சூரியனுக்குள் வழுக்கிச் செல்லும் பெரும் சோமனையும் {சந்திரனையும்} கண்டான். அந்நேரம் புதி நிலவு நாள் {அமாவாசையாததால்} ஆதலால், அந்த நூறு வேள்விகளைச் செய்தவன் {இந்திரன்}, அந்த ரௌத்திர [3] நேரத்தில் {ரௌத்திர முகூர்த்தத்தில்}, சூரியோதைய மலையில் தேவர்களும் அசுரர்களும் போரிடுவதைக் கண்டான். சிவந்த மேகங்களுடன் கூடிய வைகறையையும் {காலை சந்திப் பொழுதையும்} அவன் {இந்திரன்} கண்டான். இரத்தம் போன்ற சிவந்த நிறத்தில் இருக்கும் வருணனின் வசிப்பிடத்தையும் {கடலையும்} அவன் {இந்திரன்} கண்டான். பிருகு, அங்கிரஸ் மற்றும் இன்ன பிறரால் பலதரப்பட்ட மந்திரங்களுடன் கொடுக்கப்படும் காணிக்கைகளைச் சுமந்து செல்லும் அக்னி சூரியனின் வட்டுக்குள் செல்வதைக் கண்டான். மேலும் அவன் {இந்திரன்}, சூரியனை அலங்கரிக்கும் இருபத்துநான்கு பருவங்களையும், அத்தகு சூழ்நிலையில் சூரியனில் இருக்கும் பயங்கரமான சோமனையும் {சந்திரனையும்} கண்டான்.

[2] சூரியன் உதிப்பதும், மறைவதும் முறையே இரு மலைகளுக்குப் பின்னால் என்பது இந்துக்களின் நம்பிக்கை. அவன் {சூரியன்} உதய மலையில் இருந்து உதித்து, அஸ்த மலையில் மறைகிறான் என்பதே அந்நம்பிக்கை என்கிறார் கங்குலி

[3] ரௌத்திரம் - கோபம், வன்முறை, போர் போன்றவற்றின் தேவனான ருத்திரனுக்கு உரியது என்கிறார் கங்குலி

சூரியன் மற்றும் சந்திரனின் அந்தப் பயங்கரமான இணைப்பைக் கண்ட சக்ரன் {இந்திரன்} தனக்குள், "சூரியன் மற்றும் சந்திரனின் இந்தப் பயங்கரமான இணைப்பு, நாளை நடக்கப் போகும் பெரும் போரை முன்னறிவிக்கிறது. சிந்து {Indus} நதியும், புதிதான இரத்த ஓட்டத்துடன் பாய்கிறது. ஓநாய் வாயில் நெருப்புடன் சூரியனுக்கு எதிராக ஊளையிடுகிறது. இந்தப் பெரும் இணைப்பு பயங்கரமானதாகவும், சக்தி நிறைந்ததாகவும் இருக்கிறது. சூரியனுடனும், அக்னியுடனும் இணையும் சந்திரனின் (சோமன்) சேர்க்கை மிகவும் அற்புதமாக இருக்கிறது. இப்போது இந்தச் சோமன் ஒரு மகனைப் பெற்றெடுத்தால், அந்த மகன், இந்த மங்கைக்கு {தேவசேனைக்குக்} கணவனாகலாம். அக்னியும் அதே போன்ற சூழ்நிலையையே கொண்டிருக்கிறான். அவனும் ஒரு தேவனே. இந்த இருவரும் ஒரு மகனைப் பெற்றெடுத்தால், அந்த மகன் இந்த மங்கைக்குக் கணவனாவான்" என்று நினைத்தான் {இந்திரன்}. இந்த நினைப்போடே, அந்த ஒப்பற்ற தேவன், தேவசேனையையும் [4] தன்னுடன் அழைத்துக் கொண்டு பிரம்ம லோகத்திற்குச் சென்றான். பெருந்தகப்பனை {பிரம்மனை} வணங்கிய {அவன்} இந்திரன், அவனிடம் {பிரம்மனிடம்}, "புகழ்பெற்ற போர்வீரனை இந்த மங்கைக்குக் கணவனாக நிச்சயம் செய்யும்" என்றான் {இந்திரன்}.

[4] தேவசேனை என்பதற்குச் சொல்லுக்குச் சொல் பொருள் {literal meaning} தேவர்கள் படை என்பதாகும்., தேவர்கள் படைக்கு ஒரு தலைவனை அடைய இந்திரன் செய்த முயற்சிகளின் உருவகப் பிரதிபலிப்பே இந்தக் கட்டுக்கதை {நீதிக்கதை} என்கிறார் கங்குலி.

பிரம்மன் {இந்திரனிடம்}, "ஓ! அசுரர்களைக் கொல்பவனே, நீ நினைத்தவாறே ஆகட்டும். அந்தச் சேர்க்கையின் மூலம் உண்டாகும் மகன் பலம்வாய்ந்தவனாக இருப்பான். அந்தப் பலமிக்கவன் {அப்படிப் பிறக்கும் குழந்தை}, இந்த மங்கையின் கணவனாகவும், உன்னுடன் சேர்ந்து உனது படைகளுக்குத் தலைவனாகவும் இருப்பான்" என்றான் {பிரம்மன்}. இப்படிச் சொல்லப்பட்ட தேவர்கள் தலைவனும் {இந்திரனும்}, அந்த மங்கையும் {தேவசேனையும்} அவனை {பிரம்மனை} வணங்கிய பிறகு, பலமிக்க தெய்வீக முனிவர்களும், பெரும் அந்தணர்களுமான வசிஷ்டரும் இன்னும் பிறரும் வாழும் இடத்திற்குச் சென்றனர். இந்திரனைத் தலைமையாகக் கொண்ட பிற தேவர்களும் அந்த முனிவர்கள் செய்யும் வேள்விகளில் தங்களுக்கு உரிய காணிக்கை பங்குகளைப் பெற்று சோம பானத்தைக் குடிக்கும் விருப்பத்தோடு அங்கே சென்றனர். முறையாகச் சுடர்விட்டெரியும் நெருப்பைக் கொண்டு சடங்குகளைச் செய்து அந்தப் பெரும் மனம் படைத்தவர்கள் {முனிவர்கள்} தேவர்களுக்குக் காணிக்கைகளை அளித்தனர்.

காணிக்கைகளைச் சுமந்து செல்லும் அத்புத நெருப்பு, மந்திரங்களால் அழைக்கப்பட்டான். சூரிய வட்டிலில் இருந்து வெளியே வந்த அந்தத் தலைமை நெருப்பு {அத்புதன்} பேச்சைக் கட்டுப்படுத்திக் கொண்டு முறையாக அங்கே வந்தான். ஓ! பாரதக் குலத்தின் தலைவா {யுதிஷ்டிரா}, தூண்டப்பட்ட வேள்வி நெருப்புக்குள் புகுந்து, அதில் முனிவர்களால் மந்திரங்களுடன் படைக்கப்பட்ட காணிக்கைகளை எடுத்துக்கொண்டு {சுமந்து கொண்டு} சொர்க்கவாசிகளிடம் {தேவர்களிடம்} சென்றான். அப்படி அவன் திரும்பும்போது, அவன் அந்த உயர் ஆன்ம முனிவர்களின் மனைவியர் வசதியாகத் தங்கள் படுக்கையில் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டான். அந்த மங்கையர், தங்கப் பலிப்பீடம் போலவும், களங்கமற்ற சந்திரக் கதிர்கள் போலவும், நெருப்புச் சுடர்களைப் போலவும், எரியும் நட்சத்திரம் போலவும் இருந்தனர். ஆவல் நிறைந்த கண்களுடன் அந்தச் சிறப்புமிக்க அந்தணர்களின் மனைவியரைக் கண்ட அவனது மனம் கலங்கியது. அவன் {அத்புதன்} அவர்களது அழகால் தாக்கப்பட்டான். அப்படிக் கலங்குவது முறையற்றது எனக் கருதிய அவன், தனது இதயத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டான். பிறகு அவன் தனக்குள்ளேயே, "இந்தப் பெரும் அந்தணர்களின் மனைவியர் கற்புடையவர்கள், {கணவனுக்கு} உண்மையானவர்கள், பிற மனிதர்களின் ஆசைகளுக்கு அப்பாற்பட்டவர்கள். நான் அவர்களை அடையும் விருப்பத்தால் நிறைந்திருக்கிறேன். விதிப்படி நான் அவர்கள் மீது கண்களைச் செலுத்தக்கூடாது. அவர்களைத் தொடவும் கூடாது. எனவே, நான் அவர்களது கார்ஹபத்ய {வீட்டில் வைக்கும்} நெருப்பாகி தினமும் அவர்களைக் கண்டு திருப்தியடைவேன்" என்று நினைத்துக் கொண்டான்.

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "இப்படித் தன்னை வீட்டு நெருப்பாக மாற்றிக் கொண்ட அந்த அத்புத நெருப்பானவன், அந்தத் தங்க நிறம் கொண்ட பெண்களைக் கண்டும், தனது சுடர்களால் அவர்களைத் தொட்டும் மிகவும் திருப்தி கொண்டான். அவர்களது {முனிவர்களின் மனைவியரின்} அழகால் மிகவும் கவரப்பட்ட அவன் {அத்புத நெருப்பானவன்}, அவர்களுக்கு இதயத்தைக் கொடுத்து, அவர்களிடம் தீவிரக் காதல் கொண்டு அங்கேயே நீண்ட நாள் தங்கினான். அந்த அந்தணப் பெண்களின் இதயங்களை வென்றெடுக்கும் முயற்சிகளில் கலங்கடிக்கபட்டான் அவன். அந்தக் காதலால் தனது இதயம் சித்திரவதைக்குள்ளாகி, தன்னை அழித்துக் கொள்ளும் நோக்கோடு ஒரு கானகத்திற்குச் சென்றான்.

அதற்குச் சில காலத்திற்கு முன்பே தக்ஷனின் மகளான சுவாகா, அவனிடம் {அத்புத நெருப்பானவனிடம்} காதல் கொண்டிருந்தாள். அந்தச் சிறந்த பெண் {சுவாகா}, அவனது பலவீனமான தருணங்களைக் கண்டறிய நீண்ட காலம் முயற்சி செய்தாள். ஆனால் அந்தக் குற்றமற்ற பெண்ணால் {சுவாகாவால்}, அமைதியாகவும் மன ஒருமையுடனும் இருந்த அக்னி தேவனிடம் எந்தப் பலவீனத்தையும் காணமுடியவில்லை. ஆனால் இப்போதோ, காமனால் சித்திரவதை செய்யப்பட்ட அந்த அக்னி தேவனைக் கண்ட அவள் {சுவாஹா}, தனக்குள், "நானும் காதலால் கவலை கொண்டு இருகிகறேன். எனவே, நான் அந்த ஏழு முனிவர்களின் மனைவிகளைப் போல உருவம் கொண்டு, அவர்களது அழகால் தாக்கப்பட்டுள்ள அக்னி தேவனை அந்த உருவத்தோடு அணுகுவேன். இது நடந்தால், அவனும் {அத்புத நெருப்பான அக்னி தேவனும்} திருப்தியடைவான், எனது விருப்பமும் ஈடேறும்" என்று நினைத்துக் கொண்டாள். 

இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்