Tuesday, April 26, 2016

துரியோதனனைத் திருத்திய கர்ணன்! - துரோண பர்வம் பகுதி – 022

Karna corrected Duryodhana! | Drona-Parva-Section-022 | Mahabharata In Tamil

(சம்சப்தகவத பர்வம் – 06)

பதிவின் சுருக்கம் : துரோணரின் ஆற்றலைக் கண்டு மகிழ்ந்த துரியோதனன் பாண்டவர்களை அவமதித்துப் பேசியது; பாண்டவர்களை அவமதிப்பது தகாது என்று சொல்லி அவர்களைப் புகழ்ந்த கர்ணன்...

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “அந்தப் பயங்கரப் போரில் பரத்வாஜர் மகனால் {துரோணரால்} பாண்டவர்களும், பாஞ்சாலர்களும் பிளக்கப்பட்டபோது, யாரேனும் ஒருவனாவது போரில் துரோணரை அணுகினானா? ஐயோ, கொட்டாவி விடும் புலியைப் போலவோ, மதப்பெருக்குக் கொண்ட யானையைப் போலவோ போரில் நிற்பவரும், போரில் தன் உயிரை விடத் தயாராக இருப்பவரும், நன்கு ஆயுதம் தரித்தவரும், அனைத்து வகைப் போர்களையும் அறிந்தவரும், பெரும் வில்லாளியும், மனிதர்களில் புலியும், எதிரிகளின் அச்சத்தை அதிகரிப்பவரும், உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்தவரும், துரியோதனனுக்கு எப்போதும் நன்மை செய்ய விரும்புபவருமான துரோணர் தன் துருப்புகளுக்குத் தலைமையில் நிற்பதைக் கண்டு, அற்பர்களால் முடியாத, மனிதர்களில் முதன்மையானோருக்கு மட்டும் தனித்தன்மையான, க்ஷத்திரியர்களின் புகழை மேம்படுத்துவதான போரைச்செய்ய, ஐயோ மெச்சத்தகுந்த உறுதியான தீர்மானத்துடன் அவரை அணுகக்கூடிய மனிதன் எவனும் இல்லையா? ஓ! சஞ்சயா, தன் படைகளின் தலைமையில் நிற்கும் பரத்வாஜரின் மகனை {துரோணரைக்} கண்டு, அவரை அணுகிய அந்த வீரர்கள் யாவர் என்று எனக்குச் சொல்வாயாக [1]” என்றான் {திருதராஷ்டிரன்}.


[1] வேறொரு பதிப்பில் இப்பத்தி, “ஓ! சஞ்சயா, பெரும்போரில் துரோணரால் பாண்டவர்களும், பாஞ்சாலர்களும் தோற்கடிக்கப்பட்ட பிறகு, அற்பர்களால் செய்ய முடியாததும், மனிதர்களில் சிறந்தோரால் செய்யப்படுவதும், க்ஷத்திரியர்களுக்குப் புகழை உண்டாக்குவதும், சிறந்ததுமான எண்ணத்தைச் செலுத்தி போரில் யாராவது ஒருவன் அவரை எதிர்த்தானா? எவன் வெல்லப்பட்ட போது (எதிரியை) எதிர்க்கிறானோ அந்த வீரனல்லவா வீரர்களுள் சிறந்தவன். ஐயோ, போரில் நிற்கும் துரோணரைக் கண்டு அவரை எதிர்ப்பவன் ஒருவனுமில்லையா? கொட்டாவி விடும் புலியைப் போலவும், மதப்பெருக்குக் கொண்ட யானையைப் போலவும் இருப்பவரும், விசித்திரமாகப் போரிடுபவரும், பெரிய வில்லுள்ளவரும், மனிதர்களில் சிறந்தவரும், எதிரிகளுக்குப் பயத்தை விருத்தி செய்பவரும், நன்றியறிவுள்ளவரும், சத்யத்தில் நிலைபெற்றவரும், துரியோதனனுடைய நன்மையை விரும்புகின்றவரும், படையில் நிலைபெற்றிருக்கிறவரும், வீரருமான அந்தத் துரோணரைக் கண்டு எந்த வீரர்கள் (போரிடுவதற்காகத்) திரும்பினார்கள்? அதனை எனக்குச் சொல்வாயாக” என்று இருக்கிறது.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பாஞ்சாலர்கள், பாண்டவர்கள், மத்ஸ்யர்கள், சிருஞ்சயர்கள், சேதிகள், கேகயர்கள் ஆகியோர் துரோணரின் கணைகளால் போரில் பிளக்கப்பட்டு, இப்படி முறியடிக்கப்பட்டதைக் கண்டும், புயலால் கலங்கடிக்கப்பட்ட பெருங்கடலின் பயங்கரமான அலைகளால் நிலை தடுமாறும் மரக்கலங்களைப் போலத் துரோணரின் வில்லில் இருந்து ஏவப்பட்ட வேகமான கணைகளின் மழையால் களத்தில் இருந்து இப்படி விரட்டப்பட்ட அவர்களைக் கண்டும் சிங்க முழக்கங்களாலும், பல்வேறு கருவிகளால் உண்டாக்கப்பட்ட ஒலிகளாலும், (பகைவரின் {பாண்டவப்} படையில் உள்ள) தேர்கள், குதிரைகள் மற்றும் காலாட்படை வீரர்களை அனைத்துப் பக்கங்களிலிருந்தும் கௌரவர்கள் தாக்கத் தொடங்கினர்.

(வேகமாக ஓடும் பாண்டவ வீரர்களான) அவர்களைக் கண்ட மன்னன் துரியோதனன், தன் உறவினர்கள் மற்றும் சொந்தங்கள் சூழ தன் படைகளுக்கு மத்தியில் நின்று கொண்டு, மகிழ்ச்சியால் நிறைந்து, சிரித்துக் கொண்டே கர்ணனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்.

துரியோதனன் {கர்ணனிடம்}, “ஓ! ராதையின் மகனே {கர்ணா}, “சிங்கத்தால் அச்சுறுத்தப்பட்ட காட்டுமான்கூட்டத்தைப் போல, அந்த உறுதி மிக்க வில்லாளியின் (துரோணரின்) கணைகளால் பிளக்கப்பட்ட பாஞ்சாலர்களைப் பார். இவர்கள் மீண்டும் போருக்கு வர மாட்டார்கள் என நினைக்கிறேன். புயலால் பிளக்கப்பட்ட வலிமைமிக்க மரங்களைப் போலத் துரோணரால் இவர்கள் பிளக்கப்பட்டிருக்கின்றனர். அந்த உயர் ஆன்ம வீரரின் {துரோணரின்} தங்கச் சிறகுள்ள கணைகளால் பீடிக்கப்பட்டவர்கள் தப்பி ஓடுகிறார்கள், இவர்களில் இருவராகச் சேர்ந்திருப்பவர் எவரும் இல்லை. உண்மையில், அவர்கள் சுழல்களால் களமெங்கும் இழுத்துச் செல்லப்படுவது போலத் தெரிகிறது.

கௌரவர்களாலும், உயர் ஆன்ம துரோணரால் தடுக்கப்படும் அவர்கள், காட்டுத் தீக்கு மத்தியில் உள்ள யானைகளைப் (யானைக்கூட்டத்தைப்) போல ஒருவருடன் ஒருவர் நெருங்கிப் பதுங்குகின்றனர். மலர்ந்திருக்கும் மரங்கள் வண்டுக்கூட்டங்களால் ஊடுருவப்படுவதைப் போலத் துரோணரின் கணைகளால் துளைக்கப்பட்ட இந்த வீரர்கள் களத்தை விட்டுத் தப்பி ஓடுகையில் ஒருவரை ஒருவர் நெருங்கிப் பதுங்குகின்றனர். {அதோ} கோபம் நிறைந்த பீமன், பாண்டவர்கள் மற்றும் சிருஞ்சயர்களால் கைவிடப்பட்டு, அங்கே என் வீரர்களால் சூழப்பட்டிருப்பது எனக்குப் பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. ஓ! கர்ணா, அந்தத் தீயவன் {பீமன்}, இன்று உலகத்தைத் துரோணர் நிறைந்ததாகவே காண்பான். அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, உயிர் மற்றும் அரசாட்சியின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டான் என்பதில் ஐயமில்லை” என்றான் {துரியோதனன்}.

கர்ணன் {துரியோதனனிடம்}, “வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்த வீரன் {பீமன்}, தான் உயிரோடிருக்கும்வரை போரை நிச்சயம் கைவிட மாட்டான். ஓ! மனிதர்களில் புலியே {துரியோதனா}, இந்த (நமது) சிங்க முழக்கங்களையும் அவன் {பீமன்} பொறுக்க மாட்டான். அதே போல, பாண்டவர்களும் போரில் தோற்க மாட்டார்கள் என்றே நான் நினைக்கிறேன். அவர்கள் துணிவுள்ளவர்களும், பெரும்கோபங்கொண்டவர்களும், ஆயுதங்களை அறிந்தவர்களும், போரில் தடுக்கப்படக் கடினமானவர்களும் ஆவர்.

அவர்களை நஞ்சூட்டவும், எரிக்கவும் நாம் செய்த முயற்சிகளால் அவர்களுக்கு ஏற்பட்ட துயரங்களையும், பகடை விளையாட்டால் எழுந்த துயரங்களையும் நினைவுகூர்ந்தும், அவர்கள் நாடு கடத்தப்பட்டுக் காட்டில் இருந்ததை மனத்தில் கொண்டும், பாண்டவர்கள் போரைக் கைவிடமாட்டார்கள் என்றே நான் நினைக்கிறேன்.

வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், அளவிலா சக்தி கொண்டவனுமான விருகோதரன் {பீமன்} (போரிடுவதற்காக) ஏற்கனவே திரும்பிவிட்டான். அந்தக் குந்தியின் மகன் {பீமன்}, நம் தேர்வீரர்களில் முதன்மையானோர் பலரை நிச்சயம் கொல்வான். வாளாலும், வில்லாலும், ஈட்டியாலும், குதிரைகளாலும், யானைகளாலும், மனிதர்களாலும், தேர்களாலும் [2], முழுக்க இரும்பாலான அவனது கதாயுதத்தாலும், (நம் படைவீரர்களைக்) கூட்டம் கூட்டமாக அவன் {பீமன்} கொல்வான்.

[2] பீமனின் வலிமை மனிதசக்திக்கு அப்பாற்பட்டது என்பதால், இவற்றைக் கூட அவன் கருவிகளாகப் பயன்படுத்துவான் என்று கர்ணன் சொல்வதாக இங்கே கங்குலி விளக்குகிறார்.

சத்தியஜித்தால் [3] தலைமை தாங்கப்பட்ட தேர்வீரர்கள் பிறர், பாஞ்சாலர்கள், கேகயர்கள், மத்ஸ்யர்கள், குறிப்பாகப் பாண்டவர்கள் அவனை {பீமனைப்} பின்தொடர்கிறார்கள். அவர்கள் அனைவரும் துணிச்சல்மிக்கவர்களும், பெரும் வலிமை மற்றும் ஆற்றலைக் கொண்டவர்களுமாவர். மேலும், கோபத்துடன் பீமனால் வழிநடத்தப்படும் அவர்கள் வலிமைமிக்கத் தேர்வீரர்களுமாவர். குலத்தின் காளைகளான அவர்கள், சூரியனைச் சூழ்ந்திருக்கும் மேகங்களைப் போல, அனைத்துப் பக்கங்களிலும் விருகோதரனைச் {பீமனைச்} சூழ்ந்து கொண்டு, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் துரோணரை அணுகத் தொடங்குகின்றனர் [4].

[3] துரோண பர்வம் பகுதி 21ல் சத்தியஜித் கொல்லப்பட்டான். வேறொரு பதிப்பில் இது சாத்யகி என்று சொல்லப்படுகிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும் இது சாத்யகி என்றே சொல்லப்படுகிறது. எனவே இங்கே கங்குலியின் பதிப்பில் சத்தியஜித் என்று குறிப்பிடப்படுவது பிழையாகவே இருக்க வேண்டும்.

[4] வேறொரு பதிப்பில் இன்னும் அதிகமாக இருக்கிறது. அது பின்வருமாறு, “பாண்டவர்கள் யுத்தங்களில் கிருஷ்ணனைப் பந்துவாக உடையவர்களாகச் சொல்லப்படுகின்றனர். பாஞ்சாலர்கள், கேயர்கள், மாத்ஸ்யர்கள், பாண்டவர்கள் ஆகியோர் எல்லா விதத்தாலும் வீரர்கள்; பலசாலிகள்; ஆற்றலுடையவர்கள்; வலிமைமிக்கத் தேர்வீரர்கள்; (அகாரியத்தில்) வெட்கமுடியவர்கள்; எதிரிகளைக் கொல்வதில் திறம்பெற்றவர்கள்; பரிசுத்தமான லக்ஷணம் பொருந்தியவர்கள். அரசனே, அனேக அரசர்கள் யுத்தத்தில் அவர்களுக்கு வசப்பட்டிருக்கிறார்கள். நாராயணனைத் தலைவனாகக் கொண்ட பாண்டவர்களை நீ அவமதியாதே” என்று இருக்கிறது. இந்தக் குறிப்புக் கங்குலியில் இல்லை. இதற்கடுத்து பின்வருவது போலவே தொடர்கிறது.

மரணத் தருவாயிலுள்ள விட்டிற்பூச்சிகள், சுடர்மிக்க விளக்கைத் தாக்குவதைப் போல, ஒரே பொருளைக் கவனமாக நோக்கும் இவர்கள் {ஒரே வழியில் செல்லும் இந்தப் பாண்டவர்கள்} பாதுகாப்பில்லாத துரோணரை நிச்சயம் பீடிப்பார்கள். ஆயுதங்களை நன்கறிந்தவர்களான அவர்கள் துரோணரைத் தடுக்க நிச்சயம் தகுந்தவர்களே. பரத்வாஜர் மகனின் {துரோணரின்} மேல் இப்போது இருப்பது கனமான சுமை என்றே நான் நினைக்கிறேன். துரோணர் இருக்கும் இடத்திற்கு நாம் வேகமாகச் செல்வோமாக. வலிமைமிக்க யானையைக் கொல்லும் ஓநாய்களைப் போல முறையான நோன்புகளைக் கொண்ட அவரை {துரோணரை} அவர்கள் {பாண்டவர்கள்} கொல்லாதிருக்கட்டும்” என்றான் {கர்ணன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “ராதேயனின் {கர்ணனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட மன்னன் துரியோதனன், பிறகு, தன் தம்பிகளுடன் சேர்ந்து, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, துரோணருடைய தேரை நோக்கி முன்னேறினான். துரோணரை மட்டுமே கொல்லும் விருப்பத்தால் செயலூக்கத்துடன் வந்த பாண்டவ வீரர்கள் அனைவரும், பல்வேறு நிறங்களிலான சிறந்த குதிரைகளால் இழுக்கப்பட்ட தங்கள் தேர்களில் போருக்குத் திரும்பும் ஒலி அங்கே செவிடாக்குவதாக இருந்தது” {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்