Monday, May 16, 2016

ஜெயத்ரதனுக்கு வரமளித்த மகாதேவன் ! - துரோண பர்வம் பகுதி – 040

The boon by Mahadeva to Jayadratha! | Drona-Parva-Section-040 | Mahabharata In Tamil

(அபிமன்யுவத பர்வம் – 10)

பதிவின் சுருக்கம் : அபிமன்யுவைப் பின்தொடர்ந்து சென்ற பாண்டவ வீரர்கள்; பாண்டவர்களைத் தடுத்த ஜெயத்ரதன்; முற்காலத்தில் ஜெயத்ரதன் செய்த தவம்; ஜெயத்ரதனுக்கு வரமளித்த மகாதேவன்; முந்தைய வரத்தின் பலனாகப் பாண்டவர்களைப் போர்க்களத்தில் தடுத்த ஜெயத்ரதன்...

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “வயதால் வெறும் குழந்தையும் {பாலனும்}, பெரும் ஆடம்பரத்துடன் வளர்க்கப்பட்டவனும், தன் கரங்களின் வலிமையில் செருக்குடையவனும், போரில் சாதித்தவனும், பெரும் வீரம் கொண்டவனும், தன் குலத்தைத் தழைக்க வைப்பவனும், தன் உயிரைவிடத் தயாராக இருந்தவனுமான அந்த அபிமன்யு, உற்சாகமும் தீரமும் கொண்ட அவனது மூன்று வயது குதிரைகளால் சுமக்கப்பட்டுக் கௌரவப் படைக்குள் ஊடுருவிய போது, அந்த அர்ஜுனன் மகனை {அபிமன்யுவை} யுதிஷ்டிரப் படையின் பெரும் தேர்வீரர்கள் எவரேனும் பின்தொடர்ந்து சென்றனரா?” என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "யுதிஷ்டிரன், பீமசேனன், சிகண்டி, சாத்யகி, இரட்டையர்களான நகுலன் மற்றும் சகாதேவன், திருஷ்டத்யும்னன், விராடன், துருபதன், கேகயன்{ர்கள்}, திருஷ்டகேது ஆகியோர் அனைவரும், மத்ஸ்ய வீரர்களும் கோபத்தால் நிறைந்து போருக்கு விரைந்தனர். உண்மையில், எதிரிகளைத் தாக்குபவர்களான அபிமன்யுவின் தந்தைமாரும், தாய்மாமன்களும், அபிமன்யுவைக் காக்க விரும்பி, போருக்காக அணிவகுத்து, அவன் {அபிமன்யு, வியூகத்தைப் பிளந்து} உண்டாக்கிய அதே பாதையில் சென்றனர். அவ்வீரர்கள் விரைந்து வருவதைக் கண்ட உமது துருப்புகள் போரில் இருந்து பின்வாங்கின.

அப்போது, பெரும் சக்தி கொண்ட உமது மருமகன் {ஜெயத்ரதன்}, போரில் இருந்து உமது அந்தப் பெரும்படை திரும்புவதைக் கண்டு, அவர்களை அணிதிரட்டுவதற்காக விரைந்தான். உண்மையில், சிந்துக்களின் ஆட்சியாளனான மன்னன் ஜெயத்ரதன், தங்கள் மகனைக் காக்க விரும்பிய பார்த்தர்களையும், அவர்களைப் பின் தொடர்பவர்கள் அனைவரையும் தடுத்து நிறுத்தினான். கடுமையானவனும், பெரும் வில்லாளியுமான அந்த விருத்தக்ஷத்திரன் மகன் {ஜெயத்ரதன்}, தெய்வீக ஆயுதங்களை இருப்புக்கு அழைத்து, பள்ளத்தாக்கில் விளையாடும் யானையைப் போலப் பாண்டவர்களைத் தடுத்தான்” {என்றான் சஞ்சயன்}.

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “சஞ்சயா, தங்கள் மகனைக் காக்க விரும்பிய கோபக்காரப் பாண்டவர்களைத் தனி ஒருவனாகத் தடுத்து நின்ற சிந்துக்களின் ஆட்சியாளன் மீது கனமான சுமை ஏற்றப்பட்டதாகவே நான் நினைக்கிறேன். சிந்துக்கள் ஆட்சியாளனுடைய {ஜெயத்ரதனின்} வலிமையும், வீரமும் மிக அற்புதமானது என்று நான் நினைக்கிறேன். அந்த உயர் ஆன்ம வீரனின் ஆற்றலையும், அவன் அந்த முதன்மையான அருஞ்செயல்களை எப்படிச் சாதித்தான் என்பதையும் எனக்குச் சொல்வாயாக. அவன் {ஜெயத்ரதன்}, கோபத்தால் தூண்டப்பட்டிருந்த பாண்டவர்களைத் தடுப்பதில் வென்றது எதன் விளைவாக? அவன் என்ன தானங்களைச் செய்தான்? என்ன நீர்க்காணிக்கைகளை ஊற்றினான் {என்ன ஆகுதி செய்தான்}? என்ன வேள்விகளைச் செய்தான்? என்ன தவத்துறவுகளை மேற்கொண்டான்? [1]” என்று கேட்டான்.

[1] வேறொரு பதிப்பில் இவ்வரிகள், “பெரும் பலவானான அந்த ஜயத்ரதனுடைய வீர்யத்தையும், உத்தமமான செய்கையையும் எனக்கு நீ சொல்லு. அந்த ஜயத்ரதன் என்ன ஜபம், ஹோமம், அல்லது யாகம் செய்தான்? என்ன தவம் செய்தான்? உத்தமனே! ஐம்பொறி அடக்கலா? பிரம்மசர்யமா? அல்லது இவன் வேறு என்ன செய்தான்? விஷ்ணு, ஈசானர், பிரம்மா (இம்மூவருள்) எந்தத் தேவதையை ஆராதித்து, சிந்துராஜன், மகனிடம் பற்றுள்ளவர்களும், கோபமுள்ளவர்களுமான பார்த்தர்களைச் சிந்துராஜன் தடுத்தான்? அவர் ஒருவனாகவே இருந்து கொண்டு பாண்டவர்களைத் தடுத்தது போன்ற பெரிய காரியமானது, பீஷ்மராலும் அவ்வாறு செய்யப்படவில்லை; நான் அறிவேன்” என்று திருதராஷ்டிரன் கேட்பதாக இருக்கிறது.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஜெயத்ரதன், திரௌபதியை அவமதித்த நிகழ்வின் போது, பீமசேனனால் அவன் வீழ்த்தப்பட்டான். தான் பட்ட அவமானத்தை ஆழமாக உணர்ந்த அந்த மன்னன் {ஜெயத்ரதன்}, ஒரு வரத்தை விரும்பி கடும் தவத்தைச் செய்தான். புலன்களுக்கு விருப்பமான பொருட்களில் இருந்து அவற்றை {புலன்களை} விலக்கி, பசி, தாகம் மற்றும் வெப்பத்தைத் தாங்கிக் கொண்ட அவன் {ஜெயத்ரதன்}, புடைக்கும் நரம்புகள் தெரியும்வண்ணம் தன் உடலைக் குறைத்தான். வேதங்களின் அழியாத வார்த்தைகளை உச்சரித்த அவன் {ஜெயத்ரதன்}, தெய்வமான மகாதேவனுக்கு {சிவனுக்குத்} தன் வழிபாட்டைச் செலுத்தினான். தன்னை வழிபடுவோரிடம் {தன் பக்தர்களிடம்} எப்போதும் கருணை கொண்ட அந்தச் சிறப்புமிக்கத் தேவன் {சிவன்}, இறுதியாக அவனிடம் {ஜெயத்ரதனிடம்} அன்புகூர்ந்தான்.

உண்மையில், சிந்துக்களின் ஆட்சியாளனுடைய {ஜெயத்ரதனுடைய} கனவில் தோன்றிய ஹரன் {சிவன்}, அவனிடம் {ஜெயத்ரதனிடம்}, “நீ விரும்பும் வரத்தைக் கேட்பாயாக. ஓ! ஜெயத்ரதா, நான் உன்னிடம் மனம்நிறைந்தேன். நீ எதை விரும்புகிறாய்?” என்று கேட்டான். மஹாதேவனால் {சிவனால்} இப்படிக் கேட்கப்பட்ட சிந்துக்களின் ஆட்சியாளன் ஜெயத்ரதன், கூப்பிய கரங்களுடனும், ஒடுங்கிய ஆன்மாவுடனும் அவனை {சிவனைப்} பணிந்து, “தனித்தேரில் ஒருவனாக இருக்கும் நான், பயங்கர சக்தியும் ஆற்றலும் கொண்ட பாண்டு மகன்கள் அனைவரையும் போரில் தடுக்க வேண்டும்” என்று கேட்டான். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} அவன் கேட்ட வரம் இதுவேயாகும்.

இப்படி வேண்டப்பட்டதும், ஜெயத்ரதனிடம் அந்த முதன்மையான தேவன் {சிவன்}, “ஓ! இனியவனே, நான் {அந்த} வரத்தை அளிக்கிறேன். பிருதையின் {குந்தியின்} மகனான தனஞ்சயனை {அர்ஜுனனைத்} தவிர, பாண்டுவின் மற்ற நான்கு மகன்களையும் போரில் நீ தடுப்பாய் [2]” என்றான். “அப்படியே ஆகட்டும்” என்று தேவர்களின் தலைவனிடம் {சிவனிடம்} சொன்ன ஜெயத்ரதன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பிறகு தன் குறைத்தூக்கத்தில் இருந்து விழித்தெழுந்தான்.

[2] வேறொரு பதிப்பில் இவ்வரிகள், “சௌம்ய, பிருதையின் மகனான தனஞ்சயனைத் தவிர மற்ற பாண்டவர்கள் நார்வரையும் போரில் ஒரு தினம் நீ தடுப்பாய்; இந்த வரத்தை உனக்கு யான் கொடுக்கிறேன்” என்று இருக்கிறது. ஒரு தினம் என்ற வார்த்தை கங்குலியிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் இல்லை.

தான் பெற்ற வரம் மற்றும் தன் தெய்வீக ஆயுதங்களின் பலம் ஆகியவற்றின் விளைவாக, அந்த ஜெயத்ரதன், தனியொருவனாகவே, பாண்டவர்களின் மொத்தப்படையையும் தடுத்து நிறுத்தினான். அவனது நாண்கயிற்றின் நாணொலியும், உள்ளங்கைகளின் தட்டொலியும் {தலத்வனியும்} பகைவரின் படையில் அச்சத்தைத் தோற்றுவித்த அதே வேளையில், உமது துருப்புகளை மகிழ்ச்சியில் நிறைத்தன. சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} ஏற்றுக் கொண்ட சுமையைக் கண்ட (குரு படையின்) க்ஷத்திரியர்கள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, களத்தில் யுதிஷ்டிரனின் படை இருந்த இடத்திற்கு உரத்த ஆரவாரத்துடன் விரைந்தனர்” {என்றான் சஞ்சயன்}. 


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்