Thursday, June 02, 2016

மன்னன் அம்பரீஷன்! - துரோண பர்வம் பகுதி – 064

King Amvarisha! | Drona-Parva-Section-064 | Mahabharata In Tamil

(அபிமன்யுவத பர்வம் – 34)

பதிவின் சுருக்கம் : மன்னன் அம்பரீஷன் கதையைச் சொன்ன நாரதர்; அவன் செய்த போர்; அவன் செய்த வேள்விகள்; அவன் அளித்த கொடைகள்; அவனது மரணம்…


நாரதர் {சஞ்சயனிடம்} சொன்னார், "ஓ! சிருஞ்சயா, நாபாகனின் மகனான அம்பரீஷனும் மரணத்துக்கு இரையானதாகவே நாம் கேட்டிருக்கிறோம். அவன் {அம்பரீஷன்} தனி ஒருவனாகவே ஆயிரம் மன்னர்களுடன் ஆயிரம் முறை போரிட்டிருக்கிறான். வெற்றியை விரும்பியவர்களும், ஆயுதங்களை அறிந்தவர்களுமான அந்த எதிரிகள், கடுஞ்சொற்களைக் கூறிக்கொண்டு அனைத்துப் புறங்களில் இருந்தும் அவனை {அம்பரீஷனை} எதிர்த்துப் போருக்கு விரைந்தனர்.

அவன் {அம்பரீஷன்}, தன் பலம், சுறுசுறுப்பு, பயிற்சியின் மூலம் தான் அடைந்த திறம் ஆகியவற்றின் துணையாலும், தன் ஆயுதங்களின் சக்தியாலும், அந்த எதிரிகளின் குடைகள், ஆயுதங்கள், கொடிமரங்கள், தேர்கள், வேல்கள் ஆகியவற்றை வெட்டித் தன் துயரைக் களைந்து கொண்டான். தங்கள் உயிர்களைப் பாதுகாத்துக் கொள்ள விரும்பிய அம்மனிதர்கள் {அந்த எதிரிகள்}, தங்கள் கவசங்களைக் களைந்து, (கருணைக்காக) அவனை {அம்பரீஷனை} வேண்டிக் கொண்டனர். "எங்களை நாங்கள் உம்மிடம் அளிக்கிறோம் {சரணடைகிறோம்}" என்று சொல்லி அவர்கள் அவனது பாதுகாப்பை வேண்டினர்.


அவர்களை அடக்கி, முழு உலகத்தையும் வென்ற அவன் {அம்பரீஷன்}, ஓ! பாவமற்றவனே {சிருஞ்சயா}, சிறந்த வகையிலான நூறு வேள்விகளைச் சாத்திரங்களில் விதிக்கப்பட்ட சடங்குகளின்படி செய்தான். (அவ்வேள்விகளில்) அனைத்து வகையிலும் இனிமையான தரம் கொண்ட உணவுவகைகள், பெரும் எண்ணிக்கையிலான மக்களால் உண்ணப்பட்டது. அவ்வேள்விகளில், பிராமணர்கள் மரியாதையுடன் வழிபடப்பட்டு, பெரிதும் நிறைவு செய்யப்பட்டனர். இன்பண்டங்கள் {மோதகங்கள்}, பூரிகள், அப்பளங்கள், சுவைமிகுந்த பெரிய முறுக்குகள், தேன்குழல்கள், மாக்கலந்த தயிர்ப்பச்சடிகள், பல்வேறு ருசியுள்ள தின்பண்டங்கள், பல்வேறு வகைகளிலான ரசங்கள், பல்வேறு தானியங்கள் கலந்த சோறு, சர்க்கரைப் பொங்கல், நன்கு தயாரிக்கப்பட்ட வாசனைமிகுந்த மென்மையான பணியாரங்கள், தெளிந்த நெய், தேன், பால், நீர், இனிய மோர், இனிமையான சுவை கொண்ட கனிகள் மற்றும் கிழங்குகள் ஆகியவற்றை மறுபிறப்பாள {பிராமண} வர்க்கத்தினர் உண்டனர்.

மேலும் மது பழக்கம் கொண்டவர்கள், இன்பமடையவேண்டி பல்வேறு வகைகளில் தயாரிக்கப்பட்டிருந்த போதையூட்டும் பானங்களை அதற்குரிய நேரத்தில் குடித்துத் தங்கள் இசைக்கருவிகளை இசைத்துக் கொண்டு பாடினர். தாங்கள் குடித்தவற்றால் அதீதமாகப் போதையுண்ட சிலரைத் தவிர ஆடிக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கானோர் அம்பரீஷனைப் புகழ்ந்து பாடிக் கொண்டுமிருந்தனர். அதேவேளையில் பிறரோ {அதீத போதையுண்டவர்கள்}, தங்களை நிலையாக நிறுத்திக் கொள்ள முடியாமல் பூமியில் விழுந்தனர் [1].

[1] வேறு ஒரு பதிப்பில் இவ்வரிகள், "குடிப்பவர்கள் மயக்கத்தை உண்டு பண்ணக்கூடிய சாராய முதலானவைகளைப் பாவத்துக்குக் காரணமாயிருப்பவைகளென்று அறிந்தும், தங்களுக்கு சுககரமென்று எண்ணிப் பாட்டுக்களோடும், வாத்தியங்களோடும் இஷ்டபடி குடித்தார்கள். அவ்விடத்தில், குடிவெறி கொண்ட சிலர் காதைகளைக் கானஞ்செய்தார்கள்; களித்தவர்களாகிப் படிக்கவும் படித்தார்கள்" என்று இருக்கின்றன.

அவ்வேள்விகளில் மன்னன் அம்பரீஷன், நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மன்னர்களின் நாடுகளை (தன்னால் வேள்விகளில் நியமிக்கப்பட்டிருந்த) நூறு லட்சம் {10 Million - 10,000,000} புரோகிதர்களுக்குத் தானமளித்தான். பல்வேறு வகையான வேள்விகளைச் செய்து முடித்த அந்த மன்னன் {அம்பரீஷன்}, புனித நீராடிய மணிமுடி கொண்டவர்களும், தங்கக் கவசமணிந்திருந்தவர்களும், தங்கள் தலைக்குமேலே வெண்குடை கொண்டவர்களும், தங்கத் தேரில் அமர்ந்திருந்தவர்களும், அற்புத ஆடைகள் அணிந்திருந்தவர்களும், தொண்டர்கள் பலரைக் கொண்டவர்களும், செங்கோலைக் கொண்டவர்களும், பொக்கிஷங்களையுடையவர்களுமான பெரும் எண்ணிக்கையிலான இளவரசர்களையும், மன்னர்களையும் பிராமணர்களுக்குத் தானமாக அளித்தான்.

அவன் செய்ததைக் கண்டப் பெரும் முனிவர்கள் மிகவும் மகிழ்ந்து, "தாராளக் கொடை தரும் மன்னன் அம்பரீஷன் இப்போது செய்வதைப் போல, கடந்த காலத்து மனிதர்களில் எவரும் செய்ததில்லை, எதிர்காலத்திலும் எவராலும் செய்ய முடியாது" என்றனர்.

ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கிய அறங்களை {தவத்துறவுகள், உண்மை, கருணை, ஈகை ஆகியவற்றைப்} பொறுத்தவரை, உனக்கு மேம்பட்டவனும், உன் மகனுக்கு {சுவர்ணஷ்டீவினுக்கு} மிகவும் மேம்பட்டவனுமான அவனே {அம்பரீஷனே} இறந்தான் எனும்போது, எந்த வேள்வியையும் செய்யாத, வேள்விக் கொடை எதையும் அளிக்காத உன் மகனுக்காக {சுவர்ணஷ்டீவினுக்காக}, “ஓ! சுவைதியா, ஓ! சுவைதியா {சுவித்யனின் பேரனே}” என்று சொல்லி நீ வருந்தலாகாது” {என்றார் நாரதர்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்