Tuesday, June 21, 2016

சஞ்சயனின் நிந்தனை! - துரோண பர்வம் பகுதி – 086

The reproach of Sanjaya! | Drona-Parva-Section-086 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 02)

பதிவின் சுருக்கம் : போருக்கான காரணமாகத் தன் மகனைப் பழித்த திருதராஷ்டிரனை சஞ்சயன் நிந்தித்தது; அதன் பிறகு நடந்த போரைக் குறித்து விவரிக்கத் தொடங்கியது...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "என் கண்களால் சாட்சியாகக் கண்ட அனைத்தையும் நான் உமக்குச் சொல்வேன். அமைதியாகக் கேட்பீராக. உமது தவறு பெரியது. (வயலின்) நீர் பாய்ந்து போன பிறகு, அணையானது பயனற்றுப் போவதைப் போலவே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது இந்தப் புலம்பல்களும் பயனற்றவையே. ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, கவலைப்படாதீர். அந்தகனின் ஆச்சரியமான இந்தச் செயல்கள், மீறப்படமுடியாதவையாகும். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, இது புதிதல்ல என்பதால் கவலைப்படாதீர்.


குந்தியின் மகனான யுதிஷ்டிரனையும், உமது மகன்களையும் பகடையாட்டத்தில் இருந்து நீர் முன்னர்த் தடுத்திருந்தால், இந்தப் பேரிடர் உம்மை ஒருபோதும் அணுகியிருக்காது.

அதே போல, போருக்கான நேரம் வந்த போது, சினத்தில் எரிந்த இரு தரப்பையும் நீர் தடுத்திருந்தால், இந்தப் பேரிடர் உம்மை ஒருபோதும் அணுகியிருக்காது.

அதே போல, கீழ்ப்படியாத துரியோதனனைக் கொல்லும்படி குருக்களை நீர் முன்னர்த் தூண்டியிருந்தால், இந்தப் பேரிடர் உம்மை ஒருபோதும் அணுகியிருக்காது [1].

[1] வேறொரு பதிப்பில் இவ்வரி, "கௌரவர்களின் நன்மையைக் கருதி மூர்க்கனான துரியோதனனை முந்திச் சிறைப்படுத்தியிருப்பீராகில், நீர் பெரும்புகழைப் பெற்றிருப்பீர்" என்றிருக்கிறது. கங்குலியில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. மன்மதநாத தத்தரின் பதிப்பிலோ, "அதே போல, சீருக்கு இடம் கொடுக்காத துரியோதனனின் இருப்புக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப் பிற குருக்களை நீர் தூண்டியிருந்தால், இந்தப் பேரிடர் உம்மை ஒருபோதும் அணுகியிருக்காது" என்று இருக்கிறது.

(இச்செயல்களில் ஏதேனும் ஒன்றை நீர் செய்திருந்தாலும்), பாண்டவர்கள், பாஞ்சாலர்கள், விருஷ்ணிகள் மற்றும் பிற மன்னர்கள் ஆகியோர் உமது நேர்மையற்ற புத்தியை {பிடிவாதத்தை} ஒருபோதும் அறிந்திருக்க மாட்டார்கள்.

அதே போல, ஒரு தந்தையின் கடமையாகத் துரியோதனனை அறவழியில் நிறுத்தி, அதன்வழியே அவனை {துரியோதனனை} நடக்கச் செய்திருந்தால், இந்தப் பேரிடர் உம்மை ஒருபோதும் அணுகியிருக்காது.

இந்தப் பூமியில் ஞானிகளில் சிறந்தவராக நீர் இருக்கிறீர். {அப்படிப்பட்ட நீர்}, நித்தியமான அறத்தைக் கைவிட்டு, துரியோதனன், கர்ணன், சகுனி ஆகியோரின் ஆலோசனைகளை எவ்வாறு பின்பற்றினீர். எனவே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (இவ்வுலக) செல்வத்தில் பற்றுள்ள உமது இந்தப் புலம்பல்கள், தேனுடன் கலந்த நஞ்சாகவே எனக்குத் தெரிகிறது. முன்பு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பாண்டுவின் மகனான மன்னன் யுதிஷ்டிரனையோ, துரோணரையோ கூட உம்மை மதிக்கும் அளவுக்குக் கிருஷ்ணன் மதித்ததில்லை. எனினும், எப்போது மன்னரின் கடமைகளில் இருந்து நீர் வழுவினீர் என்பதை அவன் {கிருஷ்ணன்} அறிந்தானோ அப்போதிலிருந்து உம்மை {அந்த அளவுக்கு} மரியாதையாகக் கருதுவதை நிறுத்திக் கொண்டான். பிருதையின் {குந்தியின்} மகன்களிடம் {பாண்டவர்களிடம்} பல்வேறு கடும் சொற்களை உமது மகன்கள் பேசியிருக்கின்றனர்.

ஓ! அரசுரிமையைக் கொண்டவரே {திருதராஷ்டிரரே}, அந்தப் பேச்சுகளின் போது, நீர் உமது மகன்களுக்காகப் பாகுபாடு காட்டினீர். அந்த உமது பாகுபாட்டின் விளைவே உம்மை இப்போது பீடிக்கிறது. ஓ! பாவமற்றவரே {திருதராஷ்டிரரே}, பரம்பரை அரசுரிமை இப்போது ஆபத்திலிருக்கிறது {சந்தேகத்திற்கிடமானதாக இருக்கிறது}. (இல்லையெனில்), பிருதையின் {குந்தியின்} மகன்களால் அடக்கப்பட்ட முழு உலகையும் இப்போது அடைவீராக [2]. குருக்கள் அனுபவிக்கும் அரசும், அவர்களின் {குருக்களின்} புகழும் பாண்டுக்களால் {பாண்டு மற்றும் பாண்டவர்களால்} அடையப்பட்டதே. பாண்டுவின் அறம்சார்ந்த மகன்களே அந்த அரசையும், புகழையும் மேலும் பெருக்கினர். எனினும், உம்முடைய தொடர்பாலும், பேராசை கொண்ட நீர் அவர்களது பரம்பரை அரசை அபகரித்துக் கொண்டதாலும், அவர்களது அந்தச் சாதனைகள் (அவர்களுக்குக்) கனியற்றவையாகின [3].

[2] "Apavrittam என்பதற்கு ஆபத்துக்குள்ளானது, சந்தேகத்திற்கிடமானது என்று பொருள் என நீலகண்டரால் விளக்கப்படுகிறது. அதாவது, சஞ்சயன் என்ன சொல்கிறான் என்றால் அஃது அப்படி இல்லையென்றால், பாண்டவர்களால் உமக்கு அளிக்கப்படும் முழு உலகையும் ஆளும் கசப்பை அடைய வேண்டியிருக்கும். ஒன்று பாண்டவர்கள் உமது நாட்டைப் பறித்துக் கொள்வார்கள், அல்லது உமது மகன்களைக் கொன்ற பிறகு முழுவதற்கும் உம்மையே ஆட்சியாளராக்குவார்கள். இந்த இரண்டில் எதுவும் உமக்குக் கசப்பையே தரும் என்பது பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். 

[3] வேறொரு பதிப்பில், "தகப்பன் பாட்டன் வழியாகக் கிடைத்திருந்த ராஜ்யத்தை நீர் சந்தேகத்துக்குள்ளாக்கிவிட்டீர். ஏனெனில், பார்த்தர்களால் ஜயிக்கப்பட்ட பூமி முழுமையும் நீரே அடைந்தீர். முன்பு கௌரவர்களின் ராஜ்யமும், கீர்த்தியும் பாண்டுவினாலேயே தேடப்பட்டன. தர்மத்தை அனுஷ்டிக்கின்றவர்களான பாண்டவர்களாலே மறுபடியும் அவ்விரண்டும் அதிகமாக்கப்பட்டன. இவ்வுலகில் ராஜ்யபோகத்தில் பேராசையுள்ளவரான உம்மாலே பிதாவைச் சேர்ந்த ராஜ்யத்திலிருந்து பாண்டவர்கள் விலகும்படி செய்யப்பட்டமையால், அவர்களுடைய அந்தக் காரியமானது உம்மை அடைந்து மிகவும் பயனற்றதாகிவிட்டது." என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலோ, "உமது மூதாதையரிடம் இருந்து நீரடைந்த அரசுரிமை இப்போது உமது கரங்களில் இருந்து நழுவப் போகிறது; அல்லது பிருதையின் மகன்களிடம் இருந்து அதை நீர் பெறுவீர் (பாண்டவர்கள் உமது மகன்களைக் கொன்று அவர்களிடம் இருந்து அதை நிச்சயம் பறிப்பார்கள்). குருக்களின் ஆட்சிப்பகுதிகளும், அவற்றின் புகழும் பாண்டுவால் அடையப்பட்டு, நன்னடத்தைக் கொண்ட பாண்டுவின் மகன்களால் புகழும், ஆட்சிப்பகுதிகளும் மேலும் பெருகின.  உம்முடைய தொடர்பால் அவர்களது முயற்சிகளனைத்தும் கனியற்றவையாகின. மேலும், பேராசை கொண்ட உம்மால் அவர்களது பரம்பரை அரசுரிமையையும் இழந்தனர்" என்று இருக்கிறது.

இப்போதோ, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போர் தொடங்கிய பிறகு, உமது மகன்களின் பல்வேறு தவறுகளைச் சுட்டிக்காட்டி நீர் அவர்களை நிந்திக்கிறீர். இஃது உமக்குத் தகாது. போரிடும்போது, க்ஷத்திரியர்கள் தங்கள் உயிர்களைக் குறித்துக் கவலை கொள்வதில்லை. உண்மையில் அந்த க்ஷத்திரியர்களில் காளைகள், பார்த்தர்களின் வியூகத்தைத் துளைத்துப் போரிடுகின்றனர். உண்மையில், கிருஷ்ணன், அர்ஜுனன், சாத்யகி மற்றும் விருகோதரன் {பீமன்} ஆகியோரால் பாதுகாக்கப்படும் அந்தப் படையுடன் கௌரவர்களைத் தவிர வேறு யார் போரிடத் துணிவர்?

அர்ஜுனனைத் தங்கள் போர்வீரனாகவும், ஜனார்த்தனனை {கிருஷ்ணனைத்} தங்கள் ஆலோசகராகவும், சாத்யகி மற்றும் விருகோதரனை {பீமனைத்} தங்கள் பாதுகாவலர்களாகவும் கொண்டோரை, கௌரவர்களையும், அவர்களின் தலைமையில் பின்தொடர்வோரையும் தவிர வேறு எந்த மனித வில்லாளி எதிர்க்கத் துணிவான்? வீரத்தைக் கொண்டு, க்ஷத்திரியக் கடமைகளை நோற்கும் நட்பு மன்னர்களால் அடையத்தக்க அனைத்தையும், கௌரவர்கள் தரப்பில் உள்ள வீரர்களும் செய்கின்றனர். எனவே, குருக்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகிய அந்த மனிதர்களில் புலிகளுக்கு இடையில் நடந்த பயங்கரப் போரைக் குறித்த அனைத்தையும் இப்போது கேட்பீராக" {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்