Friday, June 24, 2016

அர்ஜுனனை எதிர்த்த துச்சாசனன்! - துரோண பர்வம் பகுதி – 089

Duhsasana rushed against Arjuna! | Drona-Parva-Section-089 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 05)

பதிவின் சுருக்கம் : அர்ஜுனனை எதிர்த்த துச்சாசனன்; அர்ஜுனன் செய்த போர்; மனிதர்களும், யானைகளும், குதிரைகளும் கொல்லப்பட்ட விதம்; துச்சாசனனின் படைப்பிரிவு தோற்றோடி துரோணரிடம் தஞ்சத்தை அடைந்தது...


திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "கிரீடம் தரித்தவனால் (கிரீடியான அர்ஜுனனால்) இப்படிக் கொல்லப்பட்ட என் படையின் முன்னணியினர் பிளந்து ஓடிய போது, அர்ஜுனனை எதிர்த்துச் சென்ற வீரர்கள் யாவர்? (அவர்களில் யாரேனும் அர்ஜுனனிடம் உண்மையில் போரிட்டனரா? அல்லது) அனைவரும் தங்கள் தீர்மானத்தைத் துறந்து, சகட வியூகத்துக்குள் நுழைந்து, கற்சுவரைப் போன்றவரும் அச்சமற்றவருமான துரோணரைத் தஞ்சமடைந்தனரா?" என்றான்.


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! பாவமற்றவரே {திருதராஷ்டிரரே}, இந்திரனின் மகனான அர்ஜுனன், தன் சிறந்த கணைகளைக் கொண்டு எங்கள் படையைப் பிளந்து தொடர்ச்சியாகக் கொல்லத் தொடங்கிய போது, வீரர்களில் பலர் ஒன்று சேர்ந்து கொல்லப்பட்டனர், அல்லது உற்சாகமிழந்து தப்பி ஓடினர். அர்ஜுனனைப் பார்க்கத் திறனுள்ள எவனும் அந்தப் போரில் இல்லை.

அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துருப்புகளின் அந்நிலையைக் கண்ட உமது மகன் துச்சாசனன், கோபத்தால் நிறைந்து, அர்ஜுனனை எதிர்த்துப் போரிட விரைந்தான். கடும் ஆற்றலைக் கொண்டவனும், தங்கத்தாலான அழகிய கவசம் தரித்தவனும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தலைப்பாகையால் தன் தலை மறைக்கப்பட்டவனுமான அந்த வீரன் {துச்சாசனன்}, மொத்த உலகையே விழுங்கவல்லது போலத் தெரிந்த பெரிய யானைப் படை ஒன்றை அர்ஜுனனைச் சூழச் செய்தான்.

யானைகளின் மணி ஒலியாலும், சங்குகளின் முழக்கத்தாலும், வில் நாண்கயிறுகளின் நாணொலியாலும், யானைகளின் பிளிறலாலும் பூமி, ஆகாயம், திசைகள் ஆகியன அனைத்தும் முழுமையாக நிறைந்ததாகத் தெரிந்தது. அந்தக் காலக்கட்டம் மூர்க்கமானதாகவும், பயங்கரமானதாகவும் இருந்தது. அங்குசங்களால் தூண்டப்பட்ட சிறகுகள் கொண்ட மலைகளைப் போல, கோபத்தால் நிறைந்து, துதிக்கைகளை நீட்டியிருந்த அந்தப் பெரும் விலங்குகள் {யானைகள்} தன்னை நோக்கி வேகமாக விரைவதைக் கண்ட மனிதர்களில் சிங்கமான அந்தத் தனஞ்சயன், சிங்கமுழக்கமொன்றைச் செய்து, தன் கணைகளால் அந்த யானைப்படையைத் துளைக்கவும் கொல்லவும் தொடங்கினான்.

அந்தக் கிரீடம் தரித்தவன் (கிரீடியான அர்ஜுனன்), மலை போன்ற அலைகளைக் கொண்டவையும், பெருங்காற்றால் கொந்தளித்தவையுமான ஆழ்ந்த கடலைத் துளைத்துச் செல்லும் மகரத்தைப் போல, அந்த யானைப்படையைத் துளைத்துச் சென்றான். உண்மையில், அண்டப்பேரழிவின் நாளன்று {பிரளயத்தின் போது}, திசை மற்றும் கால விதிகளை மீறி எழுந்து அனைத்தையும் எரிக்கும் சூரியனுக்கு ஒப்பாகப் பகைவரின் நகரங்களை அடக்குபவனான பார்த்தன் அனைத்துப் பக்கங்களிலும் காணப்பட்டான்.

குதிரைகளின் குளம்பொலிகள், தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலி, போராளிகளின் கூச்சல், வில் நாண்கயிறுகளின் நாணொலி, பல்வேறு இசைக்கருவிகளின் ஒலி, பாஞ்சஜன்யம், தேவதத்தம் மற்றும் காண்டீவத்தின் முழக்கம் ஆகியவற்றின் விளைவால் மனிதர்களும் யானைகளும் உற்சாகமிழந்து, தங்கள் புலன் உணர்வுகளையும் இழந்தனர். கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான தீண்டலைக் கொண்ட சவ்யசச்சினின் {அர்ஜுனனின்} கணைகளால் மனிதர்களும், யானைகளும் பிளக்கப்பட்டனர். அந்தப் போரில் எண்ணிக்கையில் ஆயிரமாயிரமாகக் காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட கணைகளால், அந்த யானைகள் தங்கள் உடலெங்கும் துளைக்கப்பட்டன. கிரீடம் தரித்தவனால் (கிரீடியான அர்ஜுனனால்) இப்படிச் சிதைக்கப்பட்ட போது, அவை {அந்த யானைகள்} சிறகுகளை இழந்த மலைகளைப் போலப் பூமியில் பேரொலியுடன் இடையறாமல் விழுந்து கொண்டிருந்தன. தாடை, அல்லது கும்பங்கள், அல்லது கன்னப்பொட்டு ஆகியவற்றில் நாராசங்களால் தாக்கப்பட்ட அவை, நாரைகளின் அலறலுக்கு ஒப்பாக அலறின.

அப்போது, கிரீடம் தரித்தவன் (அர்ஜுனன்), யானைகளின் கழுத்தில் நின்ற வீரர்களின் தலைகளைத் தன் நேரான கணைகளால் அறுக்கத் தொடங்கினான். குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட அத்தலைகள், பார்த்தனால் தேவர்களுக்குக் காணிக்கையளிக்கப்படும் தாமரைகளின் கூட்டத்துக்கு ஒப்பாக இடையறாமல் பூமியில் விழுந்து கொண்டிருந்தன. யானைகள் களத்தில் திரிகையில், கவசமிழந்து, காயங்களால் பீடிக்கப்பட்டு, குருதியால் நனைந்து, தீட்டப்பட்ட ஓவியங்களைப் போலத் தெரிந்த பல வீரர்கள் அவற்றின் {அந்த யானைகளின்} உடல்களில் தொங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. சில சந்தர்ப்பங்களில், (காண்டீவத்திலிருந்து) நன்கு ஏவப்பட்டவையும், அழகிய இறகுகளுடன் கூடிய சிறகு படைத்த ஒரே கணையால் துளைக்கப்பட்டு, இரண்டு அல்லது மூன்று வீரர்கள் பூமியில் விழுந்தனர்.

நாராசங்களால் ஆழத்துளைக்கப்பட்ட பல யானைகள், ஏதோ சில இயற்கை மீறலினால் காடுகள் நிறைந்த மலைகள் விழுவதைப் போல, தங்கள் முதுகுகளில் இருந்த பாகர்களோடும், தங்கள் வாயில் இரத்தம் கக்கியபடியும் கீழே விழுந்தன. பார்த்தன் {அர்ஜுனன்}, தன்னை எதிர்த்த தேர்வீரர்களின் வில்லின் நாண்கயிறுகள், கொடிமரங்கள், விற்கள், ஏர்க்கால்கள், நுகத்தடிகள் ஆகியவற்றைத் தன் நேரான கணைகளால் சுக்குநூறாக வெட்டினான். அர்ஜுனன் எப்போது தன் கணைகளை எடுத்தான், அவற்றை எப்போது வில்லின் நாணில் பொருத்தினான், எப்போது நாணை இழுத்தான், எப்போது அதை விடுத்தான் என்பதை யாராலும் காண முடியவில்லை. காணப்பட்டதெல்லாம், எப்போதும் வட்டமாக வளைக்கப்பட்ட வில்லுடன் அந்தப் பார்த்தன் தன் தேரில் ஆடுவதைப் போலத் தெரிந்ததுதான். நாராசங்களால் ஆழத்துளைக்கப்பட்ட யானைகள், தாங்கள் தாக்கப்பட்ட உடனேயே, தங்கள் வாய்களில் இருந்து இரத்தத்தைக் கக்கியபடி பூமியில் விழுந்தன.

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் பெரும் அழிவுக்கும் மத்தியில், எண்ணிலடங்கா தலையற்ற முண்டங்கள் எழுந்து நிற்பது தெரிந்தது. விற்களைப் பிடித்திருந்தவையும், தோலுறை அணிந்த விரல்களைக் கொண்டவையும், வாள்களைப் பிடித்திருந்தவையும், அங்கதங்கள் மற்றுப் பிற தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான கரங்கள், உடல்களில் இருந்து வெட்டப்பட்டுச் சிதறிக் கிடப்பது தெரிந்தது. எண்ணிலடங்கா உபஷ்கரங்கள், அதிஸ்தானங்கள், ஏர்க்கால்கள், கிரீடங்கள், உடைந்த தேர்ச்சக்கரங்கள், நொறுங்கிய அக்ஷகள் {அச்சுகள்}, நுகத்தடிகள், கேடயங்கள் ஆகியவையும், விற்களைத் தரித்திருந்த வீரர்கள், மலர்மால்களை, ஆபரணங்கள், ஆடைகள் மற்றும் விழுந்த கொடிமரங்கள் ஆகியவையும் அந்தப் போர்க்களத்தில் விரவிக் கிடந்தன.

கொல்லப்பட்ட யானைகள் மற்றும் குதிரைகள், க்ஷத்திரியர்களின் விழுந்த உடல்கள் ஆகியவற்றின் விளைவால் பூமியானது பயங்கரமாகக் காட்சியளித்தது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கிரீடம் தரித்தவனால் (அர்ஜுனனால்) இப்படிக் கொல்லப்பட்ட துச்சாசனனின் படைகள் தப்பி ஓடின. அந்தக் கணைகளால் பெரிதும் பீடிக்கப்பட்ட அவர்களது தலைவன் துச்சாசனனே, அச்சத்தால் பீடிக்கப்பட்டுச் சகட வியூகத்தில் தன் படைப்பிரிவுடன் நுழைந்து, துரோணரைத் தன்னைக் காப்பவராகக் கொண்டான்" {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்