The enquiry of Narada | Sabha Parva - Section 5b | Mahabharata In Tamil
(லோகபால சபாகயானா பர்வம்)
இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண
"நாரதர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "நீ சம்பாதிக்கும் செல்வம் உரிய பொருள்களுக்காகச் செலவிடப்படுகிறதா? உனது மனம் அறத்தில் இன்பம் காண்கிறதா? நீ வாழ்க்கையின் இன்பங்களை அனுபவித்து வருகிறாயா? உனது மனம் அதன் {இன்பத்தின்} கனத்தால் மூழ்கிவிடவில்லையா? ஓ! மனிதர்களின் தலைவனே {யுதிஷ்டிரனே}, மூன்று வகையான (நல்ல, அலட்சிய, தீய வகைகளாக இருக்கும்) உனது குடிகளிடம், உனது மூதாதையர்கள் பயின்றதைப் போல அறம் மற்றும் பொருளுக்கு இசைவான உன்னத நடத்தை கொண்டிருக்கிறாயா?
