புத்தகத்தை வாங்க - https://www.amazon.in/dp/B076149736
சூத முனிவரான சௌதி, மஹாபாரதம் ஒரு லட்சம் ஸ்லோகம் கொண்ட நூலாகும் எனச் சொன்னாலும், ஆதிபர்வத்தில், முதல் உபபர்வமான அனுக்கிரமாணிகத்தின், 101ம் சுலோகம், "உண்மையாக வியாசர் முதலில் 24,000 செய்யுள்களில் தனிபட்ட பகுதிகளை {அத்யாயங்களைக்} கொண்ட பாரதத் தொகுப்பையே செய்தார்; அவ்வளவு மட்டுமே கல்விமான்களால் {உண்மையான} பாரதம் என்றழைக்கப்படுகிறது" என்று சொல்கிறது. மேலும், ஆதிபர்வம் 1:20ல், "இந்த {மகாபாரத} வரலாறு "ஜெயம்" என்று அழைக்கப்படுகிறது" என்றும் ஆதிபர்வம் 2:390ல் "துவைபாயனரின் உதடுகளால் சொல்லப்பட்ட இந்தப் பாரதம் இணையற்றதாகும்" என்றும் சொல்லப்படுகிறது.
