Sunday, February 03, 2013

ஜரத்காருவும் யாயாவரர்களும்! | ஆதிபர்வம் - பகுதி 13

Jaratkaru and Yayavaras | Adi Parva - Section 13 | Mahabharata In Tamil

(ஆஸ்தீகப் பர்வம் - 1)

பதிவின் சுருக்கம் : தன் மூதாதையர்களான யாயாவரர்களைக் கண்ட ஜரத்காரு; ஜரத்காருவை நிந்தித்த யாயாவரர்கள்; திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்த ஜரத்காரு...

சௌனகர் {சௌதியிடம்}, "மன்னர்களில் புலியான மன்னன் ஜனமேஜயன், எக்காரணம் கொண்டு பாம்புகளின் இனத்தை அழிக்கும் குறிக்கோளுடன் வேள்வி நடத்தினான்?(1) ஓ சௌதி, முழுக்கதையையும் எங்களுக்குச் சொல்வாயாக. இருபிறப்பாளரில் சிறந்தவரும், துறவிகளில் முதன்மையானவருமான ஆஸ்தீகர், சுடர்விட்டெரியும் நெருப்பிலிருந்து பாம்புகளை ஏன் காப்பாற்றினார்?(2) அந்தப் பாம்பு வேள்வியை நடத்திய ஏகாதிபதி {ஜனமேஜயன்} யாருடைய மைந்தன்? அந்த இருபிறப்பாளரில் {பிராமணர்களில்} சிறந்தவர் {ஆஸ்தீகர்} யாருடைய மைந்தன்? எங்களுக்குச் சொல்வாயாக" என்றார்.(3)

சௌதி, "ஓ பேச்சாளர்களில் சிறந்தவரே, இந்த ஆஸ்தீகரின் கதை மிக நீண்டதாகும். நான் உள்ளபடிக்கு முழுவதும் சொல்கிறேன் கேட்பீராக" என்றார்.(4)


சௌனகர், "அந்தப் புகழ்பெற்ற பிராமணரான ஆஸ்தீக முனிவரின் அழகான கதையை முழுவதும் கேட்க ஆவலாக உள்ளேன்" என்றார்.(5)

சௌதி சொன்னார், "கிருஷ்ண துவைபாயனரால் {வியாசரால்} (முதலில்) ஓதப்பட்ட இந்த வரலாற்றை, புராணம் என்றும் பிராமணர்கள் கூறுவார்கள். இதற்கு முன், என் தந்தையும், வியாசரின் சீடருமான ரோமஹர்ஷணர்[1] நைமிசாரண்யவாசிகளின் வேண்டுகோளுக்கிணங்க, இஃதை அவர்களுக்கு ஓதியிருக்கிறார்.(6,7) அப்படி ஓதப்பட்ட போது, நானும் அங்கே இருந்தேன். ஓ சௌனகரே, நீர் கேட்டுக் கொண்டதால், ஆஸ்தீகரின் வரலாற்றை நான் கேட்டவாறே சொல்லப் போகிறேன்.(8) பாவங்களை அழிக்கும் கதையைச் நான் முழுவதுமாகச் சொல்லும்போதே கேட்பீராக.

[1] ஜனமேஜயன் வேள்வியில் மகாபாரதம் உரைத்த வைசம்பாயனரும், நைமிசாரண்யத்தில் மகாபாரதம் உரைத்த சௌதியின் தந்தை ரோமஹர்ஷணரும் வியாசரின் சீடர்கள் என்றால் இரண்டுக்கும் இடையில் ஒரு தலைமுறை இடைவெளியே உள்ளது என்பது இங்கே கவனத்தில் கொள்ளத்தக்கது. அஃது அவ்வாறு ஒரு தலைமுறை இடைவெளி அல்ல, பல தலைமுறைகள் இடைவெளி கொண்டது. சௌதி மிக நீண்ட ஆயுள் படைத்தவர். அவரை ஒரு தலைமுறை என்று கொள்ளக்கூடாது என்ற கருத்தும் இருக்கிறது..

ஆஸ்தீகரின் தந்தை, பிரஜாபதியை {பிரம்மனைப்} போன்ற சக்தி படைத்தவர்.(9) அவர் தவத்தில் உறுதிமிக்க ஒரு பிரம்மச்சாரி. காமத்தைத் தன் கட்டுக்குள் வைத்திருந்த மிகப்பெரிய துறவியான அவர், சிறிதளவே உண்பார். அவர் ஜரத்காரு என்ற பெயரால் அறியப்பட்டிருந்தார்.(10) யாயாவரர்களில் முதன்மையான அவர் {ஜரத்காரு}, ஒழுக்கமானவர்; கடுமையான விரதங்களை நோற்பவர்; பெரும் ஆன்மசக்திகளைக் கொண்டவர், மிகச்சிறந்த முறையில் அருளப்பட்டவராவார்.(11) அவர் ஒரு முறை உலகம் முழுவதும் பயணம் செய்தார். பலவகைப்பட்ட இடங்களுக்குச் சென்றார்; பலவகைப்பட்ட புனித ஆறுகளில் நீராடினார். பொழுது எங்கே இருட்டுகிறதோ அங்கே இளைப்பாறினார்.(12) பெரும் சக்தி கொண்ட அவர், ஆத்மாவை {மனதை} அடக்காத மனிதர்களால் செய்யமுடியாத கடுமையான விரதங்களை நோற்றார். அவர் காற்றை மட்டுமே உண்டு வாழ்ந்தார். தூக்கத்தை எப்போதும் துறந்தார்.(13)

அப்படிப் பிரகாசமான நெருப்பு போல் அவர் திரிந்து கொண்டிருந்த போது, ஒருநாள் ஒரு பெரிய குழிக்குள் தனது மூதாதையர்கள் தலைகீழாகவும் கால்மேலாகவும் தொங்கிக் கொண்டிருந்ததைக் கண்டார். அவர்களைக் கண்டதும், ஜரத்காரு,(14,15) "அனைத்துப் பக்கங்களிலும் எலி கடிக்கப்படும் விரானா {விலாமிச்சை} மர நாறுகளில் {வைக்கோலில்}, யாரும் அறியாதவாறு இந்தக் குழிக்குள் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்கும் நீங்கள் யார்?" என்று கேட்டார்.(16)

அதற்கு மூதாதையர்கள், "நாங்கள் கடுந்தவங்களைச் செய்த யாயாவர முனிவர்கள் ஆவோம். சந்ததி இல்லாததால் நாங்கள் பூமிக்குள் புதைந்து கொண்டிருக்கிறோம்.(17) எங்களுக்கு ஜரத்காரு என்று ஒரு மகன் இருக்கிறான். அவனால்தான் எங்களுக்குக் கேடு வந்தது. அந்த மோசமானவன் தவம் மற்றும் சடங்குகளில் மட்டும் நாட்டம் கொண்டு அலைகிறான்.(18) அந்த மடையன் திருமணம் செய்து கொண்டு சந்ததியைப் பெருக்கவில்லை. அவனால் {ஜரத்காரு}, எங்கள் குலம் அழியப்போகிறது. அதனால்தான் நாங்கள் இந்தக் குழிக்குள் தொங்கிக் கொண்டிருக்கிறோம்.(19) வழியிருந்தும் இல்லாத பேறிலிகளைப் {அதிர்ஷ்டமற்றவர்களைப்} போல நாங்கள் இருக்கிறோம். ஓ அருமையானவரே, எங்களுக்கு நண்பர் போல் வந்து எங்களுக்காக வருந்தும் நீர் யார்?(20) ஓ பிராமணரே, எங்கள் அருகில் நிற்கும் நீர் யார் என்பதை அறிய விரும்புகிறோம். எங்களைப் போன்ற பேறிலிகளுக்காக நீர் ஏன் வருந்துகிறீர்?" என்று கேட்டனர்.(21)

ஜரத்காரு, "நீங்களே எனக்குத் தாத்தனும் பாட்டனும் ஆவீர்கள். நானே அந்த ஜரத்காரு ஆவேன். உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?" என்றார்.(22)

அதற்கு அந்த மூதாதையர்கள், "ஓ குழந்தாய் {ஜரத்காரு}, ஒரு மகனைப் பெற்று, நமது பரம்பரையின் நீட்சிக்கு உன்னால் முடிந்ததை முயற்சி செய்வாயாக. அப்படிச் செய்தாயானால், நீ உனக்கும், எங்களுக்கும் பெரிய நன்மையைச் செய்தவனாவாய்.(23) குழந்தைக்குத் தகப்பனாவதில் கிடைக்கும் பலனை, சிறந்த ஒழுக்கத்தாலும், தவங்களைக் கடைப்பிடிப்பதாலும் கூட ஒருவன் அடைய முடியாது.(24) எனவே, ஓ குழந்தாய், இஃது எங்கள் உத்தரவு. திருமணம் செய்து குழந்தைப் பெறுவதில் உன் இதயத்தை நிறுத்துவாயாக {மனதைச் செலுத்து}. இதுவே நீ எங்களுக்குச் செய்யும் மிகப்பெரிய உதவி ஆகும்" என்றனர்.(25)

ஜரத்காரு, "எனக்காக நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். எனது இன்பத்திற்காக நான் செல்வம் ஈட்ட மாட்டேன். உங்களின் நலனுக்காகவே அவற்றைச் செய்யப் போகிறேன்.(26) இந்தப் புரிதலின் அடிப்படையில், முக்தி பெறுவதற்காகவே, சாத்திரங்களுக்கு உட்பட்டு ஒரு மனைவியைப் பெறப் போகிறேன். நான் இதற்குப் புறம்பாக நடக்க மாட்டேன். எனது பெயரையே கொண்ட ஒரு மணப்பெண்ணை, அவளது உற்றார் {உறவினர்கள்}, முழு மனதுடன் எனக்குப் பிச்சைப் பரிசாகத் தர வேண்டும். அப்படிப்பட்டவளையே நான் மணமுடிப்பேன்.(27-28) ஆனால் என்னைப் போன்ற ஓர் ஏழைக்கு எந்த மனிதன் தன் பெண்ணைக் கொடுப்பான்? ஆனால் பிச்சையாகக் கொடுக்கப்படும் எந்தப் பெண்ணையும் நான் ஏற்பேன்.(29) இதன்படியே நான் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள முயல்வேன். நான் ஒரு சொல்லைச் சொல்லிவிட்டு அதற்கு மாறாக எப்போதும் நடக்க மாட்டேன். உங்களை மீட்டு, நிலைபெற்ற இன்ப உலகங்களுக்கு அனுப்புவதற்காக நான் அந்தப் பெண்ணிடம் சந்ததியை உண்டாக்குவேன்” என்றார் {ஜரத்காரு}" {என்றார் சௌதி}.(30,31).


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்