Saturday, February 16, 2013

கடல் - ஆறுகளுக்கு அரசன்! | ஆதிபர்வம் - பகுதி 21

Ocean - King of rivers! | Adi Parva - Section 21 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 9)

பதிவின் சுருக்கம் : பந்தயத்தின் முடிவுக்காக உச்சைஸ்ரவத்தைக் காண கடலைக் கடந்து சென்ற சகோதரிகள்...

சௌதி சொன்னார், "ஓ தவத்தைச் செல்வமாகக் கொண்டவரே! {சௌனகரே}, இரவு கழிந்து காலையில் சூரியன் உதித்ததும், அந்த இரு சகோதரிகளான கத்ருவும், வினதையும், அடிமையாவதாகப் பந்தயம் கட்டிக் கொண்டு, பொறுமையின்மையால் அந்த உச்சைஸ்ரவஸ் குதிரையை அருகில் காண அவசரமாகச் சென்றனர்.(1,2) வழியில் அவர்கள் பெருங்கடலைக் கண்டனர். வெகு அகலமானதாகவும், ஆழமானதாகவும், கடக்கமுடியாததாகவும் இருந்த அந்தப் பெரும் நீர்க்கொள்ளிடம் (கடல்), உருண்டு கொண்டு, பயங்கரமாக உறுமிக் கொண்டு, மிகப் பெரிய, கருத்த, கடுமையான நீர்வாழ் உயிரினங்கள், திமிங்கலங்களையே விழுங்கும் பெரிய மீன்கள், மகரங்கள் {மீன் அல்லது நீர்நாயின் உடலும் யானை முகமும் கொண்ட புராண கால விலங்கு}, வெவ்வெறு வடிங்களினாலான ஆயிரக்கணக்கான உயிரினங்கள், மற்றும் எண்ணிலடங்கா ஆமைகள், முதலைகள் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டு,(3-5) ரத்தினங்களின் சுரங்கமாக, வருணனின் இல்லமாக (நீர்க்கடவுள்), நாகர்களின் அழகான, மிகச்சிறந்த வசிப்பிடமாக, ஆறுகள் அனைத்திற்கும் அரசனாக,(6) பூமிக்கடியில் உள்ள நெருப்பின் இருப்பிடமாக, அசுரர்களுக்கு நண்பனாக (அல்லது ஆதரவளிப்பவனாக), எல்லா உயிரினங்களுக்கும் பயங்கரமாக, பெரிய நீர்க்களஞ்சியமாக, காலத்திற்கும் மாற்ற முடியாததாக இருந்தது.(7)

அது தெய்வீகமானது; தேவர்களுக்கு நன்மையானது; அமுதத்திற்கு மூலமாக இருப்பது. எல்லையில்லாதது, புத்திக்கு எட்டாதது, புனிதமானது, பெரும் அதிசயமானது.(8) அஃது இருளானது. நீர்வாழ்வனவற்றின் ஒலிகளோடு கூடிய பயங்கரமானது, பெருத்த இரைச்சலுடன் உறுமிக்கொண்டிருப்பது, ஆழமான நீர்ச்சுழல்கள் நிறைந்தது, எல்லா உயிர்களுக்கும் அச்சமூட்டுவது.(9) கரையிலிருந்து வீசும் காற்றினால் உந்தப்பட்டு, மிக உயரத்திற்குக் கிளர்ந்தெழும்பிக் குழம்பிக் கொண்டே இருப்பது. அதன் அலைகள், எல்லாப்பக்கங்களிலும் கையை உயர்த்தி நடனம் ஆடிக் கொண்டே இருப்பதுபோல் பிரதிபலிக்கும்.(10) வாசுதேவனின் சிறப்புமிக்கச் சங்கான பாஞ்சஜன்யத்திற்குத் தந்தையும், சந்திரனின் வளர்பிறை மற்றும் தேய்பிறையின் போது ஈர்க்கப்பட்டு அளவுக்கதிகமான பெரிய அலைகளால் நிறைந்திருப்பதும், ரத்தினங்களுக்குப் பெரும் சுரங்கமாகத் திகழ்வதும்,(11) (மூழ்கிய) பூமியைத் தூக்கிட, அளவிடமுடியாத சக்தி வாய்ந்த கோவிந்தன், முன்பு பன்றி உருவத்தில் கலக்கியபோது பெரும் அதிர்வுக்குள்ளாகி, பெரிய அலைகளை எழுப்பியதும், பாதாள லோகத்தை விட ஆழமான தளத்தைக் கொண்டதும், பெரும் தவம் செய்த அத்ரி முனிவர் நூறு வருடங்கள் உழைத்தும் ஆழம் காணமுடியாதது அது {கடல்}.(12,13)

எல்லையில்லா சக்திக் கொண்டவனும், தாமரை போன்ற வயிறு படைத்தவனுமான விஷ்ணுவுக்கு ஒவ்வொரு யுக முடிவின் போதும் அவனது யோகத் துயிலும், ஆன்மிகத் தவமுமான ஆழ்ந்த உறக்கத்திற்குப் படுக்கையாக இருப்பது {கடல்}.(14) இடியின் தாக்குதலுக்குப் பயந்த மைநாகத்துக்கு {மைநாக மலைக்கு} அடைக்கலம் கொடுத்தது. கடும் போர்களில் பின்வாங்கும் அரக்கர்களுக்குப் புகலிடமானது.(15) வரவராவின் (பெண் கடற்குதிரை) வாயிலிருந்து கிளம்பும் சுடர் நெருப்புக்கு {வடவாக்னிக்கு} இதன் நீர் புனிதமான நெய்யாகப் பயன்படும். இஃது ஆழமறிய முடியாதது, எல்லையற்றது, மிகப் பரந்தது, அளவிடமுடியாதது, ஆறுகளுக்கு அரசனானது.(16)

{கடல் எனும் தங்கள் கணவன் மீது} காதல் வலைவீசும் சக்களத்திகளைப் போலச் செருக்கு நடை கொண்டவையும், ஒன்றையொன்று {கடலைச்} சந்திக்கும் ஆவலில் பிறவற்றைத் {பிற ஆறுகளைத்} தடுத்தவையுமான ஆயிரக்கணக்காகப் பெரிய ஆறுகள் அதற்குள் {அந்தக் கடலுக்குள்} விரைவதை அவர்கள் {கத்ருவும், வினதையும்} கண்டனர்.(17) அந்தக் கடல் எப்போதும் நிறைந்து, எப்போதும் அலைகளின் ஆட்டத்துடன் இருப்பதைக் கண்டனர். எண்ணிலடங்கா சீற்றங்கொண்ட திமிங்கலங்களையும், மகரங்களையும் கொண்ட அஃது {கடல்}, ஆழமாக இருப்பதையும் கண்டனர். அந்தக் கடலானது தன்னகத்தே இருக்கும் நீர் உயிரிகளின் பயங்கரமான ஒலிகளை எப்போதும் எதிரொலித்துக் கொண்டே இருந்தது, பெரிதாகவும், அகலமானதாகவும், விண்ணைப் போல் பெரும்பரப்பு கொண்டதாகவும், ஆழம் காண முடியாததாகவும், எல்லை இல்லாததாகவும், நீருக்குப் பெரிய களஞ்சியமாக இருப்பதையும் கண்டனர்” {என்றார் சௌதி}.(18)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்