Saturday, February 23, 2013

கருடனுக்குப் பெயர் கொடுத்த வாலகில்யர்கள்! | ஆதிபர்வம் - பகுதி 30

Valakhilyas naming Garuda! | Adi Parva - Section 30 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 18)

பதிவின் சுருக்கம் : யானையையும், ஆமையையும் தூக்கிச் சென்று ஒரு மரக்கிளையில் அமர்ந்த கருடன்; மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருந்த வாலகில்யர்கள்; கருடனுக்குப் பெயர் கொடுக்கப்பட்டது; யானையையும், ஆமையையும் தின்ற கருடன்; அமுதத்தைக் காக்க உத்தரவிட்ட இந்திரன்...

சௌதி தொடர்ந்தார், "தனது காலால் பெரும் பலம் வாய்ந்த கருடன் தொட்டவுடனேயே, அந்த மரத்தின் கிளை ஒடிந்தது. அதைக் {ஒடிந்த கிளையை} கருடன் {அலகால்} பிடித்துக் கொண்டான்.(1) வியப்பால் தனது பார்வையைச் சுழலவிட்ட கருடன், வாலகில்ய முனிவர்கள் அதிலிருந்து {அந்த கிளையிலிருந்து} தலைகீழாகத் தொங்கிக் கொண்டு தவமியற்றிக் கொண்டிருப்பதைக் கண்டான்.(2) அந்தக் கிளை கீழே விழுந்தால் அந்த முனிவர்கள் கொல்லப்படுவார்கள் என்பதை உணர்ந்த அந்தப் பெரும்பலம் வாய்ந்தவன், யானையையும், ஆமையையும் இன்னும் இறுகப் பற்றினான்.(3,4)



முனிவர்கள் கொல்லப்படுவார்களே என்று அஞ்சி, அவர்களைக் காப்பாற்ற விருப்பங்கொண்டு, அந்தக் கிளையைத் தனது அலகால் பற்றி, சிறகுகளை அடித்து உயர்ந்தான்.(5) அந்தப் பெரும் முனிவர்கள் தேவர்களாலும் முடியாத இந்தச் செயலைக் கண்டு வியந்து, அந்த வலிமைமிகுந்த பறவைக்கு ஒரு பெயர் கொடுத்தனர்[1].(6) வாலகில்யர்கள், "பாம்புகளை உணவாக உண்பவனும், பறவைகளில் முதன்மையானவனும், விண்ணோடியுமான இவன் {கருடன்}, பெரும் சுமையைச் சுமந்து கொண்டிருக்கும்போதும், தனது சிறகுகளால் உயர்வதால், கருடன் (பெரும் சுமையைச் சுமப்பவன்) என்று அறியப்படட்டும்" என்றனர்.(7)

[1] கருடனுக்கு வாலகில்யர்கள்தான் பெயர் கொடுக்கிறார்கள். அதற்கு முன்பு அவனுக்கு என்ன பெயர்? வேறொரு பதிப்பில் வைநதேயன் என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது. வைநதேயன் என்றால் வினதையின் மகன் என்று பொருள்

தனது சிறகுகளால் மலைகளை நடுங்க வைத்த கருடன், நிதானமாக வானத்தில் பறந்து சென்றான். யானை மற்றும் ஆமையோடு {கைகளில் பிடித்து} உயர்ந்த {பறந்த} போது கீழே இருக்கும் பல்வேறு பகுதிகளை நோக்கினான்.(8) வாலகில்யர்களைக் காப்பாற்ற விரும்பிய அவன், அமர ஓர் இடமும் காணவில்லை. கடைசியாக மலைகளில் முதன்மையான கந்தமாதன மலைக்குச் சென்றான்.(9) அங்கே அர்ப்பணிப்புடன் தவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தனது தந்தை கசியபரைக் கண்டான். அந்த விண்ணோடியை, அந்தத் தெய்வீக வடிவிலானவனை, அதிகப் பிரகாசமும், பலமும் சக்தியும் கொண்டவனை, காற்றுவேகம், மனோவேகம் கொண்டவனை, மலைச்சிகரம் போன்று பெரிதாக இருப்பவனை, பிராமணனின் சாபத்தைப் போல உடனே அடிக்கத் தயாராக இருப்பவனை, புத்திக்கு எட்டாதவனை, விவரிக்க முடியாதவனை, அனைத்து உயிருக்கும் அச்சத்தை ஏற்படுத்துபவனை, பெரும் ஆற்றலுள்ளவனை, பயங்கரமானவனை, அக்னி போலப் பிரகாசிப்பவனை, தேவர்களாலும், தானவர்களாலும், அசுரர்களாலும் வெல்லப்பட முடியாதவனை, மலையைப் பிளந்து, பெருங்கடலைக் குடித்து மூன்று உலகங்களையும் அழிக்க வல்லவனை, மூர்க்கமாக யமனைப் போல் காட்சியளிப்பவனை, தனது மகனான கருடனை கசியபரும் கண்டார். அவன் தன்னை நெருங்கி வருவதைக் கவனித்த புகழ்பெற்ற கசியபர், அவனது நோக்கம் அறிந்து பேசினார்.(10-14)

கசியபர், "ஓ குழந்தாய்! ஆராயாத {கண்மூடித்தனமான} செயலைச் செய்யாதே. அப்படிச் செய்தால் நீ வேதனையை அடைய வேண்டியிருக்கும். சூரியக் கதிர்களைக் குடித்து உயிர்தாங்கிக் கொண்டிருக்கும் இந்த வாலகில்யர்கள் கோபம் கொண்டால் உன்னைச் சிதறடித்து விடுவார்கள்"என்றார் {கசியபர்}."(15)

சௌதி தொடர்ந்தார், "தவப்பயன்களால் தங்களது பாவங்களை எரித்து, நற்பேறு பெற்ற வாலகில்யர்களைச் சாந்தப்படுத்த எண்ணி கசியபர் தனது மகனுக்காக அவர்களிடம்,(16) "ஆன்மீகத்தையே செல்வமாகக் கொண்டவர்களே, கருடனின் செயல்கள், அனைத்து உயிருக்கும் நன்மை பயக்கும் செயல்களே. அவன் சாதிக்க நினைக்கும் இந்தப் பணி கடுமையானது. நீங்கள் அவனுக்கு அனுமதி வழங்குங்கள்" என்று வேண்டினார்.(17)

சௌதி தொடர்ந்தார், "புகழ்பெற்ற கசியபரால் இப்படி வேண்டிக்கொள்ளப்பட்ட அந்தத் துறவிகளும், தங்கள் தவத் துறவுகளை இயற்ற, அந்தக் கிளையைக் கைவிட்டு, புனிதமான இமய மலைக்குச் சென்றனர்.(18) முனிவர்கள் சென்றதும், அந்த வினதையின் மைந்தன் {கருடன்}, கிளையைத் தனது வாயில் வைத்துக்கொண்டே தடைபட்ட குரலுடன் தனது தந்தை கசியபரிடம்,(19) "ஓ சிறப்புமிக்கவரே! இந்த மரத்தின் கிளையை நான் எங்கே வீசி எறிவது? ஓ புகழ்பெற்றவரே! மனிதர்கள் இல்லாத ஒரு பகுதியை எனக்குச் சுட்டிக் காட்டுவீராக" என்று கேட்டான்.(20) கசியபர், குகைகளும், எப்போதும் பனி மூடிய பள்ளத்தாக்குகளும் உள்ள, சாதாரண உயிரினங்கள் எண்ணத்தால்கூட நெருங்க முடியாத மனிதர்களற்ற ஒரு மலையைப் பற்றிச் சொன்னார்.(21)

அந்தப் பெரும்பறவையானவன் கிளையையும், யானையையும், ஆமையையும் தாங்கிக் கொண்டு அந்த மலையை நோக்கி வேகமாகப் பறந்து சென்றான்.(22) பெரும் உடல் படைத்த அந்தப் பறவை தூக்கிச் சென்ற மரத்தின் பெருங்கிளையை நூறு தோல்களைக் (விலங்குத் தோல்களைக்) கொண்டு வார் {கயிறு}[2] அமைத்தாலும் சுற்றிக் கட்ட முடியாது.(23) பறவைகளின் மன்னன் கருடன், நூறாயிரம் யோஜனைகளை மிகக் குறைந்த நேரத்தில் பறந்து கடந்தான்.(24) அந்த விண்ணோடி, நொடிப்பொழுதில் தனது தந்தை சுட்டிக்காட்டிய திசையைப் பின்பற்றி மலையை அடைந்து, அந்தப் பிரம்மாண்டமான கிளையைக் கீழே விட்டான். அது பேரொலியுடன் விழுந்தது.(25)

[2] நூறு மாடுகளின் தோலினால் செய்யப்பட்ட வார் என்பது பழைய உரை என்று கும்பகோணம் பதிப்பில் காணப்படுகிறது.

கருடனின் சிறகுகளால் எழும்பிய புயலால் தாக்கப்பட்டு, அந்த மலைகளின் இளவரசன் நடுங்கினான். அங்கிருந்த மரங்களும் பூக்களைச் சொரிந்தன.(26) ரத்தினங்களையும் தங்கங்களையும் கொண்டு அந்த மலையை அலங்கரித்த சிகரங்கள், கட்டறுந்து எல்லாப்புறமும் கீழே விழுந்தன.(27) கீழே விழுந்த அந்தக் கிளை, மின்னலைக் கொண்டிருக்கும் மேகங்கள் போலக் கரும் இலை கொத்துக்களின் நடுவே தங்க மலர்களைக் கொண்ட மரங்கள் மீது விழுந்து, அவற்றைச் சாய்த்தது.(28) தங்கம் போன்று ஒளிவீசும் அம்மரங்கள் கீழே விழுந்து, மலை உலோகங்களின் சாயமேற்றப்பட்டு, சூரியக் கதிர்களில் குளித்ததைப் போல ஒளிர்ந்தன.(29) பிறகு, அந்தப் பறவைகளில் சிறந்தவனான கருடன், அந்த மலையின் உச்சியில் அமர்ந்து யானையையும், ஆமையையும் உண்டு, அந்த மலையை விட்டுச் சிறகடித்துப் பெரும் வேகத்துடன் பறந்தான்.(30,31)

{அதே நேரத்தில்} பல்வேறு தீய சகுனங்கள் தோன்றி தேவர்களை அச்சத்தில் ஆழ்த்தின. இந்திரனுக்குப் பிடித்த வஜ்ராயுதம், பயத்தால் ஒளிர்ந்தது.(32) ஆகாயத்திலிருந்து விண்கற்கள் நெருப்புடனும் புகையுடனும் பகலிலேயே விழுந்தன. வசுக்கள், ருத்ரர்கள், ஆதித்தியர்கள், சப்யர்கள், மருத்துக்கள் மற்றும் மற்ற தேவர்களின் ஆயுதங்கள் தங்களுக்குள் தங்கள் சக்தியை செலவிட்டன. {அதாவது அவற்றுக்குள்ளேயே சண்டையிட்டன}.(33,34) தேவாசுரப் போர் நிகழ்ந்துபோது கூட இப்படிப்பட்ட நிகழ்ச்சி நடந்ததில்லை. இடியுடன் கூடிய காற்று அடித்தது, விண்கற்கள் ஆயிரக்கணக்கில் விழுந்தன.(35) வானம் மேகமற்றதாய் இருந்தாலும், முழங்கிக் கொண்டே இருந்தது. தேவர்களுக்குத் தேவனும் இரத்த மழையைப் பொழிந்தான்.(36) தேவர்களின் கழுத்திலிருந்த பூமாலைகள் வாடி அவர்கள் வீரம் மங்கியது. கொடூரமான மேகத் திரள், அடர்ந்த இரத்த மழையைப் பொழிந்தன.(37)

பிருஹஸ்பதி
காற்றினால் எழும்பிய புழுதியானது தேவர்களின் கிரீடங்களின் பளபளப்பை குறைத்து மங்கியதாக்கியது. இந்தத் தீய தடைகளைக் கண்டு மற்ற தேவர்களுடன் சேர்ந்து அச்சத்தால் குழம்பிப் போன ஆயிரம் வேள்விகள் செய்தவன் (இந்திரன்), பிருஹஸ்பதியிடம்,(38) "ஓ வழிபடத் தகுந்தவரே, இந்த இயற்கைச் சீற்றங்கள் திடீரென ஏன் எழுந்தன? போரில் எங்களை வெல்ல எந்த எதிரியையும் நான் காணவில்லையே" என்றான்.(39) பிருஹஸ்பதி, "ஓ தேவர்கள் தலைவனே, ஓ ஆயிரம் வேள்வி நடத்தியவனே {இந்திரா}, உனது தவறும், கவனக்குறைவும், உயரான்ம வாலகில்ய முனிவர்களின் ஆன்மிகத் தவமுமே இதற்கெல்லாம் காரணம்.(40) பெரும் பலம்பொருந்திய விண்ணோடியும், நினைத்த உருவத்தை நினைத்தமாத்திரத்தில் அடைபவனுமான கசியபர் மற்றும் வினதையின் மகன் {கருடன்}, சோமத்தை அபகரிக்க நெருங்கி வருகிறான்.(41) பெரும் வலிமை படைத்தவர்களில் முதன்மையானவனான அந்தப் பறவையால் உன்னிடமிருந்து சோமத்தை கவர முடியும். அவனால் எல்லாம் முடியும். அடைய முடியாத ஒன்றை அவனால் எளிதாக அடைய முடியும்."(42)

சௌதி தொடர்ந்தார், "இந்த வார்த்தைகளைக் கேட்ட இந்திரன், அமுதத்தைக் காக்கும் காவலர்களிடம், "பெரும்பலமும் சக்தியும் கொண்ட ஒரு பறவையானவன் அமுதத்தை அபகரிக்க எண்ணங்கொண்டுள்ளான்.(43) அவன் {கருடன்} அதை அபகரித்து விடக்கூடாது. ஆகையால் உங்களை முன்கூட்டியே எச்சரிக்கிறேன். அவன் அளவிலடங்காத சக்தி கொண்டவன் என்று பிருஹஸ்பதி சொன்னார்" என்று தகவல் தெரிவித்தான்.(44)

தேவர்கள் இதைக் கேட்டு வியந்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அமுதத்தைச் சுற்றி அவர்கள் நின்று கொண்டனர். பெரும் வீரம் கொண்டவனும், வஜ்ரதாரியுமான இந்திரனும் அவர்களுடன் நின்றான்.(45) பெரும் மதிப்புக் கொண்ட தங்கத்தில் ரத்தினங்கள் பதித்த மார்புக் கவசங்களையும், உறுதியும் பளபளப்புமிக்கத் தோலாலான கவசங்களையும் தேவர்கள் அணிந்தனர்.(46) அந்த வலிமைமிக்கத் தேவர்கள், பல்வேறு கூர்முனை கொண்ட, பயங்கரமான உருவங்களில் உள்ள பலதரப்பட்ட ஆயுதங்களைத் தரித்தனர்.(47) கணக்கிலடங்காதவையாக இருந்த அந்த எல்லா ஆயுதங்களும் நெருப்புப் பொறிகளையும் புகையையும் கக்கிப் பிரகாசித்தன.(48)

நிறையச் சக்கரங்களையும், கூர்முனை முட்களைக் கொண்ட இரும்புத் தண்டங்களையும், திரிசூலங்களையும், போர்க்கோடரிகளையும், பல்வேறு வகைப்பட்ட கூர்முனை கொண்ட கணைகளையும், பளபளப்பான வாட்களையும், கொடூரமான வடிவங்கள் கொண்ட கதாயுதங்களையும், தங்கள் உடலில் தரித்துக் கொண்டனர்.(49) பிரகாசமான ஆயுதங்களையும், தெய்வீக ஆபரணங்களையும் தரித்து ஒளிவீசி கொண்டு தங்கள் அச்சத்தைத் தணித்துக்கொண்டு, தேவர்கள் அங்கே காத்திருந்தனர்.(50) ஒப்பற்ற பலமும், சக்தியும், பிரகாசமும் கொண்ட தேவர்கள் அமுதத்தைக் காக்கத் தீர்மானித்துக் கொண்டனர். அசுரர்களின் நகரங்களை அழித்தொழிக்க வல்லவர்களான அவர்கள் {தேவர்கள்} நெருப்பு போலக் காட்சியளித்தனர்.(51) தேவர்கள் நூறாயிரக்கணக்கான கூர்முனை முட்கள் கொண்ட இரும்புக் கதைகளைக் கொண்டு அந்த {போர்க்களமாகப் போகும்} இடத்தில் நின்றதால், அந்த இடமே சூரியனின் கதிர்களால் பிரகாசிக்கும் இன்னொரு வானம் போலவே விளங்கியது" {என்றார் சௌதி}.(52)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்