Sunday, February 24, 2013

வாலகில்யர்களின் கோபம்! | ஆதிபர்வம் - பகுதி 31

The wrath of the Valakhilyas! | Adi Parva - Section 31 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 19)

பதிவின் சுருக்கம் : சௌனகர் கேட்ட கேள்விகள்; கசியபர் செய்த வேள்வியில் வாலகில்யர்களை அவமதித்த இந்திரன்; மற்றொரு இந்திரனை உருவாக்கத் தவமிருந்த வாலகில்யர்கள்; கருடனின் பிறப்புக்குக் காரணமாக அமைந்த வாலகில்யர்கள்...

சௌனகர், "ஓ சூதப் புதல்வா! {சௌதியே}, ”இந்திரன் செய்த தவறு என்ன? அவன் கவனக்குறைவாகச் செய்த செயல் என்ன? எப்படி வாலகில்யர்களின் தவப்பயனின் விளைவால் கருடன் பிறந்தான்?(1) கசியபர் எப்படிப் பறவைகளின் அரசனை {கருடனை} மகனாக அடைந்தார்? எப்படி எல்லா உயிரினங்களாலும் வெல்ல முடியாதவனாகவும், கொல்ல முடியாதவனாகவும் அவன் {கருடன்} இருக்கிறான்?(2) எப்படி அந்த விண்ணோடியால் விரும்பிய இடத்திற்கெல்லாம் செல்லவும், விரும்பிய சக்தியை அடையவும் முடிகிறது? இவ்விவரங்கள் புராணங்களில் உள்ளதெனில் நான் அதைக் கேட்க விரும்புகிறேன்" என்று கேட்டார் {சௌனகர்}.(3)



அதற்குச் சௌதி, "நீர் கேட்பவையெல்லாம் உண்மையில் புராணங்களில் உள்ளவைதான். ஓ இருபிறப்பாளரே {பிராமணரே}, நான் அனைத்தையும் விரிவாகச் சொல்கிறேன் கேட்பீராக.(4) முன்பொரு காலத்தில், உயிரினங்களின் தலைவரான {பிரஜாபதியான} கசியபர், புத்திரப்பேறுக்காக வேள்வி நடத்தினார், முனிவர்களும், தேவர்களும், கந்தர்வர்களும் அவருக்கு உதவி செய்தனர்.(5) கசியபர், இந்திரனையும், அவனுக்கு உதவியாகத் துறவிகளான வாலகில்யர்களையும், மற்ற தேவர்களையும் வேள்விக்குத் தேவையான எரிபொருளைக் {சமித்துக்களை} கொணர்வதற்கு நியமித்திருந்தார்.(6) தேவனான இந்திரன், மலைக்கு நிகரான பெரும் சுமையைத் தன் பலத்திற்கேற்றபடி எந்தவொரு சிரமுமின்றிக் கொண்டு வந்தான்.(7) வரும் வழியில், கட்டைவிரல் அளவே உள்ள வாலகில்ய முனிவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு பலாச இலையின் குச்சியைச் சுமந்து கொண்டு வருவதைக் கண்டான்.(8)

அந்த முனிவர்கள் உணவில்லாமல் மிகவும் உடல்மெலிந்து, அவர்கள் உடலுக்குள்ளே தங்கள் உடல் மறைந்திருந்தனர் {எலும்போடு ஒட்டி இருந்தனர்}. பாதையிலே மாடுகளின் குளம்புகள் ஏற்படுத்திய பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி மிகவும் சிரமப்படும் அளவுக்குப் பலவீனமாக அவர்கள் இருந்தனர்.(9) புரந்தரன் (இந்திரன்), தனது பலத்தில் கர்வங்கொண்டு, அவர்கள் தலைக்குமேல் தாண்டிச் சென்றது[1] மட்டுமல்லாமல், அவர்களைத் திரும்பிப்பார்த்து, கேலியாகச் சிரித்தும் அவமதித்தான்.(10) இப்படி அவமதிக்கப்பட்ட முனிவர்கள் மிகுந்த கோபமும், துன்பமும் கொண்டு ஒரு பெரிய வேள்விக்கு ஏற்பாடு செய்து, இந்திரனைப் பீதியடையச் செய்தனர்.(11)

[1] தலையைத் தாண்டிச் செல்வது அவமதிக்கும் செயலாகவே இன்றும் நம்மால் கொள்ளப்படுகிறது.

ஓ சௌனகரே! கேளும், தங்கள் விருப்பத்தை நிறைவேற்ற, விரதங்களை மேற்கொள்பவர்களும், ஞானமுள்ளவர்களும், சிறந்தவர்களுமான அந்தத் துறவிகள் வேள்வித்தீயில், சுத்தமான நெய்யை விட்டு, சத்தமாக,(12) “அனைத்து இடத்திற்கும் தன் விருப்பப்படி செல்லக்கூடியவனும், விரும்பிய அளவு சக்தியை அடையக்கூடியவனும், (இப்போது) இருக்கும் தேவர்களின் தலைவனுக்கு அச்சத்தைத் தரக்கூடியவனாக இன்னொரு இந்திரன் உண்டாகட்டும். எங்கள் தவங்களின் பயனாக மனம் போல் வேகங்கொண்டவனாகவும்[2], பயங்கரமானவனாகவும் ஒருவன் தோன்றட்டும்” என்று மந்திரங்களைச் சொன்னார்கள்.(13,14) இதைக் கேள்விப்பட்டவனும், ஆயிரம் வேள்விகளைச் செய்தவனுமான தேவர்களின் தலைவன் {இந்திரன்}, பெரும் அச்சங்கொண்டு, நோன்புகள் நோற்கும் கசியபரிடம் தஞ்சம் புகுந்தான்.(15)

[2] மனம் போன்ற வேகம் என்றால் அளவிட முடியாத வேகம் என்று பொருள். இங்கிருந்து நாம் சூரியனை நினைத்துக் கொள்கிறோம். அப்படியானால் நம் மனமானது சூரியனை அடைந்த விட்டதாகப் பொருள். இதுவே அளவிட முடியாத மனோவேகமாகும்.

பிரஜாபதியான கசியபர் இந்திரனிடம் இருந்து அனைத்தையும் கேட்டுக்கொண்டு, வாலகில்யர்களிடம் சென்று அவர்களது வேள்வி வெற்றிகரமாக முடிந்ததா என்று கேட்டார்.(16) அந்த உண்மை பேசும் முனிவர்கள், "நீங்கள் சொல்வது போலவே நடக்கட்டும்" என்றனர். பிரஜாபதியான கசியபர் அவர்களை அமைதிப்படுத்தி,(17) "பிரம்மனின் வார்த்தைகளால், இவன் (இந்திரன்) மூன்று உலகங்களிலும் தேவர்களுக்குத் தலைவனாக நியமிக்கப்பட்டுள்ளான். துறவிகளே, நீங்களும் மற்றுமொரு இந்திரனை உற்பத்தி செய்யப் பாடுபடுகிறீர்கள்!(18) சிறந்தவர்களே, பிரம்மனின் வார்த்தைகளைப் பொய்யாக்காமல் இருக்கச் செய்வதே உங்களுக்குத் தகும். உங்களுடைய இந்த முயற்சியும் பலனில்லாமல் போகவேண்டாம்.(19) பெரும்பலம் கொண்டவனாக, சிறகுள்ள உயிரினங்களுக்கு இந்திரனாக (தலைவனாக) ஒருவன் தோன்றட்டும். உங்கள் முன் பணிந்து நிற்கும் இந்த இந்திரன் மீது கருணை கொள்ளுங்கள்" என்று சொன்னார் {கசியபர்}.(20) கசியபரால் இப்படி வேண்டிக்கொள்ளப்பட்ட வாலகில்யர்கள், முனிவர்களில் முதல்வரான பிரஜாபதி கசியபருக்குத் தங்கள் மரியாதைகளைச் செலுத்திவிட்டுப் பேசத் தொடங்கினர்.(21)

அந்த வாலகில்யர்கள், "ஓ பிரஜாபதி! எங்கள் எல்லோராலும் நடத்தப்படும் இந்த வேள்வியானது ஓர் இந்திரனுக்காக நடைபெறுகிறது! உண்மையில் அவன் உமக்கு மகனாகப் பிறக்கவே இந்த வேள்வி நடைபெறுகிறது.(22) இதன் பலனை உம் கையிலேயே விடுகிறோம். இந்த விஷயத்தில் எது நன்மையாகவும், சரியாகவும் இருக்குமோ அதைச் செய்யும்" என்று சொன்னார்கள்.(23)

சௌதி தொடர்ந்தார், "அப்பொழுது, மனதிற்கினியவளும், நற்பேறு பெற்றவளும், நோன்பு நோற்பவளும், தக்ஷனின் நன்மகளுமான வினதை, பிள்ளைப்பேற்றின் மீதுள்ள ஆசையால், தனது நோன்புகளை முடித்துக் குளித்துத் தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு, உறவுக்கான சரியான கனிதரும் காலம் வந்தவுடன் தனது நாயகனை நெருங்கினாள். கசியபர் அவளிடம்,(24,25) "மதிப்புக்குரியவளே, நான் நடத்திய வேள்வி இப்போது கனி தந்திருக்கிறது. நீ என்ன ஆசைப்பட்டாயோ அஃது உனக்குக் கிடைக்கும். மூன்று உலகங்களுக்கும் தலைவர்களான வீர மகன்கள் இருவர் உனக்குப் பிறப்பார்கள்.(26) எனது வேள்வியின் தூய்மையான நோக்கத்தாலும், வாலகில்யர்களின் தவப்பயனாலும், அந்த மகன்கள் மிகுந்த நற்பேறு பெற்றவர்களாகவும், மூவுலகங்களாலும் வழிபடத் தகுந்தவர்களாகவும் இருப்பார்கள்" என்று சொன்னார்.(27)

புகழ்பெற்றவரான கசியபர் மீண்டும் அவளிடம் {வினதையிடம்}, "இந்தப் புனிதமான விதைகளை, மிகுந்த கவனத்துடன் சுமந்து வா.(28) இந்த இருவரும் எல்லாச் சிறகுள்ள உயிரினங்களுக்கும் {பறவைகளுக்கும்} தலைவர்கள் ஆவார்கள். நினைத்த மாத்திரத்தில் நினைத்த உருவை அடையும் இந்த வீரமிக்க விண்ணோடிகள் மூன்று உலகங்களாலும் மதிக்கப்படுவார்கள்" என்று சொன்னார்.(29)

நடைபெற்ற காரியங்களால் திருப்தியடைந்த பிரஜாபதி {கசியபர்}, ஆயிரம் வேள்வி செய்த இந்திரனிடம், "பெரும் பலமும் வீரமும் மிக்க இரு சகோதரர்கள் உனக்கு உதவி செய்யக் கிடைப்பார்கள்.(30) அவர்களால் உனக்கு எந்த இன்னலும் ஏற்படாது. உன் வருத்தம் தீரட்டும், நீயே எல்லோருக்கும் தலைவனாக இருப்பாய்.(31) இனி எப்போதும், பிரம்மனின் பெயரை உச்சரிப்பவர்களைச் சிறுமைப்படுத்தாதே. கோபக்காரர்களை, இடியைப் போன்ற வார்த்தைகளை உச்சரிப்பவர்களை அவமதிக்காதே" என்று அறிவுரை கூறினார்.(32)

இதைக் கேட்ட இந்திரன் பயத்தை விட்டு, தேவலோகம் சென்றான். வினதையும், தனது நோக்கம் நிறைவேறியதால், மிகவும் மகிழ்ந்தாள்.(33) அவள் அருணன் மற்றும் கருடன் ஆகிய இரு மகன்களைப் பெற்றாள். குறை உடலுடன் பிறந்தவனான அருணன் சூரியனுக்குச் சாரதியாக நின்றான்.(34) கருடனுக்குப் பறவைகளின் தலைமை கொடுக்கப்பட்டது. ஓ பிருகுவின் வழித்தோன்றலே! {சௌனகரே}, கருடனின் பெரும் சாதனைகளைக் கவனமாகக் கேளும்" {என்றார் சௌதி}.(35)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்