Tuesday, March 19, 2013

வேள்வி நின்றது! | ஆதிபர்வம் - பகுதி 58

The sacrifice stopped! | Adi Parva - Section 58 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 46)

பதிவின் சுருக்கம் : ஆஸ்தீகர் புரிந்த அற்புதம்; வேள்வி முடிந்தது; லோகிதாக்ஷனுக்குப் பரிசளித்த ஜனமேஜயன்; ஆஸ்தீகருக்குப் பாம்புகள் அளித்த வரம்...

சௌதி சொன்னார், "இப்போது, ஆஸ்தீகருடன் தொடர்புடைய ஓர் அற்புத நிகழ்வைச் சொல்கிறேன் கேட்பீராக. மன்னன் ஜனமேஜயன் ஆஸ்தீகருக்கு வரத்தைக் கொடுக்கப் போகும் தருணத்தில்,(1) இந்திரனின் கைகளில் இருந்து தூக்கி எறியப்பட்ட பாம்பு {தஷகன்}, கீழே விழாமல் அந்தரத்தில் மிதந்தது. தக்ஷகன் பெயரைச் சொல்லி ஆகுதி {நெய்} சரியான முறையில் வேள்வித்தீயில் ஊற்றப்பட்டும், அச்சத்துடனிருந்த தக்ஷகன் கீழே நெருப்பில் விழாததைக் கண்ட ஜனமேஜயன் ஆச்சரியப்பட்டான்" என்றார் {சௌதி}.(2,3)

சௌனகர், “ஓ சூதா! விவேகிகளான அந்த பிராமணர்களின் மந்திரங்கள் சக்திமிக்கவையாக இல்லையா? தக்ஷகன் நெருப்பில் விழாதது ஏன்?” என்று கேட்டார்."(4)

சௌதி சொன்னார், “இந்திரனால் கைவிடப்பட்டு, சுயநினைவை இழந்த அந்தப் பாம்புகளில் சிறந்தவனான தக்ஷகனை நோக்கி ஆஸ்தீகர் ‘நில், நில், நில்’ என்று மூன்று முறைக் கூறினார்.(5) கலங்கிய இதயத்துடன் கூடிய அவன் {தக்ஷகன்} அந்தரத்திலே, பூமிக்கும், ஆகாயத்திற்கும் {சொர்க்கத்திற்கும்} நடுவில் நிற்கும் மனிதனைப் போல் நின்றான்” என்றார்.(6)

பிறகு சதஸ்யர்களால் தொடர்ந்து கேட்டுக்கொள்ளப்பட்ட மன்னன் {ஜனமேஜயன்}, "ஆஸ்தீகர் சொன்னது போல் நடக்கட்டும்.(7) இந்த {நாக} வேள்வி இத்துடன் நிற்கட்டும். பாம்புகள் காக்கப்படட்டும், இந்த ஆஸ்தீகரும் மனம் நிறையட்டும். ஓ சூதரே! {லோகிதாக்ஷரே}, உமது வார்த்தைகளும் உண்மையாகட்டும்[1]" என்றான்.(8)


[1] பார்க்க: 51:16 {ஆதிபர்வம், பகுதி 51, 16வது சுலோகம்}

ஆஸ்தீகருக்கு வரம் அருளப்பட்ட போது, மகிழ்ச்சி ஆரவாரங்கள் அந்த இடம் முழுவதையும் நிறைத்தன. பாண்டவ குலத்தில் வந்த மன்னன் {ஜனமேஜயன்}, அந்தப் பரீக்ஷித் மைந்தனின் {ஜனமேஜயனின்} வேள்வி அத்துடன் முடிவுக்கு வந்தது. மன்னன் {ஜனமேஜயன்} மனநிறைவுகொண்டு,) ரித்விக்குகளுக்கும், சதஸ்யர்களுக்கும், மற்றும் அங்கு வந்திருந்த அனைவருக்கும் நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் செல்வத்தைக் கொடுத்தான்.(9-11) கட்டுமானப்பணியில் சிறந்தவரும், கட்டடங்கள் மற்றும் அடித்தளங்களின் விதிகளை அறிந்து, பாம்பு வேள்வி தடைபடுவதற்கு ஒரு பிராமணன் காரணமாவான் என்று முதலிலேயே சொன்னவரும் சூத சாதியைச் சேர்ந்த லோஹிதாக்ஷருக்குப்[2] பெரும் செல்வங்களைக் கொடுத்தான். குறிப்பிடத்தக்க கருணையுடன் மன்னன் {ஜனமேஜயன்}, இன்னும் பல பொருட்களையும், உணவுகளையும், ஆடைகளையும் அவரது {சூதன் லோஹிதாக்ஷரின்} விருப்பத்திற்கேற்பக் கொடுத்து மனநிறைவடைந்தான்.(12,13) உரிய சடங்குகளுடன் வேள்வியை நிறைவு செய்த அவன் {ஜனமேஜயன்}, தன் காரியத்தை முடித்த மனநிறைவுடன் இருந்த ஆஸ்தீகரை மரியாதையுடன் நடத்தி அவரை வீட்டிற்கு விடைகொடுத்தனுப்பினான்.(14,15)

[2] கும்பகோணம் பதிப்பில் புராணத்தை நினைவு கூர்ந்த லோஹிதாக்ஷரும், யாகம் நிற்கும் என்று கூறிய கட்டுமானக்கலைஞரும் {ஸ்தபதியும்} ஒருவர் அல்லாது, இருவராகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கங்குலி, மன்மதநாததத்தர் மற்றும் பிபேக் திப்ராயின் பதிப்புகளில் லோகிதாக்ஷர் ஒருவராகவே கொள்ளப்படுகிறார்.

மன்னன் {ஜனமேஜயன்} அவரிடம் {ஆஸ்தீகரிடம்}, "நீர் எனது பெரும் குதிரை வேள்வியில் (அஸ்வமேத வேள்வி) சதயஸ்யராக இருக்க நீர் மீண்டும் வர வேண்டும்" என்றான்.(16) ஆஸ்தீகர், "சரி" என்று சொல்லி, அந்த ஏகாதிபதியை {ஜனமேஜயனை} மனநிறைவு கொள்ளச் செய்து, தன் குறிக்கோளை அடைந்த மகிழ்ச்சியுடன் தனது இல்லத்திற்குச் சென்றார்.(17) அப்படி மகிழ்ச்சியாகச் சென்று தனது மாமன் {வாசுகி} மற்றும் தாய் {ஜரத்காரு} ஆகியோரின் கால்களில் விழுந்து ஆசிபெற்று, {நாக வேள்வியில்} நடந்தவை நடந்தபடியே அனைத்தையும் அவர்களிடம் சொன்னார் {ஆஸ்தீகர்}.(18)

சௌதி தொடர்ந்தார், "அவர் {ஆஸ்தீகர்} சொன்னதையெல்லாம் கேட்ட பாம்புகள் பெரும் மகிழ்வு கொண்டன. அவற்றின் அச்சம் நீங்கியது. ஆஸ்தீகரிடம் பெரும் மனநிறைவு கொண்டு அவருக்கு {ஆஸ்தீகருக்கு} ஒரு வரம் தருவதாகச் சொல்லின,(19) "ஓ கற்றவனே {ஆஸ்தீகனே}, உனக்கு நாங்கள் என்ன நன்மை செய்வது? உன்னிடம் நாங்கள் பெரும் மனநிறைவுகொண்டோம். எங்களையெல்லாம் காப்பாற்றிவிட்டாய். உனக்காக நாங்கள் என்ன செய்யட்டும் குழந்தாய்" என்றன.(20)

ஆஸ்தீகர், "காலையிலோ, மாலையிலோ, எனது இந்தப் புனிதமான செயலடங்கிய வரலாற்றை கவனத்துடனும், மகிழ்ச்சியுடனும் படிக்கும் பிராமணர்களும் மற்ற மனிதர்களும், உங்களிடம் எந்தவிதமான அச்சத்தையும் அடையாதிருக்கட்டும்" என்றார்.(21) அதற்கு அந்தப் பாம்புகள் பெருமகிழ்வுடன், "ஓ மருமகனே, உன் வரமானது நீ கேட்டபடியே ஆகட்டும். ஓ மருமகனே, நீ என்ன கேட்டாலும் நாங்கள் மகிழ்ச்சியோடு செய்வோம்.(22) ஆஸ்தீகன், அர்திமான், சுனிதன் என்று பகலிலோ, இரவிலோ மனதால் நினைப்பவர்களுக்கும் பாம்புகளினால் எந்த அச்சமும் ஏற்படாது.(23) ’ஜரத்காருவுக்குப் பிறந்தவரும், பாம்பு வேள்வியிலிருந்து பாம்புகளைக் காத்தவருமான ஆஸ்தீகரை என் மனத்தில் நினைக்கிறேன். எனவே, பெரும் நற்பேறு பெற்ற பாம்புகளே, நீங்கள் என்னைக் கடிப்பது உங்களுக்குத் தகாது.(24) இங்கே இருந்து சென்றுவிடுங்கள், நீங்கள் அருளப்படுவீர்கள். கடும் விஷம் கொண்ட பாம்புகளே சென்றுவிடுங்கள். பாம்புகளே, ஜனமேஜயனின் பாம்பு வேள்விக்குப் பிறகு ஆஸ்தீகர் சொன்ன வார்த்தைகளை நினைவுகூருங்கள்" என்று சொல்பவர் எவருக்கும் பாம்புகளிடமிருந்து அச்சமேற்படாது.(25) எந்தப் பாம்பு ஆஸ்தீகரைக் குறித்துச் சொல்லியும் கடிக்கிறதோ, அந்தப் பாம்புகளின் தலை சிம்சா மரத்தின் கனி போல நூற்றுக்கணக்காகப் பிளந்து போகட்டும்" என்று சொல்லின {அந்தப் பாம்புகள்}."(26)

சௌதி தொடர்ந்தார், "பிராமணர்களில் முதன்மையானவரே {சௌனகரே}, அப்படி முக்கியமான பாம்புகள் கூடி சொன்னபோது ஆஸ்தீகர் பெரிதும் மகிழ்ந்தார். அதன்பிறகு அந்த உயர் ஆன்ம முனிவர் {ஆஸ்தீகர்} அங்கிருந்து சென்றுவிடுவதில் தனது இதயத்தைச் செலுத்தினார்.(27) அப்படிப் பாம்பு வேள்வியில் இருந்து பாம்புகளைக் காத்த அந்த பிராமணர்களில் சிறந்தவர் {ஆஸ்தீகர்}, தனக்குரிய காலத்தில் மகன்களையும் பேரன்களையும் விட்டு மேலுலகம் சென்றார்.(28)

ஆஸ்தீகர் வரலாற்றை எப்படி நடந்ததோ அப்படியே சொல்லிவிட்டேன். இந்த வரலாற்றைச் சொல்வதால் பாம்புகளின் மேல் இருக்கும் பயம் விலகும்."(29)

சௌதி தொடர்ந்தார், "ஓ பிராமணர்களே, ஓ பிருகு பரம்பரையில் முதன்மையானவரே {சௌனகரே}, உமது முன்னோரான பிரமதி, இதுகுறித்து விசாரித்த ருருவிடம் சொன்னவாறே,(30) அதை {என் தந்தையிடமிருந்து} நான் கேட்டவாறே, கல்விமானான ஆஸ்தீகர் குறித்த இந்த அருள்நிறைந்த வரலாற்றைத் தொடக்கமுதல் {முடிவு வரை} சொன்னேன்.(21) ஓ பிராமணரே {சௌனகரே}, ஓ எதிரிகளை ஒடுக்குபவரே {சௌனகரே}, {நீர்ப்பாம்பு} துந்துபாவின் கதையைக் கேட்டவுடன் நீர் விரும்பிய அறம்வளர்க்கும் புனிதமான ஆஸ்தீகர் வரலாற்றைக் கேட்டீர். உமது ஆர்வம் நிறைவடையட்டும்" என்றார் {சௌதி}.(32)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்