Sunday, May 05, 2013

பரிசுகளை ஏன் ஏற்கக்கூடாது? | ஆதிபர்வம் - பகுதி 92

Why gifts shouldn't be accepted? | Adi Parva - Section 92 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 28)

பதிவின் சுருக்கம் : பிரம்மத்தை முதலில் அடைவது யார் என்பதை யயாதியிடம் கேட்ட அஷ்டகன்; யயாதியின் வரலாறு குறித்து வினவிய அஷ்டகன்; தன் புண்ணியத்தை யயாதிக்குக் கொடுத்த அஷ்டகன்; பரிசுகளை ஏற்க மாட்டேன் என்று அதை மறுத்த யயாதி; பிரதர்த்தனனும் தன் புண்ணியத்தை அளிக்க முன்வந்தது...

பிரகாசித்துக்கொண்டு பிரம்மத்தில் முதலில் ஒருங்கிணைவது துறவியா? அல்லது ஞானமுள்ளவனா?" என்று கேட்டான்[1].(1)

[1] கும்பகோணம் பதிப்பில், "ராஜாவே! சூரியனையும், சந்திரனையும் போல ஒடுங்குகின்ற முன்சொல்லப்பட்ட இவ்விருவருள் (கிராமத்தில் வஸிப்பவனும் வனத்தில் வசிப்பவனுமாகிய இவ்விருவருள் எவன் முதலில் தேவர்களோடு ஒப்புமையடைகிறான்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது.  பிபேக்திப்ராயின் பதிப்பில், "இவ்விருவரில் (துறவி மற்றும் இல்லறத்தான் ஆகியோரில்) எவர் முதலில் தேவர்களுடன் ஒன்றிணைவார்கள்?" என்றிருக்கிறது.


யயாதி, "ஞானமுள்ளவர்கள், வேதங்கள் மற்றும் அறிவின் உதவியோடு, அண்டத்தில் காணப்படுவதெல்லாம் மாயை என்பதை உறுதி செய்து, தானாகவே நிலைத்திருக்கும் பரமாத்மாவை உடனே உணர்கிறார்கள்.(2)

மேலும் யோகத்திற்கும், தியானத்திற்கும் தன்னை அர்ப்பணித்தவன், வெற்றியை அடைவதற்காக வருத்தத்துடன் தன்னை அர்ப்பணித்துக் கொள்வதால், ஒரே வாழ்க்கையின் மூலம் வெற்றியை அடைய அவனுக்குப் போதிய நேரம் கிடைக்காமல், உலக ஈர்ப்புகளால் தவறாக வழிநடத்தப்பட்டு, ஏற்கனவே {இந்த வாழ்வின் மூலம்} அடைந்த முன்னேற்றத்தை அடுத்த வாழ்வில் அடைகிறான். ஆனால், அறிவுள்ளவன், அழிவில்லாத ஒருமையை உடனே கண்டு கொள்கிறான். எனவே, உலக இன்பங்களில் ஈடுபட்டாலும், அவற்றால் அவனது இதயம் எந்தப் பாதிப்பையும் அடைவதில்லை. எனவே, அவனது முக்தியைத் தாமதப்படுத்த எதுவும் இல்லை. எனினும், ஞானத்தை அடையத் தவறியவன், செயல்  (வேள்விகள்) சார்ந்த பக்தியில் தன்னை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். ஆனால், முக்தியை விரும்பி அத்தகு பக்தியில் தன்னை அர்ப்பணித்துக் கொள்பவன் வெற்றியடையமாட்டான். அவனது வேள்விகள் கனியைக் கொடாமல், கொடூரத் தன்மையையே பற்றிக் கொள்ளும். கனியின் {பலனின்} மீது ஆசையில்லாமல் செய்யப்படும் பக்திச் செயல்பாடு, அத்தகு மனிதர்களுக்கு யோகத்திலேயே அமையும்" என்று பதிலுரைத்தான்[2].(3-5)


[2] கும்பகோணம் பதிப்பில், "கிருஹஸ்தர்கள் நடுவில் வாஸஞ்செய்யாதவனாகவும், வைராக்கியமுள்ளவனாகவும் கிராமத்திலேயே வஸிக்கும் யதி, அவரிருவர்களுள் முதலில் தேவஸாம்யத்தை அடைகிறவன். எவன் நீண்ட வாழ்நாளை அடையாமல் மனத்தில் விகாரத்தை அடைந்து திரிவானோ, அவன் அவ்வாறு செய்ததனால் அனுதாபப்படுவனேயாயின், பிறகு, வேறு தவம் செய்யக் கடவன். எந்த மனிதன் எப்போதும் பாபகாரியங்களுக்குப் பயந்திருப்பானோ அவன் எப்போதும் தன் ஸுகத்தைச் செய்து கொண்டிருந்தாலும், மேலான ஸுகத்தை அடைகிறான். எது ஹிம்ஸையை உண்டு பண்ணுவதோ அதைத்தான் அஸத்தியமென்று சொல்லுகின்றன்றனர். ராஜாவே! ஒருவன் ஒன்றைத் தன் சொத்தென்றும், அதற்குத் தான் ஸ்வாமியென்றும் நினையாமலும் பலனைக் கருதாமலும் தர்மத்தைச் செய்வானாயின் அதுதான் நேர்மை; அதுதான் நிஷ்டை; அதுதான் யோக்கியம்" என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், "அறிவுடையவனும், தற்கட்டுப்பாடு கொண்டவனுமான மனிதன் ஒருவன், இல்லறவாசிகளுக்கு மத்தியில் பல்வேறு ஆசைகளுடன் வாழ்ந்து கொண்டிருந்தாலும், அவனே முதலில் முக்தியை அடைவான்.(2) யோகத் தியானத்துக்குத் தங்களை அர்ப்பணித்திருப்போர், இருமையியல்பில் {idea of duality} இருந்து பயிற்சியின் மூலம் மட்டுமே விடுபட இயலும் என்பதால், அந்த அறிவை அடைய நெடுங்காலத்தை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.(3) மேலும், யோகத்திற்குத் தன்னை அர்ப்பணித்திருப்பவனுக்கு அவனது வாழ்நாளில் வெற்றியை அடைய போதிய நேரமில்லாமல் போனால், அவனது அடுத்த வாழ்வில் அவன் ஏற்கனவே அடைந்திருக்கும் முன்னேற்றத்தின் பலனை அடைவான். ஆனால் ஞானியான ஒருவனோ, அழிவில்லா ஒருமையை எப்போதும் காண்கிறான். எனவே, அவன் உலக இன்பங்களில் ஈடுபடுபவனாக இருப்பினும், இதயம் பாதிக்கப்படாதவனாக இருக்கிறான்(4,5)"என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "இல்லறத்தானாக இருப்பினும் வீடு இல்லாதவனும், தன் ஆசைகளைக் கட்டுப்படுத்தியவனுமான ஒருவனும், கிராமத்தில் வாழும் வீடில்லா துறவியும் முதலில் தேவர்களை அடைவார்கள். முதிர்வயதை அடையாதவர்களும், அழிவடையக்கூடியவர்களும் அவர்களை அடைவார்கள். தவங்கள் செய்யப்பட்டாலும், அதைவிட அதிகமான தவங்கள் செய்யப்படும். கொடூரத்தன்மையால் உண்மையை அடைய முடியாது என்று சொல்லப்படுகிறது. ஓ மன்னா! ஒருவனிடம் எந்த செல்வமும் இல்லாவிட்டாலும், அவன் அர்ப்பணிப்புடன், ஆதாயங்களை நினைத்துப் பாராமல் தர்மத்தைச் செய்தால், அவன் அழிவற்றதன்மையுடன் ஒன்றுதலை அடைகிறான்" என்றிருக்கிறது. இப்படி நான்கு பதிப்புகளிலும், நான்கு வகைகளில் சொல்லப்பட்டுள்ளது. மூலத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை இதில் சரியாக இருக்கும். மூலம் மிகக் கடினமான வார்த்தைகளில் இருக்கிறது என்றும், மேற்கண்ட சுலோகங்களின் பொருளானது, இல்லறவாசிகள், மற்றும் கிராமத்தவரின் மத்தியில் ஆசைகளுடன் வாழும் ஞானமுள்ள யதி முதலில் முக்தி பெறுவான். யோகம் மற்றும் தவத்துறவுகளில் ஈடுபட்ட வன யதிக்கு தன்னுடைய வாழ்நாள் முக்தியை அடைய போதாமல் போகலாம். அவன். அடுத்தடுத்த பிறவிகளில் தனது கர்மங்களின் பலனைப் பெற்று அதனால் ஞானம் பெற்று  முக்திக்கு முன்னேற்றுகிறான் என்றும் தெரிவதாக சம்ஸ்க்ருதம்அறிந்தோர் சொல்கின்றனர்.  

அஷ்டகன், "ஓ மன்னா! நீர் அழகாகவும், தெய்வீக மாலையால் அலங்கரிக்கப்பட்டும் இளமையாகத் தெரிகிறீர். உம்முடைய காந்தி பெரிதாக இருக்கிறது. நீர் எங்கிருந்து வருகிறீர், எங்குச் செல்கிறீர்? நீர் யாருடைய தூதுவன்? நீர் கீழே பூமிக்குச் செல்கிறீரா?" என்று கேட்டான்.(6)

யயாதி, "நான் எனது அறத்தகுதிகளை இழந்து சொர்க்கத்திலிருந்து விழுந்து கொண்டிருக்கிறேன். நான் பூமி நரகிற்குள் விழுவதற்கு விதிக்கப்பட்டிருக்கிறேன். உங்களுடனான இந்த விவாதத்தை முடித்துவிட்டு, நிச்சயம் நான் அங்குதான் செல்வேன். இப்போதுகூட, திக்பாலர்கள் என்னை அவ்விடத்திற்கு விரைவாகச் செல்லக் கட்டளையிட்டுக் கொண்டிருக்கின்றனர்.(7) ஓ மன்னா! நான் இந்திரனிடம் ஒரு வரம் பெற்றிருக்கிறேன். நான் பூமியில் விழுந்தாலும், ஞானமுள்ளவர்கள் மற்றும் அறம்சார்ந்தவர்கள் மத்தியிலேயே விழுவேன். இங்கே கூடியிருக்கும் நீங்களும் அறிவும், அறமும் கொண்டவர்களே" என்றான்.(8)

அஷ்டகன், "நீர் அனைத்தையும் அறிந்திருக்கிறீர். ஓ மன்னா! நான் கேட்கிறேன். நான் மகிழ்வதற்கும் சொர்க்கத்திலோ, அந்தரத்திலோ ஏதாவது ஒரு பகுதி இருக்கிறதா? அப்படி ஏதாவது இருந்தால், நீர் விழுந்து கொண்டிருந்தாலும், முற்றிலும் விழமாட்டீர்" என்றான்.(9)

யயாதி, "ஓ மன்னா! பூமியின் காடுகளிலும், மலைகளிலும் எத்தனை மாடுகளும், குதிரைகளும் இருக்கின்றனவோ, அப்படியே நீ மகிழ, சொர்க்கத்தில் நிறையப் பகுதிகள் இருக்கின்றன" என்றான்.(10)

அஷ்டகன், "ஓ மன்னா! சொர்க்கத்தில் அப்படி நான் மகிழ்வதற்காக உலகங்கள் இருந்தால், எனது அறத்தகுதிகளின் கனிகளைக் கொண்டு, அவை அனைத்தையும் நான் உமக்கே தந்தேன். எனவே, நீர் விழுந்து கொண்டிருந்தாலும், முற்றிலுமாக விழமாட்டீர். சொர்க்கத்திலும், அந்தரத்திலும் என்னவெல்லாம் அப்படி எனக்காக இருக்கின்றனவோ அவை அனைத்தையும் விரைவாக எடுத்துக்கொள்ளும். உமது துன்பம் விலகட்டும்" என்றான்.(11)

யயாதி, "ஓ மன்னர்களில் சிறந்தவனே! பிரம்மத்தை அறிந்த பிராமணன் மட்டுமே இப்படிப் பரிசுகளை ஏற்கலாம். ஆனால், நம்மைப் போன்றவர்கள் ஏற்கக்கூடாது. ஓ ஏகாதிபதி! ஒருவன் பரிசுகளை எப்படிக் கொடுக்க வேண்டுமோ அப்படி பிராமணர்களுக்கு நானே கொடுத்திருக்கிறேன்.(12) பிராமணனல்லாதவனோ, அல்லது கல்விமானான ஒரு பிராமணனின் மனைவியோ பரிசுகளை ஏற்று கெடுபுகழ் அடையாதிருக்கட்டும். நான் பூமியில் இருந்த போது, அறச்செயல்கள் செய்வதையே விரும்பினேன். இது வரை நான் அப்படி ஒரு காரியத்தைச் செய்ததில்லை. நான் எப்படி ஒரு பரிசை ஏற்க முடியும்?" என்றான்.(13)

அங்கு கூடியிருந்தவர்களில் பிரதர்த்தனன் என்பவன், "ஓ அழகான வடிவங்கொண்டவரே! எனது பெயர் பிரதர்த்தனன். உம்மைக் கேட்கிறேன். நான் மகிழ்வதற்குச் சொர்க்கத்திலோ, அந்தரத்திலோ ஏதாவது பகுதி இருக்கிறதா? நீர் அனைத்தையும் அறிந்திருக்கிறீர். எனவே, எனக்குப் பதிலுரையும்" என்றான்.(14)

யயாதி, "ஓ மன்னா! மகிழ்ச்சி நிறைந்த கணக்கிலடங்கா உலகங்கள், சூரியத் தகட்டைப்போன்று ஒளிவீசிக்கொண்டு இருக்கும் துன்பமே அற்ற உலகங்கள் உனக்காகக் காத்திருக்கின்றன. நீ ஒவ்வொரு உலகத்திலும் ஏழுநாள் தங்கினாலும், அந்த உலகங்கள் பூர்த்தியாகாது" என்றான்.(15)

பிரதர்த்தனன், "அவற்றை நான் உமக்கு அளிக்கிறேன். எனவே, விழுந்து கொண்டிருக்கும் நீர் விழக்கூடாது. எனக்கான உலகங்கள் சொர்க்கத்திலிருந்தாலும், அந்தரத்திலிருந்தாலும் அவை உமதாகட்டும். விரைவாக நீர் அதை எடுத்துக் கொள்ளும். உமது துயரங்கள் அகலட்டும்" என்றான்.(16)

யயாதி, "ஓ ஏகாதிபதி! சக்தியில் இணையானவனான எந்த மன்னனும், வேறு மன்னனின் யோகத் தவங்களின் மூலம் பெற்ற அறத்தகுதிகளைப் பரிசாகப் பெற விரும்பக்கூடாது.  ஒரு மன்னன் விதியின் காரணமாகப் பேராபத்தில் சிக்கிக் கொண்டாலும், அவன் ஞானமுள்ளவனாக இருந்தால், கண்டிக்கும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது. ஒரு மன்னன் அறத்தில் தனது பார்வையை நிலைக்க வைத்து, என்னைப் போலவே, தனது கடமைகளை அறிந்து, அறத்தின் பாதையிலேயே நடக்க வேண்டும். நீங்கள் சொல்வது போல நடந்து கொள்ளக்கூடாது.(17,18) அறத்தகுதிகளை அடைய விருப்பம் கொண்ட மனிதர்கள் பரிசுகளைப் பெறாதபோது, நான் எப்படி அவற்றைப் பெற முடியும்?" என்றான்.

இந்த விவாதத்தின் முடிவில் மன்னர்களில் சிறந்தவனான யயாதி, வசுமனஸ் {வஸுமான்} என்பவனால் பின்வருமாறு கேட்கப்பட்டான்.(19)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்