Tuesday, September 17, 2013

ராஜசூய வேள்வி செய்யலாமே! - சபாபர்வம் பகுதி 12

Do Rajasuya Sacrifice! | Sabha Parva - Section 12 | Mahabharata In Tamil

(லோகபால சபாகயானா பர்வம் - 08)

பதிவின் சுருக்கம் : ஹரிச்சந்திரன் மட்டும் எப்படி இந்திரலோகத்தில் இருக்கிறான் என்று யுதிஷ்டிரன் நாரதரிடம் கேட்டது; நாரதர் ஹரிச்சந்திரனின் ராஜசூய வேள்வி குறித்து சொல்வது; பாண்டு யுதிஷ்டிரனை ராஜசூயம் செய்யச் சொன்னதாக நாரதர் யுதிஷ்டிரனிடம் சொன்னது; நாரதர் துவாரகைக்குச் சென்றது...

யுதிஷ்டிரன், "ஓ மேன்மையான மனிதர்களில் முதன்மையானவரே {நாரதரே}, நீர் வித்தியாசமான சபா மண்டபங்களை எனக்கு விளக்கிச் சொன்னீர், அதில் பூலோகத்தில் இருந்த அனைத்து ஏகாதிபதிகளும் எமனின் சபையில் இருப்பதாகத் தெரிகிறது.(1) மேலும், ஓ தலைவா {நாரதரே}, கிட்டத்தட்ட அனைத்து நாகர்களும், முக்கியமான தைத்தியர்களும், ஆறுகளும், பெருங்கடல்களும் வருணசபையில் இருப்பதாகவும் தெரிகிறது.(2) யக்ஷர்கள், குஹ்யர்கள், ராட்சசர்கள், கந்தர்வர்கள், அப்சரஸ்கள், காளையைத் தனது வாகனமாகக் கொண்டிருக்கும் தேவன் {சிவன்} ஆகியோர் கருவூலத் தலைவனின் சபையில் இருப்பதாகத் தெரிகிறது.(3) பெருந்தகப்பனின் {பிரம்மனின்} சபையில் அனைத்துப் பெரும் முனிவர்களும், தேவர்களும், கல்வியின் அனைத்துக் கிளைகளும் இருப்பதாக நீர் சொன்னீர்.(4) சக்ரனின் {இந்திரனின்} சபையைப் பொறுத்தவரை, ஓ முனிவரே {நாரதரே} நீர் கந்தர்வர்களும், பல்வேறு முனிவர்களும் இருப்பதாக அவர்களது பெயர்களைச் சொன்னீர்.(5)

ஆனால், ஓ பெரும் முனிவரே {நாரதரே}, நீர் அரசமுனி ஹரிச்சந்திரன் என்ற ஒருவரை, ஒரே ஒருவரை மட்டும், சிறப்பு மிகுந்த தேவர்கள் தலைவனின் {இந்திர} சபையில் வாழ்வதாகச் சொன்னீர்.(6) அந்தக் கொண்டாடப்பட்ட மன்னனால் என்ன நற்காரியம் செய்யப்பட்டது? அல்லது உறுதிகளுடன் கூடிய என்ன ஆன்மிக நோன்பு மேற்கொள்ளப்பட்டது? எந்தச் செயலால் அவன் {ஹரிச்சந்திரன்} இந்திரனுக்கு நிகராக இருக்கிறான்?(7) ஓ பிராமணரே {நாரதரே}, மேலும், பித்ருக்களின் உலகத்தில் விருந்தினராக இருக்கும் எனது தந்தை மேன்மைமிகு பாண்டுவை நீர் எப்படிச் சந்தித்தீர்?(8) ஓ அற்புத நோன்புகள் கொண்ட மேன்மை மிகுந்தவரே {நாரதரே}, அவர் {பாண்டு} உம்மிடம் ஏதாவது சொன்னாரா? அனைத்தையும் எனக்குச் சொல்லும். நான் உம்மிடம் இருந்து கேட்டுக் கொள்ள மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறேன்" என்றான் {யுதிஷ்டிரன்}.(9)

நாரதர், "ஓ மன்னர்களின் மன்னா {யுதிஷ்டிரா}, முதலில் நீ கேட்ட ஹரிச்சந்திரனைக் குறித்து நான் சொல்லப் போகிறேன்.(10) அவன் {ஹரிச்சந்திரன்} ஒரு பலம் மிகுந்த மன்னன். உண்மையில் அவன் பூமியில் மன்னர்களுக்கு மாமன்னனாக இருந்தான். பூமியின் அனைத்து மன்னர்களும் அவனது ஆளுகைக்குள் கட்டுப்பட்டார்கள்.(11) ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, வெற்றிகண்ட தங்க தேரில் தனி ஒரு ஆளாக, அந்த வீரமிகுந்த மன்னன் தனது ஆயுதங்களால், முழு உலகத்தையும் அதன் ஏழு தீவுகளுடன் சேர்த்து தன் ஆளுகைக்குள் கொண்டு வந்தான்.(12)

ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, மலைகளையும், காடுகளையும் கொண்ட முழு உலகத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த அவன், ராஜசூய வேள்வியைச் செய்ய ஆயத்தமானான்.(13) உலகத்தில் இருந்த அனைத்து மன்னர்களும், அவனது {ஹரிச்சந்திரனது} ஆணையின் பேரில் அவனுக்கு பல செல்வங்களை வேள்விக்காகக் கொண்டு வந்து கொடுத்தனர். அவர்கள் {மன்னர்கள்} அனைவரும், அந்த வேள்வியில் நன்குண்டிருந்த பிராமணர்களுக்கு மேலும் உணவுகளையும், பரிசுப்பொருட்களையும் கொடுத்தனர்.(14)

மன்னன் ஹரிச்சந்திரன், அந்த வேள்வியில் கேட்டு வந்த அனைவருக்கும் அவர்கள் கேட்டதைவிட ஐந்து மடங்கு செல்வத்தைக் கொடுத்தான்.(15) அந்த வேள்வியின் முடிவில் அந்த மன்னன் {ஹரிச்சந்திரன்} பல நாடுகளில் இருந்து வந்திருந்த பிராமணர்களுக்கு பெரும் பரிசுகளையும் பல்வேறு செல்வங்களையும் கொடுத்தான்.(16) பலவகைப்பட்ட உணவாலும், மகிழ்ச்சிக்குரிய பொருட்களாலும், தாங்கள் விரும்பியதைவிட அதிக செல்வத்தையும், அதிகமான செல்வங்களையும் பெற்று திருப்தியடைந்த பிராமணர்கள், "மன்னன் ஹரிச்சந்திரனே அனைத்து மன்னர்களிலும் சக்தியிலும் புகழிலும் மேன்மையானவன்", என்று சொல்ல தொடங்கினர்.(17) ஓ ஏகாதிபதியே {யுதிஷ்டிரா}, ஓ பாரதகுலத்தின் காளையே, இந்தக் காரணத்தினாலேயே ஹரிச்சந்திரன் மற்ற ஆயிரம் மன்னர்களைவிட அதிகமாகப் பிரகாசித்தான்.(18) வலிமைமிக்கவனான ஹரிச்சந்திரன் தனது பெரும் வேள்வியை முடித்து உலகத்தை ஆட்சி செய்து, அவனது அரியணையில் பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(19)

ஓ பாரத குலத்தின் காளையே {யுதிஷ்டிரனே}, ராஜசூய வேள்வியைச் செய்யும் அனைத்து ஏகாதிபதிகளும் (இந்திரலோகத்தை அடைந்து) இந்திரனுடன் தங்கள் நேரத்தை மகிழ்ச்சியாகக் கடத்துகின்றனர்.(20) ஓ பாரத குலத்தின் காளையே, போர்க்களத்தில் தங்கள் முதுகைக் காட்டாமல் வாழ்வைத் துறந்த மன்னர்களும் இந்திர மாளிகையில் மகிழ்ச்சியுடன் வாழ்வர்.(21) கடும் ஆன்மிகத் தவங்கள் இயற்றி தங்கள் உடலைத் துறந்தவர்களும் அதே பகுதியை {இந்திர மாளிகையை} அடைந்து, காலத்திற்கும் பிரகாசித்துக் கொண்டிருப்பார்கள்.(22)

ஓ குரு குல மன்னா {யுதிஷ்டிரா}, ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, ஹரிச்சந்திரனின் நற்பேறைக் கண்ட உனது தந்தை பாண்டு, அதனால் மிகுந்த ஆச்சரியமடைந்து, உனக்கு சிலவற்றைச் சொல்லியிருக்கிறார்.(23) நான் மனிதர்களின் உலகத்திற்குச் செல்கிறேன் என்பதை அறிந்து, என்னிடம் வந்து, என்னைப் பணிந்து வணங்கி, "ஓ முனிவரே {நாரதரே},(24) "தனது தம்பிகள் தனக்கு கீழ்ப்படிந்து நடக்கும்வரை, யுதிஷ்டிரனால் முழு உலகத்தையும் அடக்கி ஆள முடியும்" என்பதை அவனுக்குச் சொல்லுவீராக. "அதைச் சாதித்தபிறகு, அவன் பெரும் வேள்வியான ராஜசூய வேள்வியை நடத்த வேண்டும்.(25) அவன் எனது மகன். அவன் இந்த வேள்வியைச் செய்தால், நான் ஹரிச்சந்திரனைப் போல இந்திரனின் உலகத்திற்கு சென்று, அவனது {இந்திரனது} சபையில் கணக்கிலடங்கா வருடங்களுக்கு மகிழ்ச்சியுடன் வாழ்வேன்" என்று சொன்னான் {பாண்டு}.(26) நான் {நாரதர்} அவனிடம், "ஓ மன்னா {பாண்டு}, நான் மனிதர்களின் உலகத்திற்குச் சென்றால், நீ சொன்னது அனைத்தையும் உன் மகனிடம் சொல்கிறேன்" என்றேன். நான் இப்போது எல்லாவற்றையும் உன்னிடம் சொல்லிவிட்டேன்.(27)

ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, உனது தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவாயாக. நீ அந்த வேள்வியைச் செய்தாயானால், நீயும் இறந்த உனது முன்னோர்களுடன் சேர்ந்து இறவாதவர்கள் தலைவனின் {இந்திரனின்} பகுதியில் மகிழ்ச்சியுடன் இருப்பாய்.(28) ஓ மன்னா {யுதிஷ்டிரா}, பெரும் தடைகளுக்குப் பிறகே அந்த வேள்வியைச் செய்ய முடியும் என்று சொல்லப்படுகிறது.(29) ஒரு வகை ராட்சசர்களான பிரம்ம ராட்சசர்கள் என்போர், இது போன்ற வேள்விகளைத் தடைசெய்ய எப்போதும் ஒரு வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்து, அந்தப் பெரும் வேள்வியில் ஏதாவது குறையைத் தேடிக் கொண்டிருப்பார்கள். அது போன்றதொரு வேள்வியைச் செய்வதால் பெரும் போர் ஏற்பட்டு க்ஷத்திரிய குலமே உலகத்திலிருந்து அழியும் நிலை ஏற்படலாம்.(30)  ஒரு சின்ன தடை கூட உலகத்தைப் பேரழிவுக்கு இட்டுச் செல்லும். இதையெல்லாம் சிந்தித்து, ஓ மன்னர்களின் மன்னா {யுதிஷ்டிரா}, உனது நன்மைக்கான செயலைச் செய்வாயாக. மிகவும் விழிப்புடன் இருந்து, நான்கு வகையான உனது குடிமக்களை காப்பதற்கு தயாராக இருப்பாயக.(31) வளமையில் வளர்ந்து, இன்பநிலை அனுபவித்து வா. பிராமணர்களுக்கு செல்வத்தைப் பரிசாகக் கொடுத்து திருப்தி செய். நீ கேட்டது அனைத்திற்கும் நான் விரிவாக பதில் சொல்லி விட்டேன். உனது அனுமதியுடன், நான் தாசார்ஹர்களின் நகரத்திற்கு (துவாராவதி {துவாரகைக்குச்}} செல்கிறேன்" என்றார் {நாரதர்}.(32)

வைசம்பாயனர் சொன்னார், "ஓ ஜனமேஜயா, இவற்றை பிருதையின் {குந்தியின்} மகனிடம் {யுதிஷ்டிரனிடம்} சொன்ன நாரதர், தன்னுடன் வந்த முனிவர்களுடன் சேர்ந்து, வந்த வழியே திரும்பிச் சென்றார்.(33) நாரதர் சென்றதும்,ஓ குரு குலத்தில் வந்தவனே {ஜனமேஜயனே}, மன்னன் யுதிஷ்டிரன், தனது தம்பிகளுடன் சேர்ந்து வேள்விகளில் முதன்மையான ராஜசூய வேள்வியைக் குறித்து சிந்தித்தான். {என்றார் வைசம்பாயனர்}.(34)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்