Thursday, September 19, 2013

ஜராசந்தன் எனும் பெரும் தடை! - சபாபர்வம் பகுதி 14

Jarasandha - the bar! | Sabha Parva - Section 14 | Mahabharata In Tamil

(ராஜசூய ஆரம்ப பர்வம் - 01)

பதிவின் சுருக்கம் : கிருஷ்ணன் யுதிஷ்டிரனுக்கு ராஜசூய வேள்வி செய்வதில் இருக்கும் தடைகளைக் குறித்துச் சொல்லல்; ஜராசந்தன், சிசுபாலன், பீஷ்மகன் எனப் பலரைப் பற்றி கிருஷ்ணன் சொல்லல்; யாதவர்கள் மதுராவில் இருந்து துவாரகைக்கு ஏன் வந்தனர் என்பதற்கு காரணத்தைக் கிருஷ்ணன் சொல்லல்; ஜராசந்தன் சிறையில் அடைத்து வைத்திருக்கும் மன்னர்களைப் பற்றிச் சொல்லல்; ராஜசூயம் செய்ய வேண்டும் என்றால் முதலில் ஜராசந்தனைக் கொல்ல வேண்டும் என்று சொல்லல்…

கிருஷ்ணன், "ஓ மாமன்னா, ராஜசூய வேள்வி செய்வதற்கான அடிப்படைத் தகுதிகள் அனைத்தையும் நீர் கொண்டிருக்கிறீர். நீர் அனைத்தையும் அறிந்திருக்கிறீர், ஓ பாரதரே {யுதிஷ்டிரரே}, இருப்பினும், நான் உமக்குச் சிலவற்றைச் சொல்கிறேன்.(1) இன்றைய உலகில் இருக்கும் க்ஷத்திரியர்கள் எல்லாம், முன்பு ஜமதக்னியின் மகன் ராமரால் {பரசுராமனால்} கொல்லப்பட்ட க்ஷத்திரியர்களைவிட (அனைத்திலும்) தாழ்ந்தவர்களே.(2) ஓ பூமியின் தலைவா {யுதிஷ்டிரரே}, ஓ பாரதக் குலத்தின் காளையே, க்ஷத்திரியர்கள் தலைமுறை தலைமுறையாக பாரம்பரியமாகத் தங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட குறிப்புகளைக் கொண்டு, விதிகளைத் தங்களுக்குள் நிறுவிக் கொண்டனர் என்பதையும், ராஜசூய வேள்வி செய்ய அவர்களுக்கு எவ்வளவு தகுதி இருக்கிறது என்பதையும் நீர் அறிவீர்.(3) பல்வேறு அரச பரம்பரைகளும், மற்ற சாதாரண க்ஷத்திரியர்களும், ஐலா மற்றும் இக்ஷவாகுவின் வழித்தோன்றல்களாகவே இருப்பார்கள். ஓ மன்னா, ஐலனின் வழித்தோன்றல்களும், இக்ஷ்வாகு குலத்தில் வந்த மன்னர்களும், ஓ பாரத குலத்தின் காளையே {யுதிஷ்டிரரே}, இன்று நூற்றுக்கணக்கான தனித்தனி நாடுகளாகிவிட்டனர் என்பதை அறிந்து கொள்ளும்.(4,5) யயாதியின் வழித்தோன்றல்களும் போஜர்களும் குலம், எண்ணிக்கை மற்றும் சிறப்புகளிலும் பெரியவர்களாக இருக்கின்றனர். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, இறுதியில் அவர்கள் அனைவரும் உலகம் முழுவதும் பரவிக் கிடக்கின்றனர்.(6)

அந்த ஏகாதிபதிகளின் செல்வத்தையும், வளத்தையும் அனைத்து க்ஷத்திரியர்களும் வழிபட்டு வருகின்றனர். இருப்பினும், தற்போது, ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, அவர்கள் அனைவரையும் விட செல்வத்திலும், பலத்திலும் பெருகி இருக்கும் மன்னன் ஜராசந்தன், அனைத்து மன்னர்களுக்கும் தலைவனாகத் தன்னை நிறுவிக் கொண்டான்.(7,8) மேலும் பூமியின் மத்தியப் பகுதியை {மதுராவை} ஆட்சி செய்யும் அந்த ஜராசந்தன் நமக்குள் ஒற்றுமையின்மையைத் தோற்றுவிக்கிறான். ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, மன்னர்களில் உயர்ந்தவனாக இருக்கும் அம்மன்னனின் ஆளுகையின் கீழே மொத்த அண்டமும் இருக்கிறது. எனவே, அவனே {ஜராசந்தனே} மாமன்னன் {சக்கரவர்த்தி} என்று அழைக்கப்படக்கூடிய தகுதியுடன் இருக்கிறான்.

மேலும், ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, பெரும் சக்தி படைத்த மன்னன் சிசுபாலன், அவனது {ஜராசந்தனின்} பாதுகாப்புக்குள் தன்னை நிறுத்திக் கொண்டு, அவனது {ஜராசந்தனது} படைகளுக்குத் தளபதியாகச் செயல்படுகிறான்.

ஓ பெரும் மன்னா, கரூஷர்களின் மன்னனும் பலம் பொருந்தியவனும், மாய சக்திகளைக் கொண்டு போரிடும் தகுதி கொண்டவனுமான மன்னன் வகன் {வக்ரன்}, ஜராசந்தனுக்காகக் {அவனுக்குச் சேவை செய்ய} காத்திருந்து, அவனது சீடனாகவே செயல்பட்டு வருகிறான்.(9-12)

மேலும் பெரும் சக்திபடைத்தவர்களும், உயர் ஆன்மாக்களுமான ஹம்சன் மற்றும் டிம்பகன் என்ற இருவர், பெரும் பலம் வாய்ந்த ஜராசந்தனின் நிழலில் வாழ்கிறார்கள். மேலும், தந்தவக்கிரன், கரூஷன், கரபன், மேகவாஹனன் ஆகியோரும் ஜராசந்தனுக்காகக் {அவனுக்குச் சேவை செய்ய} காத்திருக்கிறார்கள்.

உலகில் அற்புதமான ரத்தினத்தைத் தனது தலையில் தரித்திருப்பவரும், யவனர்களின் மன்னருமான பகதத்தர், உமது தந்தையின் {பாண்டுவின்} பழைய நண்பனாவார். அளவிடமுடியாத சக்தி கொண்ட அவர், முரு மற்றும் நரகனைத் தண்டித்து, வருணனைப் போல மேற்கு உலகத்தை ஆண்டு வருகிறார். அப்படிப்பட்ட பகதத்தனே ஜராசந்தனிடம் பேச்சாலும் செயலாலும் பணிந்திருக்கிறார். இருப்பினும், ஒரு தந்தைக்குத் தனது மகனிடம் இருக்கும் அன்பை உம்மிடம் கொண்டிருக்கிறார்.(13-16)

ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, பூமியின் மேற்கிலும், தெற்கிலும் தனது ஆட்சிக்குட்பட்ட நாடுகளைக் கொண்டிருக்கும் உமது தாய்வழி மாமன் ஒருவர் புருஜித் என்று அழைக்கப்படுகிறார். பகைவரை அழிப்பவரான அவர் குந்தி குலத்தை தழைக்க வைப்பவராவார். அவர் உன்னிடம் அன்பு கொண்டு மதிப்பு பாராட்டுபவராவார் {அவர் மட்டுமே உம் தரப்பில் இருக்கிறார்}.(17)

முன்னரே என்னால் கொல்லப்படாதவனும், தன்னைத் தானே தெய்வீகமானவன் என்று சொல்லிக் கொள்பவனும், அப்படியே பலராலும் அறியப்படுபவனும், என்னைச் சுட்டும் குறிகளை {சங்கு, சக்கரம் போன்றவை} தன் மூடத்தனத்தால் எப்போதும் தரிப்பவனும், வங்கம், புண்ட்ரம், கிராதம் ஆகிய நாடுகளுக்கு மன்னனாக இருப்பவனும், இந்தப் பூமியில் பௌண்டரகன், வாசுதேவன் என்ற பெயர்களால் அறியப்படுபவனும், சேதி நாட்டில் இருப்பவனும், பெரும் பலம் கொண்டவனுமான அந்தத் தீய பாவியும் {பௌண்டரக வாசுதேவன்} ஜராசந்தனின் பக்கம் இருக்கிறான்.(18-20)

மேலும், ஓ மன்னர்களுக்கு மன்னா {யுதிஷ்டிரரே}, போஜர்களின் பலம் பொருந்திய மன்னனும், இந்திரனுக்கு நண்பனும், பகை வீரர்களைக் கொல்பவனும், உலகத்தின் கால் பங்கை ஆள்பவனுமான பீஷ்மகன், தனது கல்வியால் பாண்டியர்களையும், கிருதகௌசிகர்களையும் {க்ருதகைசிகர்களையும்} வென்றவனாவான். அவனும் {பீஷ்மகனும்} மகத மன்னனுக்கு {ஜராசந்தனுக்குப்} பணியாளாக இருக்கிறான்.  அவனது சகோதரனான அக்ருதி, ஜமதக்னியின் மகன் ராமரைப் {பரசுராமனைப்} போன்று ஆற்றல்மிக்கவனாவான். அந்தப் போஜமன்னனுக்கு நாம் உறவினராக இருப்பதால், அவனுக்கு விருப்பமானதையே நாள்தோறும் நாம் செய்துவந்தாலும், அவன் நம்மை மதிப்பதில்லை. அவன் {பீஷ்மகன்} எப்போதும் நமக்குத் தீங்கையே செய்கிறான். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, அவன் தனது தரத்தையும், பலத்தையும் அறிந்து கொண்டு, ஜராசந்தனின் பார்வையின் கீழ் தன்னை நிறுவிக் கொண்டான்.(21-24)

மேலும், ஓ மேன்மையானவரே {யுதிஷ்டிரரே}, போஜர்களின் பதினெட்டு இனங்களும், ஜராசந்தன் மீது கொண்ட அச்சத்தால், மேற்கு நோக்கி ஓடினார்கள். சூரசேனர்கள், பத்திரகாரர்கள், போதர்கள், சால்வர்கள், படத்சரர்கள், சுஸ்தலர்கள், முகுட்டர்கள் {ஸுகுட்டர்கள்}, குலிந்தர்கள், குந்திகள் ஆகியோரும் அவ்வாறே ஓடினர்.(25,26) சகோதரர்களுடன் கூடிய சால்வயன குலத்தின் மன்னர்கள், தென் பாஞ்சாலர்கள், கிழக்கு கோசலர்கள் என அனைவரும் தங்கள் நாடுகளை விட்டு குந்தியின் நாடு வந்தனர்.(27) அதே போல வடக்கில் இருந்த மத்ஸ்யர்களும், ஸந்யஸ்தபாதர்களும் அச்சத்தால் தங்கள் நாடுகளை விட்டு தென் நாட்டிற்கு ஓடினர். ஜராசந்தனின் சக்திக்கு அஞ்சிய பாஞ்சாலர்களும் தங்கள் நாட்டைவிட்டு எல்லா திசைகளுக்கும் ஓடினர்.(28,29)

சில காலத்திற்கு முன்னர் மூடன் கம்சன், யாதவர்களைக் கொன்ற பிறகு, ஜராசந்தனின் இரு மகள்களைத் திருமணம் செய்திருந்தான்.(30) அவர்கள் அஸ்தி மற்றும் பிராப்தி என்று அழைக்கப்பட்டார்கள். அவர்கள் சகதேவனின் சகோதரிகள் ஆவர். இப்படிப்பட்ட கூட்டணியால், அந்த மூடன் {கம்சன்} தனது உறவினர்களைக் கொன்று அவர்கள் அனைவரையும்விட உயர்ந்து நின்றான்.(31) ஆனால் அவனது நடத்தையால் தீச்சொல்லையே அவன் ஈட்டினான். மேலும் அந்தப் பாவி போஜ இனங்களின் முதிர்ந்த மன்னர்களை ஒடுக்கத் தொடங்கினான்.(32) அவர்கள் தங்களையும், தங்கள் உறவினர்களையும் காப்பாற்றிக் கொள்ள எங்கள் பாதுகாப்பினை நாடினார்கள். அவர்கள் அக்ரூரனுக்கு அஹுகனின் அழகிய மகளைக் கொடுத்தனர்.(33) நான் சங்கர்ஷணரை {பலராமரைத்} துணையாகக் கொண்டு எனது உறவினர்களுக்குத் தொண்டு செய்தேன். ராமரின் {பலராமரின்} உதவியுடன் நான் கம்சனையும், சுநாமனையும் கொன்றேன்.(34) ஆனால் {கம்சன் இறந்ததால்} உடனடி ஆபத்து அகன்றாலும், அடுத்து அவனது {கம்சனது} மாமனாரான ஜராசந்தன் ஆயுதம் ஏந்தினான்.

பிறகு, பதினெட்டு இளம் கிளைகளைக் கொண்ட யாதவர்கள் அனைவரும் கூடி,(35) எதிரியை {ஜராசந்தனை} அற்புதமான ஆயுதங்களால் முன்னூறு வருடங்களுக்குத் தாக்கினாலும், அவனுக்கு எந்தக் காயத்தையும் நம்மால் ஏற்படுத்த முடியாது என்பதை எங்களுக்குள் ஆலோசித்து ஒரு முடிவுக்கு வந்தோம்.(36) தேவர்களைப் போன்றவர்களும், பெரும் பலம்மிக்கவர்களுமான இரு நண்பர்கள் அவனுக்கு {ஜராசந்தனுக்கு} இருந்தனர். அவர்கள் ஹம்சன் மற்றும் டிம்பகன் என்று அழைக்கப்பட்டனர். அவர்களை எந்த ஆயுதத்தாலும் கொல்ல முடியாது. அவர்களுடன் சேர்ந்திருப்பவனும், பெரும் பலம் வாய்ந்தவனுமான ஜராசந்தனை வெல்ல மூவுலகங்களிலும் எவனும் கிடையாது. ஓ புத்திசாலி மனிதர்களில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, இஃது எங்கள் கருத்து மட்டுமல்ல, ஒட்டுமொத்த மன்னர்களும் அப்படியே நினைத்தனர்.(37-39)

ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, ஹம்சன் என்ற பெயரில் ஒரு மன்னன் இருந்தான். பதினெட்டு நாள் போர் புரிந்த அவன், ராமரால் {பலராமரால்} வீழ்த்தப் பட்டான் {கொல்லப்பட்டது போல மயக்கமுற்றான்}.(40) ஆனால், ஓ பாரதா, ஓ மன்னா, ஹம்சன் கொல்லப்பட்டான் என்று மக்கள் சொல்வதைக் கேட்ட டிம்பகன், ஹம்சன் இல்லாது தன்னால் வாழ முடியாது என்று நினைத்தான். எனவே, யமுனையின் நீரில் குதித்துத் தன்னைத் தானே அவன் மாய்த்துக் கொண்டான். பிறகு பகை வீரர்களைக் கொல்பவனான ஹம்சன், டிம்பகன் தற்கொலை செய்து கொண்டான் என்பதைக் கேள்விப்பட்டு, யமுனைக்கு சென்று, அதன் நீரில் தானும் குதித்தான்.(41-43) பிறகு, ஓ பாரதகுலத்தின் காளையே {யுதிஷ்டிரரே}, ஹம்சனும், டிம்பகனும் கொல்லப்பட்டனர் என்பதைக் கேள்விப்பட்ட ஜராசந்தன் வெறுமையான இதயத்துடன் தனது நாட்டிற்குத் திரும்பிச் சென்றான்.(44) ஜராசந்தன் திரும்பியதும், ஓ எதிரிகளைக் கொல்பவரே, மகிழ்ச்சியால் நிறைந்த நாங்கள், மதுராவிலேயே தொடர்ந்து வாழத் தொடங்கினோம்.(45)

பிறகு ஹம்சனின் விதவை மனைவியும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவளும், அழகானப் பெண், அழகானவளுமான ஜராசஸந்தனின் மகள், தனது தலைவனின் மரணத்துக்காக துக்கமடைந்து, தனது தந்தையைத் தொடர்ந்து தூண்டினாள். அவள் "ஓ எதிரிகளைக் கொல்பவரே, எனது கணவரைக் கொன்றவர்களைக் கொல்வீராக" என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தாள். ஓ பெரும் மன்னா, முன்பே நாங்கள் எடுத்திருந்த தீர்மானத்தை நினைவுகூர்ந்து உற்சாகமற்ற இதயத்துடன் நாங்கள் மதுராவில் இருந்து தப்பிச் சென்றோம்.(46,47) ஜராசந்தனுக்கு அஞ்சிய நாங்கள், எங்களது பெரும் செல்வத்தைப் பிரித்து, எளிதாகச் சுமந்து செல்லும் வகையில் சிறு சிறு பகுதிகளாக்கி, எங்கள் மைத்துனர்களையும் உறவினர்களையும் அழைத்துக் கொண்டு தப்பி ஓடினோம். அனைத்தையும் நினைத்துப் பார்த்த நாங்கள் மேற்கு நோக்கி ஓடினோம்.(48,49) மேற்கில் ரைவதக மலைகளால் அலகங்கரிக்கப்பட்டிருந்த குசஸ்தலி என்ற அழகான நகரத்தை அடைந்தோம். அந்த நகரத்தில், ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, நாங்கள் எங்கள் வசிப்பிடங்களை அமைத்துக் கொண்டோம்.(50) நாங்கள் அதன் கோட்டைகளை தேவர்களும் புகமுடியாத வகையில் மீண்டும் செப்பனிட்டோம். அதன் உள் இருந்து பெண்கள் கூட சண்டையிடமுடியும் எனும் போது, அச்சமற்ற யாதவ வீரர்கள் எப்படிப் போரிடுவார்கள் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?(51)

ஓ எதிரிகளைக் கொல்பவரே, நாங்கள் இப்போது அந்த நகரத்தில்தான் வாழ்கிறோம். ஓ குரு குலத்தின் புலியே {யுதிஷ்டிரரே}, மலைகளில் முதன்மையான அந்த {ரைவதக} மலையைக் கடக்க முடியாது என்றும், ஜராசந்தனின் மீதிருந்த அச்சத்தைக் கடந்து வந்துவிட்டோம் என்றும் கருதிய மதுவின் வழித்தோன்றல்கள் {யாதவர்கள்} மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.(52,53) இவ்வாறே, ஓ மன்னா {யுதிஷ்டிர்ரே}, பலமும், சக்தியும் பெற்றவர்களாக இருப்பினும், ஜராசந்தனின் ஒடுக்குதலால் மூன்று யோஜனை நீளம் கொண்ட கோமந்த மலையை அடைய நாங்கள் பணிக்கப்பட்டோம். ஒவ்வொரு யோஜனையின் இடைவெளியில் நூறு வளைவுகளில், நூறு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு யோஜனையிலும் இருபத்தியோரு வகையான ஆயுதம் தாங்கிய வீரர்களை நிறுத்தினோம். ஒவ்வொரு வாயிலும் ஆற்றல்நிறைந்த வீரர்களால் பாதுகாக்கப்படுகிறது. பதினெட்டு யாதவ பிரிவுகளைச் சார்ந்த இளையவர்கள், இந்தப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.(54,55)

ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, எங்கள் குலத்தில் பதினெட்டாயிரம் சகோதரர்களும், மைத்துனர்களும் இருக்கிறோம். அஹுகனுக்கு நூறு மகன்கள் இருக்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் (ஆற்றலில்) தேவர்களைப் போல இருக்கின்றனர்.(56) சாருதேஷ்ணன், அவனது சகோதரன் சக்ரதேவன், சாத்யகி, நான் {கிருஷ்ணன்}, ரோகிணியின் மகன் பலதேவர் {பலராமர்}, எனக்குச் சமமான எனது மகன் சாம்பன்(57) ஆகிய ஏழுபேரும் அதிரதர்கள் ஆவோம். எங்களைத் தவிர மேலும் பலரும் இருக்கின்றனர். ஓ மன்னா, அவர்களின் பெயர்களையும் இப்போது சொல்கிறேன். கிருதவர்மன், அனாதிருஷ்டி, சமீகன், சமிதிஞ்சயன்,(58) கங்கன், சங்கு, குந்தி ஆகிய எழுவரும் மஹாரதர்கள். அந்தக போஜனின் இரு மகன்களும், அந்த முதிர்ந்த மன்னனும் சேர்ந்ந்த பத்து பேரும் மஹாரதர்களேயாவர்.(59) அந்த பெரும் சக்தி மிக்க வீரர்கள் ஒவ்வொருவரும் வஜ்ரத்தைப் போன்றவர்களாவர். இந்த மஹாரதர்கள் அனைவரும் {குசஸ்தலியில்} மத்திய நாட்டைத் தேர்ந்தெடுத்து, விருஷ்ணிகளுக்கு மத்தியில் வாழ்கின்றனர்.(60)

ஓ பாரதக் குலத்திற் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, நீர் ஒருவரே மாமன்னன் {சக்கரவர்த்தி} ஆகும் தகுதி படைத்தவர். ஓ பாரதரே {யுதிஷ்டிரரே}, க்ஷத்திரியர்கள் அனைவரின் மீதும் உமது பேரரசை நிறுவுவதே உமக்குத் தகும்.(61) ஆனால், ஜராசந்தன் உயிரோடு உள்ளவரை உம்மால் ராஜஸூய வேள்வியைக் கொண்டாட இயலாது என்பதே என் தீர்மானம்.(62) சிங்கமானது, மலைகளின் மன்னனுக்கு உள்ளிருக்கும் ஒரு குகையில் தன்னால் கொல்லப்பட்ட பெரும் யானைகளின் சடலங்களை வைத்திருப்பதைப் போல, {கிரிவ்ரஜத்தின்} ஒரு மலைக்கோட்டையில் பல எண்ணிலடங்கா ஏகாதிபதிகள் அவனால் {ஜராசந்தனால்} அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.(63) ஓ பகைவரைவரையும் கொல்பவரே, வேள்வியில் நூறு ஏகாதிபதிகளைக் காணிக்கையளிக்க விரும்பிய மன்னன் ஜராசந்தன், கடும் தவங்களைச் செய்து, சிறப்புமிக்கவனும், தேவர்களுக்குத் தேவனுமான உமையின் தலைவனை {சிவனைத்} துதித்தான். இவ்வழியிலேயே பூமியின் மன்னர்கள் அனைவரும் ஜராசந்தனால் வீழ்த்தப்பட்டனர். ஓ ஏகாதிபதிகளில் சிறந்தவரே, இவ்வகையிலேயே அவன் தன் வேள்வி தொடர்பான நோன்பை நிறைவேற்ற முடிந்தது.(64,65)

மன்னர்களை அவர்களது துருப்புகளுடன் சேர்த்து வீழ்த்தி, அவர்கள் அனைவரையும் கைதிகளாகத் தன் நகரத்திற்குக் கொண்டு வந்ததன் மூலம் {மன்னர்களின்} கூட்டத்தை மிக அதிகமாகப் பெருக்கியிருக்கிறான்.(66) ஓ மன்னா, நாங்களும் ஒரு காலத்தில் ஜராசந்தனின் மீது கொண்ட அச்சத்தின் காரணமாக மதுராவை விட்டகன்று துவாராவதி நகரத்திற்கு {துவாரகைக்குத்} தப்பி ஓடினோம்.(67) ஓ மன்னா, நீர் இவ்வேள்வியை {ராஜசூய வேள்வியைச்} செய்ய விரும்பினால், ஜராசந்தனால் அடைத்து வைக்கப்பட்டுள்ள மன்னர்களை விடுவிக்கவும், அவனைக் கொல்லவும் முனைவீராக.(68) இல்லையெனில், ஓ குருகுலத்தின் மகனே, உமது காரியத்தை ஒருபோதும் நிறைவேற்ற முடியாது. ஓ நுண்ணறிவுமிக்க மனிதர்களில் முதன்மையானவரே, ராஜஸூயம் உம்மால் செய்யப்பட வேண்டுமானால், அதை நீர் இவ்வழியில் செய்ய வேண்டுமேயன்றி வேறு வழியில் முடியாது.(69) ஓ மன்னா, (இக்காரியத்தில்) இதுவே என் கருத்தாகும். ஓ பாவமற்றவரே, நீர் எண்ணியவாறே செயல்படுவீராக. ஓ மன்னா, இந்தச் சூழ்நிலையில், அனைத்தையும் சிந்தித்துப் பார்த்து, விளைவுகளையும் குறித்துக் கொண்டு, எது சரி என்று நீர் நினைக்கிறீரோ அதை எங்களுக்குச் சொல்வீராக" என்றான் {கிருஷ்ணன்}.(70)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்