Tuesday, January 14, 2014

தேரொலியால் ஏற்பட்ட குழப்பம்! - வனபர்வம் பகுதி 73

The confusion led by the rattle of the car | Vana Parva - Section 73 | Mahabharata In Tamil

(நளோபாக்யான பர்வத் தொடர்ச்சி)

மாலைப்பொழுதிலேயே நளன் தேரை விதரப்ப்ப நாட்டிற்குக் கொண்டு வருவது; அந்தத் தேரொலியால் அங்கிருந்த விலங்குகள் கூட நளன் வந்துவிட்டானா என்று குழம்புவது; தமயந்தியும் நளன் வந்துவிட்டான் என்று நம்புவது; பின்பு நளன் இல்லாததைக் கண்டு வருந்தி ஒரு பெண் தூதுவரை நளனைத் தேடி அனுப்புவது…

பிருகதஸ்வர் தொடர்ந்தார், "கலங்கடிக்க முடியாத வீரம் கொண்ட ரிதுபர்ணன் மாலைப்பொழுதில் விதரப்ப்ப நகரத்திற்கு வந்து சேர்ந்ததும், அந்நகரத்து மக்கள் மன்னன் பீமனிடம் {ரிதுபர்ணன் வந்த இச்செய்தியை} அறிவித்தார்கள். பீமனின் அழைப்பின் பேரில் அந்த {அயோத்தி நகர} மன்னன், தனது தேரொலியால் அடிவானத்தையும், {அண்டத்தின்} பத்து புள்ளிகள் அனைத்தையும் நிறைத்து, குண்டினம் {விதரப்ப்பத்தின் தலைநகரம்} என்ற அந்த நகரத்திற்குள் நுழைந்தான். அந்த நகரத்தில் {குண்டினத்தில்} இருந்த நளனின் குதிரைகள், அந்தச் சத்தத்தைக் கேட்டு, நளன் இங்கிருந்த போது எப்படி மகிழ்ந்தனவோ அப்படி மகிழ்ந்தன.


கர்ஜனையுடன் வரும் மழைக்கால மேகம் போல, நளன் விரட்டி வந்த அந்தத் தேரின் ஒலியை தமயந்தியும் கேட்டாள். பீமனும், (நளனின்) குதிரைகளும், முன்பொரு காலத்தில் நளன் இங்கிருந்த போது கேட்டது போலவே அந்தத் தேரொலியைக் கேட்டனர். மாடியில் இருந்த மயில்களும், கொட்டில்களில் இருந்த யானைகளும், குதிரைகளும், ரிதுபர்ணனின் தேரொலியைக் கேட்டன. ஓ மன்னா {யுதிஷ்டிரா} மேகங்களின் கர்ஜனையைப் போலக் கேட்ட அந்த ஒலியால் யானைகளும், மயில்களும், {தேர் வந்த} அந்த திக்கை நோக்கி, உண்மையான மேக கர்ஜனையைத் தாங்கள் கேட்டது போல மகிழ்ச்சியுடன் கதறின.

தமயந்தி, "முழு உலகத்தையும் நிறைத்து வரும் இந்தத் தேரொலியால் எனது இதயம் மகிழ்வதால், வருவது மன்னன் நளராகத் தான் இருக்கும். எண்ணிலடங்கா அறங்களைக் கொண்ட வீரரும் சந்திரனைப் போன்ற பிரகாசத்துடன் இருக்கும் முகத்தைக் கொண்டவருமான நளரை நான் காணவில்லை என்றால், நான் நிச்சயம் இறப்பேன். நான் இன்று அந்த வீரரின் ஆர்வமானத் தழுவலுக்கு ஆட்படவில்லை என்றால், நான் நிச்சயம் இருக்க மாட்டேன். மேகங்களைப் போன்ற ஆழ்ந்த குரலைக் கொண்ட அந்த நைஷாதர் {நளர்} இன்று என்னிடம் வரவில்லையென்றால், நான் நிச்சயம் தங்கமாகப் பிரகாசிக்கும் நெருப்புக்குள் புகுவேன். மன்னர்களில் முதன்மையானவரும், சிம்மம் போன்ற பலம் நிறைந்தவரும், மதம் கொண்ட யானையின் பலம் கொண்டவருமான அவர் தன்னை என் முன் வெளிப்படுத்த வில்லையென்றால், நான் நிச்சயம் வாழ மாட்டேன். அவரிடம் ஒரு பொய்மையையும் நான் கண்டதில்லை. அவர் யாருக்கும் ஒரு தீங்கு செய்வதையும் நான் கண்டதில்லை. அவர் கேலிக்காகக் கூட பொய்மை பேசியதில்லை. ஓ, எனது நளர் மேன்மையானவர், மன்னிக்கும் தன்மை கொண்டவர், வீரர், அனைத்து மன்னர்களிலும் மேன்மையானவர். அவர் {நளர்} ஏற்றுக்கொண்டிருக்கும் {ஏகபத்தினி} விரதத்தால், மற்ற பெண்களின் மத்தியில் பேடியாக அறியப்படுகிறார். இரவும் பகலும் அவரையே சிந்திக்கும் எனது இதயம், அந்த அன்பானவர் இல்லாததால், துயரத்தில் வெடிக்கப் போகிறது" என்று சொன்னாள்.

ஓ பாரதா {யுதிஷ்டிரா}, இப்படி உணர்வை இழந்து துக்கப்பட்ட தமயந்தி, நீதிமானான நளனைக் காண (தனது மாளிகையின்) மாடிக்கு ஏறினாள். மாளிகையின் மத்தியில் இருந்த முற்றத்தில், அவள் {தமயந்தி} அந்தத் தேரில் மன்னன் ரிதுபர்ணனையும், வார்ஷ்ணேயனையும், பாகுகனையும் கண்டாள். வார்ஷ்ணேயனும், பாகுகனும் {நளனும்}, அந்த அற்புதமான வாகனத்தில் இருந்து இறங்கி, குதிரைகளை நுகத்தடியில் இருந்து கழற்றி, அந்த வாகனத்தை {தேரை} சரியான இடத்தில் நிறுத்தினர். மன்னன் ரிதுபர்ணனும் தேரில் இருந்து இறங்கி, கடும் பராக்கிரமம் கொண்ட மன்னன் பீமன் முன்னிலையில் நின்றான். பெருமை நிறைந்தவர்கள் அகாலத்தில் (விருந்தினராக) வருவது கிடையாது என்பதால், பீமன் அவனை பெரும் மதிப்புடன் வரவேற்றான். பீமனால் இப்படி மதிக்கப்பட்ட ரிதுபர்ணன் திரும்பத் திரும்பப் பார்த்தான். ஆனால் சுயம்வரத்திற்கான எந்தத் தடயத்தையும் அவன் காணவில்லை.

ஓ பாரதா {யுதிஷ்டிரா}, விதரப்ப்பத்தின் ஆட்சியாளன் {பீமன்}, ரிதுபர்ணனை அணுகி, "நல்வரவு! உமது இந்த வருகைக்கான நிகழ்ச்சி {விசேஷம்} என்ன?" என்று கேட்டான். தனது மகளின் கரத்தைப் பெறுவதற்காகவே மன்னன் ரிதுபர்ணன் வந்திருக்கிறான் என்று அறியாத மன்னன் பீமன் இப்படிக் கேட்டான். கலங்கடிக்க முடியாத பராக்கிரமமும், புத்திசாலித்தனத்தைக் கொடையாகவும் கொண்ட மன்னன் ரிதுபர்ணன், அங்கே பிற மன்னர்களோ, இளவரசர்களோ இல்லாததைக் கண்டான். சுயம்வரத்தைக் குறித்து யாரும் பேசிக் கொள்வதைக் கூட அவன் கேட்கவில்லை. அந்தணர்க் கூட்டத்தையும் அவன் காணவில்லை. இதனால் கோசலத்தின் அந்த மன்னன் {ரிதுபர்ணன்} நீண்ட நேரம் சிந்தித்து, "நாம் உமக்கு மரியாதை செலுத்தவே வந்தேன்" என்றான்.

இதனால் ஆச்சரியமடைந்த மன்னன் பீமன், நூறு யோஜனைக்கு மேல் கடந்து வந்திருக்கும் ரிதுபர்ணனின் வருகையைக் குறித்து சிறிது நேரம் சிந்தித்தான். அவன் தனக்குள், "மற்ற அரசாங்கங்களையும், எண்ணிலடங்கா நாடுகளையும் கடந்து, எனக்கு மரியாதை செலுத்த வந்ததாகச் சொல்வது சரியல்ல. இவர் வந்திருப்பதற்கான காரணம் புதிராகவே இருக்கிறது. இருப்பினும், உண்மையான காரணத்தைப் பின்பு நான் அறிவேன்" என்று நினைத்தான். மன்னன் பீமன் இப்படி நினைத்தாலும், அவன் ரிதுபர்ணனை ஒட்டுமொத்தமாக விட்டுவிடவில்லை. அவன் ரிதுபர்ணனிடம், "நீர் களைத்திருக்கிறீர். ஓய்வெடும்" என்றுத் திரும்பத் திரும்பச் சொன்னான். இப்படி திருப்தி கொண்ட பீமனால் மரியாதை செலுத்தப்பட்ட மன்னன் ரிதுபர்ணனும் திருப்தியடைந்து, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் அவனுக்கென ஒதுக்கிய மாளிகையில் பீமனின் பணியாட்களுடனும்,  மன்னனின் உறவினர்களுடனும் சென்றான்.

பிருகதஸ்வர் தொடர்ந்தார், "ஓ மன்னா {யுதிஷ்டிரா}, இப்படி ரிதுபர்ணன் சென்றதும், வார்ஷ்ணேயனும், பாகுகனும் {நளனும்} தேரைக் கொட்டிலுக்குக் கொண்டு சென்றனர். அங்கே குதிரைகளை விடுவித்து, முறைப்படி அவற்றைக் கவனித்து, அவற்றுக்கு ஆறுதல் அளித்து, தேருக்குப் பக்கத்தில் அமர்ந்தனர். அதே நேரத்தில் பெரும் துயரத்தில் இருந்த விதரப்ப்ப இளவரசி தமயந்தி, பங்காசூரனின் மகனையும் {ரிதுபர்ணனையும்}, சூத குலத்தைச் சார்ந்த வார்ஷ்ணேயனையும், மாற்றுருவத்தில் இருந்த பாகுகனையும் கண்டு, "இந்தத் தேரொலி யாருடையது? நளருடைய தேரைப் போன்றே சத்தம் பலமாக இருந்ததே. ஆனால் அந்த நிஷாதர்களின் ஆட்சியாளரை {நளரை} நான் காணவில்லையே. நிச்சயமாக வார்ஷ்ணேயன் நளரிடம் இருந்த அந்தக் கலையைக் கற்றுக் கொண்டிருக்க வேண்டும். அதனால்தான் அந்தத் தேரின் ஒலி நளரின் தேரொலி போலக் கேட்டிருக்கிறது. அல்லது ரிதுபர்ணன் நளரைப் போன்ற நிபுணராகி, நளரைப் போன்ற தேரொலியை எழுப்பினானா?" என்று தனக்குள் நினைத்துக் கொண்ட அந்த அருளப்பட்ட அழகான மங்கை, ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அந்த நிஷாதனைத் {நளனைத்} தேடி ஒரு பெண் தூதரை அனுப்பினாள்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்