Tuesday, January 14, 2014

நளனைச் சந்தித்த கேசினி! - வனபர்வம் பகுதி 74

Kesini met Nala! | Vana Parva - Section 74 | Mahabharata In Tamil

(நளோபாக்யான பர்வத் தொடர்ச்சி)

தமயந்தி கேசியினை பாகுகனிடம் தூதாக அனுப்புதல்; கேசினி பாகுகனிடம் வந்து விசாரித்தல்; நளனின் துயரம்…

தமயந்தி சொன்னாள், "ஓ கேசினி, பார்வைக்குச் சகிக்காதபடி, நீளம் குறைந்த கைகளுடன் தேரின் அருகே அமர்ந்திருக்கும் அந்தத் தேரோட்டியிடம் சென்று அவர் யார் என்பதை அறிந்து வா. ஓ அருளப்பட்டவளே, ஓ குறைகளற்றவளே, அவரை அணுகி, தகுந்த வார்த்தைகளுடனும், எச்சரிக்கையுடன், வழக்கமாக விசாரிப்பது போல விசாரித்து, அவர் குறித்த அனைத்து உண்மையான விவரங்களையும் கேள். எனது மனம் கொள்ளும் திருப்தியான உணர்வையும், எனது இதயம் உணரும் மகிழ்ச்சியையும் கருதி, இவரே மன்னன் நளர் என்று நினைத்து நான் அஞ்சுகிறேன். மேலும், ஓ குறையற்றவளே, அவரது நலத்தை விசாரித்த பிறகு, பர்ணாதன் சொன்ன வார்த்தகளை அவரிடம் சொல். ஓ அழகானவளே, அவர் சொல்லும் மறுமொழியைப் புரிந்து கொண்டு, என்னிடம் வந்து சொல்" என்றாள் {தமயந்தி}.

இப்படி உத்தரவிடப்பட்ட அந்தப் பெண் தூதுவர், எச்சரிக்கையுடனேயே சென்றாள். அப்படிச் சென்ற கேசினி பாகுகனிடம் {நளனிடம்} பேசுவதை, தமயந்தி மாடியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தாள். கேசினி, "ஓ மனிதர்களில் முதன்மையானவரே, உமது வரவு நல்வரவாகுக. நான் உமது மகிழ்ச்சியை விரும்புகிறேன். ஓ மனிதர்களில் காளையே, தமயந்தின் வார்த்தைகளை இப்போது கேளும். நீ எப்போது கிளம்பினீர்கள்? என்ன காரியத்துக்காக இங்கே வந்தீர்கள்? எங்களுக்கு உண்மையைச் சொல்லும். விதரப்ப்பத்தின் இளவரசி {தமயந்தி} இவற்றைக் கேட்க விரும்புகிறார்" என்றாள். அதற்கு பாகுகன், "கோசலத்தின் சிறப்பு மிகுந்த மன்னன் {ரிதுபர்ணன்}, தமயந்தியின் இரண்டாவது சுயம்வரம் நடைபெறப் போவதாக ஒரு அந்தணன் மூலம் அறிந்தார். அதைக் கேள்விப்பட்டே, காற்றின் வேகம் கொண்டு, நூறு யோஜனை தூரம் செல்லக்கூடிய அற்புதமான புரவிகளின் உதவியுடன் அவர் இங்கு வந்திருக்கிறார். நான் அவரது தேரோட்டி" என்று பதில் சொன்னான்.

பிறகு கேசினி, "உங்களில் மூன்றாமவர் எங்கிருந்து வருகிறார்? அவர் யாருடையவர் (யாருடைய மகன்}? நீர் யாருடைய மகன்? இந்த வேலையைச் செய்ய எப்படி நீர் வந்தீர்?" என்று கேட்டாள். இப்படிக் கேட்கப்பட்டு பாகுகன், "(நீ விசாரிக்கும்) அவன் {வார்ஷ்ணேயன்}, அறம்சார்ந்த நளனின் தேரோட்டியாக இருந்து, வார்ஷ்ணேயன் என்ற பெயரால் அனைவராலும் அறியப்பட்டவன் ஆவான். ஓ அழகானவளே, நளன் நாட்டைவிட்டு சென்றதும், அவன் பங்காசூரனின் மகனிடம் {ரிதுபர்ணரிடம்} வந்தான். நான் குதிரைகளைப் பற்றி நன்கு அறிந்த நிபுணன் ஆகையால், தேரோட்டியாக அமர்த்தப்பட்டேன். உண்மையில், மன்னன் ரிதுபர்ணரே என்னை அவரது தேரோட்டியாகவும், சமையற்காரனாகவும் தேர்ந்தெடுத்தார்" என்று மறுமொழி கூறினான் {பாகுகனாக இருக்கும் நளன்}.

கேசினி மீண்டும், "வார்ஷ்ணேயன், தனது மன்னன் நளன் எங்கு சென்றிருக்கிறார் என்பதை அறிவானோ. ஓ பாகுகரே, அவன் (தனது தலைவரைக்) இது குறித்து உம்மிடம் பேசியிருக்கலாமே" என்றாள். அதற்கு பாகுகன், "அற்புதமான செயல்கள் செய்து நளனுடைய பிள்ளைகளை இங்கே கொண்டு வந்து விட்டுவிட்டு, வார்ஷ்ணேயன் தற்போது இருக்கும் இடத்திற்கு சென்றுவிட்டான். அவனுக்கு {வார்ஷ்ணேயனுக்கு} அந்த நைஷாதன் {நளன்} எங்கிருக்கிறான் என்பது தெரியாது. ஓ சிறப்பானவளே, நளன் தனது அழகை (உண்மையான உருவை) இழந்து, மாற்றுருவத்தில் உலகம் முழுவதும் திரிந்து வருவதால் அவன் எங்கிருக்கிறான் என்பது யாருக்கும் தெரியாது. நளனை நளன் மட்டுமே அறிவான். நளனுக்கு உரிய அடையாளங்கள் எங்கும் அவனைக் காட்டாது {அவனது அடையாளங்களை வைத்து, அவனை எங்கும் யாராலும் கண்டுபிடிக்க முடியாது}." என்றான் {நளன்}.

இப்படிச் சொல்லப்பட்ட கேசினி மறுபடியும், "அவன் முன்பு இங்கிருந்து அயோத்தியாவுக்குச் சென்ற ஒரு அந்தணன், பெண்ணின் உதடுகளுக்குரிய வார்த்தைகளை "ஓ அன்புக்குரிய சூதாடியே, அர்ப்பணிப்பும் அன்பும் கொண்ட உமது மனைவியான நான் கானகத்தில் தூங்கிக் கொண்டிருக்கும்போது  எனது பாதி ஆடையை வெட்டி எடுத்துக் கொண்டு என்னைக் கைவிட்டு எங்கே சென்றீர்? அந்தப் பெண், உம்மால் உத்தரவிடப்பட்டபடியே உம்மை எதிர்பார்த்து, பாதி ஆடையுடனும், இரவும் பகலும் எரியும் துயரத்துடனும் உமக்காகக் காத்திருக்கிறாள்! ஓ மன்னா {நளரே}, ஓ வீரரே, எப்போதும் துயரத்துடன் அழுது கொண்டே இருக்கும் அவளிடம் கருணை கொண்டு பதிலளியும். ஓ சிறப்பானவரே, அந்தப் பழியில்லாதவள் கேட்பதற்காக குழம்பி அலையும் ஏற்புடைய வார்த்தைகளை அவளுக்குச் சொல்லும்" என்ற அவளது வார்த்தைகளைச் சொல்லியிருந்தான். அந்த அந்தணனின் இவ்வார்த்தைகளை முன்பே கேட்ட நீர் அதற்கு மறுமொழி கூறினீர்! விதரப்ப்பத்தின் இளவரசி {தமயந்தி}, நீர் அப்போது சொன்ன அவ்வார்த்தைகளை மறுபடியும் கேட்க விரும்புகிறார்" என்று கேட்டாள்.

பிருகதஸ்வர் தொடர்ந்தார், "ஓ குருகுலத்தின் மகனே {யுதிஷ்டிரா}, கேசினியின் இவ்வார்த்தைகளைக் கேட்ட நளனின் இதயம் வலித்தது. அவனது கண்கள் கண்ணீரால் நிரம்பின. தனது துயரத்தை அடக்கிக் கொண்ட அம்மன்னன் {நளன்}, எரியும் துயரத்துடன் மறுபடியும் அவ்வார்த்தைகளை, கண்ணீரால் தடைபட்ட குரலுடன், "என்னதான் துயரத்தில் விழுந்தாலும், கற்புடைய மங்கையர் தங்களைப் பாதுகாத்துக் கொண்டு நிச்சயம் சொர்க்கத்தை அடைவார்கள். கற்புடைய பெண்கள், அறம்சார்ந்த நடத்தை என்ற கவசத்துடன் தங்களது வாழ்வை நடத்துவதால், அவர்கள் தங்கள் தலைவர்களால் கைவிடபட்டாலும், அதன் காரணமாக அவர்கள் {அவன் மீது} கோபங்கொள்ள மாட்டார்கள்.  அனைத்து அருளையும் இழந்து, துயரத்தில் மூழ்கிய பிறகே அவன் {நளன்} அவளை {தமயந்தியைக்} கைவிட்டதால், அவள் கோபம் கொள்ளக்கூடாது. வாழ்வாதரத்தைப் பெற முயன்றபோது, பறவைகளால் ஆடை களவாடப்பட்டு துயரத்தில் மூழ்கியவன் மீது அழகு நிறைந்த அறம்சார்ந்த பெண் கோபமடையக்கூடாது. தான் {கணவனால்} நன்றாக நடத்தப்பட்டாலும், இல்லையென்றாலும், நாடிழந்து, செழிப்பெல்லாம் இழந்து, பசியால் ஒடுக்கப்பட்டு, பேரிடரில் மூழ்கிய தனது கணவனை அந்த இழிந்த நிலையில் கண்டும், அப்படிப்பட்ட {அறம்சார்ந்த} ஒரு மனைவி, ஒருபோதும் தன்னைக் {அவனுக்கெதிரான} கோபத்தில் ஈடுபடுத்திக் கொள்ளக்கூடாது" என்றான்.

ஓ பாரதா {யுதிஷ்டிரா}, துயரத்தால் ஒடுக்கப்பட்ட, நளன் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும்போது, அவன் தனது கண்ணீரை அடக்க முடியாமல் அழத்தொடங்கினான். அதன்பிறகு கேசினி, இந்த உரையாடல் மூலம் அனைத்தையும் அறிந்து, அவனின் {பாகுகனின் - நளனின்} வருத்தத்தையும் ஆவேசத்தையும் அறிந்து தமயந்தியிடம் திரும்பினாள்.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்