Friday, July 25, 2014

துயரத்தைக் கடக்கும் வழி! - வனபர்வம் பகுதி 212

A way to cross grief  | Vana Parva - Section 212 | Mahabharata In Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

ஐந்து வகைக் காற்றுகளையும், அவை உடலில் எப்படிச் செயல்படுகின்றன என்பதையும், ஒரு யோகி அவற்றை எவ்வாறு உணர்ந்து பரமாத்மாவை அடைகிறான் என்பதையும், முக்குணங்களுடனும் ஆவி எப்படிக் கலந்திருக்கிறது என்பதையும் தர்மவியாதன் கௌசிகருக்குச் சொன்னது...

அந்தணர் {கௌசிகர்}, "நெருப்பு (உயிர் சக்தி), பூமியின் தனிமத்தோடு (தாது) கூடி (உயிரினங்களின்) உடல்சார்ந்த வசிப்பிடமாக எப்படி ஆகிறது? மேலும், உயிர்க்காற்று (உயிர்மூச்சு) அதன் இருக்கையின் (தசைகள் மற்றும் நரம்புகளின்) இயல்பால் எப்படிச் (உடலெனும் சட்டகத்தைச்) செயல்படத் தூண்டுகிறது?" என்று விசாரித்தார்.

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஓ! யுதிஷ்டிரா, அந்தணர் {கௌசிகர்} இக்கேள்வியை அந்த வேடனிடம் {தர்மவியாதனிடம்} கூறிய போது, அவன் {வேடனான தர்மவியாதன்}, உயர்ந்த மனம் கொண்ட அந்த அந்தணரிடம் {கௌசிகரிடம்}, "உயிர் ஆவி, உணர்வுநிலை {மூளை} எனும் இருக்கையில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு, உடல் கட்டமைப்பின் செயல்பாட்டுக்குக் காரணமாக இருக்கிறது. ஆன்மாவானது அவ்விரண்டிலும் {ஆவியிலும், மூளையிலும்} இருந்து கொண்டு (அவை மூலமாகச்) செயல்படுகிறது. கடந்த காலம் {சென்றது}, நிகழ்காலம் {இருப்பது}, எதிர்காலம் {வருவது} ஆகியவை ஆன்மாவிலிருந்து பிரிக்க முடியாதபடி கலந்திருக்கிறது. உயிரினங்களில் இருப்பனவற்றில் அதுவே {ஆன்மாவே} உயர்ந்தது; அதுவே பரமாத்மாவின் சாரம்; நாம் அதை வணங்குகிறோம். அதுவே {ஆன்மாவே} உயிரினங்களின் இயக்க சக்தியாக, நித்திய (ஆவியாக) புருஷனாக {நித்தியமானதாக} இருக்கிறது. அதுவே பெரியது; அதுவே புத்தியும் அகங்காரமாகவும் இருக்கிறது. அதுவே பூதங்களின் {பூமி, நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆகியவற்றின்} பல்வேறு பண்புகளுக்கான அகநிலை {தன்னிலை} இருக்கையாக இருக்கிறது.




இங்கே {உடற்கட்டுக்குள்} இப்படி {ஆன்மாவானது} அமர்ந்து கொண்டு, வெளிப்புறமாகவோ {புறமாகவோ}, உட்புறமாகவோ {அகமாகவோ} (பொருளிலோ மனதிலோ), பிராணன் என்ற நுட்பமான ஐம்புலன்களின் காற்று {பிராணவாயு} மூலம் அனைத்துடனும் உறவுகளைத் {தொடர்புகளைத்} தக்க வைத்துக் கொள்கிறது. அதன் பிறகு ஒவ்வொரு உயிரினமும், சமானம் என்ற மற்றொரு நுட்பமான காற்றின் செயல்பாட்டால் அதன் வழியிலேயே செல்கின்றன. பின்னது {சமானம் என்ற காற்று [சமான வாயு]} அபானக் காற்றாகத் தன்னை மாற்றிக் கொண்டு, வயிற்றின் தலைப்பகுதியால் தாங்கப்பட்டு, உடலால் புறக்கணிக்கப்பட்ட பொருட்களான மலஜலங்களைச் சிறுநீரகம் மற்றும் குடலுக்குள் சுமந்து செல்கிறது. அதே காற்று {சமான [அ] அபான வாயு}, முயற்சி, உழைப்பு மற்றும் சக்தி ஆகிய மூன்று கூறுகளிலும் இருக்கிறது. அந்த நிலையில் இருக்கும் அது {சமான [அ] அபான வாயு}, இயற்பியலாளர்களால் {persons learned in physical science} உதானக் காற்று {உதான வாயு} என்று அழைக்கப்படுகிறது. மனித உடலமைப்புக்குள் இருக்கும் அனைத்துச் சந்திப்பு புள்ளிகளிலும் {junctional points} அது {சமான அல்லது உதான வாயு} தன் இருப்பை வெளிப்படுத்தும்போது, அது வியானம் என்று அழைக்கப்படுகிறது.

மேலும், அக வெப்பம் {உடலுக்குள் உருவாகும் வெப்பம்} நமது உடலமைப்புக்குள் இருக்கும் அனைத்துத் திசுக்களின் மீதும் பரவுகிறது. இவ்வகைக் காற்றுகளின் {பிராண வாயு [ஆக்சிஜன்], சமானம், அபானம், உதானம், வியானம்} மூலம் தாங்கப்பட்டு, இது {வெப்பம்} நாம் உண்ணும் உணவை, திசுக்களுக்கும் உடல் நீர்மங்களுக்கும் கடத்துகிறது. பிராணத்துடன் {பிராண வாயுவுடன்} கூட்டமைக்கும் பிற காற்றுகளால், ஒரு (கலவையான) எதிர்வினை உருவாகிறது. அதன் {அந்த எதிர்வினை} மூலம் உருவாக்கப்பட்ட வெப்பமே மனித அமைப்பின் அக வெப்பம் {Internal Heat} என்று அறியப்படுகிறது. அதுவே {அந்த வெப்பமே} நமது உணவின் செரிமானத்திற்குக் காரணமாகிறது. பிராண மற்றும் அபான காற்றுகள் {வாயுக்கள்}, சமான மற்றும் உதான காற்றுகளுக்கு {வாயுக்களுக்கு} இடையிலேயே நிலைபெற்றிருக்கின்றன. அவற்றின் கூட்டணியில் {உராய்வால்} உற்பத்தியாகும் வெப்பமே (ஏழு பொருட்கள், எலும்புகள், தசைகள் மற்றும் இதரவை அடங்கிய) உடலின் வளர்ச்சி காரணமாக அமைகிறது.

பெருங்குடல் வரை விரிந்து இருக்கும் பகுதியை இருக்கையாக {தான் இருக்கும் இடமாகக்} கொண்டது அபானம் என்று அழைக்கப்படுகிறது. தமனிகளில் {இரத்தக் குழாய்களில் இருந்து (பிராணம் முதற்கொண்ட) ஐந்து காற்றுகளும் {பிராணம், சமானம், அபானம், உதானம், வியானம்} எழுகின்றன. பிராணக் காற்று {ஆக்சிஜன்} வெப்பத்தால் செயல்பட்டு, அபானப் பகுதியின் எல்லையைத் தாக்குகிறது. பின்னர்த் திகைத்து நின்று, அந்த வெப்பத்துடன் எதிர்வினை புரிகிறது. தொப்புளுக்கு {நாபிக்கு} மேலே செரிக்காத உணவுள்ள பகுதியும் {ஆமாசயம்}, அதற்கு {தொப்புளுக்குக்} கீழே செரிமானம் செய்யும் பகுதியும் {பக்வாசயம்} இருக்கின்றன. பிராணக்காற்றும், உடலமைப்புக்குள் இருக்கும் மற்ற பிற காற்றுகளும், தொப்புளிலேயே {நாபியிலேயே} அமர்ந்திருக்கின்றன {நிலைபெற்றிருக்கின்றன}. இதயத்திலிருந்து வெளிவந்து தமனிகள் {இரத்தக்குழாய்கள், நரம்புகள்} மேலும் கீழுமாகவும், சாய்வான திசைகளிலும் ஓடுகின்றன; அவை நம் உணவில் இருந்து சிறந்த சாரத்தை எடுத்துக் செல்கின்றன. அவற்றுடன் {உணவின் சிறந்த சாரத்தை} பத்து பிராணக் காற்றுகள் {பிராணவாயுக்கள்} வினைபுரிகின்றன.

பொறுமையான யோகிகள் அனைத்துத் துன்பங்களையும் கடக்கும் வழி இதுதான். பொருட்களைச் சார்பற்ற சமமான பார்வையில் பார்க்கும் அவர்  அவர்கள் {யோகிகள்}, தங்கள் ஆன்மாக்களை மூளையில் இருத்தி, அனைத்து உயிரினங்களின் உடலுக்குள்ளும் இருக்கும் பரமாத்மாவையும், பிராண மற்றும் அபானக் காற்றுகளையும் கண்டுபிடிக்கின்றனர். உடல் என்ற மாற்றுருவத்தில், (விலங்குகளின் உடலமைப்பில்) பதினொரு புறவேற்றுமைத் தனிமங்களின் நிலையில் {allotropous conditions} ஆவி {Spirit} உள்ளடங்கியிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும். அது {ஆவி} நித்தியமாக இருப்பினும், சுத்திகரிக்கப்பட்ட நெருப்பு நித்தியமாக இருப்பினும், அதன் புறச்சூழலுக்கு ஏற்றவாறு மாறுவதைப் போல அதன் இயல்பு தன்னுடன் இருப்பவையின் வெளிப்படையாக மாற்றப்படுகிறது. தெய்வீகப் பொருளுடன் உறவுகொள்ளும் உடல், தாமரை இலையின் பரப்பில் இருக்கும் நீர்த்துளி {அதனுடன் ஒட்டாமல்} உருளுவது போலவே பிந்தையதுடன் {ஆவியுடன்} தொடர்புடையதாகும். {அதாவது உடலுக்கும் உயிருக்கும் உள்ள சம்பந்தம் தாமரை இலை நீர்த்துளி போன்றதாகும் என்று சொல்ல வருகிறார் போலும்}.

சத்வ, ரஜஸ், தமஸ் ஆகியவை அனைத்து உயிர்களின் குணங்கள் என்றும் வாழ்வு என்பது ஆவியின் {உயிரின்} குணம் என்றும், பிந்தையத் {ஆன்மா} பராத்மாவின் குணம் என்று அறிந்து கொள்ளும். மந்தமான, உணர்வற்ற பொருளே {ஆவியே} வாழ்வுக் கொள்கையின் இருக்கையாக இருக்கிறது. அது {ஆவி} தன் இயல்பினால் சுறுசுறுப்பானதும், பிறருக்குள் செயல்பாட்டைத் தூண்டுவதும் ஆகும். ஏழு உலகங்களையும் செயலுக்கான தூண்டுதலைச் செய்யும் அதுவே {ஆவியே} உயர்ந்தது என்று உயர்ந்த ஆன்ம உள்ளொளி கொண்ட மனிதர்களால் சொல்லப்படுகிறது. இப்படியே இந்த அனைத்து கூறுகளிலும், நித்தியமான ஆவி தன்னை வெளிக்காட்டிக் கொள்வதில்லை; ஆனால், அது {ஆவி} ஆன்ம அறிவியலைக் கற்றறிந்தவர்களின் உயர்ந்த ஞானம் கொண்ட கூரிய பார்வையால் காணப்படுகிறது.

சுத்தமான மனம் கொண்ட ஒரு மனிதன், தனது இதயத்தைச் சுத்திகரித்துக் கொள்வதால், தனது செயல்களால் உண்டாகும் நல்ல மற்றும் தீய விளைவுகளை அழிக்கும் திறன் பெறுகிறான். அதனால் அவன் தனது அக ஆன்மாவின் ஞானத்தால் நித்தியமான நற்பேறை {பேரின்பத்தை} அடைகின்றான். அமைதியான நிலையும், இதயத்தைச் சுத்திகரித்துக் கொண்ட நிலையும், மகிழ்ச்சிகரமான மனநிலையில் ஆழ்ந்து உறங்கும் ஒருவனது நிலையைப் போன்றதே; அல்லது நிபுணத்துவம் வாய்ந்த கைகளால் ஒழுங்கமைக்கப்பட்ட விளக்கின் பிரகாசம் போன்றது. அற்பமான உணவை உட்கொண்டு சுத்த மனதோடு வாழும் ஒருவன் தனக்குள் பிரதிபலிக்கும் பரமாத்மாவைச் சுயமாகவே காண்கிறான். மாலைப்பொழுதிலும், இரவின் சில மணிநேரங்களிலும் மனதை ஒருமுகப் படுத்த பயின்று, திகைப்பூட்டும் விளக்கைப் போலப் பிரகாசிக்கும் தனது இதயத்தின் ஒளியில், குணங்களற்ற பரமாத்மாவை அவன் காண்கிறான். இப்படியே அவன் முக்தியையும் அடைகிறான்.

பேராசையும், கோபமும் எல்லாவகையிலும் அடக்கப்பட வேண்டும். இச்செயலே மனிதர்கள் பயில்வதற்கு ஏற்ற மிகவும் புனிதமான அறத்தைக் கொண்டிருக்கிறது. துயரம் மற்றும் தொல்லைகள் என்ற கடலை மனிதர்கள் கடப்பதற்கான வழிகள் என இதுவே கருதப்படுகிறது. கோபத்தின் தொடர்ச்சியாகத் தீமையில் மூழ்காமல், நேர்மையையும், கர்வத்தின் விளைவுகளில் இருந்து தனது அறங்களையும், மாயையின் விளைவுகளில் இருந்து கல்வியையும், மாயையில் இருந்து தனது சொந்த ஆவியையும் ஒருவன் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

கருணையே அறங்களில் {நற்பண்புகளில்} சிறந்தது. பொறுமையே சக்திகளுள் சிறந்தது. நமது ஆன்ம இயல்பின் ஞானமே அனைத்து ஞானங்களிலும் சிறந்தது. அறக் கடமைகள் அனைத்திலும் உண்மையே {சத்தியமே} சிறந்தது. உண்மை பேசுவது நல்லது. உண்மையின் அறிவும் {சத்தியம் குறித்த ஞானமும்} நல்லதே. ஆனால் எது அனைத்து உயிர்களுக்கும் நன்மையைப் பயக்குமோ அதுவே உயர்ந்த உண்மை {உயர்ந்த சத்தியம்} என்று அறியப்படுகிறது. எந்த வெகுமதியும், அருளும் எதிர்பாராமல் செயல்படும் ஒருவனும், தனது துறவின் தேவைக்காக அனைத்தையும் தியாகம் செய்தவனும் உண்மையான சந்நியாசியாவன். அவனே உண்மையான ஞானி. ஒரு குரு {பிரம்மம் குறித்த} புதிருக்கான குறிப்பைத் தான் தர முடியும். பிரம்மத்துடனான தொடர்பை நமது ஆன்ம குருவாலும் கற்றுத் தரமுடியாது. பொருள் நிறைந்த உலகைத் துறப்பதே யோகம் என்று அழைக்கப்படுகிறது
.
நாம் எந்த உயிரினத்திற்கும் தீங்கிழைக்காமல், அனைத்துடனும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். இந்த நமது தற்போதைய இருப்பில், எந்த உயிரினத்தையும் பழி வாங்கக்கூடாது. சுய தியாகம் {தன்னைத் தியாகம் செய்தல்}, நிம்மதி, நம்பிக்கையைத் துறத்தல், மன அமைதி ஆகியவையே ஆன்ம ஞானத்தை எப்போதும் அடைவதற்கான வழிகள். சுயத்தை அறிவதே {ஒருவனது ஆன்ம இயல்பை அறிவதே} ஞானத்தில் சிறந்தது.

இவ்வுலகிலும், அடுத்த உலகிலும் {இம்மையிலும் மறுமையிலும்}, உலகம் சார்ந்த அனைத்து விருப்பங்களையும் துறந்து, விருப்பு வெறுப்பற்ற அலட்சியப் போக்கை எடுத்துக் கொண்டால் அனைத்து துன்பங்களும் ஓய்ந்து போகும். மனிதர்கள் தங்கள் அறக் கடமைகளைத் தங்கள் புத்தியின் துணை கொண்டு நிறைவேற்ற வேண்டும். அடைவதற்கு மிகவும் அரிதான் மோட்சத்தை (முக்தியை) அடைய விரும்பும் முனிவர், துறவில் உறுதியாகவும், பொறுமையுடனும், சுயக் கட்டுப்பாட்டுடனும், தன்னை இந்த உலகத்தில் உள்ள பொருட்களுடன் கட்டிப் போடும் நீண்டகால விருப்பங்களைத் துறக்க வேண்டும். இவற்றையே பரமாத்மாவின் குணங்கள் என்று அழைக்கின்றனர்.

நாம் உணர்ந்திருக்கும் குணங்கள், அவனிடம் அகுணங்களாகச் {குணங்களற்றவையாகத் தன்னைச்} சுருக்கிக் கொள்கின்றன; அவன் எதனுடனும் பிணைப்புடையவன் அல்ல, அவனது ஆன்மப் பார்வையின் விரிவாக்கமும் வளர்ச்சியும் உணர்வால் மட்டுமே நாம் அறிய முடியும். அறியாமையின் மாயை விலக்கப்பட்டதும், இந்தக் கலப்படமற்ற உச்ச பேறு {பேரின்பம்} அடையப்படுகிறது. இன்பம் மற்றும் வலி சம்பந்தமான பொருட்களைக் கைவிடுவதாலும், இவ்வுலகின் பொருட்களில் தன்னைப் பிணைக்கும் உணர்வுகளைத் துறப்பதாலும், ஒரு மனிதன் பிரம்மத்தை (பரமாத்மாவை அல்லது முக்தியை) அடைகிறான். ஓ! நல்ல அந்தணரே {பிராமணோத்தமரே- கௌசிகரே}, நான் கேள்விப்பட்டவாறே, இவை அனைத்தையும், உமக்குச் சுருக்கமாக விவரித்திருக்கிறேன். வேறு எதை நீர் அறிய விரும்புகிறீர்" என்று கேட்டான் {தர்மவியாதன்}.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்