Tuesday, September 23, 2014

ராமனைச் சாய்த்த இந்திரஜித்! - வனபர்வம் பகுதி 286

Indrajit caused Rama to fall!  | Vana Parva - Section 286 | Mahabharata In Tamil

(திரௌபதி ஹரணப் பர்வத் தொடர்ச்சி)

தன் மகன் இந்திரஜித்தை ராவணன் போருக்கு அனுப்பியது; இந்திரஜித்துக்கும் லட்சுமணனுக்கும் இடையில் நடந்த போர்; அங்கதன் அவர்களுக்கிடையே குறுக்கிட்டது; அங்கதனைக் கொல்ல இருந்த இந்திரஜித்தை லட்சுமணன் தடுத்தது; அங்கதன் இந்திரஜித்தின் குதிரைகளையும் தேரோட்டியையும் கொல்வது; மாயசக்திகளைப் பயன்படுத்தி இந்திரஜித் மறைந்திருந்து போர் தொடுப்பது; இதைக் கண்ட ராமன் தனது படையைக் காக்க அங்கே விரைவது; மறைந்திருந்து தாக்கிய இந்திரஜித் ராமனையும் லட்சுமணனையும் தரையில் விழச்செய்தது ...

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “தொண்டர்களுடன் {பின்தொடர்பவர்களுட்ன} கூடிய கும்பகர்ணனும், பெரும் போர்வீரனான பிரஹஸ்தனும், பெரும் சக்தி கொண்ட தூம்ராக்ஷனும் போர்க்களத்தில் விழுந்ததை அறிந்த ராவணன், தனது வீர மகன் இந்திரஜித்திடம், "ஓ! எதிரிகளைக் கொல்பவனே {இந்திரஜித்}, ராமன், சுக்ரீவன் மற்றும் லட்சுமணனை நீ கொல்வாயாக. எனது நன் மகனே, சச்சியின் தலைவனான, வஜ்ரத்தைத் தாங்கும் ஆயிரம் கண்கொண்டவனை {இந்திரனை} வீழ்த்தியதால், உன்னாலேயே எனக்கு இந்தப் பெரும்புகழ் கிடைத்தது. ஓ !எதிரிகளை அடிப்பவனே! உனது விருப்பத்துக்கேற்றவாறு தோன்றவும் மறையவும் கூடிய சக்தி கொண்ட நீ, (தேவர்களிடம்) வரமாகப் பெற்ற தெய்வீகக் கணைகளைக் கொண்டு எதிரிகளைக் கொல்வாயாக. உனது ஆயுதங்களின் சாதாரண ஸ்பரிசத்தையே ராமன், லட்சுமணன் மற்றும் சுக்ரீவன் ஆகியோரால் தாங்கிக் கொள்ள முடியாது. அப்படியிருக்கும்போது, அவர்களது தொண்டர்களைக் குறித்த நான் என்ன சொல்வேன்? ஓ! வலிய கரங்கள் கொண்டவனே {இந்திரஜித்}, பிரஹஸ்தனாலோ, கும்பகர்ணனாலோ எந்தப் போர் முடிவுக்குக் கொண்டுவரப்படவில்லையோ, அது உன்னால் முடியட்டும். ஓ! மகனே {இந்திரஜித்}, உனது கூர்முனை கணைகளால், எனது எதிரிகளையும், அவர்களது படையினரையும் கொன்று, நீ முன்பொரு முறை வாசவனைக் கொன்று எனது மகிழ்ச்சியை எப்படி அதிகரிக்கச் செய்தாயோ, அப்படி இன்று செய்வாயாக" என்றான் {ராவணன்}. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அவனால் {ராவணனால்} இப்படிச் சொல்லப்பட்ட இந்திரஜித், "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி, கவசம் பூண்டு தனது தேரில் விரைந்து ஏறி, போர்க்களத்தை நோக்கி முன்னேறினான்.


பிறகு அந்த ராட்சசர்களில் காளை, {இந்திரஜித் என்ற} தனது பெயரை உரக்கக் கூறி, ஒற்றைக்கு ஒற்றைப் போர் புரிய {to a single combat}, நற்குறிகள் கொண்ட லட்சுமணனுக்கு அறைகூவல் விடுத்தான். இப்படிச் சவால்விடப்பட்ட லட்சுமணன், தனது வில் மற்றும் கணைகளை எடுத்துக் கொண்டு, அந்த வில்லின் நாணைத் தோல் உறை பூண்ட, தனது இடது கையால் சுண்டிவிட்டு, எதிரிகளின் இதயம் பயங்கரத்தை உணரச்செய்யும் வகையில், அந்த ராட்சசனை {இந்திரஜித்தை} நோக்கி விரைந்தான். தெய்வீக ஆயுதங்களை அறிந்த அந்த இரு வீரர்களுக்கிடையில், ஒருவருக்கொருவர் தங்கள் பராக்கிரமத்தை வெளிப்படுத்தி, ஒருவரை ஒருவர் வீழ்த்த விரும்பி நடைபெற்ற அந்த மோதல் பயங்கரத்தின் எல்லையைக் காட்டுவதாக இருந்தது. ஆனால், தனது கணைகளால் எதிராளி {லட்சுமணன்} மீது எந்த ஆதிக்கத்தையும் தான் பெற முடியாது என்பதைக் கண்டறிந்த வலிமைமிக்க வீரர்களில் முதன்மையான ராவணனின் மகன் {இந்திரஜித்}, தனது ஆற்றல்கள் அனைத்தையும் திரட்டினான். பிறகு, இந்திரஜித் பெரும் சக்தி கொண்ட எண்ணற்ற எறிவேல்களை {#} லட்சுமணனின் மீது வீசத் தொடங்கினான். எனினும், சுமித்திரையின் மகன் {லட்சுமணன்}, தனது கூர்முனை கொண்ட கணைகளால், அவற்றை வெட்டிச் சிதறடித்தான். லட்சுமணனின் கூர்முனைக் கணைகளால் துண்டு துண்டாக வெட்டப்பட்ட அந்த எறிவேல்கள் தரையில் விழுந்தன.

பிறகு வாலியின் மகனான அழகான அங்கதன், ஒரு பெரிய மரத்தை எடுத்து இந்திரஜித்தை நோக்கி மூர்க்கமாக விரைந்து, அதைக் கொண்டு அவனது தலையில் அடித்தான். இருப்பினும் அச்சமற்றிருந்த அந்த வலிமைமிக்க இந்திரஜித் சூலத்தைக் கொண்டு அங்கதனை அடிக்க முயன்றான். எனினும், சரியாக அந்நேரத்திலேயே, ராவணன் மகனால் {இந்திரஜித்தால்} எடுக்கப்பட்ட அந்தச் சூலத்தை லட்சுமணன் துண்டு துண்டாக வெட்டிப் போட்டான். பிறகு ராவணனின் மகன் கதாயுதத்தை எடுத்து, தன் அருகில் இருந்த அந்தக் குரங்குகளில் முதன்மையானவனும் வீரனுமான அங்கதனின் இடது விலாவில் அடித்தான். வாலியின் பலமிக்க மகனான அங்கதன், அந்த அடியை ஒரு பொருட்டாக எண்ணாமல், இந்திரஜித்தின் மேல் ஒரு பெரும் ஆச்சாமரத் தண்டை வீசினான். இந்திரஜித்தை அழிப்பதற்காகக் கோபம் கொண்ட அங்கதனால் வீசப்பட்ட அந்த மரம், ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரா}, குதிரைகள் மற்றும் தேரோட்டியோடு கூடிய இந்திரஜித்தின் தேரை அழித்தது. பிறகு குதிரைகளற்ற, தேரோட்டியற்ற தேரில் இருந்து குதித்த ராவணனின் மகன் {இந்திரஜித்}, ஓ மன்னா {யுதிஷ்டிரா}, தனது மாய சக்திகளின் துணை கொண்டு, காட்சியில் இருந்து மறைந்தான்.

அபரிமிதமான மாய சக்திகளைக் கொண்ட அந்த ராட்சசன் {இந்திரஜித்}, திடீரென மறைந்ததைக் கண்டு, அந்த இடத்தில் ராமன் முன்னேறி வந்து, தனது துருப்புகளைக் கவனமாகக் காக்க ஆரம்பித்தான். எனினும், இந்திரஜித், தேவர்களின் வரங்களால் {தான்} அடைந்த கணைகளைக் கொண்டு, ராமன், பலமிக்க லட்சுமணன் ஆகிய இருவரது உடல்களின் அனைத்துப் பாகங்களையும் துளைக்க ஆரம்பித்தான். பிறகு, தனது மாய சக்திகள் கொண்டு தன்னை மறைத்துக் கொண்டு போரிட்ட ராவணனின் மகனுக்கு எதிராக, வீரர்களான ராமன் மற்றும் லட்சுமணன் ஆகிய இருவரும், தங்கள் கணைகளைக் கொண்டு தொடர்ந்து போராடினர். ஆனால் அந்த மனிதர்களில் சிங்கங்கள் மேல் முழுவதும் தனது கூர்முனை கொண்ட கணைகளை நூற்றுக் கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் தொடர்ந்து அடித்தான். தொடர்ச்சியாகத் தனது கணைகளைப் பொழிந்து கொண்டிருந்த மறைந்திருந்த அந்த வீரனை {இந்திரஜித்தை}, கற்குவியல்களை ஏந்திய குரங்குகள், ஆகாயத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தேடின. எனினும், அவர்களையும் {குரங்குகளையும்}, அந்த இரு சகோதரர்களையும், மறைந்திருந்த அந்த ராட்சசன் {இந்திரஜித்}, தனது கணைகள் மூலம் துன்புறுத்தத் தொடங்கினான். உண்மையில் அந்த ராவணனின் மகன், தனது மாய சக்திகளைக் கொண்டு தன்னை மறைத்துக் கொண்டு, அந்தக் குரங்குப் படையைப் பெருஞ்சீற்றத்துடன் தாக்கினான். இப்படி உடல் முழுவதும் அவனது {இந்திரஜித்தின்} கணைகளால் துளைக்கப்பட்ட வீர சகோதரர்களான ராமனும் லட்சுமணனும், ஆகாயத்தில் இருந்து விழுந்த சூரியனையும், சந்திரனையும் போலத் தரையில் விழுந்தனர்.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்