Monday, September 22, 2014

மீளாத்துயில்கொண்ட கும்பகர்ணன்! - வனபர்வம் பகுதி 285

Kumbhakarna was slained! | Vana Parva - Section 285 | Mahabharata In Tamil

(திரௌபதி ஹரணப் பர்வத் தொடர்ச்சி)

கும்பகர்ணனைக் கொன்ற லட்சுமணன்; வஜ்ரவேகனைக் கொன்ற ஹனுமான்; பிரமாதியைக் கொன்ற நளன்...

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “பிறகு கும்பகர்ணன் தனது தொண்டர்களுடன் நகரத்தைவிட்டுக் கிளம்பினான். வெற்றி பெற்ற குரங்கு துருப்புகள் முற்றுகையிட்டிருப்பதை விரைவில் தன் முன் கண்டான். ராமனைத் தேடும் நோக்கத்தோடு அவர்களைக் கடந்து சென்ற அவன் {கும்பகர்ணன்}, கையில் வில்லுடன் தனது நிலையில் நிற்கும் சுமித்திரையின் மகனைக் {லட்சுமணனைக்} கண்டான். பிறகு அந்தக் குரங்கு போர்வீரர்கள், அவனை {கும்பகர்ணனை} நோக்கி விரைந்து, அனைத்து புறத்திலும் அவனைச் சூழ்ந்து கொண்டனர். பிறகு அவர்கள் எண்ணிலடங்கா பெரிய மரங்களைக் கொண்டு அவனை அடிக்க ஆரம்பித்தனர். அவர்களில் {குரங்குகளில்} பலர் அச்சமற்று, தங்கள் நகங்களைக் கொண்டு அவனது உடலைக் கிழிக்கத் தொடங்கினர். போர்க்கலை விதிகளால் அங்கீகரிக்கப்பட்ட பல வழிகளில் அந்தக் குரங்குகள் அவனுடனான தங்கள் போரைத் தொடங்கின. விரைவில் அவர்கள் அந்த ராட்சசர்களின் தலைவனை {கும்பகர்ணனை} பல வகைகளிலான பயங்கர ஆயுதங்களின் மழையால் மறைத்தனர்.


அவர்களால் இப்படித் தாக்கப்பட்ட கும்பகர்ணன், அவர்களைப் பார்த்துச் சிரிக்க மட்டுமே செய்து, அவர்களை உண்ண ஆரம்பித்தான். சலன், சண்டசலன், வஜ்ரபாகு என்ற பெயர்களால் அறியப்படும் குரங்குகளில் முதன்மையானவர்களை அவன் {கும்பகர்ணன்} விழுங்கினான். அந்த ராட்சசன் செய்த அஞ்சத்தக்க செயலைக் கண்ட பிற குரங்குகள் அச்சமடைந்தனர். அதனால் அவர்கள் அச்சமடைந்து உரத்த ஓலமிட்டனர். அந்தக் குரங்குத் தலைவர்களின் அலறலைக் கேட்ட சுக்ரீவன் துணிச்சலுடன் கும்பகர்ணனை நோக்கி முன்னேறினான். உயர் ஆன்மா கொண்ட அந்தக் குரங்குகள் மன்னன் {சுக்ரீவன்}, அந்த ராட்சசனை {கும்பகர்ணனை} விரைவில் அணுகி, ஆச்சா {சால} மரத்தின் தண்டைக் கொண்டு அவனது தலையில் கடுமையாக அடித்தான். எப்போதும் விரைந்து செயல்படும் உயர் ஆன்ம சுக்ரீவன், கும்பகர்ணனின் தலையில் அடித்து அந்த ஆச்சாமரத்தை ஒடித்தாலும், அந்த ராட்சசன் மீது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தத் தவறினான். பின்பு, அந்த அடியால் மந்த நிலையில் இருந்து எழுந்தவன் போல இருந்த கும்பகர்ணன், தனது கரங்களை நீட்டி, தன் பலத்தை மட்டுமே கொண்டு சுக்ரீவனைப் பிடித்தான். நண்பர்களுக்கு மகிழ்வூட்டும் சுமித்திரையின் வீர மகன் {லட்சுமணன்}, அந்த ராட்சசனால் {கும்பகர்ணனால்} சுக்ரீவன் இழுத்துச் செல்லப்படுவதைக் கண்டு, கும்பகர்ணனை நோக்கி விரைந்தான்.

எதிரி வீரர்களைக் கொல்லும் லட்சமணன், கும்பகர்ணனை நோக்கி முன்னேறியவாறு, தங்கப் புங்கங்கள் {#} கொண்ட பலமிக்க மூர்க்கமான கணையை அவனை {கும்பகர்ணனை} நோக்கி அடித்தான். அந்தக் கணை, அவனது கவசத்தைப் பிளந்து, அவனது உடலுக்குள் ஊடுருவி, அப்பட்டமாக அதைக் {அவ்வுடலைக்} கடந்து, அந்த ராட்சசனின் ரத்தக் கறையுடன் பூமியைப் பிளந்து நின்றது. அப்படி மார்பு துளைக்கப்பட்ட கும்பகர்ணன், குரங்குகளின் மன்னனை {சுக்ரீவனை} விடுவித்தான். ஒரு பெரும் பாறையைத் தன ஆயுதமாக எடுத்துக் கொண்ட அந்தப் பலமிக்க வீரனான கும்பகர்ணன், சுமித்திரையின் மகனை {லட்சுமணனை} இலக்காக வைத்து அவனை நோக்கி விரைந்தான். அப்படி அந்த ராட்சசன் {கும்பகர்ணன்} அவனை {லட்சுமணனை} நோக்கி விரைந்த போது, அவனது {கும்பகர்ணனின்} உயர்த்தப்பட்ட {இரு} கரங்களை, கத்தியைப் போன்றிருந்த தனது கூரிய முனை கொண்ட கணைகளால் லட்சுமணன் வெட்டி வீழ்த்தினான்.

ஆனால், அந்த ராட்சசனின் இருகரங்களும் அப்படி வெட்டப்பட்ட போது, அக்கரங்களின் எண்ணிக்கையைப் போல இருமடங்கு கரங்கள் அவன் மேனியில் தோன்றின. எனினும், சுமித்திரையின் மகன், தனது ஆயுத நிபுணத்துவத்தைக் காட்டி, அதே போன்ற கணைகளைக் கொண்டு, கற்களைக் கொண்டிருந்த அக்கரங்களையும் வெட்டி வீழ்த்தினான். இதனால், அந்த ராட்சசன் {கும்பகர்ணன்}, பல தலைகளும், கால்களும், கரங்களும் கொண்ட மிகப்பெரிய உருவமெடுத்தான். பிறகு, சுமித்திரையின் மகனான அந்த வீரன் {லட்சுமணன்}, மலைக்குவியலைப் போல இருந்த அவனை {கும்பகர்ணனை} பிரம்ம ஆயுதத்தினால் பிளந்தான். அந்தத் தெய்வீக ஆயுதத்தால் தாக்கப்பட்ட அந்த ராட்சசன் {கும்பகர்ணன்}, கிளைகள் விரித்த பெரும் மரம் ஒன்று, வானத்தின் இடியால் தாக்கப்பட்டு விழுவது போல, அந்தப் போர்க்களத்தில் விழுந்தான். அசுரன் விருத்திரனுக்கு ஒப்பானவனும், பெருஞ்செயல் புரியுபவனுமான கும்பகர்ணன் உயிரிழந்து போர்க்களத்தில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்ததைக் கண்ட ராட்சச வீரர்கள் அச்சத்தால் பின்வாங்கி ஓடினார்கள்.

அப்படிப் போர்க்களத்தை விட்டு ஓடும் ராட்சச வீரர்களைக் கண்ட, தூஷணனின் தம்பி, அவர்களை அணிதிரட்டி, பெரும் கோபத்துடன் சுமித்திரையின் மகனை {லட்சுமணனை} நோக்கி விரைந்தான். எனினும், சுமித்திரையின் மகன் {லட்சுமணன்}, உரத்த கர்ஜனை செய்து, தனது இறகு படைத்த கணைகளைக் கொண்டு, தன்னை நோக்கி விரைந்து வரும் கோபக்கார போர்வீரர்களான வஜ்ரவேகனையும், பிரமாதினையும் வரவேற்றான். ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரா}, பிறகு, தூஷணன் தம்பிகள் ஒரு புறமும், புத்திக்கூர்மை கொண்ட லட்சுமணன் ஒரு புறமும் எனக் காண்பவர்களுக்கு மயிர்க்கூச்சலை ஏற்படுத்தும் மிகக்கடுமையான போர் மூண்டது. லட்சுமணன், அந்த இரு ராட்சசர்களையும் கச்சிதமான தனது அம்பு மழையால் மூழ்கடித்தான். மறுபுறம் கோபத்தால் பரபரப்படைந்த அந்த இரு ராட்சச வீரர்களும், தங்கள் கணைகளால் கல்மாரி பொழிந்து லட்சுமணனை மறைத்தனர். வஜ்ரவேகன், பிரமாதின் ஆகியோருக்கும் வலிய கரங்கள் கொண்ட லட்சுமணனுக்கு இடையில் நடந்த அந்தப் பயங்கர மோதல் சிறிது நேரம் {ஒரு முகூர்த்த காலம்} நீடித்தது.

பவனனின் மகனான ஹனுமான் ஒரு மலைச்சிகரத்தை எடுத்துக்கொண்டு விரைந்து, அந்த ஆயுதத்தால் {மலைச்சிகரத்தால}, அச்சகோதரர்களில் ஒருவனான ராட்சசன் வஜ்ரவேகனின் உயிரைப் பறித்தான். பலமிகுந்த குரங்கான நளனும் {நீலன் என்கிறது கும்பகோணம் பதிப்பு}, ஒரு பெரும் பாறையைக் கொண்டு, தூஷணனின் தம்பியான பிரமாதினை நசுக்கினான். எனினும், ஒருவருக்கொருவர் எதிர்த்து முன்னேறும் ராமன் மற்றும் ராவணனின் படைவீரர்களுக்கிடையேயான அந்தக் கொடிய போராட்டம், இதற்குப் பிறகும் ஒரு முடிவுக்கு வராமல், முன்பு போலவே உக்கிரத்துடன் நடந்தது. அந்தக் கானகவாசிகளால் {குரங்குகளால்} நூற்றுக்கணக்கான ராட்சசர்கள் கொல்லப்பட்டார்கள், அதே வேளையில் பல குரங்குகள் ராட்சசர்களாலும் கொல்லப்பட்டனர். எனினும், மரண இழப்பில் குரங்குகளை விட ராட்சசர்களுடைய இழப்பு மிக அதிகமாக இருந்தது.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்