Wednesday, October 08, 2014

கர்ணனை மீண்டும் எச்சரித்த சூரியன்! - வனபர்வம் பகுதி 299

Surya warned Karna again!  | Vana Parva - Section 299 | Mahabharata In Tamil

(பதிவிரதா மாஹாத்மியப் பர்வத் தொடர்ச்சி)

குண்டலங்களையும் கவசத்தையும் இந்திரனுக்குக் கொடுத்துவிடாதே என்று மீண்டும் கர்ணனை எச்சரித்த சூரியன்...

சூரியன் {கர்ணனிடம்} சொன்னான், “ஓ! கர்ணா, உனக்கும், உனது நண்பர்களுக்கும், உனது மகன்களுக்கும், உனது மனைவியருக்கும், உனது தந்தைக்கும், உனது தாய்க்கும் தீங்கிழைக்கும் எதையும் செய்துவிடாதே; ஓ! உயிரைத் தாங்கியிருப்பவர்களில் சிறந்தவனே {கர்ணா}, மனிதர்கள், தங்கள் உடல்களைத் தியாகம் செய்ய விரும்பாமலே, (இவ்வுலகில்) புகழையும், சொர்க்கத்தில் நீடித்த புகழையும் விரும்புகிறார்கள். ஆனால், .நீயோ உனது உயிரைச் செலவு {தியாகம்} செய்து சாகாப்புகழை விரும்புகிறாய் ஆதலால், சந்தேகமற அவள் {புகழ்} உனது உயிரைப் பறிப்பாள். ஓ! மனிதர்களில் காளையே {கர்ணா}, இவ்வுலகில், தந்தை, தாய், மகன், பிற உறவினர்கள் ஆகியோர் உயிருடனிருப்பவர்களுக்கே பயனளிப்பவர்களாக இருக்கிறார்கள். ஓ! மனிதர்களில் புலியே {கர்ணா}, மன்னர்களைப் பொறுத்தவரை, அவர்கள் உயிருடன் இருக்கும்போதே அவர்களது பராக்கிரமம் அவர்களுக்கு உதவியாக இருக்கும். இதை நீ புரிந்து கொண்டாயா? ஓ! பெரும் பிரகாசம் கொண்டவனே {கர்ணா}, உயிருடன் வாழ்பவர்களுக்குப் புகழ் நன்மையைச் செய்யும்! உடல்கள் சாம்பலாக்கப்பட்ட இறந்தவர்களுக்கு, புகழால் என்ன பயன்?


இறந்து போனவன் புகழைக் கண்டு மகிழ முடியாது. உயிரோடிருப்பவனே அதுகுறித்து மகிழ முடியும். இறந்து போனவனின் புகழ் என்பது சடலத்தின் கழுத்தில் இருக்கும் மலர்கள் நிறைந்த மாலைக்கு ஒப்பானது. நீ என்னை மதித்து வழிபடுபவன் ஆதலால், உனது நன்மைக்காக இதைச் சொல்கிறேன். என்னை வழிபடுபவர்கள் எப்போதும் என்னால் பாதுகாக்கப்படுகிறார்கள். உன்னிடம் நான் பேசுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும்! ஓ! வலிய கரங்கள் கொண்டவனே {கர்ணா}, பெரும் மதிப்புடன் இவன் {கர்ணன்} நம்மை வணங்குகிறான் என்று மீண்டும் நினைத்தே, நான் உன் மீது அன்பால் ஈர்க்கப்பட்டேன். எனவே, என் வார்த்தைகளின் படி நடந்து கொள்!

இது தவிர, விதியால் விதிக்கப்பட்ட ஓர் ஆழமான மர்மம் இவை அனைத்திலும் இருக்கிறது. எந்தவிதமான அவநம்பிக்கையும் இன்றி நீ செயல்படு! ஓ! மனிதர்களில் காளையே {கர்ணா}, தேவர்களுக்கு ரகசியமான இது குறித்து நீ அறிவது தகுந்தது அல்ல. எனவே, நான் அந்த ரகசியத்தை உனக்கு வெளிப்படுத்தவில்லை. எனினும், குறித்த நேரத்தில் நீ புரிந்து கொள்வாய். நான் ஏற்கனவே சொன்னதைத் திரும்பச் சொல்கிறேன். ஓ! ராதையின் மகனே {கர்ணா}, எனது வார்த்தைகளை உனது இதயத்தில் நிறுத்து! வஜ்ரத்தைத் தாங்குபவன் {இந்திரன்} அவற்றை {குண்டலங்களையும் கவசத்தையும்} உன்னிடம் கேட்கும்போது, நீ அவனுக்கு {இந்திரனுக்கு} உனது குண்டலங்களைக் கொடுத்துவிடாதே!

ஓ! பெரும்பிரகாசம் கொண்டவனே {கர்ணா}, நீ உனது குண்டலங்களுடன் இருக்கும்போது, தெளிந்த வானில் இருக்கும் விசாக நட்சத்திரத்து சந்திரன் போல அழகாக இருக்கிறாய்! {உயிருடன்} வாழும் ஒருவனுக்கே, புகழ் பலனளிக்கும் என்பதை அறிந்து கொள். எனவே, தேவர்களின் தலைவன் {இந்திரன்} காது குண்டலங்களைக் கேட்கும்போது, ஓ! மகனே {கர்ணா}, நீ அவனிடம் {அதற்கு} மறுக்க வேண்டும்! பலவிதமான காரணங்கள் பொதிந்த பதில்களை நீ திரும்பத் திரும்பச் சொல்வதால், ஓ! பாவமற்றவனே {கர்ணா}, காது குண்டலங்களை அடைய நினைக்கும் தேவர்கள் தலைவனின் {இந்திரனின்} ஆவல் அகலும்.

இனிமை மற்றும் மரியாதை ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட ஆழ்ந்த சிந்தனைக்குரிய காரணங்கள் நிறைந்த பதில்களை வலியுறுத்திச் சொல்லி புரந்தரனின் நோக்கத்தை நீ அகற்றுவாயாக. ஓ! மனிதர்களில் புலியே {கர்ணா}, தன் இடது கையாலும் வில்லை வளைக்கும் திறன் பெற்றவனுக்கு {அர்ஜுனனுக்கு} எப்போதும் நீ சவால் விடுவாய். மேலும் வீரனான அர்ஜுனனும் போரில் உன்னுடன் நிச்சயம் மோதுவான்.  {கர்ணா} நீ உனது காது குண்டலங்களுடன் இருக்கும்போது, இந்திரனே அர்ஜுனனின் துணைக்கு வந்தாலும், அவனால் {அர்ஜுனனால்} உன்னைப் போரில் வீழ்த்த முடியாது. எனவே, ஓ! கர்ணா, நீ போர்க்களத்தில் அர்ஜுனனை வீழ்த்த விரும்பினால், இந்த உனது அழகிய காது குண்டலங்கள் உன்னால் இந்திரனுக்குக் கொடுக்கப்படக்கூடாது" என்றான் {சூரியன்}.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்