Wednesday, October 08, 2014

சக்தி ஆயுதம்! - வனபர்வம் பகுதி 300

The weapon called Sakthi!  | Vana Parva - Section 300 | Mahabharata In Tamil

(பதிவிரதா மாஹாத்மியப் பர்வத் தொடர்ச்சி)

இந்திரனுக்குக் கவசத்தையும் குண்டலங்களையும் கொடுக்கக் கர்ணன் சூரியனிடம் அனுமதி கோரியது; இந்திரனிடம் சக்தி ஆயுதத்தைப் பெற்றுக் கொண்டு குண்டலங்களையும், வசத்தையும் கொடுக்கும்படி கர்ணனுக்குச் சூரியன் அனுமதி கொடுத்தது...

கர்ணன் {சூரியனிடம்} சொன்னான், "ஓ! பிரகாசத்தின் தலைவா, நான் உன்னை வழிபடுபவன் என்பதை அறிவாயாக! ஓ! கடுங்கதிர்களைக் கொண்டவனே {சூரியனே}, என்னால் தானமாகக் கொடுக்க முடியாதது எதுவுமில்லை என்பதை நீ அறிவாய்! ஓ! பிரகாசத்தின் தலைவா {சூரியனே}, நான் உன் மீது கொண்டிருக்கும் பக்தியைப் போன்று, என் மனைவியரோ, என் மகன்களோ, எனது சுயமோ, எனது நண்பர்களோ, எனக்கு அன்புக்குரியவர்கள் {விருப்பமானவர்கள்} அல்ல. ஓ! ஒளியை உண்டாக்குபவனே {சூரியனே}, பெரும் ஆன்மா கொண்டவர்கள் {மகாத்மாக்கள்}, தங்கள் அன்புக்குரிய வழிபாட்டாளர்களிடம் அன்பு கொண்டிருக்கிறார்கள் என்பதை நீ அறிவாய். "கர்ணன் எனது பக்தனும் அன்பிற்குரியவனும் ஆவான். அவன் சொர்க்கத்தில் வேறு தெய்வத்தை {தேவனை} அறியமாட்டான்." என்று நினைத்தே, ஓ! தலைவா {சூரியா}, நீ எனக்கு நன்மையானதை என்னிடம் சொன்னாய். எனினும், ஓ! பிரகாசமான கதிர்கள் கொண்டவனே {பாஸ்கரனே, சூரியனே}, சிரம் தாழ்த்தி மீண்டும் நான் உன்னை வேண்டுகிறேன், மீண்டும் நான் உன் கைகளில் என்னை ஒப்புக்கொடுக்கிறேன். நான் ஏற்கனவே சொன்ன பதிலையே மீண்டும் உரைப்பேன். நீ என்னை மன்னிப்பதே தகும்!


பொய்மையைப் போல் மரணம் கூட எனக்குப் பயங்கரம் நிறைந்ததாக இல்லை {பொய்மைக்கு அஞ்சுகிறேன், மரணத்திற்கஞ்சவில்லை}. அந்தணர்களைப் பொறுத்தவரை, நான் அவர்களுக்காக எனது உயிரையும் கொடுக்கத் தயங்கமாட்டேன்! ஓ! தெய்வீகமானவனே {சூரியனே}, பாண்டுவின் மகனான பல்குனனை {அர்ஜுனனைக்} குறித்து நீ சொன்னதை மதிக்கிறேன். போர்க்களத்தில் நான் நிச்சயம் அர்ஜுனனை வெல்வேன் என்பதால், ஓ! பிரகாசத்தின் தலைவா {சூரியனே}, நீ என்னையும் அவனையும் தொட்டு, உனது இதயத்தில் தோன்றியிருக்கும் கவலையை அகற்றுவாயாக! ஓ! தெய்வமே {சூரியனே}, ஜமதக்னேயரிடமும் {பரசுராமரிடமும்}, உயர் ஆன்ம {மகாத்மாவான} துரோணரிடமும் பெரும் பலம் பெற்ற ஆயுதங்களை நான் பெற்றிருப்பது குறித்து நீ அறிவாய். ஓ! தேவர்களில் முதன்மையானவனே {சூரியனே}, எனது நோன்பைத் தொடர எனக்கு அனுமதி அளிப்பாயாக! வஜ்ரம் தாங்கியவன் {இந்திரன்} என்னிடம் இரந்து கேட்டு வரும்போது, நான் எனது உயிரையும் அவனுக்குக் கொடுப்பேன்." என்று சொன்னான் {கர்ணன்}.

சூரியன் {கர்ணனிடம்}, "ஓ! மகனே {கர்ணா}, வஜ்ரத்தைத் தாங்கியிருப்பவனுக்கு உனது காது குண்டலங்களைக் கொடுத்தால், ஓ! வலிமைமிக்கவனே, நீ வெற்றியடையும் நோக்கத்திற்காக அவனிடம் {இந்திரனிடம்}, "ஓ! நூறு வேள்விகள் செய்தவனே {இந்திரனே}, நான் ஒரு நிபந்தனையின் பேரில் காது குண்டலங்களை அளிப்பேன்" என்று சொல். காது குண்டலங்களுடன் இருக்கும்போது, உன்னை எந்த உயிரினத்தாலும் கொல்ல முடியாது என்பது நிச்சயம். எனவே, ஓ! மகனே {கர்ணா}, போர்க்களத்தில் அர்ஜுனன் உன்னைக் கொல்வதைக் காண விரும்பியே, தானவர்களை அழிப்பவன் {இந்திரன்}, உன்னை உனது காது குண்டலங்களை இழக்கச் செய்ய விரும்புகிறான்.

வீழ்த்துவதற்கு இயலாத ஆயுதங்களைத் தாங்கியிருக்கும் தேவர்கள் தலைவனான புரந்தரனை {இந்திரனை} உண்மையான வார்த்தைகளால் மீண்டும் மீண்டும் புகழ்ந்து {இந்திரனிடம்}, "எதிரிகள் அனைவரையும் கொல்லும் திறன் கொண்டதும், இலக்கு தவறாததுமான ஒரு கணையை {சக்தி ஆயுதம்} நீ எனக்குக் கொடு. நானும், ஓ! ஆயிரங்கண் தெய்வமே {இந்திரா}, சிறந்த கவசத்துடன் சேர்த்து, காது குண்டலங்களையும் உனக்குக் கொடுக்கிறேன்" என்று வேண்டிக் கேள். இந்த நிபந்தனையின் பேரிலேயே சக்ரனுக்கு {இந்திரனுக்கு} நீ காது குண்டலங்களைக் கொடுக்க வேண்டும். ஓ! கர்ணா, அந்தக் கணையைக் கொண்டு, போர்க்களத்தில் நீ உனது எதிர்களைக் கொல்லலாம். ஓ! வலிய கரங்கள் கொண்டவனே {கர்ணா}, தேவர்கள் தலைவனின் {இந்திரனின்} கணை, எதிரிகளை நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் கொல்லாமல், எய்தவன் கரங்களுக்குத் திரும்பாது!" என்றான் {சூரியன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இதைச் சொன்ன அந்த ஆயிரங்கதிர் தெய்வம் {சூரியன்} திடீரென மறைந்து போனான். அடுத்த நாள், தனது துதிகளைச் சொன்ன பிறகு, கர்ணன் தனது கனவை சூரியனிடம் சொன்னான். விருஷன் {கர்ணன்} தான் கண்ட காட்சியில் கண்டவற்றையும், அவர்களுக்குள் {சூரியனுக்கும் கர்ணனுக்கும் இடையில்} அன்று இரவு நடந்தது அத்தனையும் சொன்னான். அதன் பிறகு, அனைத்தையும் கேட்ட சுவர்ணபானுவின் {ராகுவின்} எதிரியான தலைவனும் {சூரியனும்}, ஒளிபொருந்தியவனும், தெய்வீகமானவனுமான சூரியன், அவனிடம் {கர்ணனிடம்} புன்னகையுடன், "அப்படியே!" என்றான். பிறகு எதிரி வீரர்களைக் கொல்பவனான ராதையின் மகன் {கர்ணன்} இக்காரியம் குறித்து அனைத்தையும் அறிந்து, அந்தக் கணையை {சக்தி ஆயுதத்தை} அடைய விரும்பி, வாசவனை {இந்திரனை} எதிர்பார்த்துக் காத்திருந்தான்.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்