Wednesday, October 22, 2014

“அரசவை உறுப்பினராவேன்" என்றான் யுதிஷ்டிரன்! - விராட பர்வம் பகுதி 1

“I'll be a courtier” said Yudhishthira! | Virata Parva - Section 1 | Mahabharata In Tamil

(பாண்டவ பிரவேச பர்வம் - 1)

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண






பதிவின் சுருக்கம் : தம்பிகளுடன் ஆலோசித்த யுதிஷ்டிரன் விராட நாட்டிற்குப் போக உறுதி செய்தது; கங்கன் என்ற பெயரில் விராட மன்னனின் அரசவை உறுப்பினராகப் போகவதாக யுதிஷ்டிரன் சொன்னது....


ஓம்! நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் என்று குறிப்பிடப்படுவது - அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்.}

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “துரியோதனன் மீது பயம் கொண்ட எனது முப்பாட்டன்கள் {பாண்டவர்கள்}, கண்டறியப்படாமல் இருக்க வேண்டிய தங்களது காலத்தை எப்படி விராட நகரத்தில் கழித்தார்கள்? மேலும், ஓ! அந்தணரே {வைசம்பாயனரே}, துயரத்தால் பாதிக்கப்பட்டு, தனது தலைவர்களுக்குத் தன்னை அர்ப்பணித்து, எப்போதும் தெய்வத்தை வணங்கி [1] வந்த, மேலான அருள்பெற்ற திரௌபதி, கண்டறியப்படாமல் கழிக்க வேண்டிய தனது காலத்தை எப்படி கழித்தாள்?” என்று கேட்டான்.

[1] "Brahma Vadini--Nilakantha explains this as Krishna-kirtanasila. பிரம்ம வாதினி - நீலகண்டர் இதை கிருஷ்ண கீர்த்தனாசிலா என்று சொல்கிறார்" என்கிறார் கங்குலி.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மனிதர்களின் தலைவா {ஜனமேஜயா}, உனது முப்பாட்டன்கள், தங்கள் கண்டறியக்கூடாத காலத்தை விராடத்தில் எப்படிக் கழித்தார்கள் என்பதைக் கேள். நீதியின் தேவனிடம் {தர்மதேவனிடம்} இப்படி வரங்களைப் பெற்ற யுதிஷ்டிரன், ஆசிரமத்திற்குத் திரும்பி, என்ன நடந்தது என்ற அனைத்தையும் அந்தணர்களுக்கு உரைத்தான்.  அவர்களுக்கு அப்படி அனைத்தையும் உரைத்த யுதிஷ்டிரன், பிறகு, கடைக்கோலையும், அரணிகளையும் கேட்டு வந்த அந்தணரிடம் சென்றான். ஓ! பாரதா {ஜனமேஜயா}, நீதி தேவனின் {தர்மதேவனான யமனின்} அரசமகனான உயர் ஆன்மா கொண்ட யுதிஷ்டிரன், தனது தம்பிகள் அனைவரையும் அழைத்து, அவர்களிடம், “நாட்டை இழந்து, கானக வாசம் புரிந்து, பனிரெண்டு {12) வருடங்களைக் கழித்துவிட்டோம். கழிப்பதற்கு கடினமான பதிமூன்றாவது {13வது} வருடம் வந்துவிட்டது. எனவே, குந்தியின் மகனே, ஓ! அர்ஜுனா, நாம் எதிரிகளால் கண்டறியப்படாமல் நமது நாட்களைக் கழிக்க உகந்த இடத்தைத் தேர்ந்தெடு" என்று கேட்டான்.

அதற்கு அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்}, “தர்மர் {யமன்} அளித்த வரத்தின் அறத்தால், ஓ! மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரரே},  மனிதர்களால் கண்டறியப்படாமலேயே நாம் உலவலாம். இருப்பினும், நாம் வசிப்பதற்கேற்ற சில காண்பதற்கினிய ஒதுக்குப்புறமான இடங்களை நான் குறிப்பிடுகிறேன். அவற்றில் ஒன்றை நீர் தேர்ந்தெடுக்கலாம். குருக்களின் நாட்டைச் {குருஜாங்கலத்தைச்} சூழ்ந்து, பாஞ்சாலம், சேதி, மத்ஸ்யம், சூரசேனம், பட்டாச்சரம், தசார்ணம், நவராஷ்டிரம், மல்லம். சால்வம், யுகாந்தரம், சௌராஷ்டிரம், அவந்தி, பரந்திருக்கும் குந்திராஷ்டிரம் ஆகிய சோளம் நிறைந்த நாடுகள் இருக்கின்றன. {பாஞ்சாலம், மத்ஸ்யம், ஸால்வம், வைதேஹம், பாஹ்லீகம், தசார்ணம், சூரசேனம், கலிங்கம், மகதம் என்று வேறு பதிப்புகளில் இருக்கின்றன}. ஓ! மன்னா, ஓ! ஏகாதிபதிகளில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, இவற்றில் நீர் எதைத் தேர்ந்தெடுத்து, இந்த வருடத்தைக் கழிக்கப் போகிறீர்?” என்று கேட்டான்.

யுதிஷ்டிரன் {அர்ஜுனனிடம்}, “ஓ! வலிமைமிக்க கரங்கள் கொண்டவனே {அர்ஜுனா}, நீ சொன்னவாறே அவை இருக்கின்றன. அனைத்து உயிரினங்களும் வணங்கத்தக்கத் தலைவன் {தர்மதேவனான யமன்} சொன்னது உண்மையாக வேண்டும். ஒருவருக்கொருவர் கலந்தாலோசித்த பிறகு, காண்பதற்கினிய மங்களகரமான, எற்புடைய, அச்சமற்று நாம் வாழக்கூடிய ஒரு பகுதியை நமது வசிப்பிடமாக நாம் நிச்சயம் தேர்ந்தெடுக்க வேண்டும். மத்ஸ்யத்தின் {மத்ஸ்ய நாட்டின்} மன்னனான முதிர்ந்த விராடன் அறம்சார்ந்தவனாகவும், சக்தியுள்ளவனாகவும், தொண்டுள்ளம் கொண்டவனாகவும், அனைவராலும் விரும்பப்படுபவனாகவும் இருக்கிறான். மேலும், அவன் பாண்டவர்களிடம் அன்புள்ளவனாகவும் இருக்கிறான். ஓ! குழந்தாய், ஓ! பாரதா {அர்ஜுனா},  அவனைச் சேவித்து நாம் விராட நகரத்தில் இவ்வருடத்தைக் கழிக்கலாம். ஓ! குரு குலத்தின் மகன்களே {பாண்டவர்களே}, மத்ஸ்யர்களின் மன்னன் முன்பு நீங்கள் உங்களை எப்படிப்பட்ட திறமைகள் கொண்டவர்களாக முன்வைக்கப் போகிறீர்கள் என்பதை எனக்குச் சொல்லுங்கள்!” என்று கேட்டான்.

அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மனிதர்களில் தேவனே {யுதிஷ்டிரரே}, விராட நாட்டில் நீர் என்ன சேவை செய்வீர்? ஓ! நீதிமானே {யுதிஷ்டிரரே}, எந்தத் திறனைக் கொண்டு நீர் விராட நகரத்தில் வசிப்பீர்? நீர் மென்மையானவராகவும், தொண்டுள்ளம் கொண்டவராகவும், பணிவானவராகவும், அறம்சார்ந்தவராகவும், உண்மையில் நிலை கொண்டவராகவும்  இருக்கிறீர். இப்படித் துயரால் பாதிக்கப்பட்டிருக்கும் நீர், ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, என்ன செய்வீர்? ஒரு இயல்பான மனிதனைப் போல இடர்களைத் தாங்கும் தகுதி ஒரு மன்னனுக்கு உண்டா? உம்மைப் பீடித்திருக்கும் பேரிடரை நீர் எப்படி கடக்கப் போகிறீர்?” என்று கேட்டான்.

யுதிஷ்டிரன் {தன் தம்பிகளிடம்}, “குருகுலத்தின் மகன்களே, மனிதர்களில் காளைகளே {பாண்டவர்களே},  மன்னன் விராடன் முன்பு தோன்றும்போது நான் என்ன செய்வேன் என்பதைக் கேளுங்கள். பகடையில் நிபுணத்துவமும், விளையாட்டில் {சூதாடுவதில்} ஆர்வமும் கொண்ட கங்கன் என்ற பெயர் கொண்ட ஓர் அந்தணனாக என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, அந்த உயர் ஆன்ம {மகாத்மாவான} மன்னனின் அரசவை உறுப்பினராவேன் {I shall become a courtier}.  கருப்பு மற்றும் சிவப்பு நிறம் கொண்ட பாச்சிகைகளை உருட்டி, நீலம், மஞ்சள், சிவப்பு மற்றும் வெள்ளை நிறம் கொண்ட தந்தங்களால் செய்யப்பட்ட சிப்பாய்களை சதுரங்கப் பலகைகளில் {சாரிகைகளில்} நகர்த்தி, அரசவை உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் கூடிய மன்னனை மகிழ்விக்கப் போகிறேன். அப்படி மன்னனை நான் மகிழ்வித்துக் கொண்டிருக்கும்போது யாரும் என்னைக் கண்டுபிடிப்பதில் வெல்ல மாட்டார்கள். அந்த ஏகாதிபதி {விராடன்} என்னிடம் கேட்டால், “முன்பு, நான் யுதிஷ்டிரருக்கு இதயத் தோழனாக இருந்தேன்" என்று சொல்வேன். இப்படியே நான் எனது நாட்களை (விராட நகரத்தில்) கடத்துவேன் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.  ஓ! விருகோதரா {பீமா}, விராட நகரத்தில் நீ என்ன அலுவலை நிறைவேற்றுவாய்?” என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.

இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்