Friday, October 24, 2014

“அலியாவேன்" என்றான் அர்ஜுனன்! - விராட பர்வம் பகுதி 2

“I'll be a neuter sex” said Arjuna! | Virata Parva - Section 2 | Mahabharata In Tamil

(பாண்டவ பிரவேச பர்வத் தொடர்ச்சி - 2)

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண






பதிவின் சுருக்கம் : பீமன் சமையற்காரனாக இருக்கப் போவதாகச் சொன்னது; அர்ஜுனன் என்ன அலுவலை மேற்கொள்ளப் போகிறான் என்று யுதிஷ்டிரன் வினவுவது; அலியாக வேடந்தரித்து விராடன் அரண்மனையில் வாழப்போவதாக அர்ஜுனன் சொல்வது....

பீமன், “நான் வல்லபன் [Vallabha; ballavo]  {வல்லன் [அ] வல்லபன்}என்ற பெயரைத் தாங்கி, விராடத்தின் தலைவன் முன்பு என்னை ஒரு சமையற்காரனாக முன்வைக்க நோக்கம் கொண்டுள்ளேன். சமையற்கலையில் திறனுள்ள நான், மன்னனுக்காகக் கறிவகைகள் {குழம்பு வகைகள் Curries [அ] பருப்பு வகைகளும், ரச வகைகளும், பண்ட வகைகளையும்} தயாரித்து, இதுவரை அவனுக்கு உணவைத் தயாரித்த அனைத்து சமையல் நிபுணர்களையும் விஞ்சி, அந்த ஏகாதிபதியை மனநிறைவு கொள்ளச் செய்வேன். நான் பெரும் பாரமிக்கச் சுமைகளைக் கொண்ட மரங்களைச் {விறகுகளைச்} சுமப்பேன். அந்த வலிமைமிக்கச் சாதனையைச் சாட்சியாகக் காணும் ஏகாதிபதி {நிச்சயம்} மகிழ்வான். 


ஓ! பாரதா {யுதிஷ்டிரரே}, மனிதசக்திக்கு அப்பாற்பட்ட என்னுடைய சாதனைகளைக் கண்டு, அந்த அரச குடும்பத்தின் பணியாட்கள் அனைவரும் என்னை மன்னனாகவே மதிப்பார்கள். அனைத்து வகையான பலகாரங்கள் மற்றும் பானங்களின் முழுக் கட்டுப்பாட்டையும் நான் அடைவேன். சக்திவாய்ந்த யானைகள் மற்றும் வலிமைமிக்கக் காளைகளை அடக்கும் கட்டளையோடு நான் ஏவப்பட்டால், அதைச் செய்வேன். பட்டியல்களில் உள்ள எந்தப் போராளிகளாவது {மல்லர்களாவது} என்னுடன் போரிட்டால் {மல்யுத்தத்தில் மோதினால்}, நான் அவர்களை வெற்றிக் கொண்டு, அதன் மூலம் மன்னனை {விராடனை} மகிழ்விப்பேன். ஆனால் நான் அவர்களில் யார் உயிரையும் எடுக்க மாட்டேன். அவர்களைக் கொல்வதில்லை என்ற வகையில் மட்டுமே நான் அவர்களை வீழ்த்துவேன். என் முந்தைய வாழ்வு குறித்துக் கேட்கப்பட்டால், "நான் முன்பு யுதிஷ்டிரரிடம் மல்யுத்த வீரனாகவும், சமையற்காரனாகவும் இருந்தேன்" என்று சொல்வேன். இப்படியே, ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, நான் என்னைப் பராமரித்துக் கொள்வேன்" என்றான் {பீமன்}.

யுதிஷ்டிரன், “காண்டவ வனத்தை எரிக்க விரும்பிய தெய்வீகமான அக்னி, அந்தண வேடத்தில், கிருஷ்ணனோடு இருந்த யார் முன்னிலையில் வந்தானோ, அந்த நீண்ட கரங்கள் கொண்ட மனிதர்களில் முதன்மையானவனும், போரில் ஒப்பற்றவனும், குருக்களின் பலமிக்க வழித்தோன்றலும் குந்தியின் மகனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்} என்ன அலுவலைச் செய்வான்? தனித் தேரில் சென்று பெரும் நாகர்களையும், ராட்சசர்களையும் கொன்று, அவர்களை {அந்த ராட்சசர்களை} வென்று, அக்னியை மனம் நிறையச் செய்வதற்காகக் கானகம் புகுந்தவனும், நாகர்கள் மன்னனான வாசுகியின் தங்கையைத் {உலூபியைத்}* திருமணம் செய்தவனும், வீரர்களில் சிறந்தவனுமான அர்ஜுனன் என்ன அலுவலைச் செய்யப் போகிறான்? 

வெப்பத்தைக் கொடுக்கும் கோள்களில் முதன்மையான சூரியனைப் போல, இரண்டு கால் உயிரினங்களில் {bipeds} {மனிதர்களில்} சிறந்த பிராமணனைப் போல, பாம்புகளில் சிறந்த நாகப்பாம்பைப் போல, சக்திமிக்கவைகளில் முதன்மையான நெருப்பைப் போல, ஆயுதங்கள் அனைத்திலும் முதன்மையான வஜ்ரத்தைப் போல, மாட்டினங்கள் அனைத்திலும் முதன்மையான திமில்கொண்ட காளையைப் போல, நீர் நிலைகளில் முதன்மையான கடலைப் போல, மேகங்கள் அனைத்திலும் முதன்மையான மழை சுமக்கும் மேகங்களைப் போல, நாகர்கள் அனைவரில் முதன்மையான ஆனந்தனைப் போல, யானைகள் அனைத்திலும் முதன்மையான ஐராவதனைப் போல, அன்பிற்கினிய பொருட்கள் அனைத்திலும் முதன்மையான மகனைப் போல, கடைசியாக, நண்பர்கள் அனைவரிலும் சிறந்த மனைவியைப் போல, ஓ! விருகோதரா {பீமா}, வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையானவனே இளைஞனான குடகேசன் {அர்ஜுனன்} ஆவான்.

ஓ! பாரதா {பீமா}, வெண்குதிரைகளால் இழுக்கப்படும் ரதம் கொண்டவனும், இந்திரனுக்கும் வாசுதேவனுக்கும் {கிருஷ்ணனுக்கும்} குறையாதவனும் {நிகரானவனும்}, காண்டீவத்தைத் தாங்குபவனுமான பீபத்சு {பீபத்சு} {அர்ஜுனன்} என்ன அலுவலைச் செய்வான்? தெய்வீக காந்தி கொண்டு ஒளிரும் ஆயிரம் கண் தெய்வத்தின் {இந்திரனின்} வசிப்பிடத்தில் ஐந்து வருடங்கள் தங்கி, தன் சக்தியால் மனித சக்திக்கு அப்பாற்பட்ட தெய்வீக ஆயுதங்களைப் பெற்றவனும், பத்தாவது ருத்திரனாகவும், பதிமூன்றாவது ஆதித்தியனாகவும், ஒன்பதாவது வசுவாகவும், பத்தாவது கிரகமாகவும் என்னால் கருதப்படுபவனும், நாண் நரம்பைச் சுண்டுவதால் கடினமானதும் சமச்சீரானதுமான நீண்ட கரங்கள் கொண்டவனும், காளைகளின் மேடுகளை ஒத்திருக்கும் வடுக்கள் கொண்டவனும், மலைகளில் இமயம் போன்றவனும், நீர்நிலைகளில் கடலைப் போன்றவனும், தேவர்களில் சக்ரன் {இந்திரன்} போன்றவனும், வசுக்களில் ஹவ்யவாகனைப் (நெருப்பு {அ} அக்னி) போன்றவனும், விலங்குகளில் புலியைப் போன்றவனும், பறவைகளில் கருடனைப் போன்றவனுமான வீரர்களில் முதன்மையான அர்ஜுனன் என்ன அலுவலைச் செய்வான்?” என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.

அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பூமியின் தலைவா {யுதிஷ்டிரரே}, அஃறிணைப் பாலினத்தில் {neuter = அஃறிணை [அ] செயலிழந்த sex = பாலினம்; அலிகளில்; நபும்சகர்களில்} ஒருவனாக என்னை நான் அறிவிப்பேன். ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, உண்மையில் எனது கரங்களில் உள்ள நாண்கயிற்றால் உண்டான தழும்புகளை மறைப்பது கடினமே. எனினும், நான் தழும்பேறிய எனது இரு கரங்களையும் வளையல்கள் கொண்டு மறைத்துக் கொள்வேன். பிரகாசமிக்க வளையங்களை எனது காதுகளில் அணிந்தும், சங்கு வளையல்களை எனது மணிகட்டுகளில் அணிந்தும், எனது தலையில் இருந்து பின்னலைத் தொங்கச் செய்தும், ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, பிருஹந்நளை [Brihannala; bṛhannaḍā] {ப்ருஹன்னளை [அ] ப்ருஹந்நளை} என்ற பெயர் கொண்டு, மூன்றாவது பாலினத்தைச் சேர்ந்த ஒருவன் போல நான் என்னைத் தோன்றச் செய்வேன். அப்படி ஒரு பெண்ணாக வாழும் நான், கதைகளை உரைத்து, மன்னனையும், அந்தப்புரத்தில் உடன் வாழ்பவர்களையும் (எப்போதும்) மகிழச் செய்வேன். 

ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, விராடனின் அரண்மனையில் இருக்கும் பெண்டிருக்கு பாடலும், காண்பதற்கினிய முறைகளிலான ஆடலும், பல்வேறு வகையான இசைக்கருவிகளும் பயிற்றுவிப்பேன். மனிதர்களின் பல்வேறு சிறந்த செயல்களை உரைத்து, ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரரே}, மாறுவேடத்தில் பாசாங்கு செய்து, என்னை நான் மறைத்து கொள்வேன். ஓ! பாரதா {யுதிஷ்டிரரே}, மன்னன் விசாரித்தால், “யுதிஷ்டிரரின் மாளிகையில் திரௌபதியின் பணிப்பெண்ணாக {பரிசாரிகையாக} நான் வாழ்ந்தேன்" என்று சொல்வேன். ஓ! மன்னர்களில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, இவ்வழிகளில், சாம்பலால் நெருப்பு மறைக்கப்படுவதைப் போல, {அவ்வேடத்தால்} என்னை மறைத்துக் கொண்டு, விராடனின் அரண்மனையில் ஏற்புடைய வகையில், எனது நாட்களை நான் கடத்துவேன்" என்றான் {அர்ஜுனன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இதைச் சொன்ன மனிதர்களில் சிறந்தவனும், அறம்சார்ந்த மனிதர்களில் முதன்மையானவனுமான அர்ஜுனன் அமைதியானான். பிறகு மன்னன் {யுதிஷ்டிரன்} தனது மற்றொரு தம்பியிடம் பேசினான். [2]

[2] "வைசம்பாயனரின் இந்தப் பேச்சு சில உரைகளில் இரண்டாவது பகுதியில் சேர்க்கப்படவில்லை. எனினும், இதை மூன்றாவது பகுதியில் சேர்ப்பது தவறானது என்பது தெளிவு" என்கிறார் கங்குலி
****************************************************************************


*நாகர்கள் மன்னனான வாசுகியின் தங்கையைத் {உலூபியைத்}* திருமணம் செய்தவனும்,
மேலும் விபரங்களுக்கு கீழே சொடுக்கவும்:
உலூபியின் காமமும் அர்ஜுனன் பெற்ற வரமும் - ஆதிபர்வம் பகுதி 216 - See more at: http://mahabharatham.arasan.info/2013/08/Mahabharatha-Adiparva-Section216.html#

இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!





மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்