Wednesday, November 19, 2014

கீசகனைக் கொன்ற பீமன்! - விராட பர்வம் பகுதி 22ஆ

Bhima killed Kichaka! | Virata Parva - Section 22b | Mahabharata In Tamil

(கீசகவத பர்வத் தொடர்ச்சி - 9)

இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண




பதிவின் சுருக்கம்: கீசகனுக்கும் பீமனுக்கு இடையில் நடந்த கைச்சண்டை; பீமன் கீசகனைக் கொன்றது; திரௌபதிக்குச் சமாதானம் கூறி தனது வசிப்பிடம் திரும்பியது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “வேடம் மாற்றிக் கொண்ட பீமன், இரவில் குறித்த இடத்திற்கு முன்கூட்டியே சென்று அமர்ந்து கொண்டான். தான் தேர்ந்தெடுத்த வகைபோல் தன்னை அலங்கரித்துக் கொண்ட கீசகன், பாஞ்சாலியைச் {திரௌபதியைச்} சந்திக்கும் நம்பிக்கையோடு, குறித்த நேரத்தில் ஆடற்கூடத்திற்கு வந்தான். குறித்த செய்திகளை நினைத்துக் கொண்டே அவன் {கீசகன்} அந்த மண்டபத்துக்குள் நுழைந்தான். ஆழ்ந்த இருளில் மூழ்கி இருந்த அந்தக் கூடத்திற்குள் நுழைந்த தீய ஆன்மா கொண்ட அந்த இழிந்தவன் {கீசகன்}, சற்று முன் அங்கு வந்து ஒரு மூலையில் காத்திருந்த ஒப்பிலா பராக்கிரமம் கொண்ட பீமனின் அருகில் வந்தான்.


கிருஷ்ணைக்கு {திரௌபதிக்கு} இழைக்கப்பட்ட அவமானத்தால் கோபத்தில் எரிந்து கொண்டு, தானே அந்தச் சூதனின் {கீசகனின்} மரணவுரு என்று நினைத்துக் கொண்டு படுக்கையில் படுத்திருந்த பீமனை, சுடர்விட்டெரியும் நெருப்பைப் பூச்சி அணுகுவது போலவோ, சிங்கத்தை அணுகும் மெலிந்த விலங்கைப் போலவோ கீசகன் அணுகினான். காமத்தால் பீடிக்கப்பட்டு, ஆன்மாவும், இதயமும் குதூகலித்து, {திரௌபதி என்று நினைத்துக் கொண்டு} பீமனை அணுகிய கீசகன் புன்னகையுடன், “ஓ! மெலிய கண் புருவங்கள் கொண்டவளே {மாலினி}, நான் ஈட்டியிருந்த பலதரப்பட்ட எண்ணிலடங்கா செல்வங்களை எனது காப்பகத்தில் இருந்து, ஏற்கனவே உனக்குக் கொடுத்துவிட்டேன். நூறு பணிப்பெண்களையும், பல அழகிய ஆடைகளையும் {உனக்காகக்} கொடுத்துவிட்டேன். இவை யாவையும் தவிர, இளமை நிரம்பிய அழகிய பணிப்பெண்களால் அலங்கரிக்கப்பட்டதும், அனைத்து வகை விளையாட்டுகளும் கேளிக்கைகளும் கொண்ட அந்தப்புரத்துடன் கூடிய மாளிகை ஒன்றையும் உனக்காகக் கொடுத்த பிறகே, நான் இங்கே விரைந்து வந்தேன். தீடீரெனப் பெண்கள் அனைவரும், “அழகிலோ ஆடையிலோ உமக்கு நிகரானவர் வேறு யாரும் இந்த உலகத்தில் இல்லை” என்று என்னைப் புகழ ஆரம்பித்தனர்” என்றான் {கீசகன்}.

இதைக் கேட்ட பீமன் {கீசகனிடம்}, “நீ அழகாய் இருப்பது நன்று; உன்னை நீயே புகழ்ந்து கொள்வதும் நன்று! எனினும், இத்தகு மகிழ்ச்சிகரமான தொடுதலை நீ ஒரு போதும் பெற்றிருக்க மாட்டாய் என்று நான் நினைக்கிறேன். நீ தீவிரத் தொடுதலை அடையப் போகிறாய். மேலும் வீரதீரச் செயல்களுக்கான வழிகளை நீ அறிந்திருக்கிறாய். காதற்கலையில் நீ கைதேர்ந்தவனாக இருக்கிறாய். நீ பெண்களுக்குப் பிடித்தமானவனாகவும் இருக்கிறாய். உன்னைப் போன்றவன் இந்த உலகத்தில் வேறு யாரும் கிடையாது” என்றான் {பீமன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இதைச் சொன்ன பயங்கரப் பராக்கிரமம் கொண்ட அந்தக் குந்தியின் மகன் பீமன், திடீரென எழுந்து பெருஞ்சிரிப்புச் சிரித்துக் கொண்டே, “ஓ இழிந்தவனே {கீசகா}, பெரும் மலையைப் போன்ற ஒரு பலமிக்க யானை சிங்கத்தால் தரையில் இழுத்துச்செல்லப்படுவதைப் போல, இன்று உன்னை நான் தரையில் இழுத்துச் செல்வதை உனது சகோதரி {சுதேஷ்ணை} காண்பாள். நீ கொல்லப்பட்டால் சைரந்திரி {திரௌபதி} அமைதியாக வாழ்வாள். அவளது கணவர்களான நாங்களும் அமைதியுடன் வாழ்வோம்” என்று சொன்ன பெரும் பலமிக்கப் பீமன், {மலர்} மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த கீசகனின் தலைமுடியைப் பற்றினான். இப்படித் தலைமுடியைப் பிடித்துப் பலமாக இழுக்கப்பட்ட பெரும் பலம் கொண்ட மனிதர்களில் முதன்மையான கீசகன், தனது முடியை விரைவாக விடுவித்துக் கொண்டு, பீமனின் கரங்களைப் பற்றினான்.

பிறகு கோபத்தால் எரிந்த மனிதர்களில் சிங்கங்களான அந்த இருவருக்குள்ளும், வசந்த காலத்தில் பெண்யானைக்காகச் சண்டையிடும் இரு பலமிக்க யானைகள் போலவோ, குரங்குகளில் சிங்கங்களும் சகோதரர்களுமான வாலிக்கும் சூக்ரீவனுக்கும் இடையில் பழங்காலத்தில் நடந்த மோதலைப் போலவோ, கீசக குலத்தின் தலைவனுக்கும் {கீசகனுக்கும்}, மனிதர்களில் சிறந்தவனுக்கும் {பீமனுக்கும்} இடையில் கைச்சண்டை நடந்தது. சமமாக வெறியூட்டப்பட்டு, வெற்றியில் ஆவலுடைய அந்தப் போட்டியாளர்கள் இருவரும் ஐந்து தலை பாம்புகளைப் போன்ற தங்கள் கரங்களை உயர்த்தி, தங்கள் நகங்களாலும், பற்களாலும் வேகம் கொண்ட கோபத்தோடு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். பலமிக்கக் கீசகனால், அந்த மோதலில் அவசரமாகத் தாக்கப்பட்டாலும் உறுதிமிக்கப் பீமன் ஓர் அடியேனும் தடுமாறாமல் இருந்தான்.

ஒருவர் அணைப்பில் ஒருவர் கட்டுண்டு, ஒருவரையொருவர் இழுத்துக் கொண்டு, பலமிக்கக் காளைகளைப் போல அவர்கள் இருவரும் சண்டையிட்டனர். நகங்களையும், பற்களையும் ஆயுதமாகக் கொண்ட அவர்கள் இருவருக்கிடையில் நடந்த அந்தக் கடும் போர், சீற்றமிகு இரு புலிகளுக்கிடையில் நடந்த மோதலைக் கண்டது போலப் பயங்கரமாக இருந்தது. கோபத்தால் ஒருவரை ஒருவரே கீழே தள்ளிய இருவரும், மதங்கொண்ட இரு யானைகள் போல மோதிக் கொண்டனர். பிறகு பலமிக்கப் பீமன் கீசகனைப் பிடித்தான். அப்போது பலமிக்க மனிதர்களில் முதன்மையான கீசகன், பீமனை வன்முறையுடன் கீழே தள்ளினான். அந்த இரு போட்டியாளர்களும் தங்கள் கரங்களின் மோதலால் மூங்கிலைப் பிளக்கும் பெரும் ஒலியை ஏழுப்பினர்.

பிறகு விருகோதரன் {பீமன்} பெரும் பலத்துடன் கீசகனை அறைக்குள் கீழே தள்ளி, புயற்காற்று மரத்தைத் தூக்கி வீசுவது போல, அவனை {கீசகனை} மூர்க்கமாகத் தூக்கி எறிய ஆரம்பித்தான். இப்படி அந்தப் போரில் பலமிக்கப் பீமனால் தாக்கப்பட்ட கீசகன் பலமிழந்து போய் நடுங்கத் தொடங்கினான். எனினும், அவன் {கீசகன்}, தனது சக்தியில் சிறந்ததைக் கொண்டு அந்தப் பாண்டவனிடம் {பீமனிடம்} {சிக்காமல்} இழுபறி செய்தான். பிறகு, பீமனைத் தாக்கி, அவனை லேசாக அசையச் செய்த பலமிக்கக் கீசகன், தனது முட்டிகளால் தாக்கி அவனைத் {பீமனைத்} தரையில் சாய்த்தான். பலமிக்கக் கீசகனால் {தரையில்} சாய்க்கப்பட்ட பீமன், கையில் கதாயுதம் கொண்ட யமனைப் போல விரைவாக எழுந்தான்.

இப்படியே அந்தப் பலமிக்கச் சூதனும் {கீசகனும்}, அந்தப் பாண்டவனும் {பீமனும்}, தங்கள் பலத்தால் போதையுண்டு, ஒருவரை ஒருவர் சவாலுக்கழைத்து, நள்ளிரவில், அந்தத் தனிமையான இடத்தில் ஒருவரை ஒருவர் பற்றிக் கொண்டு சண்டையிட்டனர். அப்படி அவர்கள் ஒருவர் மீது ஒருவர் கோபத்தால் கர்ஜித்த போது, வலுவான அந்தச் சிறந்த மாளிகை ஒவ்வொரு நொடியும் குலுங்கத்தொடங்கியது. பலமிக்கப் பீமனால் மார்பில் அறையப்பட்ட கீசகன் கோபத்தால் நிறைந்தாலும் ஓர் அடியும் நகர இயலவில்லை. பூமியால் தாங்கிக் கொள்ள முடியாது அந்தத் தாக்குதலை ஒரு நொடி தாங்கிய அந்தச் சூதன் {கீசகன்}, பீமனின் பலத்துக்கு அடங்கிக் கட்டுப்பட்டான்.

அவன் {கீசகன்} பலவீனமடைவதைக் கண்ட பெரும் பலம் கொண்ட பீமன் அவனைப் பலவந்தமாகத் தனது மார்பை நோக்கி இழுத்து, கடுமையாக அழுத்தத் தொடங்கினான். கோபத்தால் கடும் மூச்சு விட்டபடியே அந்த வெற்றியாளர்களில் சிறந்தவனான விருகோதரன் {பீமன்}, கீசகனின் தலைமயிரைப் பலவந்தமாகப் பற்றினான். அப்படிக் கீசகனைப் பிடித்த பீமன், பெரும் விலங்கைக் கொன்ற பசிகொண்ட புலியைப் போலக் கர்ஜித்தான். மிகவும் களைப்படைந்த அவனைக் {கீசகனைக்} கண்ட விருகோதரன், ஒரு விலங்கைக் கயிறால் கட்டுவதைப் போலத் தனது கரங்களால் கடுமையாகக் கட்டி அணைத்தான். பிறகு, உடைந்த எக்காளத்தைப் [1] போலப் பயத்தால் கதறிய கீசகன் உணர்வற்றதும், பீமன் அவனை நீண்ட நேரம் சுழற்றினான்.

[1] //“வேறி” {veri} என்ற பதம், பேரிகை என்றும், எக்காளம் என்றும் பொருள் கொள்ளும். எனினும் எக்காளம் என்பதே இங்குச் சிறந்த பொருளைத் தருகிறது// என்கிறார் கங்குலி

கிருஷ்ணையின் {திரௌபதியின்} கோபத்தைத் தணிக்கும்பொருட்டு, விருகோதரன் {பீமன்}, கீசகனின் தொண்டையைத் தனது கைகளால் பிடித்து நசுக்கத் தொடங்கினான். பிறகு தனது முட்டிகளைக் கொண்டு கீசகர்களில் இழிந்த அவனை {கீசகனை} இடுப்பில் தாக்கினான். அவனது {கீசகனின்} உடலில் இருந்த அங்கங்கள் எல்லாம் துண்டுகளாக நொறுங்கின. அவனது {கீசகனின்} கண் இமைகள் மூடிக் கொண்டன. ஒருவன் விலங்கைக் கொல்வதைப் போல விருகோதரன் {பீமன்} அவனைக் {கீசகனைக்} கொன்றான். முழுவதும் அசைவற்றிருந்த கீசகனைக் கண்ட பாண்டுவின் மகன் {பீமன்} அவனைத் தரையில் உருட்டத் தொடங்கினான்.

“சைரந்திரியின் {திரௌபதியின்} அருகில் இருந்த இந்த முள்ளை {கீசகனை}, எங்கள் மனைவியைக் களங்கப்படுத்த எண்ணிய இந்தப் பாவியைக் கொன்றதால், நான் எனது சகோதரர்களுக்குப் பட்ட கடனில் இருந்து விடுபட்டு முழு அமைதியை அடைந்தேன்” என்றான். இதைச் சொன்ன அந்த மனிதர்களில் முதன்மையானவன் {பீமன்} கோபத்தில் கண்கள் சிவக்க, மேனியில் இருந்து ஆடைகளும் ஆபரணங்களும் வீசி எறியப்பட்டு, கண்கள் உருள, இன்னும் உடல் நடுங்கிக் கொண்டிருந்த கீசகன் மீதிருந்த தனது பிடியை விட்டான்.

பிறகு பலமிக்க மனிதர்களில் முதன்மையானவன் {பீமன்}, தனது கரங்களைப் பிசைந்து கொண்டும், கோபத்தால் தனது உதடுகளைக் கடித்துக் கொண்டும், எதிரியை {கீசகனை} மீண்டும் மீண்டும் தாக்கி, பினகையைத் தாங்கியிருப்பவன் {சிவன்}, வேள்விக்காக மானை உருவமற்ற ஒன்றாக்க, அது தனது கோபத்தில் இருந்து தப்புவதற்காக எப்படிக் குறைத்தானோ, அதே போலக் கீசகனின் கரங்கள், கால்கள், கழுத்து தலை ஆகியவற்றை அவனது {கீசகனின்} உடலுக்குள்ளேயே அழுத்தித் திணித்தான் {பீமன்}. அனைத்து உறுப்புகளையும் அப்படித் திணித்து, அவனை {கீசகனை} வெறும் சதைப் பிண்டமாக்கிய வலிமைமிக்கப் பீமன், அதைக் கிருஷ்ணையிடம் {திரௌபதியிடம்} காட்டினான்.

பிறகு பெரும் சக்தி கொண்ட அந்த வீரன் {பீமன்}, அனைத்துப் பெண்களிலும் முதன்மையான திரௌபதியிடம், “பாஞ்சால இளவரசியே {திரௌபதியே} வா, வந்து இந்தக் காமாந்தகனான இழிந்தவன் எப்படி ஆனான் என்பதைப் பார்!” என்றான். இப்படிச் சொன்ன பயங்கரப் பராக்கிரமம் கொண்ட பீமன் தனது காலால் அந்த இழிந்த பாதகனின் {கீசகனின்} உடலை அழுத்தினான். பிறகு ஒரு பந்தத்தை ஏற்றி திரௌபதியிடம் கீசகனின் உடலைக் காட்டிய அந்த வீரன் {பீமன்} அவளிடம் {திரௌபதியிடம்}, “ஓ! அழகான சுருள் முடி கொண்டவளே {திரௌபதி}. சிறந்த நிலையில் அனைத்து அறங்களுடன் இருக்கும் உன்னிடம் கோரிக்கை வைக்கும் அனைவரும் கீசகன் கொல்லப்பட்டது போலவே, ஓ! அச்சமுள்ளவளே, என்னால் கொல்லப்படுவார்கள்” என்றான் {பீமன்}.

கிருஷ்ணைக்கு {திரௌபதிக்கு} ஏற்புடைய அந்தக் கடினமான பணியைச் சாதித்தவன் {பீமன்}, கீசகன் கொல்லப்பட்டதும் தனது கோபத்தைத் தணித்துக் கொண்டு, துருபதன் மகளான கிருஷ்ணையிடம் {திரௌபதியிடம்} விடைபெற்றுக் கொண்டு விரைந்து மடைப்பள்ளிக்குத் திரும்பினான். பெண்களில் சிறந்த திரௌபதியும், கீசகனைக் கொல்லச்செய்த பிறகு துக்கம் அகன்று பெரும் மகிழ்ச்சியை அடைந்தாள்.

பிறகு அந்த ஆடற்கூடத்தின் காவலாளிகளிடம் சென்று {திரௌபதி}, “வாருங்கள், பிற மனிதர்களின் மனைவியைக் களங்கப்படுத்தியக் கீசகன், எனது கந்தர்வக் கணவர்களால் கொல்லப்பட்டுக் கீழே கிடப்பதைப் பாருங்கள்” என்றாள். இந்த வார்த்தைகளைக் கேட்ட காவலாளிகள் கையில் தீப்பந்தங்களுடன், ஆயிரக்கணக்கில், அந்த ஆடற்கூடத்திற்கு வந்தனர். பிறகு அந்த அறையை அடைந்து, ரத்தத்தில் நனைந்து தரையில் வீசப்பட்டுக் கிடக்கும் உயிரற்ற கீசகனைக் கண்டனர்.

கரங்களற்றும், கால்களற்றும் இருக்கும் அவனைக் {கீசகனைக்} கண்டு அவர்கள் அனைவரும் துயரம் கொண்டனர். அப்படி அவர்கள் கீசகனைக் கண்டபோது அவர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர். கீசகனை வீழ்த்திய மனித சக்திக்கு அப்பாற்பட்ட செயலைக் கண்ட அவர்கள், “இவனது கழுத்து எங்கே? இவனது கால்களெங்கே?” என்று கேட்டனர. இந்த நிலையில் கிடந்த அவனைக் {கீசகனைக்} கண்ட அவர்கள், அவன் {கீசகன்} கந்தர்வனால் கொல்லப்பட்டான் என்றே தீர்மானித்தனர்.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்