Thursday, November 20, 2014

கீசகர்களைக் கொன்ற பீமன்! - விராட பர்வம் பகுதி 23

Bhima killed the Kichakas! | Virata Parva - Section 23 | Mahabharata In Tamil

(கீசகவத பர்வத் தொடர்ச்சி - 10)

இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண




பதிவின் சுருக்கம்: கீசகனின் உறவினர்கள் வந்து கீசகனின் உடலைக் கண்டு அழுவது; திரௌபதியின் மீது கோபம் கொண்டு, கீசகனோடு சேர்த்து அவளையும் தகனம் செய்வது என்று முடிவு செய்வது; விராடனிடம் அனுமதி பெற்று திரௌபதியைக் கட்டி சுடுகாட்டுக்குத் தூக்கிச் செல்வது; திரௌபதி தனது கணவர்களைச் சங்கேத மொழியில் அழைப்பது; பீமன் வந்து திரௌபதியைக் காப்பது; பீமனால் கீசகர்கள் கொல்லப்படுவது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு கீசகனின் உறவினர்கள் அனைவரும் அந்த இடத்திற்கு வந்து, அவனைக் {கீசகனைக்} கண்டு, எல்லாப்புறங்களிலும் அவனைச் சூழ்ந்து கொண்டு உரத்த ஒலி கொண்டு அழுதனர். காய்ந்த நீர் நிலையில் இருந்து இழுத்துவரப்பட்ட ஆமையைப் போன்று, அனைத்து அங்கங்களும் சிதைக்கப்பட்ட கீசகனைக் கண்ட அவர்கள் அனைவரும் மிகுந்த அச்சமடைந்தனர். அவர்களது உடல் முடிகள் நுனி வரை எழும்பி நின்றன. இந்திரனால் நசுக்கப்பட்ட தானவனைப் போல, பீமனால் நசுக்கப்பட்ட அவனைக் {கீசகனைக்} கண்டனர். இறுதிச் சடங்குகளுக்காக அவனை {கீசகனை} வெளியே கொண்டு வர முனைந்தனர்.


இப்படி ஒன்றாகக் கூடிய சூத குலத்தைச் சேர்ந்த அந்த மனிதர்கள், தூணின் மீது சாய்ந்து கொண்டிருந்த களங்கமற்ற அங்கங்கள் கொண்ட கிருஷ்ணையைத் {திரௌபதியை} தங்கள் கடுங்கண்ணால் கண்டார்கள். அங்குக் கூடியிருந்த கீசகர்கள் அனைவரும், “எவளுக்காகக் கீசகன் தனது உயிரை இழந்தானோ, அந்தக் கற்பற்ற இவள் {மாலினி} கொல்லப்படட்டும். அல்லது இவளை இங்கே கொல்லாமல், இவள் மீது காமுற்ற அவனுடன் {கீசகனுடன்} சேர்த்து இவளையும் தகனம் செய்வோம். இறந்து போன அந்தச் சூதனின் மகனுக்கு {கீசகனுக்கு}, அனைத்து வகையிலும் ஏற்புடைய இக்காரியத்தை நாம் செய்வதே நமக்குத் தகும்” என்றனர்.

பிறகு அவர்கள் விராடனிடம் {சென்று}, “இவள் {சைரந்திரியான மாலினி} பொருட்டே கீசகன் உயிரை இழந்தான். எனவே, இவளோடு {இந்த மாலினியோடு} சேர்த்து அவன் {கீசகன்} தகனம் செய்யப்படட்டும். இதற்கு அனுமதி அளிப்பதே உமக்குத் தகும்” என்றனர். இப்படிச் சொல்லப்பட்ட மன்னன் விராடன், ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அந்தச் சூதர்களின் பராக்கிரமத்தை நன்கு அறிந்ததால், சூத மகனுடன் {கீசகனுடன்} சேர்த்து சைரந்திரியை எரிப்பதற்கு அனுமதி கொடுத்தான். அதன்பிறகு, உணர்வை இழந்து பயத்துடனும் தாமரை போன்ற கண்களுடனும் இருந்த கிருஷ்ணையை {திரௌபதியை} அணுகி அவளை வன்முறையுடன் அவர்கள் {கீசகர்கள்} பற்றினர். மெல்லிய இடுப்புக் கொண்ட அந்தப் பெண்ணைக் {திரௌபதியைக்} கட்டி, பாடையில் ஏற்றி, சுடுகாட்டை நோக்கி பெரும் சக்தியுடன் புறப்பட்டனர்.

ஓ! மன்னா {ஜனமேஜயா}, இப்படி அந்தச் சூத குலத்தின் மகன்களால், சுடுகாட்டை நோக்கி பலவந்தமாகத் தூக்கிச் செல்லப்பட்டவளும், தனது தலைவர்களின் {பாண்டவர்களின்} பாதுகாப்பின் கீழ் வாழ்பவளுமான களங்கமற்ற கற்புடைய கிருஷ்ணை {திரௌபதி} தன் கணவர்களின் உதவியை நாடி உரத்த ஒலியுடன், “ஓ!, ஜயரும், ஜயந்தரும், விஜயரும், ஜயத்சேனரும், ஜயத்பாலரும் எனது வார்த்தைகளைக் கேட்பீராக. இந்தச் சூதர்கள் என்னைக் கொண்டு போகிறார்கள். யாருடைய தேர் சக்கரச் சடசடப்பு உரத்த ஒலி கொண்டதாகவும், யாருடைய வில்லின் நாணொலி பெரும்போருக்கு மத்தியிலும் இடியெனக் கேட்கப்படுவதாகவும் இருக்குமோ, கரங்களில் வேகம் கொண்ட அத்தகைய சிறப்புமிக்கக் கந்தர்வர்களே, என்னுடைய வார்த்தைகளைக் கேளுங்கள். இந்தச் சூதர்கள் என்னைக் கொண்டு போகிறார்கள்!” என்று கதறினாள் {திரௌபதி}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “கிருஷ்ணையின் {திரௌபதியின்} இந்தச் சோகமான வார்த்தைகளையும், புலம்பலையும் கேட்ட பீமன், ஒரு நிமிடமும் சிந்தித்துப் பார்க்காமல் தனது படுக்கையில் இருந்து எழுந்து, “ஓ! சைரந்திரி, நீ பேசிய வார்த்தைகளை நான் கேட்டுவிட்டேன். எனவே, ஓ! அச்சமுற்றவளே, அந்தச் சூதர்களிடம் இனி உனக்கு அச்சம் தேவையில்லை” என்றான் {பீமன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இதைச் சொன்ன பெரும்பலமிக்கக் கரங்கள் கொண்ட பீமன் அந்தக் கீசகர்களைக் கொல்ல விரும்பி, தனது உடலைப் பெருக்கினான். பிறகு கவனமாகத் தனது ஆடையை மாற்றிக் கொண்டு, {நேர்வழியல்லாத} குறுக்கு வழியில் {wrong way = தவறான வழியில்} அரண்மனையிலிருந்து வெளியே சென்றான். ஒரு மரத்தின் உதவியைக் கொண்டு மதில் சுவர் ஏறிய அவன் {பீமன்}, கீசகர்கள் சென்ற சுடுகாட்டை நோக்கிச் சென்றான். சுவரைத் தாண்டி வெளியே இருந்த அந்தச் சிறந்த நகரத்திற்குள் வந்த பீமன், அந்தச் சூதர்கள் இருக்கும் இடத்தை நோக்கி விரைந்தான்.

ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, சிதையை நோக்கிச் சென்ற அவன் {பீமன்}, பெரிய கிளைகளைக் கொண்டு, மேலே வாடிப் போய், பனைமர உயரமிருந்த ஒரு பெரிய மரத்தைக் கண்டான். அந்த எதிரிகளைக் கொல்பவன் {பீமன்} பத்து வியாமங்கள் அளவு கொண்ட அந்த மரத்தைத் தனது கரங்களால் பற்றி, யானையைப் போல அதை வேரோடு பிடுங்கி, தனது தோள்களில் வைத்துக் கொண்டான். பிறகு பத்து வியாமங்கள் [1] அளவு கொண்ட கிளைகளும் தண்டும் கொண்ட அந்த மரத்தை எடுத்துக் கொண்ட அந்தப் பெரும் வீரன் {பீமன்}, கையில் கதாயுதத்துடன் செல்லும் யமனைப் போலச் சூதர்களை நோக்கி விரைந்தான். அப்படி அவன் மூர்க்கமாக விரைந்ததால் [2] ஆலமரங்களும், அரச மரங்களும், பலாச மரங்களும் முறிக்கப்பட்டுப் பூமியில் கொத்துக் கொத்தாக விழுந்தன.

[1] வியாமம் என்பது கையின் நுனியில் இருந்து (கை நடு விரலின் நுனியில் இருந்து) தோள் முடிவு வரை உள்ள ஒரு அளவீடாகும். ஒரு வியாமம் 84 அங்குலங்கள் என்றும், 5 அடி 3 அங்குலங்கள் நீளம் கொண்டது என்றும் கூட சொல்வார்கள்.

[2] “இது பீமனின் தொடைகளின் விசையை இலக்கிய வடிவில் எடுத்தரைப்பதாகும்” என்கிறார் கங்குலி

சீற்றத்துடன் வரும் சிங்கத்தைப் போலத் தங்களை நோக்கிவரும் கந்தர்வனைக் {பீமனைக்} கண்ட அந்தச் சூதர்கள் அனைவரும் மிகவும் கவலை கொண்டு, பயத்தால் நடுங்கி பீதியடைந்தனர். பிறகு அவர்கள் ஒருவருக்கொருவர், “அதோ, கையில் மரத்தை உயர்த்திப் பிடித்துக் கொண்டு பலமிக்கக் கந்தர்வன் கோபத்துடன் இங்கே வருகிறான். எனவே, யாரால் நமக்கு இந்த ஆபத்து எழுந்திருக்கிறதோ, அந்தச் சைரந்திரியை விடுவிப்போம்” என்று சொன்னார்கள். அந்த மரம் பீமசேனனால் வேரோடு பிடுங்கப்பட்டதைக் கண்ட அவர்கள், திரௌபதியை விடுவித்துவிட்டு, நகரத்தை நோக்கி மூச்சுவிடாமல் ஓடினர்.

ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {ஜனமேயனே}, அப்படி அவர்கள் ஓடுவதைக் கண்ட வாயுத்தேவனின் பெரும்பலமிக்க மகனான பீமன்,  அந்த மரத்தைக் கொண்டு, தானவர்களைக் கொல்லும் வஜ்ரத்தைத் தாங்குபவன் {இந்திரனைப்} போல அவர்களில் நூற்றைந்து {105} பேரை யமனின் வசிப்பிடத்துக்கு அனுப்பினான். பிறகு திரௌபதியை அவளது கட்டுகளில் இருந்து விடுவித்து, ஓ! மன்னா {ஜனமேஜயா}, அவளுக்கு {திரௌபதிக்கு} ஆறுதல் கூறினான். கவலையுற்றுக் கண்ணீரில் குளித்த {நனைந்த} முகத்துடன் இருந்த பாஞ்சால இளவரசியிடம் {திரௌபதியிடம்}, பெரும் பலம்வாய்ந்த கரங்கள் கொண்டவனும், பாண்டுவின் மகனுமான கட்டுக்கடங்காத விருகோதரன் {பீமன்}, “ஓ! அச்சமுற்றவளே {திரௌபதி}, “எந்தக் காரணமுமின்றி உனக்குத் தீங்கிழைப்பவர்கள் இப்படியே கொல்லப்படுவார்கள். ஓ! கிருஷ்ணை {திரௌபதி}, நீ நகரத்திற்குத் திரும்பு. இனி உனக்கு எந்தப் பயமும் வேண்டாம். நான் வேறு வழியில் விராடனின் மடைப்பள்ளிக்குச் செல்கிறேன்” என்றான் {பீமன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இப்படியே, ஓ! பாரதா {ஜனமேஜயா}, அந்த நூற்றைந்து கீசகர்கள் கொல்லப்பட்டனர். தரையில் கிடந்த அவர்களது சவங்களைக் காண, புயலால் வேரோடு பிடுங்கப்பட்டு மரங்கள் பெருங்காட்டில் கிடப்பது போலத் தெரிந்தது. இப்படியே நூற்றைந்து கீசகர்கள் வீழ்ந்தனர். ஏற்கனவே கொல்லப்பட்ட விராடனின் தளபதியோடு {கீசகனோடு} சேர்த்து, கொல்லப்பட்ட சூதர்களின் எண்ணிக்கை நூற்றாறு {106} ஆகும். கூடியிருந்த ஆண்களும் பெண்களும் இந்த அற்புத சாதனையைக் கண்டு மலைப்பால் நிறைந்தனர். ஓ! பாரதா {ஜனமேஜயா}, அங்கு நின்ற ஒவ்வொருவரும் {அந்நேரத்தில்} பேசும் சக்தியை இழந்தனர்.” {என்றார் வைசம்பாயனர்}.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்