Monday, November 17, 2014

கீசகனை அழைத்த திரௌபதி - விராட பர்வம் பகுதி 22அ

Draupadi  called Kichaka! | Virata Parva - Section 22a | Mahabharata In Tamil

(கீசகவத பர்வத் தொடர்ச்சி - 9)

இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண




பதிவின் சுருக்கம்: கீசகனை ஆடற்கூடத்திற்கு அழைக்குமாறு பீமன் திரௌபதிக்கு வழிகாட்டுவது; திரௌபதி கீசகனை ஆடற்கூடத்திற்கு அழைப்பது; கீசகன் மகிழ்ந்து இல்லம் திரும்புவது; மீண்டும் திரௌபதி பீமனை மடைப்பள்ளியில் சந்தித்து ஆலோசிப்பது…

பீமன் {திரௌபதியிடம்} சொன்னான், “ஓ! அச்சமுள்ளவளே {திரௌபதி}, நீ சொல்வதைப் போலவே நான் செய்வேன். நான் தற்சமயம் கீசகனை அவனது நண்பர்கள் அனைவருடன் சேர்த்துக் கொல்வேன். ஓ! இனிய புன்னகை கொண்ட யக்ஞசேனி {திரௌபதி}, துன்ப துயரங்களைக் கைவிட்டு, நாளை மாலை வேளையில் கீசகனைச் சந்திக்க முயற்சி செய். மத்ஸ்ய மன்னன் {விராடன்} கட்டியிருக்கும் ஆடற்கூடத்தைப் பகல் நேரங்களில் பெண்கள் பயன்படுத்துகின்றனர். எனினும் இரவு வேளையில் அவர்கள் தங்கள் இல்லங்களுக்குத் திரும்பிச் செல்கின்றனர். அந்தக் கூடத்தில் மரத்தாலான சிறந்த படுக்கை நல்ல முறையில் வைக்கப்பட்டிருக்கிறது. இறந்து போன அவனது {கீசகனின்} முப்பாட்டன்களின் ஆவிகளை அங்கே அவனைப் {கீசகனைப்} பார்க்கச் செய்கிறேன். ஆனால், ஓ! அழகியே {திரௌபதியே}, நீ அவனிடம் உரையாடிக் கொண்டிருக்கும்போது, மற்றவர்கள் அதை வேவு பார்க்காதவாறு பார்த்துக் கொள்” என்றான் {பீமன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இதே போல மற்றவர்களிடமும் {மற்ற பாண்டவர்களிடமும்} உரையாடிவிட்டு, துயரத்தில் கண்ணீர் விட்டபடி பொறுமையின்மையினால் ஏற்படும் வலியுடன் அந்த இரவின் விடியலுக்காக அவர்கள் காத்திருந்தனர். இரவு கடந்ததும், காலையில் எழுந்த கீசகன் அரண்மனைக்குச் சென்று திரௌபதியை முதலில் சந்தித்து, “சபையின் தரையில் வீசி மன்னனுக்கு {விராடனுக்கு} முன்பாகவே உன்னை நான் உதைத்தேன். பலமிக்க என்னால் நீ தாக்கப்பட்டால், நீ பாதுகாப்பை அடைய முடியாது. இந்த விராடர் பெயரளவுக்கே மத்ஸ்யர்களின் மன்னனாக இருக்கிறார். இவ்வாட்சியின் படைகளுக்குக் கட்டளையிடும் {நிலையில் இருக்கும்} நானே மத்ஸ்யத்துக்கு உண்மையான தலைவன்.

ஓ! அச்சமுள்ளவளே {மாலினி}, நீ என்னை உற்சாகமாக ஏற்றுக் கொள். நான் உனது அடிமையாக இருப்பேன். ஓ! அழகிய இடைகள் கொண்டவளே, நான் உனக்கு நூறு நிஷ்கங்களை [1] {தங்க நாணயங்களை} உடனே தருவேன். (உன்னைக் கவனித்துக் கொள்வதில்) நூறு ஆண் பணியாட்களையும், நூறு பெண் பணியாட்களையும் ஈடுபடுத்துவேன். பெண் கோவேறு கழுதைகள் பூட்டப்பட்ட தேர்களையும் நான் உனக்கு அளிப்பேன். ஓ! அச்சமுள்ள பெண்ணே {மாலினி} நமது கூடுகை {கலவி} நடந்தேறட்டும்” என்றான் {கீசகன்}. அதற்குத் திரௌபதி {கீசகனிடம்}, “ஓ! கீசகரே, எனது நிலையும் அதுதான் என்பதை அறிந்து கொள்ளும். என்னுடனான உமது கலவியை உமது நண்பர்களோ, சகோதரர்களோ அறியக்கூடாது. அந்த ஒப்பற்ற கந்தர்வர்கள் கண்டறிந்துவிடுவார்களோ என்ற பயத்தில் நான் இருக்கிறேன். இந்த வாக்குறுதியை எனக்குக் கொடும். நான் உமக்கு இசைகிறேன்” என்றாள் {திரௌபதி}.


[1] நூற்று எட்டுப் பலம் {பலம் என்றால் கிராம் போன்ற அளவீடாக இருக்க வேண்டும்} நிறைந்த தங்கநாணயம் ஒரு நிஷ்கமாகும்.

இதைக் கேட்ட கீசகன் {திரௌபதியிடம்}, “ஓ! அழகிய இடைகள் கொண்டவளே {மாலினி}, நீ சொல்வதைப் போலவே நான் செய்வேன். காமதேவனால் பீடிக்கப்பட்டிருக்கும் நான், ஓ! அழகிய காரிகையே {மாலினி}, உன்னுடனான கூடுகைக்காக உனது வசிப்பிடத்திற்குத் தனியே வருவேன். ஓ! வாழைத்தண்டுகளைப் போன்று உருண்டு கூராகச் செல்லும் அழகிய தொடைகள் கொண்டவளே {மாலினி}, அதனால், சூரியனைப் போன்ற பிரகாசமிக்க அந்தக் கந்தர்வர்களுக்கு, இந்த உனது செயல் தெரியவராமல் போகும்” என்றான் {கீசகன்}. அதற்குத் திரௌபதி {கீசகனிடம்}, “மத்ஸ்யர்கள் மன்னரால் {விராடரால்} கட்டப்பட்ட ஆடற்கூடத்திற்கு {நர்த்தன மண்டபத்திற்கு} இருட்டிய பிறகு செல்வீராக. பகலில் அங்கே பெண்கள் ஆடுவதற்காக வருவார்கள், இரவில் அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பி விடுவார்கள். கந்தர்வர்கள் அந்த இடத்தை அறியமாட்டார்கள். நாமும் அனைத்துக் கண்டனங்களில் இருந்தும் ஐயமின்றித் தப்பலாம்” என்றாள் {திரௌபதி}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “கீசகனுடனான தனது உரையாடலை நினைத்துக் கொண்டிருந்த கிருஷ்ணைக்கு {திரௌபதிக்கு}, அரை நாள் கூட ஒரு முழு மாதத்தைப் போல நீண்டதாக இருந்தது. மரணமே சைரந்திரி {திரௌபதி} என்ற உருவமெடுத்து வந்திருக்கிறது என்பதை அறியாத மூடனான கீசகன், வீடு திரும்பி பெரும் மகிழ்ச்சியை அடைந்தான். காமத்தால் உணர்விழந்த கீசகன், நறுமணத் தைலங்களாலும், மாலைகளாலும், ஆபரணங்களாலும் தன்னை விரைவாக அலங்கரித்துக் கொண்டான். அகன்ற கண்களைக் கொண்ட காரிகையை {மாலினியை, மனதில்} நினைத்துக் கொண்டே இவற்றையெல்லாம் செய்து கொண்டிருந்த அவனுக்கு {கீசகனுக்கு}, அந்த நாள் முடிவற்றதாகத் தெரிந்தது.

தனது அழகை இனி எப்போதும் கைவிடப்போகும் கீசகனின் அழகு, எரியும் விளக்கின் திரியைப் போல அன்று உயர்வாக இருந்தது. திரௌபதியின் மேல் முழு நம்பிக்கை கொண்ட கீசகன், காமத்தால் உணர்வுகளை இழந்து, எதிர்பார்த்திருக்கும் சந்திப்புக் குறித்த சிந்தனையில் மூழ்கி, அந்த நாள் {கரைந்து} கழிவதைக்கூட உணராமல் இருந்தான். அதேவேளையில், அழகிய திரௌபதி தனது கணவனான குருகுலத்தின் பீமனை அணுகி, மடைப்பள்ளியில் {சமையலறையில்} அவன் {பீமன்} முன்பு நின்றாள்.

அழகிய சுருள் முனைகள் கூடிய கேசம் கொண்ட அந்த மங்கை {திரௌபதி}, அவனிடம் {பீமனிடம்}, “ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {பீமரே}, நீர் வழிகாட்டியது போலவே, எங்கள் சந்திப்பு ஆடற்கூடத்தில் {நர்த்தனமண்டபத்தில்} நடைபெறும் என்பதை நான் கீசகனுக்குப் புரியும்படி சொல்லியிருக்கிறேன். ஒருவருமில்லாத கூடத்திற்கு இரவில் தனிமையில் அவன் {கீசகன்} வரப்போகிறான். ஓ! வலிமைமிக்கக் கரங்கள் கொண்டவரே {பீமரே}, அவனை அங்கேயே கொல்லும். ஓ! குந்தியின் மகனே {பீமரே}, அந்த ஆடற்கூடத்திற்குச் சென்று, ஓ! பாண்டவரே {பீமரே}, தற்பெருமையில் போதை கொண்ட அந்தச் சூத மகனான கீசகனின் உயிரை எடுப்பீராக. தற்பெருமையின் காரணமாக மட்டுமே அந்தச் சூத மகன் {கீசகன்} கந்தர்வர்களை ஏளனமாக நினைக்கிறான். ஓ! அடிப்பவர்களில் சிறந்தவரே {பீமரே}, கிருஷ்ணன் நாகனை (காளியனை) யமுனையில் இருந்து தூக்கியது போல, அவனைப் பூமியில் இருந்து தூக்கும். ஓ! பாண்டவரே {பீமரே}, துன்பத்தால் பீடிக்கப்பட்டிருக்கும் எனது கண்ணீரைத் துடைத்து, உமது பெருமையையும், உமது குலத்தின் பெருமையையும் பாதுகாத்து அருளப்பட்டிருப்பீராக” என்றாள் {திரௌபதி}.

அதற்குப் பீமன் {திரௌபதியிடம்}, “ஓ! அழகிய பெண்ணே {திரௌபதி}, உனக்கு நல்வரவு. நீ கொண்டு வரும் நற்செய்தியைத் தவிர, ஓ! அதீத அழுகுடையவளே {திரௌபதி}, எனக்கு வேறு எந்தத் துணையும் தேவையில்லை. ஓ! பேரழகியே {திரௌபதி}, கீசகனுடன் நேரிடப்போகும் மோதலைக் கேட்டு, ஹிடிம்பனை கொன்ற போது உணர்ந்த ஆனந்தத்திற்கு ஈடான மகிழ்ச்சியை நான் அடைகிறேன். உண்மை {சத்தியம்}, எனது சகோதரர்கள், அறம் {தர்மம்} ஆகியவற்றின் மீது ஆணையாக {உறுதியாக}, தேவர்களின் தலைவன் {இந்திரன்}, விருத்திரனைக் கொன்றதைப் போல நான் கீசகனைக் கொல்வேன் என்று உறுதி கூறுகிறேன். கமுக்கமாகவோ {ரகசியமாகவோ}, வெளிப்படையாகவோ நான் கீசகனை நசுக்குவேன். அவன் நிமித்தமாகப் பிற மத்ஸ்யர்கள் மோதலுக்கு வந்தால், அவர்களையும் நான் கொல்வேன். பிறகு துரியோதனனையும் கொன்று, மீண்டும் பூமியை வெல்வேன். குந்தியின் மகனான யுதிஷ்டிரர், மத்ஸ்ய மன்னனுக்கு {விராடனுக்கு} தொடர்ந்து மரியாதை செலுத்தட்டும்” என்றான் பீமன்.

கூவிளம்பழம் {அ}
வில்வம்பழம் (Vela fruit)
பீமனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட திரௌபதி {பீமனிடம்}, “ஓ! தலைவா {பீமரே}, நீர் என்னிடம் ஏற்கனவே உறுதியளித்திருக்கும் உண்மையைக் கைவிடாதிருக்கும் பொருட்டு, ஓ! வீரரே {பீமரே}, கீசகனை கமுக்கமாகக் {ரகசியமாக} கொல்லும்” என்றாள் {திரௌபதி}. அவளுக்கு {திரௌபதிக்கு} உறுதி கூறும் வகையில் பீமன், “கீசகனையும், அவனுடன் சேர்ந்த அவனது நண்பர்களையும் இன்றே, பிறரறியாமல் இரவின் இருட்டில் கொல்வேன். ஓ! களங்கமற்ற பெண்ணே {திரௌபதி}, யானை கூவிளம்பழத்தை [2] {வில்வம்பழம் = vela fruit} நசுக்குவது போல, கிடைத்தற்கரியதை {உன்னை} விரும்பும் தீய கீசகனின் தலையை நசுக்குவேன்” என்றான் {பீமன்}.
[2] //“வில்வம் நாகவியௌதரா” {Vilwam nagaviodhara} என்று சில உரைகளில் இருக்கிறது. அதன் பொருள் “ஒரு யானை வில்வம்பழத்தைத் தூக்குவது போல” என்பதாகும்// என்கிறார் கங்குலி


விளாம்பழம்
"யானை உண்ட விளாம்பழம்" என்று ஒரு பழமொழி நம்மிடம் உண்டு. யானை ஒரு விளாம்பழத்தை உண்டு, அதைத் தனது கழிவோடு வெளியேற்றினால், அந்த விளாம்பழம் உடையாமல் முழுதாகவே இருக்கும். அந்த பழத்தை எடுத்து உடைத்துப்பார்த்தால் உள்ளே சதையே இருக்காது. அந்த விளாம்பழத்தின் சத்து முழுவதையும் யானை உறிஞ்சிவிட்டிருக்கும்.

கீசகனைப் பீமன் கொல்வதும், கொன்ற பின்பும் யாருக்கும் தெரியவாய்ப்பில்லை என்பதும், வெளியே மாறுபாடு ஏற்படுத்தாமலே உள்ளே உயிர் இருக்காது என்பதுதான் அது. - நன்றி:திரு.ராமராஜன் மாணிக்கவேல்.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்