Sunday, December 14, 2014

நல்லதோ அல்லதோ விரைந்து செய்! - விராட பர்வம் பகுதி 52

Good or not, do it fast! | Virata Parva - Section 52 | Mahabharata In Tamil


(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 27)

இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண





பதிவின் சுருக்கம் : வனவாசத்தின் குறித்த காலம் சரியாக முடிந்தது என்று பீஷ்மர் உரைப்பது; பாண்டவர்களின் பெருமையைச் சொல்வது; நல்லதோ அல்லதோ அதை விரைந்து செய்யுமாறு துரியோதனனை பீஷ்மர் பணித்தது; பாண்டவர்களுக்கு நாட்டைக் கொடுக்க மாட்டேன் என்று துரியோதனன் சொல்வது; பீஷ்மர் கூறிய ஆலோசனை; பீஷ்மர் படையை அணிவகுக்கத் தொடங்கியது...

பீஷ்மர் சொன்னார், “கலைகள் {1.6 நிமிடம்}, காஷ்டைகள் {3.2 விநாடிகள்}, முகூர்த்தங்கள் {48 நிமிடங்கள்}, நாட்கள் {30 முகூர்த்தங்கள்}, அரைத்திங்கள்கள் {15 நாட்கள்} [1], மாதங்கள் {30 நாட்கள்}, நட்சத்திரக்கூட்டங்கள், கோள்கள், பருவகாலங்கள் {ருதுக்கள்} {இரண்டு மாதங்கள்}, ஆண்டுகள் {360 நாட்கள் [கவனிக்க: 365 நாட்கள் அல்ல]} ஆகிய பிரிவுகளைக் கொண்டு காலச்சக்கரம் [2] சுழன்று வருகிறது. அதில் வரும் கூடுதல் பகுதிகள் {காலாதிக்யம்} மற்றும் வானத்தின் கோள்களில் ஏற்படும் மாறுதல்கள் ஆகியவற்றின் விளைவாக, ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும் இரண்டு மாதங்கள் கூடுகின்றன. இவ்வழியில் கணக்கிட்டால் பதிமூன்று வருடங்களுக்கு ஐந்து மாதங்களும் பனிரெண்டு நாட்களும் அதிகமாக வரும் எனத் தெரிகிறது. எனவே, பாண்டுவின் மகன்கள் வாக்குறுதி அளித்ததுபோல, அந்தக் காலம் அவர்களால் சரியாகவே நிறைவு செய்யப்பட்டுள்ளது. {அந்தக் குறிப்பிட்ட காலம் நேற்றே முடிந்துவிட்டது}.

[1] பக்ஷங்கள் = அமாவாசைக்குப் பிந்தைய சுக்லபக்ஷம், பவுர்ணமிக்குப் பிந்தைய கிருஷ்ணபக்ஷம் ஆகிய இரண்டு அரைமாதங்களும். அதாவது, சொக்கு ஒளிப்பக்கம் (bright fortnight), கருத்த ஒளிப்பக்கம் (dark fortnight) என்ற நிலவின் இருவகையான ஒளிப் பக்கம்.

[2] பழங்காலத்தில், பாரதத்தில் நேரம் கணிக்கப்பட்ட முறையை அறிய http://en.wikipedia.org/wiki/Hindu_units_of_time என்ற வலைப்பக்கத்திற்கும் செல்லவும்.

இதை உறுதிப்பட அறிந்ததால்தான் பீபத்சு {Vibhatsu_அர்ஜுனன்} இங்கே தோன்றியிருக்கிறான். அவர்கள் {பாண்டவர்கள்} அனைவரும் உயர் ஆன்மா கொண்டவர்களும் {மகாத்மாக்களும்}, சாத்திரங்களின் பொருள் அறிந்தவர்களும் ஆவார்கள். யுதிஷ்டிரனைத் தங்கள் வழிகாட்டியாகக் கொண்ட அவர்கள் அறத்தில் இருந்து எப்படி விலகுவார்கள்? குந்தியின் மகன்கள் எப்போதும் சலனமடைய {மோகம் கொள்ள} மாட்டார்கள். அரிதான சாதனையை அவர்கள் அடைந்துவிட்டார்கள். நியாயமற்ற முறையில் தங்கள் நாட்டை அடைய வேண்டும் என்று நாட்டங்கொண்டிருந்தால், அந்தக் குருக்குல வழித்தோன்றல்கள் {பாண்டவர்கள்}, பகடையாட்டம் நடைபெற்ற நேரத்திலேயே தங்கள் பராக்கிரமத்தை வெளிப்படுத்தியிருப்பார்கள். அறத்தின்கண் கட்டுப்பட்டு, க்ஷத்திரிய வகைக்குரிய தங்கள் கடமையில் இருந்து அவர்கள் {அன்று} வழுவாதிருந்தார்கள்.

அவர்கள் பொய்மையுடன் நடந்து கொள்வதாகக் கருதுபவன் நிச்சயம் தோல்வியை அடைவான். பிருதையின் மகன்கள் {குந்தியின் மகன்கள் பாண்டவர்கள்}, பொய்மைக்குப் பதில் மரணத்தையே விரும்புவார்கள். {மரணத்தை அடைந்தாலும் அடைவார்களேயொழிய பொய்யை விரும்ப மாட்டார்கள்}. எனினும், நேரம் வரும்போது, சக்ரனைப் {இந்திரனைப்} போன்ற சக்தி கொண்ட மனிதர்களில் காளையரான அந்தப் பாண்டவர்கள், தங்களுடையவை எவையும் வஜ்ரதாங்கியால் {இந்திரனால்} பாதுகாக்கப்பட்டாலும், அவற்றை {தங்கள் உடைமைகளை} விடமாட்டார்கள். ஆயுதங்களைத் தாங்குபவர்கள் அனைவரிலும் முதன்மையானவர்களை {பாண்டவர்களை}, நாம் போரில் எதிர்க்க வேண்டியிருக்கிறது.

எனவே, நம்முடைய உடைமைகளை எதிரி கையகப்படுத்தமுடியாதவாறு, நல்லவர்கள் மற்றும் நேர்மையாளர்களின் அனுமதியோடு கூடிய சாதகமான ஏற்பாடுகள் செய்யப்படட்டும். ஓ! மன்னர்களின் மன்னா, ஓ! கௌரவா {துரியோதனா}, “நாம் நிச்சயம் வெல்வோம்” என்று இருதரப்பில் எந்தத் தரப்பாலும் சொல்ல முடிந்த எந்தப் போரையும் நான் இதுவரை கண்டதில்லை. ஒரு போர் ஏற்படும்போது, அங்கே {ஒரு தரப்புக்கு} வெற்றியோ தோல்வியோ அல்லது செழுமையோ சிரமமோ {நிச்சயம்} ஏற்படும். போர்க்களத்தில் இருக்கும் ஒரு தரப்பு இவ்விரண்டில் ஒன்றை நிச்சயம் அடைய வேண்டும் என்பதில் ஐயமில்லை. எனவே, ஓ! மன்னர்களின் மன்னா {துரியோதனா}, இப்போது போர் உகந்ததாக இருப்பினும், அறத்தின்கண் நிலையற்றோ அல்லாமலோ இருப்பினும் {உகந்தது இல்லாவிடினும்}, உனது ஏற்பாடுகளை விரைந்து செய். தனஞ்சயன் {Dhananjaya_அர்ஜுனன்} அருகில் வந்துவிட்டான்” என்றார் {பீஷ்மர்}.

அதற்குத் துரியோதனன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா {பீஷ்மரே}, பாண்டவர்களுக்கு அவர்களது நாட்டை நான் திரும்பத் தரமாட்டேன். எனவே, போருக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தாமதமில்லாமல் நடைபெறட்டும்” என்றான் {துரியோதனன்}.

பீஷ்மர் {துரியோதனனிடம்}, “நான் சரியாகக் கருதுவதை, உனக்கு விருப்பமிருந்தால் கேள். உனக்கு எது நன்மையோ அதையே நான் எப்போதும் சொல்ல வேண்டும். ஓ! கௌரவா {துரியோதனா}, நேரத்தை இழக்காமல் {காலவிரையம் செய்யாமல்} படையில் நாலில் ஒரு பங்கை அழைத்துக் கொண்டு தலைநகர் நோக்கி நீ முன்னேறு. படையின் மற்றொரு நாலில் ஒரு பாகம், பசுக்களுக்குக் காவலாக அணிவகுத்துச் செல்லட்டும். {மீதமுள்ள} பாதித் துருப்புகளைக் கொண்டு, நாங்கள் அந்தப் பாண்டவனுடன் {அர்ஜுனனுடன்} போரிடுவோம். நான், துரோணர், கர்ணன், அஸ்வத்தாமன் மற்றும் கிருபர் ஆகியோர் சேர்ந்து, நம்மை அணுகிவரும் பீபத்சுவையோ {அர்ஜுனையோ}, மத்ஸ்யர்களின் மன்னனையோ {விராடனையோ}, ஏன் இந்திரனையோ கூட, தீர்மானத்துடன் எதிர்த்து நிற்போம். உண்மையில், துள்ளும் கடலைத் தாக்குப்பிடிக்கும் கரைகளைப் போல, அவர்களில் எவரையும் நாங்கள் எதிர்த்து நிற்போம்” என்றார் {பீஷ்மர்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “உயர் ஆன்ம {மகாத்மாவான} பீஷ்மர் பேசிய இச்சொற்கள் அவர்களுக்கு ஏற்புடையனவாக இருந்தன. கௌரவர்களின் மன்னன் {துரியோதனன்}, அதற்குத் தக்க, தாமதமில்லாமல் செயல்பட்டான். மன்னனையும் {துரியோதனனையும்}, பசுக்களையும் அனுப்பிவிட்ட பிறகு, பீஷ்மர் படைகளை அணிவகுக்கத் தொடங்கினார். ஆசானிடம் {துரோணரிடம்} பேசும் வகையில் அவர் {பீஷ்மர்}, “ஓ! ஆசானே {துரோணரே}, நீர் {படைவரிசையின்} நடுவில் நில்லும், அஸ்வத்தாமன் இடது பக்கத்தில் நிற்கட்டும், சரத்வானின் மகனான ஞானமிக்கக் கிருபர் {படையின்} வலது பக்கத்தைப் பாதுகாக்கட்டும். கவசம் பூண்டிருக்கும் சூத குலத்தின் கர்ணன் முன்னணியில் நிற்கட்டும். நான் படையனைத்தையும் பாதுகாத்துக் கொண்டு பின்புறத்தில் நிற்பேன்” என்றார் {பீஷ்மர்}.

இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்