Sunday, December 14, 2014

துரோணரை வணங்கிய அர்ஜுனன்! - விராட பர்வம் பகுதி 53

Arjuna saluted Drona! | Virata Parva - Section 53 | Mahabharata In Tamil


(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 28)

இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண





பதிவின் சுருக்கம் : உத்தரனுக்குத் துரோணரையும், பிற கௌரவத் தலைவர்களையும் அர்ஜுனன் காட்டியது; அம்புகள் இரண்டை துரோணரின் பாதத்தில் விழச் செய்து, அர்ஜுனன் துரோணரை வணங்கியது; அங்கே துரியோதனன் இல்லாததைக் கண்டு உத்தரனிடம் தேரைத் திருப்பச் சொன்னது; அர்ஜுனனின் நோக்கத்தை அறிந்த கிருபர் அவனைப் பக்கவாட்டில் தாக்கலாம் என்றது; அர்ஜுனனின் சரமாரி...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! பாரதா {ஜனமேஜயா}, வரிசைப்படி தங்கள் நிலைகளில் கௌரவர்கள் நின்ற பிறகு, அர்ஜுனன் தனது தேர் சடசடப்பின் எதிரொலி காற்றில் நிரம்பும் வகையில் அவர்களை நோக்கி விரைந்து வந்தான். குருக்கள் {கௌரவர்கள்} அவனது கொடியைக் கண்டனர்; தேர் சடசடப்பின் எதிரொலியையும் நீட்டிவிரிக்கப்பட்ட காண்டீவத்தின் நாணொலியையும் தொடர்ச்சியாகக் கேட்டனர். இவை யாவையும் கவனித்து, அந்தப் பெரும் தேர்வீரனான காண்டீவந்தாங்கியைக் {அர்ஜுனனைக்} கண்ட துரோணர், “தூரத்தில் ஒளிர்ந்து வருவது பார்த்தனின் {அர்ஜுனனின்} கொடியாகும். இஃது அவனது தேரின் ஒலி, பயங்கரமாகக் கர்ஜனை செய்வது {அவனது கொடியிலிருக்கும்} அந்தக் குரங்காகும். உண்மையில் அந்தக் குரங்கு நமது துருப்புகளைப் பயத்தில் பீடிக்கச் செய்கிறது. இடியொலி போல நாணொலியெழுப்பிவரும் விற்களில் சிறந்த வில்லான காண்டீவத்தை இழுக்கும் தேர்வீர்களில் முதன்மையானவன் {அர்ஜுனன்} அந்த அற்புதமான தேரில்தான் இருக்கிறான்.


எனது பாதங்களில் வந்து விழும் இவ்விரு கணைகளை இதோ பாருங்கள். மற்றும் இரண்டு கணைகள் வெறுமனே எனது காதுகளைத் தொட்டுச் செல்கின்றன. வனவாச காலத்தை நிறைவு செய்து, பல அற்புத சாதனைகளை அடைந்திருக்கும் பார்த்தன் {அர்ஜுனன்} என்னை வணங்கி, எனது காதுகளில் மெதுவாகப் பேசுகிறான் [1]. ஞானம் கொண்டவனும், உறவினர்களால் விரும்பப்படுபவனும், நீண்ட காலம் கழித்து நம்மால் பார்க்கப்படுபவனும் பாண்டுவின் மகனுமான இந்தத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, உண்மையில் அழகாலும், அருளாலும் சுடர்விடுகிறான். தேர், கணைகள், கையுறைகள், அம்பறாத்தூணி, சங்கு, கொடி, கவசம், கிரீடம், கூன்வாள், வில் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் பிருதையின் மகன் {son of Pritha - குந்தியின் மகன் அர்ஜுனன்}, வேள்விக்கரண்டிகள் சூழ, தெளிந்த நெய்யை உண்ணும் (ஹோம) நெருப்பு போலச் சுடர்விட்டு ஒளிர்கிறான்.” என்றார் {துரோணர்}.

[1] இம்முறைக்கு அபிவாதனம் என்று சொல்வார்கள். பெயர் முதலியன கூறி பெரியோரை வணங்கும் முறை இஃது. இதையே இங்கு அர்ஜுனன் செய்கிறான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “போருக்குத் தயாராக இருக்கும் குருக்களை {கௌரவர்களைக்} கண்ட அர்ஜுனன், மத்ஸ்யன் மகனிடம் {உத்தரனிடம்} அச்சூழ்நிலைக்கு ஏற்ற சொற்களில், “ஓ! தேரோட்டி {உத்தரா}, எனது கணைகள் எதிரியைச் சென்றடையும் தூரத்தில் குதிரைகளை நிறுத்து. அதேவேளையில், இந்தப் படையின் மத்தியில் அந்தக் குருகுலத்தின் இழிந்த பாவி {துரியோதனன்} எங்கிருக்கிறான் என்பதை நான் காணும்படி செய். இவர்கள் அனைவரையும் கருத்தில் கொள்ளாமல், அந்த இளவரசர்களில் வீணனைத் {துரியோதனனைத்} தனித்திருக்கச் செய்து, அவன் தலையில் விழுவேன். அந்தப் பாவியை {துரியோதனனை} வீழ்த்திவிட்டால், தாங்கள் வீழ்ந்துவிட்டதாகவே பிறர் கருதுவார்கள்.

துரோணர் அதோ நிற்கிறார், அவருக்கு அடுத்து அவரது மகன் {அஸ்வத்தாமன்} நிற்கிறார். அங்கே பெரும் வில்லாளிகளான பீஷ்மர், கிருபர் மற்றும் கர்ணன் ஆகியோர் இருக்கின்றனர். எனினும், நான் மன்னனைக் {துரியோதனனைக்} காணவில்லை. தனது உயிரைக் காத்துக்கொள்ள அவன் {துரியோதனன்}, தெற்கு சாலையின் வழியே, கவர்ந்த பசுக்களை அழைத்துக் கொண்டு பின்வாங்கிக் கொண்டிருக்கிறான் என்று சந்தேகிக்கிறேன். இந்தத் தேர்வீரர்களின் வரிசையைத் தவிர்த்து, சுயோதனன் {Suyodhana _ துரியோதனன்} இருக்கும் இடத்திற்குச் செல். போர் பலனற்றதாகிவிடும் என்பதால், ஓ! விராடனின் மகனே {உத்தரா}, அங்கே அவனிடம் போரிட்டு, அவனை வீழ்த்திய பிறகு, பசுக்களை அழைத்துக் கொண்டு திரும்பி வரலாம்” என்றான் {அர்ஜுனன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இப்படிச் சொல்லப்பட்ட விராடனனின் மகன் {உத்தரன்}, சற்று முயன்று குதிரைகளை நிறுத்தி, குரு குல காளையர் இருக்கும் இடத்தில் இருந்து கடிவாளத்தை ஓர் இழு இழுத்து, அவற்றைத் துரியோதனன் இருக்கும் இடம் நோக்கிச் செலுத்தினான். அப்படி அர்ஜுனன் அந்தப் படையின் அடர்த்தியான வரிசையைத் தவிர்த்து விட்டுச் சென்ற போது, அவனது நோக்கத்தை அறிந்த கிருபர், தனது தோழர்களிடம், “பீபத்சு {அர்ஜுனன்}, மன்னனைத் {துரியோதனனைத்} தவரித்து வேறு யாரிடமும் நிற்க விரும்பமாட்டான். முன்னேறிச் செல்லும் அந்த வீரனின் {அர்ஜுனனின்} பக்கவாட்டுப் பகுதியை நாம் தாக்குவோம். கோபத்தால் எரிந்து கொண்டு, எவர் துணையும் அற்று வரும் அவனிடம்{அர்ஜுனனிடம்} ஆயிரம் கண் தெய்வத்தையோ {இந்திரனையோ} அல்லது தேவகியின் மகனான கிருஷ்ணனையோ தவிர வேறு யாரும் {தனியாக} மோத முடியாது. பார்த்தன் {அர்ஜுனன்} என்ற பெருங்கடலில் வீழும் படகைப் போலத் துரியோதனன் மூழ்கிவிட்டால் இந்தப் பசுக்களாலோ, இந்த அபரிமிதமான செல்வத்தாலோ நமக்கு என்ன பயன்?” என்றார் {கிருபர்}.

அதேவேளையில், அந்தக் குறிப்பிட்ட படைப்பிரிவை நோக்கி முன்னேறிய பீபத்சு {அர்ஜுனன்}, தனது பெயரை விரைந்து அறிவித்துக் கொண்டு, வெட்டுக்கிளிகள் போலத் தடித்திருந்த அவனது அம்புகளால் அத்துருப்புகளை மூடினான். பார்த்தனால் {அர்ஜுனனால்} அடிக்கப்பட்ட எண்ணற்ற கணைகளால் மூடப்பட்ட எதிரி வீரர்களால் எதையும் காணமுடியவில்லை. பூமியும், வானமும் கூட அதனால் {அம்புகளால்} மறைக்கப்பட்டுவிட்டதாகத் தெரிந்தது. போருக்குத் தயாராக இருந்த வீரர்கள் குழம்பிப் போனதால் யாராலும் களத்தை விட்டு ஓடிப்போகவும் முடியவில்லை. பார்த்தனுடைய {அர்ஜுனனுடைய} கரங்களின் இலகுத்தன்மையைக் கண்ட அவர்கள் {கௌரவப் படையினர்} அனைவரும் மனதுக்குள் {அச்செயலைப்} பாராட்டினார்கள்.

பிறகு அர்ஜுனன், எதிரிகளை எப்போதுமே மயிர்ச்சிலிர்க்கச்செய்யும் தனது சங்கை எடுத்து ஊதினான். விற்களில் சிறந்த தனது வில்லில் நாணொலி எழுப்பி, தனது கொடியில் இருந்து உயிரினங்களை மேலும் பயங்கரமாகக் கர்ஜிக்கச் செய்தான். அந்தச் சங்கொலியாலும், தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியாலும், காண்டீவத்தின் நாணொலியாலும், கொடியில் இருந்த மனித சக்திக்கு அப்பாற்பட்ட உயிரினங்களின் கர்ஜனையாலும், பூமியே நடுங்கத் தொடங்கியது. பிறகு தெற்கு சாலையில் சென்று கொண்டிருந்த பசுக்கள் உயர்ந்த தங்கள் வால்களை அசைத்து, ஒன்றாக இறங்கித் திரும்பின” என்றார் {வைசம்பாயனர்}.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்