Saturday, January 10, 2015

விருத்திரனைக் கொன்ற இந்திரன்! - உத்யோக பர்வம் பகுதி 10

Vritra killed by Indra! | Udyoga Parva - Section 10 | Mahabharata In Tamil


(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 10)

பதிவின் சுருக்கம் : தேவர்களும் முனிவர்களும் விஷ்ணுவிடம் ஆலோசிப்பது; விஷ்ணுவின் ஆலோசனையின் பேரில் அவர்கள் விருத்திரனுக்கும் இந்திரனுக்கும் இடையில் அமைதியை ஏற்படுத்தியது; அமைதி ஏற்பட விருத்திரன் சொன்ன நிபந்தனைகள்; விருத்திரன் வைத்த நிபந்தனைகளுக்கு அப்பாற்பட்டு, விஷ்ணுவின் உதவியோடு இந்திரன் விருத்திரனைக் கொன்றது; திரிசிரனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தியால் இந்திரன் நீருக்கடியில் மயங்கி கிடந்தது; இந்திரன் இல்லாத உலகம் அல்லலுற்றது; தங்களுக்கு ஒரு தலைவன் இல்லாமல் தேவர்களும் முனிவர்களும் திண்டாடியது...

இந்திரன் சொன்னான், “ஓ! தேவர்களே, அழிக்கப்படமுடியாத இந்த முழு அண்டத்திலும், விருத்திரன் பரவியுள்ளான். அவனை எதிர்க்கும் பணிக்கு நிகரான வேறு எதுவும் கிடையாது. பழங்காலத்தில் நான் இயன்றவனாக இருந்தேன். ஆனால் இப்போதோ இயலாதவனாக இருக்கிறேன். உங்களால் என்ன நல்லது நேரிடும்? நான் என்ன செய்ய முடியும்? அவன் அணுகப்பட முடியாதவன் என்பது எனது கருத்து. சக்தியுடன் பரந்திருக்கும் அவன், போரில் அளவிலா பலத்தைக் கொண்டிருக்கிறான். தேவர்கள், அசுரர்கள், மனிதர்களுடன் கூடிய மூன்று உலகங்களையும் அவன் {விருத்திரன்} விழுங்கிவிட வல்லவனாக இருக்கிறான். எனவே, சொர்க்கவாசிகளே கேளுங்கள், இதுவே எனது தீர்மானம். விஷ்ணுவின் வசிப்பிடம் சென்று, அந்த உயர் ஆன்மா கொண்டவருடன் {பரமாத்மாவுடன்} சேர்ந்து ஆலோசித்து, இந்த இரக்கமற்ற இழிந்தவனைக் கொல்லும் வழிமுறைகளை அறிந்து கொள்ள வேண்டும்” என்றான் {இந்திரன்}.


சல்லியன் தொடர்ந்தான், “இப்படி இந்திரன் பேசிய நிலையில், முனிவர்கள் கூட்டத்துடன் சேர்ந்த தேவர்கள், அனைத்தையும் பாதுகாப்பவனின் {இந்திரனின்} பாதுகாப்பின் கீழ் தங்களைக் கொண்டு, வலிமைமிக்க தெய்வமான விஷ்ணுவிடம் சென்றார்கள். விருத்திரனிடம் கொண்ட பேரச்சத்தால் பீடிக்கப்பட்ட அவர்கள், தெய்வங்களுக்குத் தலைமையான தெய்வத்திடம் {விஷ்ணுவிடம்}, “முற்காலங்களில் மூன்று உலகங்களையும் மூன்று காலடிகளில் நீ மூடினாய். ஓ! விஷ்ணு, நறுஞ்சுவையுடைய விண்ணுணவை {அமுதத்தை} கொள்வனவு செய்து {சேகரித்து}, போரில் அசுரர்களை அழித்தாய். பெரும் அசுரனான பலியைக் கட்டி, இந்திரனை சொர்க்கத்தின் அரியணைக்கு உயர்த்தினாய். தேவர்களுக்குத் தலைவனான நீ, இந்த அண்டம் முழுவதும் பரவியிருக்கிறாய். நீயே, மனிதர்கள் அனைவராலும் வணங்கப்படும் பலமிக்கத் தேவனான தெய்வம் {விஷ்ணு}. ஓ! தேவர்களில் சிறந்தவனே {விஷ்ணுவே}, இந்திரனுடன் கூடிய அனைத்து தேவர்களுக்கும் நீயே புகலிடம் ஆவாய்! ஓ! அசுரர்களைக் கொல்பவனே, அண்டம் முழுவதும் விருத்திரன் பரவியிருக்கிறானே” என்றார்கள்.

அதற்கு விஷ்ணு {தேவர்களிடம்}, “உங்களுக்கு நன்மையானவை எதற்கும் நான் கட்டுப்பட்டிருக்கிறேன் என்பதில் ஐயமில்லை. எனவே, அவனை {விருத்திரனை} அழிக்கக்கூடிய சூழ்ச்சியை நான் உங்களுக்குச் சொல்கிறேன். ரிஷிகளும், கந்தர்வர்களுமாகிய நீங்கள் அண்ட வடிவைத் தாங்கியிருக்கும் விருத்திரன் இருக்கும் இடத்திற்குச் சென்று அவனிடம் ஒரு சமரசங் கொள்ளுங்கள். இப்படியே நீங்கள் அவனைத் வீழ்த்துவதில் வெல்வீர்கள். தேவர்களே, காட்சிக்குப் புலப்படாமல் இருந்து, ஆயுதங்களில் சிறந்த இந்திரனின் வஜ்ரத்துக்குள் நான் நுழைவேன். எனது சக்தியின் அறத்தால், இந்திரன் வெற்றியை அடைவான். ஓ! தேவர்களில் முதன்மையானவர்களே, முனிவர்கள் மற்றும் கந்தர்வர்களுடன் புறப்படுங்கள். இந்திரனுக்கும் விருத்திரனுக்கும் இடையில் அமைதியை ஏற்படுத்துவதில் தாமதம் இல்லாமலிருக்கட்டும்” என்றான் {விஷ்ணு}.

சல்லியன் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அவன் {விஷ்ணு} இப்படிப் பேசியதும், முனிவர்களும் தேவர்களும் இந்திரனைத் தலைமையாகக் கொண்டு ஒன்று சேர்ந்து சென்றனர். பிறகு இந்திரனை அணுகிய அவர்கள், பத்து திக்குகளையும் எரிக்கும் பிரகாசத்துடனும், மூன்று உலகங்களையும் விழுங்கி விடுவது போல, சூரியனையோ சந்திரனையோ ஒத்திருந்த விருத்திரனைக் கண்டார்கள். பிறகு, விருத்திரனிடம் வந்த முனிவர்கள், அவனிடம் சமரசமாக, “ஓ! வெல்லப்பட முடியாதவனே, இந்த முழு அண்டத்திலும் உனது சக்தி பரவியிருக்கிறது. எனினும், ஓ! வலிமைமிக்கவைகளில் சிறந்தவனே, உன்னால் இந்திரனை வீழ்த்த முடியவில்லை. நீ போரிட ஆரம்பித்து நீண்ட காலம் கடந்துவிட்டது. தேவர்கள், அசுரர்கள், மனிதர்களுடன் கூடிய அனைத்து உயிரினங்களும் இந்தப் போரின் விளைவுகளால் துன்புறுகின்றனர். உனக்கும் இந்திரனுக்கும் இடையில் நித்தியமான நட்பு விளையட்டுமாக. நீ மகிழ்ச்சி அடைந்து, இந்திரலோகங்களில் நித்தியமாக வசிப்பாயாக!” என்றனர்.

துறவிகளின் இந்த வார்த்தைகளைக் கேட்ட வலிமைமிக்க விருத்திரன், அவர்களுக்குத் தலைவணங்கினான். பிறகு அந்த அசுரன் {விருத்திரன்}, “ஓ! உயர்ந்த கொடை பெற்றவர்களே, நீங்களும் இந்தக் கந்தர்வர்கள் அனைவரும் சொல்வதை நான் கேட்டேன். களங்கமற்றவர்களே, நான் சொல்லப் போவதையும் நீங்கள் கேளுங்கள். நான், இந்திரன் ஆகிய எங்கள் இருவருக்குள் எப்படி அமைதி ஏற்பட முடியும்? தேவர்களே, இரு பகை சக்திகளுக்குள் எப்படி நட்பிருக்க முடியும்?” என்று கேட்டான்.

அதற்கு அந்த முனிவர்கள் {விருத்திரனிடம்}, “நீதிமான்களுக்கிடையில் முதல் சந்திப்பிலேயே நட்பு ஏற்பட்டு விடும். அதுவே விரும்பத்தக்கதுமாகும். அதன் பின்னர், என்ன விதிக்கப்படுகிறதோ அதுவே நடக்கும். எனவே, நல்லோரின் நட்பு யாசிக்கப்பட வேண்டும். நல்லோருடனான நட்பு என்பது அற்புத செல்வமாகும் (செல்வத்தைப் போன்றதாகும்). ஏனெனில், தேவையேற்படும்போதெல்லாம் ஒரு விவேகி தனது ஆலோசனையை {ஒரு நண்பனுக்குக்} கொடுப்பான். நல்ல மனிதனிடம் கொள்ளும் நட்பு அதிகப் பயனுடையதாகும்; எனவே, விவேகிகள் நல்லோரைக் கொல்ல விரும்பலாகாது. நல்லோரால் மதிக்கப்படும் இந்திரன், பரந்த மனப்பான்மை கொண்ட மனிதர்களுக்குப் புகலிடமாக இருக்கிறான். வாய்மையுடையவனாக, குற்றமற்றவனாக, அறமறிந்தவனாக, நுண்ணிய நீதியை அறிந்தவனுமாக அவன் {இந்திரன்} இருக்கிறான். மேற்சொன்ன படி உனக்கும் இந்திரனுக்கும் இடையில் நித்தியமான நட்பு இருக்கட்டும். இவ்வழியில், {இந்திரனிடம்} நம்பிக்கை வை; உனது இதயத்தில் வேற்றுமை கொள்ளாதே”, என்றனர்”.

சல்லியன் {யுதிஷ்டிரனிடம்} சொன்னான், “பெருமுனிவர்களின் இச்சொற்களைக் கேட்ட அந்த ஒப்பற்ற அசுரன் {விருத்திரன்} அவர்களிடம், இயல்புக்குமிக்க சக்திகளைக் கொண்ட முனிவர்கள் என்னால் மதிக்கப்பட வேண்டும் என்பதில் ஐயமில்லை. தேவர்களே, நான் சொல்லப் போகிறவை முழுமையாக நடத்தப்படட்டும்; பிறகு, நான் (இந்த) பிராமணர்களில் சிறந்தவர்கள் என்னிடம் சொன்னவாறு அனைத்தையும் செய்கிறேன். பிராமணக் குலத்தின் தலைவர்களே, உலர்ந்தவற்றினாலோ, ஈரமானவையினாலோ, கல்லினாலோ, மரத்தினாலோ, நெருக்கமான போரில் பயன்படும் ஆயுதங்களாலோ, ஏவுகணைகளாலோ, பகலிலோ, இரவிலோ, இந்திரனோ, தேவர்களோ என்னைக் கொல்லாத வகையில் அவர்களுக்குக் கட்டளையிடுவீராக! அந்த நிபந்தனைகளின் பேரிலேயே இந்திரனுடனான சமாதானம் என்னால் ஏற்கப்படும்” என்றான் {விருத்திரன்}. ஓ! பாரதக் குலத்தில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, அதற்கு அந்த முனிவர்கள் அவனிடம் “நல்லது” என்றனர்.

இப்படி அமைதி தீர்மானிக்கப்பட்டதும், விருத்திரன் மிகவும் மகிழ்ந்தான். விருத்திரனைக் கொல்லும் நினைவால் அடிக்கடி நிரப்பப்பட்டாலும் இந்திரனும் மகிழ்ச்சியடைந்தான். அந்தத் தேவர்கள் தலைவன் (மனதில்) அமைதியில்லாமல், தப்பும் வழி தேடி தனது நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்தான். ஒரு குறிப்பிட்ட நாளின் மாலைப்பொழுதில் பயங்கரமான நேரத்தில், கடற்கரையில் அந்தப் பலமிக்க அசுரனை அவன் {இந்திரன்} கண்டான். அந்த ஒப்பற்ற அசுரனுக்கு {விருத்திரனுக்கு} அருளப்பட்ட வரத்தை நினைத்துப் பார்த்து, “இஃது ஒரு பயங்கரமான மாலைப்பொழுது. இது பகலுமல்ல, இரவுமல்ல. என்னிடம் இருந்து அனைத்தையும் அபகரித்த இந்த விருத்திரன் எனது எதிரி. இவன் என்னால் கொல்லப்பட வேண்டியவன் என்பதில் சந்தேகமில்லை. ஏமாற்றியாவது பெரும் அளவில் இருக்கும் இந்தப் பெரும் பலமிக்க அசுரனை நான் கொல்லவில்லையானால், எனக்கு நன்மையுண்டாகாது” என்றான் {இந்திரன்}.

இப்படி நினைத்த இந்திரன், விஷ்ணுவை மனதில் நினைத்த மாத்திரத்தில் பெரும் மலையெனக் கடலில் நுரைக்குவியல் இருப்பதைக் கண்டான். பிறகு அவன், “இஃது {கடல் நுரை} உலர்ந்தோ, ஈரமாகவோ இல்லை. இஃது ஆயுதமும் அல்ல; நான் இதை விருத்திரன் மீது ஏவப் போகிறேன். அவன் உடனே இறந்துவிடுவான் என்பதில் ஐயமில்லை” என்று சொன்னான் {இந்திரன்}. பிறகு அவன் வஜ்ரத்தை {வஜ்ரத்தின் சக்தியை} அந்த நுரையில் கலந்து விருத்திரன் மீது வீசினான். அந்த நுரைக்குள் நுழைந்திருந்த விஷ்ணு, விருத்திரனின் உயிருக்கு ஒரு முடிவைக் கொண்டுவந்தான். விருத்திரன் கொல்லப்பட்ட போது, திக்குகள் இருளற்றதாகின; அங்கே இனிய தென்றல் வீசியது; அனைத்து உயிர்களும் மகிழ்ந்தன. கந்தர்வர்கள், யக்ஷர்கள், ராட்சசர்களுடன் கூடிய தேவர்கள், பெரும்பாம்புகள், துறவிகள் ஆகியோர் பல்வேறு துதிப்பாடல்களால் வலிமைமிக்க இந்திரனைப் புகழ்ந்தனர்.

அனைவராலும் வணங்கப்பட்ட அந்த இந்திரன் அனைவருக்கும் ஊக்கம் தரும் சொற்களைப் பேசினான். அனைத்து தேவர்களையும் போலவே, தனது எதிரியைக் கொன்றதால் அவன் இதயமும் மகிழ்ந்தது. அந்த அறத்தின் இயல்பை அறிந்த அவன் {இந்திரன்}, உலகில் உள்ள அனைத்துப் பொருட்களைவிடவும் போற்றுதலுக்குரிய விஷ்ணுவை வணங்கினான். தேவர்களுக்குப் பயங்கரனான பலமிக்க விருத்திரன் கொல்லப்பட்டதும், பொய்மையினால் {அசத்தியத்தால்} மூழ்கடிக்கப்பட்ட இந்திரன் மிகுந்த துயரத்துக்குள்ளானான்; மேலும், துவஷ்டியரின் மகனான மூன்று தலையனைக் {திரிசிரனைக்} கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தியினாலும் மூழ்கடிக்கப்பட்டான். உலகங்களின் எல்லைகளுக்குள்ளே தஞ்சம்புகுந்து {உலகங்களின் கோடியை அடைந்து}, உணர்வுகளையும், சுயநினைவையும் இழந்தான். தனது பாவங்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த அவன் {இந்திரன்}, ஒருவராலும் அறியப்படாமல் இருந்தான். நெளிந்து கொண்டிருக்கும் பாம்பைப் போல அவன் நீருக்குள் மறைந்து கிடந்தான்.

பிரம்மஹத்தியினால் ஏற்பட்ட அச்சத்தினால் ஒடுக்கப்பட்ட தேவர்கள் தலைவன் {இந்திரன்}, காட்சியில் இருந்து இப்படி மறைந்து போன போது, அழிவைக் கடந்திருந்ததைப் போலப் பூமி காட்சியளித்தது. அது {பூமி} மரங்களற்று, காடுகளற்று, ஆறுகளின் ஓட்டங்கள் தடை செய்யப்பட்டுக் கிடந்தது; நீர்த்தேக்கங்கள் தங்கள் நீரனைத்தையும் இழந்தன; மழை நின்று போனதால், விலங்குகள் மத்தியில் துன்பமே நிலவியது. தேவர்களும், பெருமுனிவர்கள் அனைவரும் பெரும் அச்சத்தில் இருந்தனர்; மன்னனில்லாத உலகம், பேரழிவுகளால் மூழ்கடிக்கப்பட்டது. சொர்க்கத்தில் இருந்த தேவர்களும், தெய்வீக முனிவர்களும், தேவர்கள் தலைவனிடம் இருந்து பிரிந்ததால், அச்சமுற்று, தங்களுக்கு யார் மன்னன் என்று கவலைப்பட்டனர். ஒருவரும் தேவர்களின் மன்னனாகச் செயல்பட விரும்பவில்லை” என்றான் {சல்லியன்} 

*********************************

தொடர்புடைய பதிவுகள்
 
இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Audio பதிவிறக்கம்

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்