Sunday, January 11, 2015

நகுஷனின் தீய எண்ணம்! - உத்யோக பர்வம் பகுதி 11

The vicious thought of Nahusha! | Udyoga Parva - Section 11 | Mahabharata In Tamil


(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 11)

பதிவின் சுருக்கம் : தேவர்களும் முனிவர்களும் சேர்ந்து நகுஷனைத் தேவலோக மன்னனாக்குவது; நல்லவனாக இருந்த நகுஷன் சிற்றின்பத்தில் மூழ்கித் திளைப்பது; தேவர்களும் பலரும் நகுஷனுக்குச் சேவை செய்வது; இந்திராணியைக் கண்ட நகுஷன், தனது இல்லத்திற்கு அவளை வரச்சொன்னது; இந்திராணி பிருஹஸ்பதியிடம் தஞ்சமடைந்தது; இதனால் நகுஷன் கோபமடைவது...

சல்லியன் {யுதிஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு முனிவர்களும், மேன்மையான தேவர்களும், “அழகிய நகுஷன் {நஹுஷன், Nahusha}, தேவர்களின் மன்னனாக முடிசூடப்படட்டும். அவன் சக்திவாய்ந்தவனாகவும், புகழ்பெற்றவனாகவும், எப்போதும் அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்தவனாகவும் இருக்கிறான்” என்று சொன்னார்கள். பிறகு அவர்கள் அனைவரும் அவனிடம் {நகுஷனிடம்} சென்று, “ஓ! பூமியின் தலைவா, நீ எங்கள் மன்னனாக இருப்பாயாக!” என்றனர். தனது நலனின் நோக்கம் கொண்ட நகுஷன், (மனிதகுலத்தின்) மூதாதையர்களுடன் சேர்ந்திருந்த அந்தத் தேவர்களிடம், “நான் திடனற்றவனாக இருக்கிறேன்; எனக்கு உங்களைப் பாதுகாக்கும் திறன் இல்லை; பலமிக்க ஒருவனே உங்கள் மன்னனாக இருக்க வேண்டும்; அந்த வலிமையைப் பெற்றவனாக எப்போதும் இந்திரனே இருந்து வந்திருக்கிறான்” என்றான்.


அதற்குத் தேவர்கள் {நகுஷனிடம்}, “எங்கள் தவ அறத்தின் துணை கொண்டு நீ சொர்க்கத்தை ஆட்சி செய்வாயாக. எங்கள் அனைவருக்கும் அவரவருக்கென்று {தனித்தனி} அச்சங்கள் உண்டு என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஓ! ஏகாதிபதிகளின் தலைவா {நகுஷா}, சொர்க்கத்தின் மன்னனாக நீ முடிசூட்டிக் கொள்வாயாக. உன் பார்வையின் பரப்பில் நிற்பவன் எவனும், அவன் தேவனோ, அசுரனோ, யக்ஷனோ, துறவியோ, பித்ரியோ, கந்தர்வனோ, யாராக இருப்பினும், நீ அவர்களது சக்தியை உறிஞ்சி {கிரகித்து} (அதனால்) பலத்தில் வளர்வாய். (அனைத்துப் பொருள்களுக்கும்) முன்பாக அறத்தை நிறுத்தி நீ உலகங்களின் ஆட்சியாளனாவாயாக. பிரம்ம முனிவர்களையும் {பிரம்மரிஷிகளையும், பிராமணத் துறவிகளையும்}, சொர்க்கத்தில் இருக்கும் தேவர்களையும் நீ காப்பாயாக!” என்றனர்.

பிறகு, ஓ! ஏகாதிபதிகளின் தலைவா {யுதிஷ்டிரா}, நகுஷன், சொர்க்கத்தின் மன்னனாக முடிசூட்டப்பட்டான். (அனைத்துக்கும் முன்பாக) அறத்தை நிறுத்தி, அவன் அனைத்து உலகங்களின் ஆட்சியாளன் ஆனான். அவன் எப்போதும் அறம்சார்ந்த நிலை கொண்டவனாக இருந்திருந்தாலும், இந்த விலைமதிப்பில்லா வரத்தையும், சொர்க்கத்தின் அரசாட்சியையும் அடைந்ததால், அவனது {நகுஷனது} மனம் சிற்றின்பத்தை நோக்கித் திரும்பியது. நகுஷன், தேவர்களின் மன்னன் ஆனதும், தன்னைச் சுற்றி தேவ கன்னியரையும், தெய்வீக பிறப்புடைய காரிகையரையும் சூழ நிறுத்திக் கொண்டு, நந்தனத் தோப்புகளிலும், கைலாய மலையிலும், இமயத்தின் சிகரத்திலும், மந்தரத்திலும், வெண்மலையான சஹ்யத்திலும், மகேந்திரத்திலும், மலையத்திலும், கடல்களிலும், நதிகளிலும் பல்வேறு விதமான இன்பங்களில் ஈடுபட்டான். செவி, இதயம் ஆகிய இரண்டையும் கொள்ளை கொள்ளும் பல்வேறு தெய்வீக விளக்கவுரைகளையும், பல்வேறு வகையான இசைக்கருவிகளின் இசைப்பொலிகளையும், இனிய குரல் வேறுபாடுகளையும் அவன் செவிமடுத்தான்.

விஸ்வாவசு, நாரதர், தேவ கன்னியரின் படை, கந்தர்வர்களின் குழுக்கள், உயிர் வடிவங்களில் இருந்த ஆறு பருவ காலங்கள் ஆகியோர் தேவர்களின் மன்னனைக் கவனித்துக் கொண்டனர். உற்சாகமூட்டும் நறுமணமிக்கக் குளிர்ந்த தென்றல் அவனைச் சுற்றி வீசிக் கொண்டிருந்தது. அந்த இழிந்தவன் {நகுஷன்} அப்படி இன்புற்றிருந்த போது, ஒரு சந்தர்ப்பத்தில், இந்திரனுக்குப் பிடித்தமான ராணியும் தேவியுமானவள் {சச்சி, இந்திராணி} அவனது {நகுஷனது} பார்வையில் பட்டாள். அந்தத் தீய ஆன்மா {நகுஷன்}, அவளைப் பார்த்த பின்னர் {தனது} சபை உறுப்பினர்களிடம், “இந்திரனின் ராணியான, இந்தத் தேவி {சச்சி}, என்னை ஏன் கவனிக்கவில்லை? நான் தேவர்களின் ஏகாதிபதியும், உலகங்களின் ஆட்சியாளனுமாவேன். சச்சி விரைவாக என் வீட்டிற்கு வந்து என்னைச் சந்திக்கட்டும்!” என்றான் {நகுஷன்}.

இதைக்கேட்டு வருத்தப்பட்ட அந்தத் தேவி {சச்சி}, பிருஹஸ்பதியிடம் {பிரகஸ்பதியிடம்}, “ஓ! அந்தணரே, என்னை இந்த நகுஷனிடம் இருந்து காப்பாற்றும். என்னைப் பாதுகாத்துக் கொள்ளவே நான் உம்மிடம் வந்திருக்கிறேன். ஓ! அந்தணரே, தெய்வீக மன்னனுக்கு {இந்திரனுக்குப்} பிடித்தமானவளாக இருக்கும் என்னிடம், அனைத்து மங்கலக் குறிகளும் இருப்பதாகவும், என் தலைவனுக்கு அர்ப்பணிப்புடன், கற்புடனும் இருக்கும் நான் விதவையாவதற்கான விதி இல்லை என்றும் நீர் எப்போதும் சொல்லி வந்துள்ளீர். இவை யாவையும் எனக்கு முன்னர்ச் சொல்லியிருக்கிறீர். உமது சொற்கள் உண்மையாகட்டும். ஓ! பெரும் சக்திகளைக் கொண்டவரே, ஓ! தலைவா {பிருஹஸ்பதியே}, வீணான சொற்களை நீர் பேசியதில்லை. எனவே, ஓ அந்தணர்களில் சிறந்தவரே, நீர் சொன்ன இவை யாவும் உண்மையாகட்டும்” என்றாள் {இந்திராணியான சச்சி}.

பிறகு, பிருஹஸ்பதி, தன்னருகில் அச்சத்துடன் இருந்த இந்திரனின் ராணியிடம் {சச்சியிடம்}, “ஓ! தேவி {சச்சி}, என்னால் உனக்குச் சொல்லப்பட்டதெல்லாம் உண்மையாகும் என்பது உறுதி. விரைவில் இங்கே திரும்பி வரும் தேவர்கள் தலைவனான இந்திரனை நீ காண்பாய். உனக்கு நகுஷனிடம் இருந்து எந்த அச்சமும் இருக்காது; இந்திரனுடன் நீ விரைவில் இணைவாய் என்பதை நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன்” என்றார் {பிருஹஸ்பதி}. இப்போது, ஆங்கீரசின் மகனான பிருஹஸ்பதியிடம் இந்திரனின் ராணி {சச்சி} தஞ்சமடைந்தாள் என்பதை நகுஷன் கேள்விப்பட்டான். இதனால் அந்த மன்னன் {இந்திரனான நகுஷன்} கடுங்கோபம் கொண்டான்.

***************************
தொடர்புடைய பதிவுகள் 
  1. இப்பதிவின் PDF பதிவிறக்கம்
    இப்பதிவின் Audio பதிவிறக்கம்


    இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்