Saturday, January 17, 2015

இந்திரனைத் தேடிய அக்னி! - உத்யோக பர்வம் பகுதி 15

Agni searched for Indra! | Udyoga Parva - Section 15 | Mahabharata In Tamil


(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 15)

பதிவின் சுருக்கம் : நகுஷனின் பலம் குறித்து இந்திரன் சச்சியிடம் சொன்னது; சச்சி முனிவர்களால் இழுக்கப்படும் தேரில் நகுஷனை வரச்சொன்னது; நகுஷன் முனிவர்களைத் தேரில் பூட்டியது; சச்சி பிருஹஸ்பதியிடம் இந்திரனை விரைவாகத் தேடச் சொன்னது; பிருஹஸ்பதி அக்னியைக் கொண்டு இந்திரனைத் தேடியது; அக்னியால் இந்திரனைக் காண முடியாதது; அக்னி தனது இயலாமையைப் பிருஹஸ்பதியிடம் சொன்னது ...

சல்லியன் {யுதிஷ்டிரனிடம்} சொன்னான், “சச்சியால் இப்படிச் சொல்லப்பட்ட அந்த ஒப்பற்ற தேவன் {இந்திரன்} அவளிடம் {சச்சியிடம்}, மீண்டும், “இது வீரத்தைக் காட்ட வேண்டிய நேரமன்று. நகுஷன் என்னைவிடப் பலவானாக இருக்கிறான். ஓ! அழகிய மங்கையே {சச்சி}, தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் முனிவர்களால் கொடுக்கப்பட்ட காணிக்கைகளின் தகுதியால் {பலத்தால்} அவன் {நகுஷன்} பலமூட்டப்பட்டிருக்கிறான். இது சம்பந்தமாக நான் ஒரு கொள்கையை {தீர்மானத்தை} எட்டியிருக்கிறேன். ஓ! தேவி {சச்சி}, நீயே அதனைச் செய்ய வேண்டியிருக்கும். ஓ! மங்கையே {சச்சியே}, நீ அதைக் கமுக்கமாகச் செய்ய வேண்டும். மேலும் அதை யாரிடமும் நீ சொல்லக்கூடாது. ஓ! அழகிய இடை கொண்ட மங்கையே {சச்சியே}, நகுஷனிடம் தனிமையில் சென்று, அவனிடம், “ஓ! அண்டத்தின் தலைவா {நகுஷா}, முனிவர்களால் சுமக்கப்படும் அழகிய வாகனத்தில் ஏறி நீர் என்னைச் சந்திக்க வேண்டும். அப்படிச் செய்தால் நான் மகிழ்ந்து, என்னை உம்மிடம் கொடுப்பேன்” என்று நீ சொல்ல வேண்டும்” என்றான் {இந்திரன்}.


தேவர்கள் மன்னனால் {இந்திரனால்} இப்படிச் சொல்லப்பட்ட அந்தத் தாமரைக் கண் கொண்ட அவனது மனைவி {சச்சி}, அதற்குத் தனது சம்மதத்தைத் தெரிவித்து நகுஷனிடம் சென்றாள். அவளை {சச்சியைக்} கண்ட நகுஷன், புன்னகையுடன் அவளிடம், “ஓ! அழகிய தொடைகளைக் கொண்ட மங்கையே {சச்சி}, உனக்கு நல்வரவு. ஓ! இனிய புன்னகை கொண்டவளே, உனக்கு இன்பமானது எது? ஓ! நற்பார்வை கொண்ட மங்கையே, உன்னிடம் அர்ப்பணிப்புக் கொண்ட என்னை நீ ஏற்றுக் கொள்வாயாக. ஓ! உற்சாகமானக் காரிகையே {சச்சி}, உன் விருப்பம் என்ன? ஓ! நற்பார்வை கொண்ட மங்கையே, கொடியிடையாளே, நான் உனது விருப்பத்தையே செய்வேன். ஓ! அழகிய இடை கொண்டவளே, நீ வெட்கமடையத் தேவையில்லை. என்னிடம் நீ நம்பிக்கை வைப்பாயாக. ஓ! தேவி, உண்மையின் {சத்தியத்தின்} பேரால், நீ சொல்வதையே நான் செய்வேன்” என்றான் {நகுஷன்}.

அதற்குச் சச்சி {நகுஷனிடம்}, “ஓ! அண்டத்தின் தலைவா {நகுஷரே}, நீர் எனக்கு நிர்ணயித்திருக்கும் காலமே எனக்கு வேண்டியது. அதன்பிறகு, ஓ! தேவர்களின் தலைவா, நீர் எனது கணவனாகலாம். எனக்கு ஒரு விருப்பமிருக்கிறது. ஓ! தேவர்களின் மன்னா, அதைக் கவனித்துக் கேட்பீராக. ஓ! மன்னா, நான் சொல்வதை நீர் செய்ய வேண்டும் என்றே நான் சொல்வேன். நீர் என் மீது கொண்டிருக்கும் அன்பின் நிமித்தமாகவே இதை நான் கோருகிறேன். நீர் அதை அருளினால், நான் உம் வசம் இருப்பேன். இந்திரர் தன்னைச் சுமக்க, குதிரைகள், யானைகள் மற்றும் தேர்களை வைத்திருந்தார். ஓ! தேவர்கள் மன்னா, விஷ்ணு, ருத்ரன் {சிவன்}, அசுரர்கள், ராட்சசர்கள் ஆகியோர் யாரிடமும் இல்லாத புதுமையான ஒரு வாகனத்தை நீர் கொண்டிருக்க வேண்டும் என்று, ஓ! தலைவா, நான் விரும்புகிறேன். கண்ணியமிக்க உயர்ந்த முனிவர்கள் ஒன்றுகூடி, உம்மைப் பல்லக்கில் வைத்து சுமக்கட்டும். எனக்குத் தோன்றுவது இதுவே. அசுரர்களுக்கோ, தேவர்களுக்கோ சமமானவராக நீர் உம்மைக் கருதக்கூடாது. யாரையெல்லாம் நீர் பார்க்கிறீரோ அவர்களின் பலத்தையெல்லாம் நீர் கிரகித்துக் கொள்கிறீர். உம் முன்னிலையில் நிற்கும் பலமுடையவர் யாரும் இல்லை” என்றாள் {சச்சி}.

சல்லியன் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இப்படிச் சொல்லப்பட்ட நகுஷன் மிகவும் மகிழ்ந்தான். பிறகு அந்தத் தேவர்கள் தலைவன் {நகுஷன்}, அந்தக் களங்கமற்ற மங்கையிடம் {சச்சியிடம்}, “ஓ! அழகிய நிறம் கொண்ட மங்கையே, இதற்கு முன் கேள்விப்படாத ஒரு வாகனத்தையே நீ சொல்லியிருக்கிறாய். ஓ! தேவி, நான் அதை மிகவும் விரும்புகிறேன். ஓ அழகிய முகம் கொண்டவளே, நான் உனது கட்டுப்பாட்டில் இருக்கிறேன். தன்னைத் தாங்குவதற்கு முனிவர்களை ஈடுபடுத்துபவன் பலவீனனாக இருக்க முடியாது. நான் தவங்கள் பயின்றவன், மேலும் நான் பெரும் பலமிக்கவனுமாவேன். இறந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலங்களுக்கு நானே தலைவன். நான் சினமுற்றால் இந்த அண்டமே இல்லாது போய்விடும். இந்த முழு அண்டமும் என்னிலேயே நிறுவப்பட்டுள்ளது. ஓ! அழகிய புன்னகை கொண்டவளே, தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், பாம்புகள், ராட்சசர்கள் ஆகியோர் ஒன்றுகூடியிருந்தாலும், ஆத்திரம் கொள்ளும் என்னை அவர்கள் அனைவராலும் சமாளிக்க முடியாது. எவனை நான் பார்த்தாலும், அவனது ஆற்றல் அவனிடம் இருந்து அகன்றுவிடும். ஓ! தேவி, உனது கோரிக்கை நிறைவேறும் என்பதில் ஐயமில்லை. ஏழு முனிவர்களும் {சப்தரிஷிகளும்}, மறுபிறப்பாள {பிராமண} முனிவர்களும் என்னைச் சுமக்கட்டும். ஓ! அழகிய நிறம் கொண்ட மங்கையே, எந்தன் பெருமையையும், காந்தியையும் நீ காண்பாய்” என்றான் {நகுஷன்}.

சல்லியன் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அழகிய முகம் கொண்ட அந்தத் தேவியிடம் {சச்சியிடம்} இப்படிப் பேசிய அவன் {நகுஷன்}, அவளுக்கு விடை கொடுத்தனுப்பி, தவப்பயிற்சிக்குத் தங்களை அர்ப்பணித்திருந்த எண்ணற்ற துறவிகளைத் தனது தெய்வீகத் தேரில் பூட்டினான். பலம் கொண்டவனும், கர்வத்தால் போதை கொண்டவனும், நிலையற்றவனும், இழிந்த ஆன்மா கொண்டவனும், அந்தணர்களை அலட்சியம் செய்பவனுமான அவன் {நகுஷன்}, தன்னைச் சுமக்கத் துறவியரை நியமித்தான். அதே வேளையில், நகுஷனால் அனுப்பப்பட்ட சச்சி, பிருஹஸ்பதியிடம் சென்று, “நகுஷன் எனக்கு அளித்திருக்கும் காலத்தில் சொற்பமே மீதம் இருக்கிறது. உம்மை மதிக்கும் என்னிடம் கருணை கொண்டு, இந்திரரை விரைவில் கண்டுபிடிப்பீராக!” என்றாள் {சச்சி}.

அதற்கு ஒப்பற்ற பிருஹஸ்பதி அவளிடம் {சச்சியிடம்}, “மிக்க நன்று. ஓ! தேவி, தீய ஆன்மா கொண்ட நகுஷனிடம் நீ அஞ்ச வேண்டாம். அவன் {நகுஷன்} தனது சக்தியை நீண்ட காலம் பெற்றிருக்க மாட்டான். ஓ! அழகிய காரிகையே, தன்னைச் சுமக்கப் பெரும் துறவியரை நியமித்த காரணத்தால், உண்மையில், அறத்தைக் கருதிப் பார்க்காத அந்த இழிந்தவன் ஏற்கனவே வீழ்ந்துவிட்டான். அந்த இழிந்த தீயவன் அழிவடைய, நான் ஒரு வேள்வியைச் செய்வேன். இந்திரனை நான் கண்டுபிடிப்பேன். அஞ்சாதே. உனக்கு நன்மையே விளையட்டும்” என்றார் {பிருஹஸ்பதி}.

அதன்பேரில் மதிப்புமிக்கத் தேவனான எரிந்த காணிக்கைகளை உண்பவன் {அக்னி}, தன்னுருவை விட்டு, பெண்ணுருக் கொண்டு, அந்த இடத்தில் இருந்து உடனே மறைந்து போனான். மனோ வேகம் கொண்ட அவன் {அக்னி}, மலைகள், காடுகள், பூமி, வானம் ஆகிய அனைத்து இடங்களிலும் தேடிப் பார்த்துவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் பிருஹஸ்பதியிடம் திரும்பி வந்தான்.

பிறகு அக்னி பிருஹஸ்பதியிடம், இவ்விடங்களில் எல்லாம் தேவர்களின் மன்னனை {இந்திரனை} என்னால் காண முடியவில்லை. நீர் கொள்ளிடங்கள் மட்டுமே தேட வேண்டியதில் மீதம் இருக்கின்றன. நீருக்குள் நுழைவதில் நான் எப்போதும் பின்தங்குவேன். அதற்குள் செல்வதற்கு எனக்கு வழி கிடையாது. ஓ! அந்தணரே, நான் உமக்கு என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான். அதற்கு அந்தத் தேவர்களின் ஆசான் {பிருஹஸ்பதி}, அவனிடம் {அக்னியிடம்}, “ஓ! ஒப்பற்ற தேவா {அக்னி}, நீருக்குள் நீ நுழைவாயாக” என்றார்.

அதற்கு அக்னி {பிருஹஸ்பதியிடம்}, “என்னால் நீருக்குள் நுழைய முடியாது. அங்கே எனக்கு அழிவு காத்திருக்கிறது. ஓ! பெரும் பிரகாசம் கொண்டவரே, நான் என்னை உம்மிடம் ஒப்படைக்கிறேன். நீர் எனக்கு நன்மையைச் செய்வீராக! கல்லில் இருந்து, இரும்பு பிறந்தது போலவும், புரோகித சாதியில் இருந்து, போர்ச்சாதி உதித்தது போலவும், நீரிலிருந்தே நெருப்பு உதித்தது. அனைத்துப் பொருட்களையும் ஊடுருவும் இவற்றின் சக்தி, தாங்கள் உதித்த தோற்றுவாயிடம் எடுபடுவதில்லை” என்றான் {அக்னி}.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Audio பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்