Sunday, January 25, 2015

கோபத்துடன் பேசிய கர்ணன்! - உத்யோக பர்வம் பகுதி 21

Karna spoke wrathfully! | Udyoga Parva - Section 21 | Mahabharata In Tamil


(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 21)

பதிவின் சுருக்கம் :புரோகிதரின் வார்த்தைகளைப் பீஷ்மர் ஏற்பது; பீஷ்மரின் பேச்சை இடைமறித்த கர்ணன் கோபத்துடன் துரியோதனனுக்கு ஆதரவாகப் பேசுவது; பீஷ்மர் கர்ணனை அதட்டுவது; திருதராஷ்டிரன் கர்ணனை அதட்டுவது; துருபதனின் புரோகிதரை மீண்டும் பாண்டவர்களிடம் திருதராஷ்டிரன் திருப்பி அனுப்புவது; சபா மண்டபத்துக்குச் சஞ்சயனை அழைத்துப் பேசிய திருதராஷ்டிரன்...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஞானத்தில் மேன்மையானவரும், பெரும் பிரகாசமுடையவருமான பீஷ்மர், அவரது {புரோகிதரது} சொற்களைக் கேட்டு, அவருக்குத் தன் மரியாதைகளைச் செலுத்தி, அந்தச் சந்தர்ப்பத்திற்கு ஏற்ற சொற்களைப் பேசினார். அவர் {பீஷ்மர்}, “நற்பேறினாலேயே அவர்கள் {பாண்டவர்கள்} அனைவரும் கிருஷ்ணனுடன் நலமாக இருக்கின்றனர். நற்பேறினாலேயே அவர்கள் உதவி பெற்றவர்களாகவும், அறத்தில் பற்றுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். நற்பேறினாலேயே அந்தக் குரு குலக் கொழுந்துகள் {பாண்டவர்கள்} தங்கள் சகோதரர்களுடன் அமைதியை விரும்புகிறார்கள்!


நீர் சொன்னது உண்மை என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. எனினும், உமது சொற்கள் மிகக் கூர்மையாக {கடுமையாக} இருப்பதற்குக் காரணம் நீர் அந்தணராயிருப்பதே என என்று நான் நினைக்கிறேன். இங்கேயும், காட்டிலேயும் என இரண்டு இடங்களிலேயும் பாண்டுவின் மகன்கள் துன்புற்றனர் என்பதில் எந்த ஐயமுமில்லை. தங்கள் தந்தை வழி சொத்துகள் அனைத்தையும் அவர்கள் பெற சட்டப்படி தகுதிபெற்றவர்களே என்பதிலும் ஐயமில்லை. பலமான ஆயுதப் பயற்சி பெற்றவனும், பெரும் தேர்வீரனுமாவான் பிருதையின் {குந்தியின்} மகனான அர்ஜுனன். போர்க்களத்தில் யாரால் பாண்டுவின் மகனிடம் தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} தாக்குப்பிடிக்க முடியும். வஜ்ரதாங்கியாலேயே {இந்திரனாலேயே} முடியாதெனும்போது, வேறு எந்த வில்லாளியையும் குறிப்பிடுவது கடினமே. மூன்று உலகங்களுக்கும் நிகரானவன் அவன் {அர்ஜுனன்} என்பது எனது நம்பிக்கை!” என்றார் {பீஷ்மர்}.

பீஷ்மர் இப்படிப் பேசிக் கொண்டிருந்த போது, கோபம் கொண்ட கர்ணன், அவரது {பீஷ்மரது} சொற்களைத் தடை செய்யும் வண்ணம், துரியோதனனைப் பார்த்தபடியே {துருபதன் புரோகிதரிடம்}, “ஓ! அந்தணரே, இவ்வுலகில் இந்த உண்மைகளைப் பற்றிய தகவல் அறியாத எந்த உயிரினமும் இல்லை. அதையே மீண்டும் மீண்டும் சொல்வதால் என்ன நன்மை ஏற்படும்? முன்பு, பகடையாட்டத்தில் சகுனி, துரியோதனன் சார்பாக வென்றான். பாண்டுவின் மகனான யுதிஷ்டிரன் தான் ஏற்றுக் கொண்ட நிபந்தனையின்படி காட்டுக்குச் சென்றான். இப்போதோ அவன் {யுதிஷ்டிரன்} அந்த நிபந்தனையை மதிக்காமல் {குறிப்பிட்ட காலத்தைச் சரியாக நிறைவு செய்யாமல்}, மத்ஸ்யர்கள் மற்றும் பாஞ்சாலர்களின் துணையைப் பெற்றதால் நம்பிக்கை கொண்டு, தனது மூதாதையர் அரியணையைத் திரும்பப் பெற விரும்புகிறான்.

ஓ! கற்றவரே, நீர் துரியோதனனை அச்சுறுத்தினால், அவன் {துரியோதனன்} ஓர் அடி நிலத்தையும் தரமாட்டான். ஆனால், நீதிக்காக அவன் {துரியோதனன்}, முழு உலகத்தையும் ஓர் எதிரிக்குக்கூடக் கொடுத்துவிடுவான். அவர்கள் {பாண்டவர்கள்} தங்கள் மூதாதையர் அரியணையை மீண்டும் பெற விரும்பினால், நிபந்தனையிலுள்ள படி அவர்கள் குறித்த காலத்தைக் காட்டில் {மீண்டும்} கழிக்க வேண்டும். பிறகு, துரியோதனனை அண்டி, பாதுகாப்பாகவும், வளமாகவும் அவர்கள் வாழலாம். எனினும், மந்த புத்தியினால், அவர்கள் முற்றிலும் அநீதியான வழியை நோக்கி மனதைச் செலுத்தாதிருக்கட்டும். எப்படியிருந்தாலும், அறத்தின் பாதையைக் கைவிட்டு, அவர்கள் {பாண்டவர்கள்} போரை விரும்பினால், பாராட்டுக்குத்தகுதியான இந்தக் குருக்களிடம் மோத வேண்டியிருக்கும். அப்போது அவர்கள் {பாண்டவர்கள்} எனது இந்தச் சொற்களை நினைவுகொள்ளட்டும்” என்றான் {கர்ணன்}.

பீஷ்மர் {கர்ணனிடம்}, “ஓ! ராதையின் மகனே {கர்ணா}, உனது பேச்சால் ஏற்படும் பயன் யாது? அந்தப் பிருதையின் மகன் {குந்தியின் மகன் அர்ஜுனன்}, தனியொருவனாகவே ஆறு தேர்வீரர்களை {அதிரதர்களை} போரில் வீழ்த்திய சந்தர்ப்பத்தை நீ நினைத்துப் பார்க்க வேண்டும். இந்த அந்தணர் சொன்னது போல நாம் செயல்படவில்லையென்றால், போரில் நாமனைவரும் அவனால் {அர்ஜுனனால்} கொல்லப்படுவோம் என்பது உறுதி!” என்றார் {பீஷ்மர்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு, திருதராஷ்டிரன், வேண்டிக் கொள்ளும் வகையான சொற்களில் பீஷ்மரை அமைதிப்படுத்தி, ராதையின் மகனை {கர்ணனை} அதட்டி பின்வரும் சொற்களைச் சொன்னான், “சந்தனுவின் மகனான பீஷ்மர் சொன்னது, நமக்கும் பாண்டவர்களுக்கும் எல்லா உலகத்திற்கும் நன்மையே. எனினும், ஆலோசனைக்குப் பிறகு நான் பாண்டுவின் மகன்களிடம் சஞ்சயனை அனுப்புவேன். {என்று கர்ணனிடம் சொல்லி, பிறகு, துருபதனின் புரோகிதரைப் பார்த்து} எனவே, நீர் காத்திருக்க வேண்டியதில்லை. பாண்டுவின் மகனிடம் இன்றே நீர் செல்லும்” என்றான். பிறகு துருபதனின் புரோகிதருக்கு மரியாதை செலுத்திய அந்தக் கௌரவத் தலைவன் {திருதராஷ்டிரன்}, அவரைப் பாண்டவர்களிடம் திருப்பி அனுப்பினான். பிறகு, சபா மண்டபத்திற்குச் சஞ்சயனை அழைத்த அவன் {திருதராஷ்டிரன்}, அவனிடம் {சஞ்சயனிடம்} பின்வரும் சொற்களைச் சொன்னான்.
இப்பதிவின் Audio பதிவிறக்கம்
முகநூல் பின்னூட்டம்


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்