Saturday, January 31, 2015

கிருஷ்ணனே பெரிய நீதிபதி ! - உத்யோக பர்வம் பகுதி 28

Krishna is the great judge! | Udyoga Parva - Section 28 | Mahabharata In Tamil


(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 28)
பதிவின் சுருக்கம் : தன்னை சஞ்சயன் எப்படி நினைக்கிறான், நல்லவனாகவா? தீயவனாகவா என்று யுதிஷ்டிரன் சஞ்சயனிடம் வினவுவது; அறமும் மறமும் வழக்கமான காலங்களிலும் ஆபத்து காலங்களிலும் தங்கள் தன்மைகளை எப்படி மாற்றிக் கொள்கின்றன என்று சொல்வது; ஆபத்து காலத்திலும் விடாமல் தான் நினைப்பதே அறம் என்று இருப்பவன் மெச்சத்தகுந்தவன் அல்ல என்று சொல்வது; முன்னோர் சென்ற வழியையே தான் பின்பற்றுவதாக யுதிஷ்டிரன் உரைப்பது; கிருஷ்ணன் சொல்லும் எந்தக் கருத்தையும் தான் ஏற்பதாக சஞ்சயனிடம் யுதிஷ்டிரன் சொன்னது…

யுதிஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், “ஓ! சஞ்சயரே, நீர் சொல்வது போல, நமது செயல்கள் அனைத்திலும் நீதிமிக்க {நேர்மையான} செயல்களே முதன்மையானவை என்பதில் ஐயமில்லை. எனினும், நான் பயில்வது அறமா {தர்மமா?} அல்லது மறமா {அதர்மமா} என்பதில் நீர் முதலில் உறுதியடைய வேண்டும். மறம் {அதர்மம்}, அறத்தின் தன்மைகளை மேற்கொள்ளும்போது, அறமே மொத்தமாகத் தீமையாகப் பட்டுவிடும். {மறமாகத் தெரியும்} அறம் தன்னுடைய சுய உருவில் தோன்றும்போது, கற்றறிந்தவர்களே அதைத் தங்கள் புத்தியினால் கண்டறிவார்கள்.


நித்தியமானதும், முழுமையானதுமான அறம், மறம் ஆகிய இரண்டும், துன்ப {ஆபத்து} காலங்களில் தங்கள் பண்புகளை மாற்றிக் கொள்கின்றன. பிறப்பின் அடிப்படையில் ஒருவன் எந்த வகையைச் சார்ந்தவனோ, அதற்கு விதிக்கப்பட்ட கடமைகளையே அவன் வழுவாமல் பின்பற்ற வேண்டும். ஆனால், ஓ! சஞ்சயரே, துன்ப {ஆபத்து} காலங்களில் கடமைகள் வேறு வகைப்பட்டன என்பதை அறிந்து கொள்ளும். தனது வாழ்வாதாரங்கள் மொத்தமாகப் போன பிறகு, அனைத்தையும் இழந்த ஒரு மனிதன், தன் வகைக்குண்டான அங்கீகரிக்கப்பட்ட கடைமைகளை நிறைவேற்றுவதற்காக, வேறு வழிகளையே நிச்சயம் விரும்ப வேண்டும். தனது வாழ்வாதாரங்களை இழக்காத மனிதன், துயரத்தில் இருக்கும் மனிதன் ஆகிய இருவரும், ஓ! சஞ்சயா, தங்கள் நிலைகளை மாற்றிச் செயல்பட்டால், அவர்கள் நிச்சயம் பழிக்கப்படுவார்கள். {போதுமான செல்வத்தை வைத்துக் கொண்டு ஆபத்து கால அறத்தைப் பயில்வதும், ஆபத்தில் இருந்து கொண்டு செல்வநிலைக்கு ஏற்பட்ட அறத்தைக் கடைப்பிடிக்காதவனும், என இந்த இருவருமே நிந்திக்கத்தக்கவர்கள்}.

தங்களுக்கு அங்கீகரிக்கப்படாத செயல்களைக் கூட, தற்கொலையை {self-destruction = [சுய அழிப்பு]} விரும்பாத அந்தணர்களுக்குப் பரிகாரமாக படைப்பாளனே {பிரம்மனே} விதித்திருக்கிறான். தங்கள் வகைக்கு விதிக்கப்படாத காரியங்களையும், ஆபத்து காலங்களில், மக்கள் செய்யலாம் என்பதையே இது உறுதிப்படுத்துகிறது. ஓ சஞ்சயரே, வழக்கமான காலங்களில் தங்கள் வகைக்குரிய செயல்களைச் செய்பவர்களைக் கருதுவது போலவே, ஆபத்து காலங்களில் தங்கள் வகைக்கு விதிக்கப்படாத செயல்களைச் செய்பவர்களையும் நீர் கருத வேண்டும். வழக்கமான காலங்களில்கூட மாறாக நடப்பவர்களையும், ஆபத்து காலங்களில் {தங்கள்} விதிக்கப்பட்ட நடைமுறைகளைப் {மட்டும்} பின்பற்றுபவர்களையும் நீர் நிந்திக்க வேண்டும்.

இதைப் போலவே, தங்கள் மனங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர விரும்பும் மனிதர்கள், தங்களை {சுயத்தைக்} குறித்த அறிவை {தன்னறிவை} அறிய முயலும் போது, சிறந்தவர்களுக்காக {அந்தணர்களுக்காக} விதிக்கப்பட்ட அப்பயிற்சிகள், அவர்களுக்கும் {அந்தணர்கள் அல்லாதோருக்கும்} சமமாகவே விதிக்கப்படுகிறது. எனினும், சுயத்தை அறியும் அறிவை அடைய {தன்னறிவைப் பெற – நான் யார் என்பதை அறிய} முயற்சிக்காத அந்தணரல்லாதோர், தங்கள் வகைக்கு விதிக்கப்பட்ட பயிற்சிகளையே ஆபத்து காலங்களிலும் மற்ற காலங்களிலும் செய்ய வேண்டும். இந்த வழியையே நமது தந்தைமாரும், பாட்டன்மாரும், அவர்களுக்கு முன்பு வாழ்ந்தவர்களும் பின்தொடர்ந்தார்கள். இதே கருத்தின்படியே, ஞானமடைய விரும்புவோரும் மற்றும் செயல்களைத் தவிர்ப்போரும், இதே நோக்கத்தையே கொண்டு தங்களைப், புராதன நம்பிக்கையைக் கடைப்பிடிப்பவர்களாகக் கருதிக் கொள்கின்றனர் {regard themselves as orthodox}.

எனவே, வேறு வழியேதும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஓ! சஞ்சயரே, இந்தப் பூமியில் என்ன செல்வமெல்லாம் உள்ளதோ, தேவர்களிடம் என்னவெல்லாம் உள்ளதோ, அவற்றையோ, அல்லது அவர்களாலும் அடைய முடியாத பிரஜாபதியின் உலகத்தையோ, சொர்க்கத்தையோ, பிரம்மலோகத்தையோ அநீதியான வழிகளில் அடைய நான் முயற்சிக்க மாட்டேன்.

அறத்தின் கனிகளைக் கொடுப்பவனும், புத்திசாலியும், மதிநுட்பமுடையவனும், அந்தணர்களுக்காகக் காத்திருந்தவனும், அனைத்தையும் அறிந்தவனும், பல்வேறு வலிமைமிக்க மன்னர்களுக்கு ஆலோசனைகள் வழங்குபவனுமான கிருஷ்ணன் இதோ இருக்கிறான். எனவே, அமைதிக்கான அனைத்து ஆலோசனைகளைத் தவிர்த்து, நான் போரிட நேர்ந்தால், நான் என் சாதிக்குரிய கடைமைகளைக் கைவிட்டவன் என்று நிந்திக்கப்படுவேனா என்பதை அந்தக் கொண்டாடப்படும் கிருஷ்ணனே சொல்லட்டும். கிருஷ்ணனே இருதரப்பு நன்மையையும் நாடுபவனாக இருக்கிறான்.

இந்தச் சாத்யகி, சேதிகள், அந்தகர்கள், விருஷ்ணிகள், போஜர்கள், குகுரர்கள், சிருஞ்சயர்கள் ஆகியோர் கிருஷ்ணனின் ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டு, தங்கள் எதிரிகளைக் கொன்று, நண்பர்களை மகிழ்விக்கின்றனர். உக்கிரசேனர் தலைமையைக் கொண்ட விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்கள், கிருஷ்ணனால் வழிநடத்தப்பட்டு, இந்திரனைப் போன்றோராகி, உயர்ந்த மனம் கொண்டவர்களாக, உண்மைக்குத் தங்களை அர்ப்பணித்தவர்களாக, பெரும் பலசாலிகளாக, மகிழ்ச்சிமிக்கவர்களாக இருக்கிறார்கள். வெப்ப காலம் முடிந்ததும், பூமியின் உயிரினங்கள் மேல் எப்படி மேகங்கள் {மழையைப்} பொழியுமோ, அப்படி, காசியின் மன்னனான அந்தப் பப்ரு மேல் கிருஷ்ணன் அருள்மாரி பொழிந்தான். அவன் {பப்ரு}, தனது அண்ணனாக விருப்பங்களுக்கு பலனளிக்கும் கிருஷ்ணனை அடைந்து, உயர்ந்த வளத்தை அடைந்துவிட்டான். ஓ! அய்யா? அவ்வளவு பெரியவனாவான் கிருஷ்ணன். அனைத்து செயல்களின் நன்மை தீமையைத் தீர்மானிக்கும் பெரும் நீதிமானாக அவனை நீர் அறிய வேண்டும். கிருஷ்ணன் எங்களுக்கு அன்பானவனும், மனிதர்களில் மிகவும் ஒப்பற்றவனுமாவான். கிருஷ்ணன் சொல்வதை நான் எப்போதும் அலட்சியப்படுத்துவதில்லை” என்றான் {யுதிஷ்டிரன்}.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்