Thursday, January 08, 2015

துரியோதனனின் தந்திரம்! - உத்யோக பர்வம் பகுதி 8

The trick of Duryodhana! | Udyoga Parva - Section 8 | Mahabharata In Tamil


(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 8)

பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனுக்கு ஆதரவாகத் தனது படைகளைக் கொண்டு வந்து கொண்டிருந்த சல்லியனை, துரியோதனன் ஆடம்பரமாக வரவேற்பது; யுதிஷ்டிரனே தன்னை வரவேற்கிறான் என்று நினைத்து சல்லியன் உபசரிப்பை ஏற்று மகிழ்வது; சல்லியன் வெகுமதி அளிக்க முன்வந்த போது துரியோதனன் வெளிப்பட்டது; துரியோதனன் சல்லியனிடம் வரம் கேட்டது; சல்லியன் துரியோதனன் பக்கம் நிற்பதாக வாக்களித்தது; சல்லியன் யுதிஷ்டிரனைச் சந்தித்தது; அர்ஜுனனுடன் போரிடும் போதும் கர்ணனை உற்சாகமிழக்கச் செய்ய வேண்டும் என்று யுதிஷ்டிரன் சல்லியனிடம் கோரியது; அதைச் செய்வதாகச் சல்லியன் வாக்களித்தது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மன்னா {ஜனமேஜயா}, தூதுவர்களிடம் இருந்து செய்தியை அறிந்த சல்லியன், பெரும் அளவிலான துருப்புகளையும், போரில் வலிமைமிக்கவர்களான தனது மகன்களையும் அழைத்துக் கொண்டு பாண்டவர்களிடம் வந்து கொண்டிருந்தான். அவனது {சல்லியனது} முகாம், ஒன்றரை யோஜனை அளவு கொண்ட பகுதியை நிரப்பியது. அந்த மனிதர்களில் சிறந்தவனுக்கு {சல்லியனுக்குச்} சொந்தமான படை அவ்வளவு பெரியதாக இருந்தது. ஓ! மன்னா {ஜனமேஜயா}, பெரும் பராக்கிரமமும், வீரமும் கொண்ட ஓர் அக்ஷௌஹிணி படைக்கு அவன் {சல்லியன்} தலைவனாக இருந்தான். பல்வேறு விதமான கொடிகளையும், விற்களையும், ஆபரணங்களையும், தேர்களையும், விலங்குகளையும், பல வண்ணங்களிலான கேடயங்களையும் கொண்ட வீரர்கள் அவனது படையில் இருந்தனர். அவர்கள் {அந்தப் படைவீரர்கள்} அனைவரும் அற்புத மாலைகளையும், பல்வேறு ஆடைகளையும் ஆபரணங்களையும் அணிந்திருந்தார்கள். தாங்கள் சார்ந்த நிலத்திற்குரிய வகையில் உடுத்தி, அலங்கரித்திருந்த க்ஷத்திரியர்களில் முதன்மையான நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான வீரர்கள் அவனது துருப்புகளுக்குத் தலைவர்களாக இருந்தனர். அவன் {சல்லியன்} தனது துருப்புகளை இளைப்பாரச் செய்து, மெதுவாக அணிவகுத்த படி பாண்டவர்களின் இடத்தை நோக்கி வந்து கொண்டிருந்தான். பூமியின் உயிரினங்கள் தாங்கள் ஒடுக்கப்பட்டதாக உணர்ந்தன. அவனது {சல்லியனின்} துருப்புகளின் நடையால் பூமி நடுங்கியது.


பரந்த மனம் கொண்ட அந்த வலிமைமிக்க வீரன் {சல்லியன்} புறப்பட்டு வருகிறான் என்பதைக் கேள்விப்பட்ட மன்னன் துரியோதனன்,  அவனை{சல்லியனை} நோக்கி விரைந்து, அவனுக்கு உரிய மரியாதைகள் செய்தான். ஓ! பாரதக் குலத்தில் சிறந்தவனே {ஜனமேஜயா}, அவனை {சல்லியனை} வரவேற்பதற்காக, பல்வேறு அழகிய இடங்களில், அழகாக அலங்கரிக்கப்பட்ட கேளிக்கைத்தலங்களைக் கட்டச் செய்தான். {அந்த} விருந்தினர்களை உபசரிப்பதில் பல கலைஞர்களை ஈடுபடுத்தினான். மாலைகள், இறைச்சி, தேர்ந்தெடுக்கப்பட்ட பானங்கள் மற்றும் தின்பண்டங்கள், இதயத்திற்கு உற்சாகமூட்டும் வகையில் பல வடிவங்களிலான கிணறுகள், பல்வேறு உருவங்களிலான தண்ணீர்ப்பந்தல்கள், உணவு வகைகள், விரிந்த அறைகள் ஆகியவற்றை அந்த அரங்குகள் கொண்டிருந்தன.

அந்த அரங்குகளை அடைந்ததும், தெய்வத்துக்குக் காத்திருப்பது போலத் துரியோதனனின் பணியாட்கள் பல இடங்களில் அவனுக்காக {சல்லியனுக்காகக்} காத்திருந்தனர். தேவர்களின் ஓய்விடம் போன்ற பிரகாசமிக்க மற்றொரு கேளிக்கையில்லத்தைச் சல்லியன் அடைந்தான். மனிதர்களைவிட மேம்பட்ட உயிரினங்கள் அனுபவிக்கத்தக்க வசதியான தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களால் வரவேற்கப்பட்ட அவன் {சல்லியன்}, தன்னைத் தேவர்கள் தலைவனைவிட {இந்திரனை விட} மேம்பட்டவனாக நினைத்துக் கொண்டான். {அல்லது} இந்திரனே தனக்கு ஒப்பானவன் என்றும் நினைத்துக் கொண்டான். பிறகு, க்ஷத்திரியர்களின் முதன்மையான அவன் {சல்லியன்}, {அங்கிருந்த} பணியாட்களிடம், “இந்த உற்சாகத் தலங்களை ஏற்பாடு செய்த யுதிஷ்டிரனின் ஆட்கள் எங்கே? இவற்றைச் செய்த அம்மனிதர்கள் என் முன் அழைத்து வரப்படட்டும். நான் அவர்களை வெகுமதியடைத்தக்கவர்களாகக் கருதுகிறேன். நான் அவர்களுக்கு வெகுமதி அளிக்க வேண்டும்! குந்தியின் மகனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} அது மகிழ்ச்சியை அளிக்கட்டும்” என்றான்.

ஆச்சரியமடைந்த பணியாட்கள், காரியங்கள் அனைத்தையும் துரியோதனனுக்குத் தெரிவித்தார்கள். மிகவும் மகிழ்ந்திருந்த சல்லியன், தனது உயிரையும் தரச் சித்தமாக இருந்த போது, அதுவரை மறைந்திருந்த துரியோதனன், முன்னே வந்து, தன்னைத் தனது தாய்மாமன் {சல்லியன்} முன்பு வெளிக்காட்டிக் கொண்டான். மத்ரர்கள் மன்னன் {சல்லியன்} அவனைக் கண்டு, தன்னை வரவேற்பதில் அனைத்துச் சிரமங்களையும் எடுத்துக் கொண்டவன் துரியோதனனே என்பதைப் புரிந்து கொண்டான். பிறகு சல்லியன் துரியோதனனை அணைத்துக் கொண்டு, “நீ விரும்பும் எதையாவது ஏற்றுக் கொள்” என்றான்.

அதற்குத் துரியோதனன் {சல்லியனிடம்}, “ஓ! மங்கலமானவரே {சல்லியரே}, உமது சொல் உண்மையாகட்டும். எனக்கு ஒரு வரத்தைத் தாரும். எனது படைகள் அனைத்திற்கும் நீர் தலைவராக வேண்டும் என்று நான் உம்மைக் கேட்டுக் கொள்கிறேன்” என்றான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இதைக்கேட்ட சல்லியன், “அப்படியே ஆகட்டும்! வேறு என்ன செய்ய வேண்டும்” என்று கேட்டான். அதற்குக் காந்தாரியின் மகன் {துரியோதனன்}, “{அனைத்தும்} செய்யப்பட்டுவிட்டது” என்று மீண்டும் மீண்டும் சொன்னான். சல்லியன் {துரியோதனனிடம்}, “ஓ! துரியோதனா, ஓ! மனிதர்களில் சிறந்தவனே, நீ உனது நகரத்திற்குச் செல். எதிரிகளை அடக்குபவனான யுதிஷ்டிரனைச் சந்திக்க நான் புறப்படுகிறேன். ஓ! மன்னா, ஓ! மனிதர்களின் ஆட்சியாளா {துரியோதனா}, நான் விரைந்து திரும்புவேன். மனிதர்களில் சிறந்தவனும், பாண்டுவின் மகனுமான யுதிஷ்டிரனை நான் எல்லாவகையிலும் அவசியம் பார்க்க வேண்டும்” என்றான்.

இதைப் பொறுத்துக் கொண்ட துரியோதனன் {சல்லியனிடம்}, “ஓ மன்னா, ஓ பூமியின் ஆட்சியாளரே {சல்லியரே}, பாண்டவனைப் {யுதிஷ்டிரனைப்} பார்த்த பிறகு, விரைந்து திரும்பி வாரும். ஓ! மன்னர்களுக்கு மன்னா {சல்லியரே}, நான் உம்மையே முழுதும் நம்பியிருக்கிறேன். நீர் எனக்கு அளித்திருக்கும் வரத்தை நினைவுகூரும்” என்றான். அதற்குச் சல்லியன் {துரியோதனனிடம்}, “உனக்கு நன்மையே விளையட்டும்! நான் விரைந்து திரும்பி வருவேன். ஓ! மனிதர்களின் காவலா {துரியோதனா}, நீ உனது நகரத்திற்குச் செல்” என்று பதிலுரைத்தான். பிறகு சல்லியன், துரியோதனன் ஆகிய அந்த இரு மன்னர்களும் ஒருவரையொருவர் தழுவிக் கொண்டனர்.

இப்படிச் சல்லியனை வரவேற்ற துரியோதனன், தனது நகரத்திற்குத் திரும்பினான். சல்லியனும் தனது அடுத்தக்கட்ட நடவடிக்கைகளைக் குந்தியின் மகன்களிடம் {பாண்டவர்களிடம்} தெரிவிக்கச் சென்றான். உபப்லாவியத்தை அடைந்ததும், அம்முகாமுக்குள் நுழைந்த சல்லியன், அங்கே பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்} அனைவரையும் கண்டான். வலிமைமிக்கக் கரங்கள் கொண்ட அந்தச் சல்லியன் பாண்டவர்களைச் சந்தித்ததும், தனது பாதங்களைக் கழுவிக்கொள்ள நீரையும், ஒரு பசுவுடன் கூடிய சடங்கு நிமித்தமான கொடைகளையும் வழக்கம் போல ஏற்றுக் கொண்டான். பிறகு, எதிரிகளைக் கொல்பவனான, மத்ரர்களின் மன்னன் {சல்லியன்}, அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை முதலில் விசாரித்து, பிறகு பெருமகிழ்ச்சியுடன் யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன் மற்றும் தனது தங்கையின் {மாத்ரியின்} மகன்களான அந்த இரட்டையர்கள் இருவர் {நகுலன், சகாதேவன்} ஆகியோரைத் தழுவி கொண்டான்.

அனைவரும் அமர்ந்ததும், சல்லியன், குந்தியின் மகனான யுதிஷ்டிரனிடம், “ஓ! மன்னர்களில் புலியே, ஓ! குரு குலத்திற்கு மகிழ்ச்சியளிப்பவனே {யுதிஷ்டிரா}, உன்னிடம் அனைத்தும் நலமாயிருக்கிறதா? ஓ! வெற்றியாளர்களில் சிறந்தவனே, நற்பேறாலேயே வனவாசத்தின் குறித்த காலத்தை நீ கழித்தாய். ஓ! மன்னா, ஓ! ஏகாதிபதிகளின் தலைவா {யுதிஷ்டிரா}, இந்த உனது தம்பிகளுடனும், இந்த உன்னதமான மங்கையுடனும் காட்டில் வசிப்பது மிகக் கடினமானக் காரியமே. மறைந்திருந்த காலத்தில் நீ வசித்த நிலை கடினமானதும் மோசமானதும் ஆகும். ஓ! பரதனின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, அரியணையில் இருந்து கீழே இறக்கிவிடப்பட்டவனுக்குக் கடுங்காலமே காத்திருக்கும் என்றாலும், அந்தப் பணியையும் முடித்தாய். {அப்போது}, ஓ! மன்னா {யுதிஷ்டிரா} உனக்கு என்ன மகிழ்ச்சி இருந்திருக்கும்!

ஓ! எதிரிகளை வாட்டுபவனே, திருதராஷ்டிரன் மகனால் {துரியோதனனால்} உனக்குச் செய்யப்பட்ட பெருந்தீங்குகளுக்குப் பதிலாக, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நீ உனது எதிரிகளைக் கொன்று அதற்கேற்ப {நீ அனுபவித்த துன்பத்திற்குச் சமமாக} நீ மகிழ்ச்சியை அடைவாய். ஓ! மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, உலகத்தின் வழிகளை நீ அறிந்திருக்கிறாய். எனவே, ஓ! மகனே {யுதிஷ்டிரா}, நீ உனது செயல்பாடுகளில் தீமையால் எப்போதும் வழிநடத்தப்பட மாட்டாய். ஓ! பரதனின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, பழமையான அரச முனிகளின் வழியில் நீ நடப்பாயாக! எனது மகனே, யுதிஷ்டிரா, தாராளம், தன்னல மறுப்பு {சுயத் தியாகம்}, உண்மை {சத்தியம்} ஆகியவற்றின் வழியில் சீராக {உறுதியாகச்} செல்வாயாக!

ஓ! மன்னா, யுதிஷ்டிரா, கருணை, தற்கட்டுப்பாடு, உண்மை, உலகளாவிய பரிவு ஆகியனவும், இவ்வுலகில் அற்புதமான அனைத்தும் உன்னில் காணக் கிடைக்கின்றன. மிதமானவனாக, வாரிவழங்குபவனாக, அறம்சார்ந்தவனாக, தாராளவாதியாக இருக்கும் நீ, அறத்தையே உயர்ந்த நன்மையாகக் கருதுகிறாய். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, மனிதர்கள் மத்தியில் புழங்கும் அறத்தின் விதிகள் பல இருக்கின்றன. அவை அனைத்தையும் நீ அறிந்திருக்கிறாய். ஓ! எனது மகனே, ஓ எதிரிகளை வாட்டுபவனே {யுதிஷ்டிரா}. உண்மையில் இவ்வுலகம் சார்ந்த அனைத்தையும் நீ அறிந்திருக்கிறாய். ஓ! மன்னா, ஓ! பாரதக் குலத்தில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, உனது கடின காலத்தில் இருந்து வெளியே வந்திருக்கும் நீ பேறுபெற்றவனாவாய். ஓ! மன்னா, ஓ! ஏகாதிபதிகளில் முதன்மையானவனே, ஓ! தலைவா {யுதிஷ்டிரா}, அறச்சார்பு மிகுந்த ஆன்மாவும், நேர்மையின் புதையலுமான நீ, உனது தொண்டர்களுடன் விடுபட்டிருப்பதைக் காணும் நானும் நற்பேறு பெற்றவனே” என்றான் {சல்லியன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு, ஓ! பரதனின் வழித்தோன்றலே {ஜனமேஜயா}, அம்மன்னன் {சல்லியன்}, துரியோதனனுடனான தனது சந்திப்பையும், தனது உறுதிமொழியையும், தான் {அவனுக்கு} அளித்த வரம் ஆகியவற்றையும் விரிவாகப் பேசினான். அதற்கு யுதிஷ்டிரன், “ஓ! வீரமிக்க மன்னரே {சல்லியரே}, இதயம் மகிழ்ந்த நீர், துரியோதனனுக்கு உறுதியளித்து நன்றே செய்திருக்கிறீர். உமக்கு நன்மையே விளையட்டும். ஓ! பூமியின் ஆட்சியாளரே {சல்லியரே}, நான் உம்மிடம் ஒன்றை மட்டும் செய்யச் சொல்கிறேன். ஓ! மன்னா, ஓ! மனிதர்களில் சிறந்தவரே {சல்லியரே}, அது செய்வதற்குத் தகாதது என்றாலும், முழுவதும் எனக்காக மட்டுமே நீர் அதைச் செய்ய வேண்டும்.

ஓ! வீரரே {சல்லியரே}, நான் உம்மிடம் விண்ணப்பிப்பதைக் கேளும். ஓ பெரும் மன்னா {சல்லியரே}, போர்க்களத்தில் நீர் கிருஷ்ணனுக்கு நிகரானவர். ஓ! மன்னர்களில் சிறந்தவரே {சல்லியரே}, கர்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் தனிப்பட்ட மோதல் ஏற்படும்போது, நீரே கர்ணனின் தேரோட்டியாக இருப்பீர் என்பதில் எனக்கு ஐயமில்லை. அச்சந்தர்ப்பத்தில், நீர் எனக்கு நன்மையைச் செய்ய வீரும்பினால், அர்ஜுனனை நீர் காக்க வேண்டும். ஓ! மன்னா {சல்லியரே}, அதே போல, சூதனின் மகனான கர்ணன் உற்சாகமிழக்கும் வகையில் நீர் செயல்பட வேண்டும். {அப்படிச் செய்தால்} வெற்றியும் எங்களுடையதாகும். இது முறையற்றது என்பதில் சந்தேகமில்லை; ஆனால், ஓ! என் அம்மானே {மாமா}, அனைவருக்காகவும் நீர் அவற்றைச் செய்ய வேண்டும்” என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.

சல்லியன் {யுதிஷ்டிரனிடம்}, “உனக்கு நன்மையே விளையட்டும்! ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா} கேள். சூதனின் தீய மகன் {கர்ணன்} போரில் உற்சாகமிழக்கும்படி செய்ய நீ என்னிடம் சொல்கிறாய். அவன் {கர்ணன்} என்னைக் கிருஷ்ணனுக்குச் சமமானவனாகக் கருதுவதால், போர்க்களத்தில் நான் அவனது தேரோட்டியாக ஆவேன் என்பது உறுதி. ஓ! புலியைப் போன்ற குருவின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, போரிட விரும்பி போர்க்களத்தில் இருக்கும் அவனிடம் {கர்ணனிடம்}, அவனது கர்வமும் வீரமும் அழிந்து எதிரியால் அவன் கொல்லப்படும் வகையில் முரண்பட்ட, தீங்கு நிறைந்த சொற்களை நான் அவனுக்குச் சொல்வேன். இதை நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன். உன்னால் கேட்கப்பட்டதால், ஓ! மகனே {யுதிஷ்டிரா}, நான் இதைச் செய்யத் தீர்மானித்துவிட்டேன்.

எவற்றையெல்லாம் என்னால் வெளிக்கொணர முடியுமோ, அவற்றையெல்லாம் உனது நன்மைக்காகவே நான் செய்வேன். ஓ! சிறப்புமிக்கவனே {யுதிஷ்டிரா} பகடையாட்டத்தின் போது திரௌபதியுடன் சேர்ந்து நீ அனுபவித்த துன்பம், சூத மகனால் {கர்ணனால்} உச்சரிக்கப்பட்ட மனிதத் தன்மையற்ற வார்த்தைகள், அசுரன் ஜடன் மற்றும் கீசகனால் ஏற்பட்ட பெருந்துன்பம், பழங்காலத்து தமயந்தி போல, திரௌபதியால் அனுபவிக்கப்பட்ட பெருந்துன்பங்கள் ஆகியவை அனைத்தும், ஓ! வீரா, இன்பத்திலேயே முடியும். இவ்வுலகத்தில் விதியே வலியது என்பதால், நீ இதற்காகக் கவலைக் கொள்ளக் கூடாது. ஓ! யுதிஷ்டிரா, உயர்ந்த மனம் கொண்ட மனிதர்கள் பல்வேறு வகையான துன்பங்களை அனுபவிக்கின்றனர். ஏன், தேவர்களே கூட, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, கெடுபேறுகளால் துன்புற்றிருக்கின்றனர். உண்மையில், ஓ! மன்னா, ஓ! பரதனின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, தேவர்களின் தலைவனான உயர்ந்த மனம் கொண்ட இந்திரன் கூட, தனது மனைவியுடன் சேர்ந்து பெருந்துன்பத்தை அனுபவிக்க நேர்ந்ததாகச் சொல்லப்படுகிறது” என்றான் {சல்லியன்}.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Audio பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்