Wednesday, January 07, 2015

கிருஷ்ணனைத் தேர்ந்தெடுத்த அர்ஜுனன்! - உத்யோக பர்வம் பகுதி 7

Arjuna selected Krishna! | Udyoga Parva - Section 7 | Mahabharata In Tamil


(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 7)

பதிவின் சுருக்கம் : கிருஷ்ணனிடம், போருக்கு ஆதரவு கேட்டு துரியோதனனும் அர்ஜுனனும் துவாரகைக்குச் செல்வது; துரியோதனன் தூங்கிக் கொண்டிருந்த கிருஷ்ணனின் தலைமாட்டில் அமர்ந்தது; அர்ஜுனன் கரங்கூப்பி நின்றது; விழித்தெழுந்த கிருஷ்ணன் அர்ஜுனனை முதலில் பார்ப்பது; தனது படை ஒருபுறமும், ஆயுதம் ஏந்தாத தான் ஒரு புறமும் என இருவருக்கும் உதவுவதாகக் கிருஷ்ணன் சொல்வது; வயதில் இளையவனான அர்ஜுனன், முதல் வாய்ப்பைப் பெற்றுக் கிருஷ்ணனைத் தேர்ந்தெடுத்தது; மகிழ்ச்சியடைந்த துரியோதனன் நாராயணச் சேனையைப் பெற்றுக் கொண்டு பலராமனிடம் சென்றது; எத்தரப்புக்கும் தான் போரிடுவதில்லை என்று பலராமன் சொல்வது; தன்னைத் தேர்ந்தெடுத்த காரணத்தைக் கிருஷ்ணன் அர்ஜுனனிடம் கேட்டது; கிருஷ்ணனும் அர்ஜுனனும் யுதிஷ்டிரனை அடைவது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “யானையின் பெயரால் அழைக்கப்படும் நகரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்கு} புரோகிதரை அனுப்பிய பிறகு, அவர்கள் {பாண்டவர் தரப்பு} பல்வேறு நாட்டு மன்னர்களிடம் தூதுவர்களை அனுப்பினார்கள். பிற இடங்களுக்குத் தூதுவர்களை அனுப்பிய பிறகு, குரு வீரனும், குந்தியின் மகனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்}, துவாரகைக்குத் தானே புறப்பட்டுச் சென்றான். நூற்றுக்கணக்கான விருஷ்ணிகள், அந்தகர்கள், போஜர்கள் ஆகியோருடன் மதுவின் வழித்தோன்றல்களான கிருஷ்ணனும், பலதேவனும் சென்ற பிறகு, திருதராஷ்டிரனின் அரச மகன் {துரியோதனன்}, தனது இரகசிய ஒற்றர்களை அனுப்பி, பாண்டவர்களின் செயல்பாடுகள் குறித்த தகவல்களை அறிந்து கொண்டான்.


கிருஷ்ணன் சென்றுவிட்டான் என்பதை அறிந்த அந்த இளவரசன் {துரியோதனன்}, தன்னுடன் சிறு எண்ணிக்கையிலான துருப்புகளை அழைத்துக் கொண்டு, காற்றின் வேகம் கொண்ட நல்ல குதிரைகளில் துவாரகா நகரத்திற்குச் சென்றான். குந்தி மற்றும் பாண்டுவின் மகனான தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, அதே நாளில், அந்த அழகிய நகரமான ஆனர்த்த நிலத்திற்கு விரைவாக வந்து சேர்ந்தான். மனிதர்களில் புலிகளான குரு குலத்தின் அந்த இரு கொழுந்துகளும் {துரியோதனனும், அர்ஜுனனும்} அங்கே வந்து, துயிலில் இருக்கும் கிருஷ்ணனைக் கண்டு, படுத்திருந்த அவன் அருகே சென்றனர்.

கிருஷ்ணன் தூங்கிக் கொண்டிருந்தபோது, அறைக்குள் நுழைந்த துரியோதனன், அந்தப் படுக்கையின் தலைமாட்டில் இருந்த அழகிய இருக்கையில் அமர்ந்து கொண்டான். கிரீடம் அணிந்தவனும், பரந்த மனப்பான்மை கொண்டவனுமான அர்ஜுனன், அவனுக்குப் {துரியோதனனுக்குப்} பின் நுழைந்தான். பிறகு, கரங்கள் கூப்பி, தலைவணங்கியபடி {அந்தப்} படுக்கையின் பின்புறம் நின்றான். {And stood at the back of the bed}. விருஷ்ணி வழித்தோன்றலான கிருஷ்ணன் விழித்த போது, முதலில் அர்ஜுனன் மீது தனது கண்களைச் செலுத்தினான். அந்த மதுவைக் கொன்றவன் {மதுசூதனனான கிருஷ்ணன்}, அவர்களது பாதுகாப்பான பயணம் குறித்து விசாரித்து, முறையான வாழ்த்துகளைத் தெரிவித்த பிறகு, அவர்களது வருகையின் நோக்கத்தைக் குறித்துக் கேட்டான்.

பிறகு கிருஷ்ணனிடம் துரியோதனன், மகிழ்ச்சி நிறைந்த முகத்துடன் “நடைபெறவிருக்கும் போரில் உனது உதவியை எனக்கு அளிப்பதே உனக்குத் தகும். அர்ஜுனனும் நானும் உனக்குச் சமமான நண்பர்களாகவே இருக்கிறோம். ஓ! மதுவின் வழித்தோன்றலே {கிருஷ்ணா}, ஒரே உறவுமுறையையே நீ எங்கள் இருவரிடமும் கொண்டிருக்கிறாய். இன்று, ஓ! மதுவைக் கொன்றவனே {மதுசூதனா-கிருஷ்ணா}, உன்னிடம் முதலில் வந்தது நானே. நல்ல மனம் கொண்டவர்கள், தங்களிடம் முதலில் வருபவரின் காரணத்தையே எடுத்துக் கொள்கின்றனர். இதுவே முன்னோரின் நடைமுறையாகும். ஓ! கிருஷ்ணா, நீயே உலகத்தில் உள்ள நல்ல மனம் கொண்டோர் அனைவரை விடவும் மிக உயரத்தில் இருந்து, எப்போதும் மதிக்கப்பட்டு வருகிறாய். நல்ல மனம் கொண்ட மனிதர்கள் நோற்ற நடத்தைவிதிகளையே பின்பற்றுமாறு நான் உன்னைக் கேட்டுக் கொள்கிறேன்” என்றான் {துரியோதனன்}.

அதற்குக் கிருஷ்ணன் {துரியோதனனிடம்}, “ஓ! மன்னா {துரியோதனா}, நீயே முதலில் வந்தாய் என்பதில் நான் ஐயங்கொள்ளவில்லை. ஆனால், ஓ! மன்னா {துரியோதனா}, குந்தியின் மகனான தனஞ்சயனே {அர்ஜுனனே} என்னால் முதலில் பார்க்கப்பட்டான். முதலில் வருகை தந்த உன்னையும், முதலில் காணப்பட்ட அர்ஜுனனையும் நான் கருத்தில் கொள்வதால், சந்தேகமில்லாமல், ஓ! சுயோதனா {துரியோதனா}, எனது உதவியை {உங்கள்} இருவருக்கும் அளிப்பேன். ஆனால், வயதில் இளையோருக்கே முதல் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. எனவே, குந்தியின் மகனான தனஞ்சயனே {அர்ஜுனனே}, முதல் வாய்ப்பைப் பெறத் தகுந்தவன். அடர்ந்த {நெருக்கமான} போர்க்களத்தில் போரிட வல்லவர்களும், பலத்தில் எனக்குப் போட்டியானவர்களும், நாராயணர்கள் என்று அறியப்படுபவர்களும், எண்ணிக்கையில் பத்துக் கோடியாக {10,00,00,000} இருப்பவர்களுமான மாட்டு மந்தையாளர்கள் {கோபாலர்கள்} நிரம்பிய பெரும் அமைப்பு {படை} ஒன்று இருக்கிறது. போரில் வெல்லப்பட முடியாத அப்படைவீரர்கள், உங்களில் ஒருவருக்கு அனுப்பப்படுவார்கள். போர்க்களத்தில் போரிடுவதில்லை என்ற தீர்மானத்துடன், ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு தனியாளாக இருக்கும் நான் மற்றொருவனிடம் செல்வேன். ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, இவ்விரண்டில் உனக்கு வேண்டுமென எதை நீ மெச்சுகிறாயோ, அதை முதலில் நீயே தேர்ந்தெடுக்கலாம். விதிப்படி, முதல் வாய்ப்பைப்பெற நீயே தகுந்தவன்” என்றான் {கிருஷ்ணன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “கிருஷ்ணனால் இப்படிச் சொல்லப்பட்ட குந்தியின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, எதிரிகளைக் கொல்பவனும், க்ஷத்திரியர்கள் அனைவரிலும் முதன்மையானவனும், தேவர்கள் மற்றும் தானவர்கள் அனைவரிலும் மேலானவனும், தன்விருப்பத்தின் பேரில் மனிதர்கள் மத்தியில் பிறந்தவனும், நாராயணனேயானவனும், படைக்கப்படாதவனுமான போர்க்களத்தில் போரிடாத கேசவனைத் {கிருஷ்ணனைத்} தேர்ந்தெடுத்தான். துரியோதனன் {நாராயணர்கள் அடங்கிய} அந்த முழுப் படையையும் தேர்ந்தெடுத்தான். ஓ! பரதனின் வழித்தோன்றலே {ஜனமேஜயா}, ஆயிரமாயிரம் எண்ணிக்கையிலான அந்தத் துருப்புகளை அடைந்த அவன் {துரியோதனன்}, தன் தரப்பில் கிருஷ்ணன் இல்லை என்பதை அறிந்தாலும், மிகவும் மகிழ்ந்தான். பயங்கரப் பராக்கிரமம் மிக்கப் படையை அடைந்த துரியோதனன், பெரும் பலமிக்க ரோகிணியின் மகனிடம் {பலராமனிடம்} சென்று, தனது வருகைக்கான நோக்கத்தை விளக்கினான்.

சூரனின் அந்த வழித்தோன்றல் {பலராமன்}, திருதராஷ்டிரன் மகனிடம் {துரியோதனனிடம்}, தொடர்ந்து வரும் சொற்களைச் சொன்னான். அவன் {பலராமன் துரியோதனனிடம்}, “ஓ! மனிதர்களில் புலியே, விராடனால் கொண்டாடப்பட்ட திருமணத் திருவிழாவில் நான் சொன்ன அனைத்தையும் நீ எண்ணிப் பார்க்க வேண்டும். ஓ! குருகுலத்துக்கு மகிழ்ச்சி அளிப்பவனே {துரியோதனா}, உன் நிமித்தமாக நான் கிருஷ்ணனிடம் முரண்பட்டு, அவனது {கிருஷ்ணனின்} கருத்துகளுக்கு எதிராகப் பேசினேன். இரு தரப்பிடமும் நாங்கள் கொண்ட உறவுமுறை சமமானது என்று நான் மீண்டும் மீண்டும் குறிப்பிட்டேன். ஆனால், நான் கூறிய கருத்துகள் எதையும் கிருஷ்ணனும் ஏற்றுக் கொள்ளவில்லை. என்னாலும். ஒரு கணம் கூடக் கிருஷ்ணனிடம் இருந்து பிரிந்திருக்க முடியாது. கிருஷ்ணனுக்கு எதிராக என்னால் செயல்பட முடியாது என்பதைக் கண்டு நான் எடுத்திருக்கும் தீர்மானம் இதுதான். குந்தியின் மகன்களுக்காகவோ, உனக்காகவோ நான் போரிடமாட்டேன். ஓ! பாரதர்களில் காளையே {துரியோதனா}, மன்னர்கள் அனைவராலும் மதிக்கப்படும் பாரதக் குலத்தில் பிறந்த நீ, உனக்கு விதிக்கப்பட்ட விதிகளின் படி {போர்க்குல {க்ஷத்திரிய} அறத்தின் படி} போரிடுவாயாக. செல்” என்றான் {பலராமன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இப்படிச் சொல்லப்பட்ட துரியோதனன், போர்க்களத்தில் ஆயுதமாகக் கலப்பையைத் தாங்கும் வீரனை {பலராமனை} அணைத்துக் கொண்டான். தனது தரப்பில் இருந்து கிருஷ்ணன் எடுத்துக்கொள்ளப்பட்டான் என்பதை அறிந்தும், ஏற்கனவே அர்ஜுனன் வீழ்ந்துவிட்டான் என்றே அவன் {துரியோதனன்} கருதினான். பிறகு திருதராஷ்டிரனின் அந்த அரச மகன் {துரியோதனன்}, கிருதவர்மனிடம் சென்றான். கிருதவர்மன் அவனுக்கு {துரியோதனனுக்கு} ஒரு அக்ஷௌஹிணி எண்ணிக்கையிலான படைத் துருப்புகளைக் கொடுத்தான். காணப் பயங்கரமான அந்தப் போர்ப்படை சூழ, தனது நண்பர்களுக்கு மகிழ்ச்சியூட்டியபடியே அந்தக் கௌரவன் {துரியோதனன்} அணிவகுத்துச் சென்றான்.

துரியோதனன் சென்ற பிறகு, மஞ்சள் ஆடை உடுத்தியிருக்கும் உலகத்தின் படைப்பாளனான கிருஷ்ணன், கிரீடியிடம் {அர்ஜுனனிடம்}, “போரிடவே மாட்டேன் என்ற என்னை நீ தேர்ந்தெடுத்ததற்கான காரணம் யாது?” என்று கேட்டான். அதற்கு அர்ஜுனன், “அவர்கள் அனைவரையும் நீ கொல்வாய் என்பதில் எனக்குக் கேள்வியே கிடையாது. ஓ! மனிதர்களில் சிறந்தவனே {கிருஷ்ணா}, அவர்கள் அனைவரையும் தனியனாகக் கொல்ல நானும் தகுந்தவனே. ஆனால் நீ இந்த உலகின் ஒப்பற்ற மனிதனாவாய்; இந்தப் புகழ் உன்னைத் தொடர்ந்தே வரும். நானும் கூடப் புகழுக்குத் தகுந்தவனே; எனவேதான், நீ என்னால் தேர்ந்தெடுக்கப்பட்டாய். நீ எனக்குத் தேரோட்டியாக இருக்க வேண்டும் என்று எப்போதும் எனக்கு விருப்பம் இருந்து வந்திருக்கிறது. எனவே, எனது நீண்ட நாள் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என நான் உன்னைக் கேட்டுக் கொள்கிறேன்” என்றான் {அர்ஜுனன்}.

அதற்கு, வசுதேவனின் மகன் {கிருஷ்ணன்}, “ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, உன்னை என்னுடன் அளவிட்டுக் கொள்கிறாய் என்பது உனக்கு ஏற்றதாகவே இருக்கிறது. நான் உனது தேரோட்டியாகச் செயல்படுவேன்; உனது விருப்பம் நிறைவேறட்டும்” என்றான் {கிருஷ்ணன்}

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, கிருஷ்ணனையும், தாசார்ஹ குலத் தொண்டர்களையும் துணைக்கழைத்துக் கொண்டு யுதிஷ்டிரனை மீண்டும் அடைந்தான்.”
இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Audio பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்