Saturday, February 14, 2015

தோழமை? - உத்யோக பர்வம் பகுதி 36அ

Companionship?| Udyoga Parva - Section 36a | Mahabharata In Tamil

(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 36) {விதுர நீதி - 8}
பதிவின் சுருக்கம் : பழங்காலத்தில் ஆத்ரேயருக்கும்  சாத்யர்களுக்கும் இடையில் நடந்த உரையாடலை விதுரன் திருதராஷ்டிரனுக்குச் சொன்னது;  அவதூறுகளையும் நிந்தனைகளை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்றும்; கடுஞ்சொற்களைத் தவிர்க்க வேண்டும் என்றும்;  மௌனம் மற்றும் உண்மையின் சிறப்பையும்,  தோழமை குறித்தும்  ஆத்ரேயர் சாத்யர்களுக்குச் சொன்னது…

விதுரன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான் “இது தொடர்பாகப் பழங்கதையான அத்ரியின் மகனுக்கும் {ஆத்ரேயருக்கும்}, சாத்யர்கள் என்று அழைக்கப்பட்ட தேவர்களுக்கும் இடையில் நடந்த உரையாடல் மேற்கோள் காட்டப்படுகிறது. பழங்காலத்தில் சாத்யர்கள் என்ற பெயரில் அறியப்பட்ட தேவர்கள், வாழ்வாதாரத்திற்காக இரந்துண்டு உலாவி கொண்டிருந்த உயர்ந்த ஞானமும், கடுந்தவமும் கொண்ட பெரும் முனிவரிடம் (அத்ரியின் மகனிடம்} கேள்வி கேட்டனர்.

{ஆத்ரேயருக்கும் சாத்யர்களுக்கும் இடையில் நடந்த உரையாடல்}


சாத்யர்கள் {ஆத்ரேயரிடம்}, “ஓ! பெரும் முனிவரே, சாத்யர்கள் என்று அறியப்படும் தேவர்கள் நாங்கள். உம்மைக் கண்டு, நீர் யார் என்பதை அனுமானிக்க இயலாமல் இருக்கிறோம். எனினும், சாத்திர அறிவின் விளைவால் ஏற்பட்ட புத்திக்கூர்மையும், தற்கட்டுப்பாடும் உடையவர் நீர் என்று எங்களுக்குத் தெரிகிறது. எனவே, கல்வி அறிவு நிறைந்த, பரந்த மனம் கொண்ட வார்த்தைகளை எங்களிடம் பேசுவதே உமக்குத் தகும்” என்றனர்.

{அவதூறுகளும் நிந்தனைகளும்}


அதற்கு அந்தப் பிச்சைக்கார முனிவர் {ஆத்ரேயர் சாத்யர்களிடம்}, “இறவாதவர்களே {அமரர்களே/தேவர்களே}, அமைதியான நிலை, அனைத்து உணர்வுகளிலும் ஆற்றல் {கட்டுப்பாடு}, உண்மை அறம் கடைப்பிடித்தல் ஆகியவற்றின் துணையுடன், ஒருவன், தனது இதயத்தில் இருக்கும் அனைத்து முடிச்சுகளையும் அவிழ்த்து, ஏற்புடையவை, ஏற்பில்லாதவை ஆகிய இரண்டையும் தன்னைப் {சுயத்தைப்} போன்றே {தனக்குச் சமமாகக்} கருத வேண்டும்.

பிறர் செய்யும் நிந்தனைகளையோ, பழியையோ ஒருவன் திரும்பச் செய்யக்கூடாது. அவற்றைப் பொறுமையாகத் தாங்கிக் கொண்டால், தன்னால் உணரப்படும் வலி, நிந்திப்பவனை எரித்துவிடும். மேலும், {பழியையோ, நிந்தனையையோ} தாங்கிக் கொள்பவன், நிந்திப்பவனின் நல்வினைப் பயன்களையும் {புண்ணியங்களை} தனதாக்கிக் கொள்வதில் வெல்கிறான். {எனவே}, அவதூறு கூறுவதிலோ, நிந்திப்பதிலோ ஈடுபடாதீர். பிறரை இழிவு படுத்தவும் அவமதிக்கவும் செய்யாதீர். நண்பர்களுடன் சண்டையிடாதீர். தீயவர்கள் மற்றும் இழிந்தவர்களின் தோழமையில் இருந்து விலகுவீராக. ஆணவ மற்றும் இழிந்த நடத்தை கொள்ளாதீர்.

கோபம் நிறைந்த கடுஞ்சொற்களைத் தவிர்ப்பீர். எலும்புகள், இதயம், மனிதர்களின் வாழ்வாதாரங்கள், ஏன் உயிரையே கூடக் கடுஞ்சொற்கள் எரித்துவிடும். எனவே, அறம் சார்ந்து இருப்பவன் {நல்லவன்}, கோபம் நிறைந்த கடுஞ்சொற்களை எப்போதுமே விலக்க வேண்டும். முள்ளெனும் வார்த்தைகளால் பிறரின் உயிரையே துளைக்கும் கோபம் நிறைந்த கடும் பேச்சுடைய இழிந்தவன், தனது நாவில் நரகத்தையே கொண்டிருக்கிறான். எப்போதுமே மனிதர்களுக்குத் துயரத்தை வழங்குபவன் அவன் என்று கருதப்பட வேண்டும்.

சூரியனைப் போன்றோ நெருப்பைப் போன்றோ வெப்பமுடையவையும், கூரிய முனை கொண்டவையுமான பிறரின் சொல்லம்புகளால், ஆழமான காயமடைந்து, வலியால் எரிந்தாலும், ஒரு ஞானம் கொண்ட மனிதன், {அப்படித் தன்னை} நிந்திப்பவனுடைய நற்தகுதிகள் {நல்வினைப்பயன்கள்} தன்னுடையதாகும் என்பதை நினைவில் கொண்டு, அவற்றைப் {அந்தச் சொல்லம்புகளைப்} பொறுமையாகத் தாங்கிக் கொள்ள வேண்டும்.

நல்லவனுக்காகக் காத்திருப்பவன் {பணி செய்பவன்}, தீயவனுக்காகக் காத்திருப்பவன், தவத்தகுதியுடையவனுக்காகக் காத்திருப்பவன், திருடனுக்காகக் காத்திருப்பவன் ஆகியோர், சாயத்தில் தோய்த்த துணியைப் போல, விரைவில் தனது தோழனின் நிறத்தையே அடைவார்கள்.

நிந்தையால் காயப்பட்டவன், தானும் திரும்ப நிந்திக்காமல், பிறரையும் ஏவாமலோ, அடிவாங்கிய பிறகு திரும்ப அடிக்காமல், பிறரையும் ஏவாமலோ, தன்னைக் காயப்படுத்தியவனுக்குச் சிறு காயத்தையும் விரும்பாமலோ இருக்கும்போது, அவனுடைய தோழமையைத் தேவர்களே கூட விரும்புகிறார்கள்.

{மௌனமும், உண்மையும்}


பேச்சைவிட மௌனமே சிறந்தத்து என்று சொல்லப்படுகிறது. பேசத்தான் வேண்டும் என்றால், உண்மையைச் சொல்வதே சிறந்தது. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், அதை ஏற்புடைய வகையில் இனிமையாகச் சொல்வதே சிறந்தது. ஏற்புடையவை சொல்லப்பட வேண்டுமென்றால் அறநெறிக்கு இசைவானதைச் சொல்வதே சிறந்தது.

{துணை [அ] தோழமை [அ] நட்பு}


ஒரு மனிதன் யாருடன் வாழ்கிறானோ, சரியாக அவனைப் போலவே அவன் ஆகிறான். அல்லது அவன் யாரை மதிக்கிறானோ அவனைப் போல ஆகிறான். அல்லது, தான் யார் போல ஆக வேண்டும் என்று நினைக்கிறானோ அவனைப் போலவே ஆகிறான்.

ஒரு மனிதன் எந்தப் பொருட்களைத் விலக்குகிறானோ அவற்றில் இருந்து விடுபடுகிறான். ஒருவன் அனைத்தையும் விட்டுவிட்டால், அவனைச் சிறு துயரமும் பாதிக்காது. அப்படிப்பட்ட ஒரு மனிதன் பிறரை வீழ்த்துவதில்லை, அதே போலப் பிறரால் வீழ்த்தப்படுவதுமில்லை. அவன் பிறரை எதிர்க்கவோ அவர்களைக் காயப்படுத்துவதோ இல்லை. அவன் புகழுக்கும், பழிக்கும் அசைந்து கொடுப்பதில்லை. அவன் துயரப்படுவதுமில்லை மகிழ்வதுமில்லை.

அனைவருக்கும் செழிப்பை விரும்புபவனும், பிறருக்குத் துயரேற்படுத்த மனதில் நினையாதவனும், பேச்சில் உண்மையுள்ளவனும், நடத்தையில் அடக்கம் கொண்டவனும், தனது அனைத்து ஆசைகளையும் கட்டுக்குள் வைத்திருப்பவனுமான ஒரு மனிதன் தன் வகை இனங்களிலேயே முதன்மையானவனாகக் கருதப்படுகிறான்.

உண்மையல்லாதவற்றைச் சொல்லி ஆறுதல் கூறாதவனும், உறுதியளித்தபடி கொடுப்பவனும், பிறரின் பலவீனத்தில் ஒரு கண் வைத்திருப்பவனுமான மனிதன், நல்ல தன்மையில் {முதன்மையானவனுமல்லாமல், இழிந்தவனுமல்லாமல் இருக்கும்} நடுத்தர மனிதன் என்று கருதப்படுகிறான்.

கட்டுப்படுத்த இயலாமை, ஆபத்துகளால் பாதிப்படையக் கூடிய நிலை, கோபத்துக்கு வழிகொடுத்து, அதற்கு உள்ளாவது, நன்றிமறப்பது, பிறருக்கு நண்பனாக இயலாமை, தீய இதயம் ஆகியவை ஒரு தீய மனிதனின் குறியீடுகளாகும். பிறரிடம் இருந்து வரும் நன்மையில் மனநிறைவு கொள்ளாமல், தன்னையே கூடச் சந்தேகித்துக் கொள்பவன், தன்னிடம் இருந்து தன் உண்மையான நண்பர்களையே விரட்டி விடுபவன் மனிதர்களில் இழிந்தவனாவான்.

தனக்குச் செழிப்பை விரும்புபவன், நல்லவர்களுக்குக் காத்திருக்க {பணி செய்ய} வேண்டும். சில நேரங்களில் பாகுபாடற்றவருக்கும் காத்திருக்கலாம். ஆனால் தீயவர்களுக்காகக் காத்திருக்கவே கூடாது. தீயவன், தன் பலத்தாலும், தொடர் முயற்சியாலும், புத்திக்கூர்மையாலும், ஆற்றலாலும் செல்வம் ஈட்டுவான் என்பது உண்மையே, ஆனால், அவனால் நேர்மையான புகழை வெல்லவே முடியாது. அதே போல, (அவன் எக்குலத்தில் பிறந்திருந்தாலும்) அவனால், உயர் குடும்பங்களின் நடத்தைகளையோ அறங்களையோ அடையவே முடியாது” என்றார் {ஆத்ரேயர்}

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்