Friday, February 20, 2015

மரத்தில் பதுங்கியிருக்கும் தீ! - உத்யோக பர்வம் பகுதி 37ஆ

Fire that lurketh in wood!| Udyoga Parva - Section 37b | Mahabharata In Tamil

(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 37) {விதுர நீதி - 12}
பதிவின் சுருக்கம் : ஊழியர்களின் நம்பிக்கையை வெல்வதால் கிடைக்கும் பயன், விரட்டப்பட வேண்டிய ஊழியன் யார்? ஊழியனின் குணங்கள் என்ன? மனிதன் செய்யக்கூடாதவை எவை? எவர் பணப்பறிமாற்றங்களில் ஈடுபடக்கூடாது?  மனிதனுக்குப் புகழைத் தரும் எட்டுக் குணங்கள் எவை? புனித நீராடலால் கிடைக்கும் நன்மைகள் யாவை?  அளவான உணவால் கிடைக்கும் நன்மைகள் என்ன? யாருக்கு அடைக்கலம் அளிக்கக்கூடாது? யாரிடம் தானம் கேட்கக்கூடாது? யாரிடம் ஊழியம் செய்யக்கூடாது? பலங்களின் வகைகள் என்ன? நம்பத்தகாதவை எவை? புறக்கணிக்கப்படக்கூடாதவை எவை? ஆகியவற்றை விதுரன் திருதராஷ்டிரனிடம் விளக்கிச் சொன்னது...

{ஊழியர்கள் [பணியாட்கள்]}


{விதுரன் திருதராஷ்டிரனிடம் சொன்னான்} “ஓ! அய்யா {திருதராஷ்டிரரே}, ஆர்வத்துடன் தனக்கு நன்மைகள் செய்வதைத் தொடர்ந்து வரும் அர்ப்பணிப்புமிக்க ஊழியர்களிடம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தாத தலைவன் {முதலாளி}, தன் ஊழியர்களின் நம்பிக்கையை வென்றவர்கள் பட்டியலில் சேர்கிறான். {அந்த முதலாளி, தனது ஊழியனின் மாறாப்பற்றைப் [விசுவாசத்தைப்] பெறுகிறான்}. உண்மையில் பின்னவர்கள் {ஊழியர்கள்} அவனது {முதலாளியின்} துயர்நிறைந்த காலங்களிலும் அவனைப் பின்தொடருவார்கள். தன் ஊழியர்களுக்குக் கிடைக்கும் மானியங்களைப் பறிமுதல் செய்வதாலோ, அவர்களின் ஊதியத்தை நிறுத்துவதாலோ, ஒருவன் தனது செல்வத்தைத் திரட்டக் கூடாது. {அப்படிச் செய்தால்}, தங்கள் வாழ்வு மற்றும் இன்பத்துக்குரிய வழிகள் அடைபட்டுப் போவதால், பாசம் நிறைந்த {அவனது} ஆலோசகர்களும்கூட, அவனுக்கு {அந்த ஒருவனுக்கு} எதிராகத் திரும்பி (அவனது துன்ப காலத்தில்) அவனை விட்டுப் பிரிந்துவிடுவார்கள்.


முதலில் செயல்களின் நோக்கங்கள் அனைத்தையும் ஆலோசித்து, தனது வருமானம் மற்றும் செலவுகளைக் கணக்கில் கொண்டு, ஊழியர்களின் ஊதியத்தையும், படிகளையும் சரிபார்த்து, {ஊழியர்களைக் கொண்ட} சரியான கூட்டணியை ஒரு மன்னன் உருவாக்க வேண்டும். {ஊழியர்களின்} கூட்டணிகளால் அடைய முடியாதது எதுவும் இல்லை.

தனது அரசத் தலைவனின் நோக்கங்களை முழுமையாகப் புரிந்து கொண்டு, அனைத்துக் கடமைகளையும் சுறுசுறுப்பாகச் செய்யும் ஓர் அலுவலர் {ஊழியன்}, மரியாதைக்குரியவனாக இருந்து, தனது தலைவனுக்கு அர்ப்பணிப்போடு இருந்து, தன் தலைவனின் நன்மையையே எப்போதும் சொல்லும் ஒருவன், தனது சொந்த பலத்தின் அளவை முழுமையாக அறிந்து, {ஒரு செயலில் தன்னோடு இணைந்து பணியாற்றப் போகும்} மற்றவர்கள் பலத்தையும் அறிந்து இருப்பவன் ஆகியோரை ஒரு மன்னன் தனது இரண்டாவது பாதி என்றே கருத வேண்டும்.

எனினும், (தனது தலைவனால்) கட்டளையிடப்பட்டும், அந்தத் தலைவன் சொன்ன தடைகளை அலட்சியம் செய்து, தன் அறிவில் செருக்குக் கொண்டு, {தன் தலைவனால்} அறிவுறுத்தப்பட்ட எதையும் ஏற்க மறுத்து, தனது தலைவனுக்கு எதிராகப் பேசும் ஊழியனைச் சிறு தாமதமும் இன்றி விரட்டி விட வேண்டும்.

{ஊழியனின் எட்டு குணங்கள்}


செருக்கில்லாமை, திறமை, தாமதம் செய்யாமை, அன்பு, தூய்மை, கறைபடியாமை, நோய்ச்சுவடு இல்லாத குடும்பத்தில் பிறப்பு, மதிப்புமிக்கப் பேச்சு ஆகிய எட்டுக் குணங்கள் ஓர் ஊழியனிடம் இருக்க வேண்டும் என்று கற்றவர்கள் சொல்கிறார்கள்.


{ஊழியன் செய்யக்கூடாதது}


முன்னறிவிப்புச் செய்திருந்தாலும், எந்த மனிதனும் அந்திப்பொழுதிற்குப் {மாலைநேரத்திற்குப்} பிறகு, நம்பிக்கையுடன், ஓர் எதிரியின் வீட்டில் நுழையக்கூடாது. இரவு நேரத்தில், மற்றவர் இடத்தின் முற்றத்தில், ஒருவன் பதுங்கக் கூடாது. மன்னனால் விரும்பப்படும் பெண்ணிடம் இன்பம் பெற முயலக்கூடாது. இழிந்தோர் சேர்க்கையும், தான் சந்திக்கும் அனைவரிடமும் ஆலோசிக்கும் பழக்கமும் கொண்ட ஒருவன் எடுத்திருக்கும் முடிவுக்கு எதிராக உம்மை அமைத்துக் கொள்ளாதீர். “நான் உன்னை நம்பவில்லை” என்று எப்போதும் அவனிடம் சொல்லாதீர்; மாறாக ஏதாவதொரு காரணத்தைக் கற்பித்து, சாக்குபோக்கு சொல்லி {அவனை} அனுப்பிவிடுவீராக.

{பணப் பறிமாற்றம்}


ஆதீத கருணை கொண்ட மன்னன், கீழ்த்தரமான நடத்தை கொண்ட பெண், மன்னனின் ஊழியன், மகன், தம்பி, ஓர் ஆண் குழந்தையுடைய {மகனுடைய} விதவை, படையில் ஊழியம் செய்பவன், பெரும் இழப்புகளால் பாதிக்கப்பட்டவன் {பெரும் நஷ்டமடைந்தவன்}, ஆகியோர் கடன் கொடுக்கவோ, கடன் வாங்கவோ கூடிய பணப்பரிமாற்றங்களில் ஈடுபடக்கூடாது.


{மனிதனைப் பிரகாசிக்கச் செய்யும் எட்டு குணங்கள்}


ஞானம், நற்குடி {நல்ல குலத்தில் பிறப்பு}, சாத்திரங்களறிதல், தன்னடக்கம், ஆற்றல், மிதமான உரை {பேச்சு}, தனது சக்தியின் அளவுக்குத்தக்க தானம், நன்றியறிதல் ஆகிய எட்டு குணங்களும் மனிதர்கள் மேல் மிளிர்வைச் சிந்தும். ஓ! அய்யா {திருதராஷ்டிரரே}, தானத்தினால், இந்த உயர்ந்த குணங்கள் அத்தனையும் ஒருவனால் அவசியம் ஒன்றாகக் அடையப்படுகிறது. ஒரு மனிதனுக்கு மன்னன் உதவி செய்யும்போது, அந்த (அரச உதவி) நிகழ்வு அனைத்து குணங்களையும் ஒன்றாகக் கொண்டு வந்து, அவற்றை ஒன்றாகப் பிணைக்கிறது.

{[புனித] நீராடல்}


{புனித} நீராடாலைச் செய்வதன் மூலம் ஒருவன், பலம், அழகு, தெளிவான குரல், அகரவரிசை ஒலிகள் அனைத்தையும் உச்சரிக்கும் திறன், மென்மை, நறுமணம், தூய்மை, அருள்நிறைவு, உறுப்புகளின் நுண்ணயம், அழகிய பெண்கள் ஆகிய பத்தை {10} வெல்லலாம்.

{மித உணவு}


உடல்நலன், நீண்ட வாழ்நாள், சுகம், உடல்நலமுள்ள குழந்தைகள், பெருந்தீனிக்காரன் என்று எவராலும் நிந்திக்கப்படாமை ஆகியவற்றை அளவாக உண்பவன் வெல்கிறான் {அடைகிறான்}.

{அடைக்கலம்}


எப்போதும் முறையற்ற செயல் செய்பவன், அதிகமாக உண்பவன், எல்லோராலும் வெறுக்கப்படுபவன், பெரும் ஏமாற்றுக்காரன், கொடுமைபுரிபவன், காலம் இடம் ஆகியவற்றின் தன்மைகளை அறியாதவன், பண்பற்ற வகையில் {அநாகரிகமாக} உடுத்துபவன் ஆகியோருக்கு ஒருவன் தன் வீட்டில் அடைக்கலம் கொடுக்கக்கூடாது.

{இவர்களிடம் தானம் கேட்கக் கூடாது}


ஒருவன் எவ்வளவுதான் துன்பத்தில் இருந்தாலும், பிச்சையிடாத கஞ்சன், பிறரை குறை பேசுபவன் {நிந்திப்பவன்}, சாத்திரங்களை அறியாதவன் {மூடன்}, காட்டில் வசிப்பவன், தந்திரம் செய்யும் வஞ்சகன், மதிப்புக்குரியோரை மதிக்காதவன், கொடூரமான மூர்க்கன், பிறருடன் சண்டையிடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பவன், நன்றிமறந்தவன் ஆகியோரிடம் தானம் கோரவே கூடாது.

{இந்த ஆறு பேரிடம் ஊழியஞ்செய்யக்கூடாது}


எதிரி, எப்போதும் தவறிழைப்பவன், பொய்மைக்கு இணக்கமானவன் {எந்நாளும் பொய் சொல்பவன்}, தேவர்களிடம் பக்தி இல்லாதவன், அன்பில்லாதவன், அனைத்தையும் செய்ய வல்ல திறமையுள்ளவனாகத் தன்னைக் கருதிக் கொள்பவன் ஆகிய இந்த ஆறு இழிந்த மனிதர்களுக்காகக் காத்திருக்கவே {இந்த ஆறு இழிந்த மனிதர்களிடம் ஊழியஞ்செய்யவே} கூடாது.

ஒருவனின் நோக்கங்கள், (தங்கள் வெற்றிக்கு) வழிவகைகளையே சார்ந்திருக்கின்றன. அதே போல வழிமுறைகளும், {தங்களால் சாதிக்கப்பட வேண்டிய) அந்த நோக்கங்களின் தன்மையையே {இயல்புகளையே} சார்ந்துள்ளன. ஒன்றை ஒன்று சார்ந்து பிணைப்புடன் இருக்கும் இவற்றைச் {வழிமுறைகளும், நோக்கங்களும்} சார்ந்தே வெற்றி இருக்கிறது. மகன்களைப் பெற்று, யாரையும் சார்ந்தில்லாமல் அவர்கள் இருப்பதற்கு, ஏதாவது ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, கன்னிகைகளான தனது மகள்களைத் தக்க மனிதர்களுக்கு அளித்துவிட்டு {மணமுடித்துக் கொடுத்துவிட்டு}, காட்டிற்கு {ஓய்ந்திருக்க} சென்று, முனிவனாக வாழவே ஒரு மனிதன் விரும்ப வேண்டும். தனது மகிழ்ச்சிக்குச் செய்து கொள்வது போலவே, பரமாத்மாவின் உதவிகளை அடைய, அனைத்து உயிர்களுக்கும் நன்மையைச் செய்ய வேண்டும். அதுவே {பிற உயிரினங்களுக்கு நன்மையைச் செய்வதே} ஒரு மனிதனின் நோக்கங்கள் அனைத்தும் வெற்றியடைவதற்கு வேராக இருக்கும்.

புத்திசாலித்தனம், சக்தி, ஆற்றல், பலம், சுறுசுறுப்பு, விடாமுயற்சி ஆகியவற்றை வாழ்வாதாரமாகக் கொண்டிருப்பவனுக்கு என்ன கவலை இருக்க முடியும்?

பாண்டவர்களிடம் {உமக்கு} முறிவு ஏற்படுவதால் சக்ரனுடன் {இந்திரனுடன்} கூடிய தேவர்களேகூடக் கவலை கொள்வார்கள். அதனால் உண்டாகும் தீமைகளைப் பாரும். முதலில், உமது மகன்களான அவர்கள் அனைவருடனும் {அந்த முறிவால்} பகைமை உண்டாகும்; இரண்டாவது, தொடர்ச்சியாகக் கவலை நிறைந்த வாழ்வு ஏற்படும்; மூன்றாவதாக, குருக்களின் {கௌரவர்களின்} நல்ல புகழுக்கு கேடு உண்டாகும். கடைசியாக, உமது எதிரிகளாக இருப்பவர்களுக்கு அது {பாண்டவர்களுடனான அந்த முறிவு} மகிழ்ச்சியை உண்டாக்கும்.

ஓ! இந்திரனைப் போன்ற பிரகாசம் கொண்டவரே {திருதராஷ்டிரரே}, பெரிய அளவிலான வால்நட்சத்திரம் பூமியின் மீது குறுக்காக விழுவதைப் போல, பீஷ்மர், துரோணர், மற்றும் மன்னன் யுதிஷ்டிரன் ஆகியோரது கோபம் இந்த முழு உலகையும் எரித்துவிடும். உம்முடைய நூறு மகன்களும் {கௌரவர்களும்}, கர்ணனும், பாண்டுவின் மகன்களும் {பாண்டவர்களும்} ஒன்றாகச் சேர்ந்து கடல்களைக் கச்சையாகக் கொண்ட முழு உலகையும் ஆள முடியும். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தார்த்தராஷ்டிரர்கள் {கௌரவர்கள்} காடென்றால், பாண்டவர்களை, நான் புலிகளாக நினைக்கிறேன். ஓ! காட்டை அதன் புலிகளைக் கொண்டு வெட்டிவிடாதீர்! ஓ! புலிகள் காட்டில் இருந்து விரட்டப்படாதிருக்கட்டும்! புலிகளில்லாத காடும், காடில்லாத புலிகளும் இருக்க முடியாது. காடு புலிகளுக்கு உறைவிடம். புலிகள் அக்காட்டைப் பாதுகாக்கும்!

பாவிகளாக இருப்பவர்கள், தங்கள் குறைகளை உறுதி செய்து கொள்ளாததைப் போலப் பிறருடைய நல்ல குணங்களையும் உறுதி செய்ய மாட்டார்கள். உலகம் சார்ந்த ஆதாயத்தோடு {இலாபத்தோடு} இணைந்திருக்கும் அனைத்துக் காரியங்களிலும் உயர்ந்த வெற்றியை விரும்பும் ஒருவன், தொடக்க நிலையில் இருந்தே அறம் பயில வேண்டும். உண்மையான ஆதாயம் சொர்க்கத்தில் இருந்து பிரிந்திருப்பதில்லை. பாவங்களில் இருந்து விடுபட்ட ஆன்மா கொண்டவன், அறத்தில் உறுதியாக நிலைத்து நின்று, அனைத்துப் பொருட்களையும் அதன் இயல்பு மற்றும் இயல்பற்ற நிலைகளைப் புரிந்து கொண்டவனாக இருப்பான். அறம், பொருள், இன்பம் ஆகியவற்றைப் பின்பற்றும் ஒருவன், அந்த மூன்றின் கலவையையும் இவ்வுலகிலும், மறு உலகிலும் சரியான காலங்களில் அடைகிறான். கோபம் மற்றும் மகிழ்ச்சியின் சக்தியைக் கட்டுப்படுத்தி வைத்திருப்பவன், ஓ! மன்னா, பேரிடர் காலங்களிலும் தனது உணர்வுகளை இழக்காமல் செழிப்பை வெல்கிறான்.

{ஐந்து வகையான பலங்கள்}


ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நான் சொல்வதைக் கேளும். மனிதர்கள் ஐந்து வகையான வெவ்வேறு பலங்களைப் பெற்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவற்றில், கரங்களில் பலம் மிகத் தாழ்ந்த வகையைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது. நீர் அருளப்பட்டிப்பீராக. நல்ல ஆலோசகர்களை அடைவது இரண்டாவது வகைப் பலமாகக் கருதப்படுகிறது. செல்வம் அடைதலை மூன்றாவது வகைப் பலமாக ஞானிகள் கூறியுள்ளனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருவனுடைய தந்தை, பாட்டன் மூலம் இயற்கையாக அடையப்படுவதான பிறப்பின் பலம் நான்காவது வகைப் பலமாகக் கருதப்படுகிறது. எனினும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, எதைக் கொண்டு இவை அனைத்தையும் வெல்ல முடியுமோ, அனைத்து வகைப் பலங்களிலும் முதன்மையான அஃது, அறிவின் பலம் என்று அழைக்கப்படுகிறது.

சக உயிரின் மேல் பெரும் தீங்கை விளைவிக்க வல்ல ஒரு மனிதனின் எதிர்ப்பைத் தூண்டிவிட்ட பிறகு, அவன் தொலைவில்தான் இருக்கிறான் என்று நம்பக்கூடாது {நம்பி அமைதியாக இருக்கக்கூடாது}.

{நம்பத்தகாதவை}


பெண்கள், மன்னர்கள், பாம்புகள், தனது தலைவன் {முதலாளி}, எதிரிகள், இன்பங்கள், வாழ்வின் காலம் ஆகியவற்றில் எந்த ஞானிதான் {புத்திமான்தான்} நம்பி வைப்பான்? அறிவு என்ற கணையால் தாக்கப்பட்டவர்களுக்கு மருந்துகளோ மருத்துவர்களோ கிடையாது. அது போன்ற மனிதர்களைப் பொறுத்தவரை, ஹோம மந்திரங்களோ, மங்கள விழாக்களோ, அதர்வண வேத மந்திரங்களோ {ஆபிசார மந்திரங்களோ}, அல்லது விஷத்தினாலான மருந்துகளோ {ரசகுளிகைகளோ} பயனளிப்பதில்லை.

{புறக்கணிக்கக்கூடாதவை}


ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பாம்புகள், நெருப்பு, சிங்கங்கள், இரத்த உறவுகள் ஆகியவற்றில் ஒன்றையும் எந்த மனிதனும் புறக்கணித்துவிடக்கூடாது; இவை அனைத்துமே பெரும் வல்லமை கொண்டவை.

இவ்வுலகில் நெருப்பு என்பது பெரும் சக்தி வாய்ந்தது. மரத்தில் பதுங்கியிருக்கும் அது {நெருப்பு}, பிறர் தூண்டும் வரை அந்த மரத்தை எரிப்பதில்லை. அதே நெருப்பு, உராய்வினால் உண்டாக்கப்படும்போது, தன் சக்தியைக் கொண்டு அது {நெருப்பு தான்} பதுங்கியிருந்த மரத்தை மட்டுமல்ல, மொத்த காட்டையும், இன்னும் பல பொருட்களையும் சேர்த்தே எரித்துவிடுகிறது.

உயர்ந்த குலத்தில் பிறந்த மனிதர்களும் சக்தியில் நெருப்பைப் போன்றவர்களே. மன்னிக்கும் தன்மையோடு {பொறுமையோடு} இருக்கும் வரை, அவர்கள் கோபத்தின் எந்த வெளிப்புற அறிகுறிகளையும் காட்டிக் கொள்ளாமல், மரத்தில் உள்ள நெருப்பு போலவே அமைதியாக இருக்கிறார்கள்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகன்களோடு கூடிய நீர், கொடிகளின் தன்மையைப் பெற்றிருக்கிறீர், பாண்டுவின் மகன்களோ சால மரங்களாகக் கருதப்பட்டார்கள். சுற்றிப் படரப் பெருமரம் இல்லாமல் கொடி வளர்வதில்லை. ஓ! மன்னா, ஓ! அம்பிகையின் மகனே {திருதராஷ்டிரரே}, உமது மகன் {துரியோதனன்} காட்டைப் போன்றவன். ஓ! அய்யா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்கள் அந்தக் காட்டின் சிம்மங்கள் என்று அறிந்து கொள்வீராக. அதன் சிங்கங்கள் இல்லாமல் அந்தக் காடு அழிக்கப்பட்டு விடும். அதே போல {தங்கள் புகலிடமான} காடு இல்லாமல் சிங்கங்களும் அழிவுக்குள்ளாகும்” என்றான் {விதுரன்}.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்