Thursday, February 26, 2015

அனைத்து கல்விகளிலும் உயர்ந்தது! - உத்யோக பர்வம் பகுதி 40

Highest of all teachings! | Udyoga Parva - Section 40 | Mahabharata In Tamil

(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 40) {விதுர நீதி - 16}
பதிவின் சுருக்கம் : விரைவில் புகழ்பெறுபவன் எவன்? அந்தணரைக் கொன்ற பாவத்துக்கு நிகரானவை எவை? அறிவை அடைவதற்கு எதிரிகளாக இருப்பவை எவை? நிறைவடையாதவை எவை?  எவற்றை வீட்டில் வைத்திருக்க வேண்டும்? அனைத்து கல்வியிலும் உயர்ந்தது எது? ஈமச்சிதையில் இடப்பட்டவனைத் தொடர்ந்து செல்பவை எவை? ஆன்மா எவ்வாறு நதியோடு ஒப்பிடப்படுகிறது?  கட்டுப்படுத்தப்பட வேண்டியவை எவை? நால்வகையினரின் கடமைகள் எவை? என்பன போன்றவற்றைச் சொல்லி, யுதிஷ்டிரனை மன்னனாக்கும்படி திருதராஷ்டிரனிடம் விதுரன் சொல்வது...

விதுரன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான் “நல்லவர்களால் வழிபடப்பட்டு, செருக்கைக் கைவிட்ட நல்ல மனிதன் ஒருவன், தனது சக்திக்கு மீறாமல், தனது நோக்கங்களைத் தொடர்ந்து சென்றால், அவன் விரைவில் புகழை வெல்வான். ஏனெனில், ஒரு மனிதனிடம் மனநிறைவு கொண்ட நல்லவர்கள், நிச்சயம் அவனுக்கு மகிழ்ச்சியை அளிப்பார்கள். அநீதி நிறைந்த ஒரு பெரும் பொருளை, தன் சொந்த விருப்பத்தின் பேரில் கைவிடும் ஒருவன், தோலை {சட்டையை} உரித்து வெளியேறும் பாம்பு போல, அனைத்து எதிரிகளையும் கைவிட்டு மகிழ்ச்சியாக வாழ்வான். பொய்மையால் ஈட்டப்பட்ட வெற்றி, மன்னனிடம் ஏமாற்றுகரமான நடத்தை, நோக்கங்களில் நேர்மையற்ற உணர்வுகளை ஆசான் முன்பு வெளிப்படுத்தல் ஆகிய மூன்றும் பிராமணனைக் கொன்ற பாவத்திற்கு நிகரானவை ஆகும்.

{மாணவர்கள்}


அதீத பொறாமை, மரணம், தற்புகழ்ச்சி ஆகியவையே செழிப்பின் அழிவுக்குக் காரணங்களாகும். ஆசானைக் கவனிப்பதில் கவனமின்மை, அவசரம், தற்பெருமையின்மை ஆகிய மூன்றும் அறிவுக்கு {ஞானத்திற்கு} எதிரிகளாகும்.

சோம்பல், கவனமின்மை, அறிவாற்றலில் குழப்பம் {மதிமயக்கம்}, அமைதியின்மை, நேரத்தை வீணடிக்கும் கூடுகை {கூட்டம்}, அகந்தை, பேராசை, ஆகிய ஏழும் கல்வி கற்கும் மாணவர்களுடைய குறைகள் என்று சொல்லப்படுகின்றன. இன்பத்தில் ஆசை கொண்டவர்களால் அறிவை {ஞானத்தை} எப்படி அடைய முடியும்? கல்வி கற்கும் மாணவர்கள், இன்பம் அனுபவிப்பது ஆகாது. {வித்தையை விரும்புகிறவன் சுகத்தை விட வேண்டும்}. இன்பத்தில் பற்றுடையோர் அறிவை விட்டு விட வேண்டும். அதே போல அறிவில் பற்றுடையோர் இன்பத்தை விட்டுவிட வேண்டும்.

விறகால் நெருப்பு நிறைவடைவதில்லை (ஆனால் அதைவிட எந்த அளவையும் அஃது உட்கொள்ளும்). தான் பெரும் நதிகளால் பெருங்கடல் நிறைவடைவதில்லை (ஆனால் எத்தனை நதிகளையும் அஃது உள்வாங்கிக் கொள்ளும்). வாழும் மொத்த உயிரினங்களாலும் மரணம் மனநிறைவைக் கொள்வதே இல்லை (வாழும் அனைத்தும் இறக்கவே செய்யும்). அதே போல, ஓர் அழகான மங்கை, {அவள் கொண்ட) எத்தனை ஆடவரிலும் மனநிறைவடைவதில்லை.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நம்பிக்கை பொறுமையைக் கொல்கிறது {அழிக்கிறது}; யமன் வளர்ச்சியைக் கொல்கிறான்; ஈயாமை {தானமளிக்காமை} புகழைக் கொல்கிறது; செய்நேர்த்திகள் இல்லாமை {பரிபாலனம் செய்யாமை} கால்நடைகளைக் கொல்கிறது; கோபக்கார அந்தணன் ஒருவன் மொத்த நாட்டையுமே அழிக்கிறான்.

ஆடுகள், வெண்கலம் {பாத்திரங்கள்}, வெள்ளி, தேன், நச்சுமுறிவு {விஷமுறிவு} மருந்துகள், பறவைகள், வேதங்களை அறிந்த அந்தணர்கள், முதிர்ந்த உறவினர்கள், உயர் பிறப்பு பிறந்து வறுமையில் மூழ்கியவர்கள் ஆகியோர் எப்போதும் உமது வீட்டில் இருக்கட்டும். ஓ! பாரதரே, ஆடுகள், காளைகள், சந்தனம், வீணைகள் {இசைக்கருவிகள்}, கண்ணாடிகள், தேன், தெளிந்த நெய், இரும்பு, தாமிரம், சங்குகள், சாளக்கிராமம் (உள்ளே பொன் கொண்ட விஷ்ணுவின் கல் உருவம்), கோரோசனை [1] ஆகியவற்றைத் தேவர்களை வழிபடுவதற்காக ஒரு வீட்டில் வைத்திருக்க வேண்டும் என்று மனு கூறியிருக்கிறார்.

[1] பசுவின் வயிற்றிலிருந்து எடுக்கப்படும் மஞ்சள் நிறமுள்ள வாசனைப் பண்டம், அது மனிதர்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. http://ta.wiktionary.org/wiki/ கோரோசனை

{கல்விகள் [போதனைகள்] அனைத்திலும் உயர்ந்தவை}


ஓ! அய்யா {திருதராஷ்டிரரே}, பெருங்கனிகளை {பெரும்பலன்களைக்} கொடுக்க வல்ல மற்றொரு புனித பாடத்தை நான் உமக்குச் சொல்கிறேன். காமத்தாலோ, அச்சத்தாலோ, நிலையற்ற உள்ளத்தாலோ, சபலத்தாலோ அறத்தைக் {தர்மத்தைக்} கைவிடக்கூடாது. வாழ்வுக்காக {உயிருக்காக} கூட அறத்தைக் கைவிடக்கூடாது. இந்தப் பாடமே அனைத்துக் கல்வியிலும் {போதனைகளிலும்} உயர்ந்ததாகும். அறம் நித்தியமானது; இன்பமும், வலியும் {துன்பமும்} மாறி மாறி வருவன; வாழ்வோ {உயிரோ} உண்மையில் நித்தியமானதே என்றாலும், குறிப்பிட்ட பகுதிகளில் அது மாறி மாறியே வரும். நிலையாதிருப்பவற்றைக் {மாறி மாறி வருவனவற்றைக்} கைவிட்டு, நித்தியமானதைக் கடைப்பிடிப்பீராக. மனநிறைவு உமதாகட்டும். ஏனெனில், அடையக்கூடிய அனைத்திலும் மனநிறைவே உயர்ந்ததாகும். சிறப்புமிக்கவர்களும், பலமிக்கவர்களுமான மன்னர்கள், செல்வமும் சோளமும் {corn} {தானியங்களும்} அபரிமிதமாக விளையும் நிலங்களை ஆண்டு, தங்கள் நாடுகளை விட்டு, பரந்த இன்ப ஊற்றுகளை விட்டு, உலகத்தை அழிப்பவனுக்கு {யமனுக்கு} இரையானதைப் பாரும்.

மிகக் கவனமாக வளர்த்த மகன் இறக்கும்போது, அவனை மனிதர்கள் (சுடுகாட்டுக்குத்) தூக்கிச் சென்றுவிடுகிறார்கள். கலைந்த மயிருடனும், இரங்கத்தக்க வகையில் அழுதும் அந்த உடலை, ஏதோ ஒரு மரத்துண்டு போல ஈமச்சிதையில் இடுகிறார்கள். இறந்தவனின் செல்வத்தைப் பிறரே அனுபவிக்கின்றனர். அதே வேளையில் அவனது {இறந்தவனது} உடலின் தாதுக்களைப் பறவைகளும் நெருப்பும் உண்கின்றன. மறு உலகத்துக்கு, தன்னுடனே வரும் தனது தகுதிகள் {புண்ணியங்கள்} மற்றும் பாவங்கள் ஆகிய இரண்டை மட்டுமே அவன் {இறந்தவன்} கொண்டு செல்கிறான். ஓ! அய்யா {திருதராஷ்டிரரே}, உறவினர்கள், நண்பர்கள், மகன்கள் ஆகியோர் அந்த உடலைத் தூக்கி எறிந்துவிட்டு, பூக்களும் கனிகளுமற்ற மரத்தைத் துறந்து செல்லும் பறவைகளைப் போல, தங்கள் சுவடுகளை மீண்டும் பின்பற்றி {வந்த வழியே} செல்கிறார்கள். ஈமச்சிதையில் இடப்பட்டவனுடன் அவனது செயல்கள் {கர்மங்கள்} மட்டுமே செல்கின்றன. எனவே, மனிதர்கள் கவனமாகவும் படிப்படியாகவும் நீதிமிக்கத் தகுதிகளை {புண்ணியங்களை} ஈட்ட வேண்டும்.

இதற்கு மேலுள்ள உலகிலும், இதற்குக் கீழுள்ள உலகிலும், பெரும் பிரகாசமும், காரிருளும் உள்ள பகுதிகள் இருக்கின்றன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் பகுதிகளில் தான் மனிதர்களின் புலன்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றன என்பதை அறிந்து கொள்வீராக. ஓ!, அந்த இடங்கள் எதுவும் உமதாகாதிருக்கட்டும்.

இந்த வார்த்தைகளைக் கவனமாகக் கேட்டு, அதன்படி உம்மால் நடந்து கொள்ள முடிந்தால், நீர் மனிதர்களின் உலகில் பெரும்புகழை அடைந்து, இம்மையிலும் மறுமையிலும் அச்சத்தை அடையாதிருப்பீர்.

{ஆன்மா}


ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, ஆன்மா ஒரு நதியைப் போன்றது என்று சொல்லப்படுகிறது; அறத்தகுதிகளே {புண்ணியங்களே} அதன் புனித நீர்நிலைகள் {தீர்த்தங்கள்}; உண்மையே அதன் {ஆன்மா எனும் நதியின்} நீர்; தற்கட்டுப்பாடே அதன் {ஆன்மா என்ற நதியின்} கரைகள்; கருணையே அதன் அலைகள். ஆன்மா புனிதமானதென்பதாலும், ஆசையின்மையே உயர்ந்த தகுதி {புண்ணியம்} என்பதாலும், நீதிமான் அதில் நீராடுகிறான் {குளிக்கிறான்}. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஐம்புலன்களை நீராய்க் கொண்ட நதியே உயிர். ஆசை மற்றும் கோபமே அதன் முதலைகளும், சுறாக்களும் ஆகும். உமது தற்கட்டுப்பாட்டைத் தோணியாகக் கொண்டு, {மீண்டும் மீண்டும் பிறக்கும்} பிறவிகள் என்ற மடுக்களைத் தாண்டுவீராக.

அறிவு, அறம், கல்வி, வயது ஆகியவற்றில் சிறப்பான நண்பர்களை வழிபட்டும் மனநிறைவு கொள்ளச் செய்தும் இருக்கும் ஒருவன், தான் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதில் அவர்களது அறிவுரைகளை நாடுவதால் அவன் தவறாக வழிநடத்தப்படுவதே இல்லை.

ஒருவன் தனது காமத்தையும், வயிறையும் பொறுமையால் கட்டுப்படுத்த வேண்டும்; ஒருவனது கரங்களையும், பாதங்களையும் தனது கண்களாலும்; ஒருவனது கண்களையும் காதுகளையும் தனது மனதாலும்; ஒருவனது மனதையும் வார்த்தைகளையும் தனது செயல்களாலும் கட்டுப்படுத்த வேண்டும்.

தனது {புனித} நீராடல்களைத் தவிர்க்காமல், தனது புனித நூலை எப்போதும் அணிந்து, வேதகல்வியில் ஈடுபட்டு, சுத்தமற்ற உணவை எப்போதும் தவிர்த்து, உண்மையைப் பேசி, தனது குருவை மதித்துத் தனது செயல்களைச் செய்யும் ஓர் அந்தணன் பிரம்ம லோகத்தில் இருந்து எப்போதும் விழ மாட்டான்.

வேதங்களைக் கற்று, நெருப்பில் காணிக்கைகளைச் செலுத்தி, வேள்விகள் செய்து, குடிமக்களைக் காத்து, தனது ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, அந்தணர்களையும் பசுக்களையும் காக்கும் வகையில் தனது ஆயுதங்களைப் பயன்படுத்திப் போர்க்களத்தில் மாளும் ஒரு க்ஷத்திரியன் சொர்க்கத்தை அடைகிறான்.

வேதங்களைக் கற்று, சரியான நேரத்தில் பிராமணர்களுக்கும், க்ஷத்திரியர்களுக்கும், தன்னைச் சார்ந்தவர்களுக்கும் பிரித்து வழங்கி, மூன்று வகை நெருப்புகளில் வரும் புனிதப் புகையைச் சுவாசித்து இருக்கும் வைசியன் ஒருவன் மறுமையில் எப்போதும் அருளையே அனுபவிக்கிறான்.

பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் ஆகியோரை சரியான வகையில் முறையாக வழிபட்டு, அவர்களை மனநிறைவு கொள்ளச் செய்வதால் தனது பாவங்களை எரித்து, அமைதியாகத் தனது உடலைத் துறக்கும் ஒரு சூத்திரன் சொர்க்கத்தில் அருள்நிலை பெற்று இன்புறுகிறான்.

நால்வகையினரின் கடமைகளும் உம் முன்னே இப்படியே நிறுவப்பட்டுள்ளது. எனது பேச்சின் காரணத்தை நான் சொல்லும் போதே கேட்பீராக. பாண்டுவின் மகனான யுதிஷ்டிரன், தனது க்ஷத்திரியக் கடமைகளில் இருந்து விழப் போகிறான். எனவே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மன்னர்களின் கடமைகளைச் செய்யும் நிலையில் அவனை அமர்த்துவீராக” என்றான் {விதுரன்}.

திருதராஷ்டிரன் {விதுரனிடம்}, “ஓ! இனிமையானவனே {விதுரே}, நீ கற்பித்தது போலவே அனைத்தும் இருக்கின்றன. நீ சொல்லும்படி செய்யவே எனது இதயம் விரும்புகிறது. எனினும், நீ கற்பித்ததைப் போலவே எனது மனம் பாண்டவர்களிடம் சென்றாலும், துரியோதனனிடம் தொடர்பு ஏற்பட்டதுமே நான் வேறு வழியில் திரும்பி விடுகிறேன். எந்த உயிரினத்தாலும் விதியைத் தவிர்க்க முடியாது. உண்மையில், விதியே பாதையைச் சமைக்கிறது என்பது உறுதி என்றே நான் நினைக்கிறேன்; தனிப்பட்டவர்களின் முயற்சிகள் வீணானவையே” என்றான் {திருதராஷ்டிரன்}.

(விதுர நீதி முற்றும்)

சேனோத்யோக பர்வம் முற்றும்

இந்த விதுர நீதி பகுதிகளைப் பிற பதிப்புகளில் பிரஜாகரப் பர்வம் என்ற உபபர்வமாகக் காணலாம்.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்