Wednesday, February 25, 2015

செழிப்பு தங்குமிடம்! - உத்யோக பர்வம் பகுதி 39ஆ

Where does prosperity reside! | Udyoga Parva - Section 39b | Mahabharata In Tamil

(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 39) {விதுர நீதி - 15}
பதிவின் சுருக்கம் : ஆலோசகனைப் பேணுதல்; நூறு உயர்பிறப்பாளர்களைவிட உயர்ந்தவன் எவன்? யாவருடைய நட்பு கெடுவதில்லை? புத்திசாலி ஒருவன் யாரைத் தவிர்க்க வேண்டும்? யாருடன் நட்பு கொள்ளக்கூடாது? யாருடன் நட்பு கொள்ள வேண்டும்? எவை வாழ்நாளை நீட்டிக்கின்றன? எவன் ஆண்மை நிறைந்தவன்?  எவை செழிப்பைக் கொண்டுவரும்?  எவன் பெரிய மனிதன்? யாரிடம் செழிப்பு தங்காது? செழிப்பின் வேர்கள் எவற்றில் இருக்கின்றது? இரக்கப்படத்தக்கவன் யார்? என்பன போன்றவற்றைச் சொல்லி பாண்டுவின் மகன்கள் மற்றும் தன் மக்களிடம் திருதராஷ்டிரன் பாரபட்சம் பார்க்கக்கூடாது என விதுரன் சொன்னது....

{ஆலோசகர்களைப் பேணுதல்}


{விதுரன் திருதராஷ்டிரனிடம் சொன்னான்} “கல்வியறிவு, அறம், ஏற்புடைய {இனிய} தோற்றம், நண்பர்கள், இன்சொல் {இனிய பேச்சு}, நல்ல இதயம் ஆகியவற்றைக் கொண்டு, அறிவாளிகளை {ஞானிகளை} வழிபடும் ஓர் ஆலோசகனை மன்னன் பேணிப் பாதுகாக்க வேண்டும். தாழ்ந்த பிறப்போ, உயர் பிறப்போ கொண்டிருந்தாலும், கண்ணிய தொடர்புகளின் விதிகளை மீறாமல் {மரியாதையைத் தாண்டாமல்}, அறத்தில் ஒரு கண் கொண்டு {தர்மத்தை விரும்பி}, பணிவும் அடக்கமும் கொண்ட ஒருவன், நூறு உயர் பிறப்பாளர்களை விட உயர்ந்தவனாவான். கமுக்கமான {இரகசிய} நோக்கங்கள், இன்பங்கள், ஈட்டல்கள் {சம்பாதனைகள்} {அறிவீட்டல்கள்} போன்ற அனைத்து காரியங்களிலும் யாவருடைய {எந்த இருவர் அல்லது பலரின்} இதயங்கள் உடன்படுகின்றனவோ, அவர்களுக்குள் உள்ள நட்புக்கு எப்போதும் கெடுதல் உண்டாவதில்லை.


புற்களால் மறைக்கப்பட்டிருக்கும் குழியின் வாய் போல, தீய ஆன்மா கொண்ட மூடனை ஒரு புத்திசாலி தவிர்க்க வேண்டும். ஏனெனில், அப்படிப்பட்ட மனிதனுடனான நட்பு நிலைக்காது.

செருக்குடையவன், மூடன், கடுமையானவன், மூர்க்கன், நீதி வழுவியவன் ஆகியோருடன் அறிவுள்ள ஒரு மனிதன் நட்பை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது.

நன்றி, அறம் ஆகியவற்றைக் கொண்டு, உண்மைநிறைந்து, பெரிய இதயம்கொண்டு, அர்ப்பணிப்புடன் இருந்து, தனது புலன்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவன், தனது கண்ணியத்தைக் காத்துக் கொண்டு, எப்போதும் நண்பர்களைக் கைவிடாமல் இருக்கிறான். அப்படிப்பட்டவனையே நண்பனாகக் கொள்ள விரும்ப வேண்டும்.

தங்களுக்குரிய பொருட்களில் {புலன் நுகர் பொருட்களில்} இருந்து புலன்களை {முற்றிலும்} விலக்குதல், மரணத்திற்கே ஒப்பானதாகும். அதே போல, அந்தப் பொருட்களில் புலன்களின் ஆதீத ஈடுபாடு தேவர்களையே கூட அழித்துவிடும்.

பணிவு, அனைத்து உயிர்களிடத்தும் அன்பு {ஜீவகாருண்யம்}, மன்னிக்கும் குணம் {பொறுமை}, நண்பர்களிடம் மரியாதை ஆகியவை வாழ்நாளை {ஆயுளை} நீட்டிக்கின்றன என்று கற்றோர் கூறியுள்ளனர்.

ஒருமுறை கையறு நிலையைத் {விரக்தி} தந்த அறக் கொள்கை நோக்கங்களை {அநியாயத்தால் கெடுக்கப்பட்ட ஒரு பொருளை} உறுதியான தீர்மானத்துடன் {நல்ல நியாயத்தால்} முயன்று அடைபவனே உண்மையான ஆண்மை {உத்தம புருஷர்களின் விரதம்} கொண்டவனாகச் சொல்லப்படுகிறான்.

{செழிப்பும் பொறுமையும்}


எதிர்காலத்தில் பயன்படுத்த வேண்டிய தீர்வுகளை அறிந்தவன், தற்காலத்தில் உறுதியான தீர்மானத்துடன் இருப்பவன், கடந்த காலத்தைக் கருத்தில் கொண்டு, தொடங்கப்போகும் ஒரு செயல் எப்படி முடியும் என்பதை {சரியாக} எதிர்பார்ப்பவன் தனது நோக்கங்கள் அனைத்தையும் அடைகிறான்.

சொல், செயல், எண்ணம் ஆகியவற்றால் எவற்றை ஒரு மனிதன் தொடர்கிறானோ, அவற்றைத் தானே அடைகிறான்; எனவே, ஒருவன் தனக்கு நன்மையைத் தரும் காரியங்களையே முயல வேண்டும். நன்மையை அடைந்த பிறகும் முயற்சி செய்வது {மங்களத் திரவியங்களைத் தொடுவது}, காலம், இடம், வழிவகைகள் {முறைகள்} ஆகியவற்றின் தன்மைகளை அறிவது {உதவியின் நிறைவை அறிவது}, சாத்திரங்களை அறிவது, செயல்பாடு, ஒளிவுமறைவற்ற தன்மை, நல்லவர்களுடன் தொடர்ச்சியான சந்திப்புகள் ஆகியன செழிப்பையே கொண்டு வரும். நன்மை, ஆதாயம், செழிப்பு ஆகியவற்றின் வேர் விடாமுயற்சியே.

விடாமுயற்சியுடன், மனவேதனைக்கு ஆளாகாமல், தனது நோக்கத்தைத் தொடர்ந்து செய்வதால், ஒரு மனிதன் முடிவிலாக மகிழ்ச்சியை அடைந்து, உண்மையில் பெரிய மனிதன் ஆவான்.

ஓ! அய்யா {திருதராஷ்டிரரே}, பலமும் சக்தியும் கொண்ட ஒரு மனிதனுக்கு, அனைத்து இடங்களிலும், எல்லாக் காலங்களிலும், மன்னிக்கும் தன்மையை {பொறுமையை} விட எதுவும் மிகுந்த மகிழ்ச்சியையும், நன்மையையும் தராது. பலவீனனோ அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் பொறுமையுடன் {மன்னிக்கும் தன்மையுடன்} இருக்க வேண்டும். சக்தியுள்ளவன், அறநோக்கத்தால் மன்னிப்பவனாக {பொறுமையுள்ளவனாக} வேண்டும்; வெற்றியையும், தோல்வியையும் சமமாகக் கருதுபவன் இயல்பாகவே மன்னிக்கும் தன்மையுடன் இருக்கிறான்.

அறத்திற்கும், பொருளுக்கும் பழுதேற்படுத்தாத நிறைவை அடைய, ஒருவன் இன்பத்தேடலை நிச்சயம் தொடரவேண்டும். எனினும், புலன்களில் முழுதாய் ஈடுபட்டுவிட்டு  மூடனைப் போலவும் அவன் நடந்து கொள்ளக்கூடாது.

துயரத்தால் துன்புறுத்தப்படுபவன், தீய வழிகளுக்கு அடிமையாக இருப்பவன், இறைமையை {பரமாத்மாவை} மறுப்பவன் {நாத்திகன்}, சோம்பேறி, புலன்களைத் தனது கட்டுப்பாட்டில் வைக்காதவன், முயற்சியற்றவன் ஆகியோரிடம் எப்போதுமே செழிப்பு தங்காது.

அடக்கமாக இருக்கும் எளிமையான மனிதன், தனது பணிவால் பலவீனமானவனாகக் கருதப்பட்டு, தவறான அறிவு படைத்தவர்களால் துன்புறுத்தப்படுகிறான் {அவமதிக்கப்படுகிறான்}.

அளவுக்கதிகமான தயாளன், அளவில்லாமல் தானமளிப்பவன், மிதமிஞ்சிய துணிவுள்ளவன், கடுமையான நோன்புகளைப் பயில்பவன், அறிவில் செருக்குடையவன் ஆகியோரிடம் கொண்ட பயத்தினால், செழிப்பு {எனும் லட்சுமி தேவி} அவர்களை அணுகுவதேயில்லை.

அதிகக் குணம் கொண்டவனிடமும், {நற்} குணமே அற்றவனிடமும் செழிப்பு தங்குவதில்லை. அனைத்து அறங்களின் சேர்க்கையை அவ ள் விரும்புவதில்லை. அதே போல எந்த அறங்களும் அற்றவர்களிடமும் அவள் மகிழ்ச்சி கொள்வதில்லை. கண்பார்வையற்ற {குருட்டு} பசுப் போல, செழிப்பானவள், குறிப்பிடத்தக்கவனாக இல்லாதவனிடம் கூட தங்குகிறாள் {யாரிடம் தங்குவாள் எனத் தெரியாது}.

வேதங்களின் கனிகளே {பயன்களே} நெருப்பின் முன் செய்யப்படும் (ஹோமச்} சடங்குகள்; நல்ல மனநிலை மற்றும் நடத்தையின் கனிகளே சாத்திரங்களின் அறிவு. கலவி இன்பமும், வாரிசுகளும் பெண்களின் கனிகள்; இன்பமும் ஈகையும் செல்வத்தின் கனிகள். பாவத்தால் ஈட்டப்பட்ட செல்வத்தைக் கொண்டு தனது செழிப்பைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளைச் செய்யும் ஒருவன், (அக்காரியத்திற்காக) பாவத்தால் விளைந்த பொருட்களைப் பயன்படுத்தியதன் விளைவாக, அதன் {செழிப்பின்} கனிகளை {பயன்களை} அடுத்த உலகில் பெறமாட்டான்.

பாலைவனங்கள், அல்லது ஆழ்ந்த கானகங்கள், அல்லது அடைவதற்கரிதான கடுமை நிறைந்த இடங்கள் ஆகியவற்றின் மத்தியிலும், அனைத்துவிதமான அச்சங்கள் மற்றும் ஆபத்துகளின் மத்தியிலும், அல்லது தன்னைத் தாக்கப்போகும் மரண ஆயுதம் ஓங்கப்பட்டிருந்தாலும், மனோபலம் கொண்ட ஒரு மனிதன், அவற்றுக்கு முன்னிலையில் அச்சத்தை அடைவதில்லை.

{செழிப்பின் வேர்}


முயற்சி, தற்கட்டுப்பாடு {சுயக்கட்டுப்பாடு}, திறன், கவனம், உறுதி, நினைவு {ஞாபக சக்தி}, முதிர்ச்சியுடன் தீர்மானித்த செயல்களின் துவக்கம் ஆகியவையே செழிப்பின் வேர் என அறிவீராக.

தவங்களே துறவிகளின் பலம்; வேதங்களே அதை அறிந்தவர்களின் பலம்; பொறாமையே தீயவர்களின் பலம்; அதே போல, மன்னிக்கும் தன்மையே {பொறுமையே} அறம்சார்ந்தவர்களின் பலமாகும்.

நீர், கிழங்குகள், பழங்கள், பால், தெளிந்த நெய், அந்தணரின் விருப்பம், ஆசானின் உத்தரவு, மருந்து {ஔஷதம்} ஆகிய எட்டும் நோன்பை அழிக்காதவையாகும்.

எது தனக்குக் கெடுதலாக இருக்கிறதோ, அதை அவன் வேறு ஒருவனுக்குச் செய்யக்கூடாது. சுருக்கமாக, இதுவே அறம் எனப்படுவதாகும். பிற வகை அறங்களும் இருக்கின்றன. ஆனால், அவை உறுதியற்றவை. கோபத்தை, மன்னிக்கும் தன்மையால் {பொறுமையால்} வெல்ல வேண்டும்; தீயவர்களை நேர்மையால் வெல்ல வேண்டும்; கஞ்சனைக் கொடையாலும், பொய்யை உண்மையாலும் வெல்ல வேண்டும்.

பெண்கள், ஏமாற்றுக்காரன், சோம்பேறி, கோழை, மூர்க்கன், பலத்தில் செருக்குடையவன், திருடன், நன்றிமறந்தவன், இறைமறுப்பாளன் {நாத்திகவாதி} ஆகியோரை ஒருபோதும் நம்பக்கூடாது.

பெரியோரை மரியாதையாக வணங்கி, முதிர்ந்தவர்களுக்குப் பணிவிடை செய்பவனின் சாதனைகள், வாழ்நாளின் {ஆயுளின்} அளவு, புகழ், சக்தி ஆகிய நான்கும் எப்போதுமே பெருகுகிறது.

வலிநிறைந்த முயற்சியல்லால் அடைய முடியாத பொருட்களிலோ {நோகாமல் கிடைக்கும் அரிய பொருட்களிலோ}, நீதியைத் தியாகம் செய்வதிலோ, எதிரியிடம் தலைவணங்குவதிலோ உமது இதயத்தைச் செலுத்தாதீர்.

{இரக்கப்படத் தக்கவன்}


அறிவில்லாத மனிதன் இரக்கப்படத்தக்கவன்; கனியற்ற கலவி இரக்கப்படத்தக்கது; ஒரு நாட்டில் உணவற்று இருக்கும் மக்கள் இரக்கப்படத்தக்கவர்கள்; மன்னன் இல்லாத நாடு இரக்கப்படத்தக்கது. உடல் கொண்ட உயிரினங்களின் வலிக்கும், பலவீனத்திற்கும் தோற்றுவாய்களாகும் இவை.

குன்றுகள் மற்றும் மலைகளுக்குச் சிதைவை உண்டாக்கும் மழை; பெண்களுக்கு வேதனையை உண்டாக்கும் இன்பமின்மை; இதயத்திற்குக் கணையாகும் கடுஞ்சொற்கள். வேதங்களின் களங்கமான கல்லாமை; அந்தணர்களிடம் நோன்பின்மை; பூமிக்கு {பூமியின் களங்கமான} வாஹ்லீகர்கள்; மனிதர்களின் {களங்கமான} பொய்மை; {அரிய பொருட்களின் மீது} கற்புடைய பெண்களின் ஆர்வம்; பெண்களுக்கு வீட்டை விட்டு வெளியேறுதல் களங்கம்}. தங்கத்தின் களங்கம் வெள்ளி; வெள்ளிக்கு ஈயம்; ஈயத்திற்குக் காரீயம்; காரீயத்துக்கு {களங்கமான} பயனற்ற கசடுகள் ஆகியவை ஒவ்வொன்றுக்கும் பலவீனத்தையும் வலியையும் தரும்.

படுப்பதால் உறக்கத்தையும்; ஆசையால் பெண்களையும்; எரிபொருளால் {விறகினால்} நெருப்பையும், குடிப்பதால் மதுவையும் ஒரு மனிதனால் வெல்ல முடியாது.

நண்பனை தானத்தாலும், எதிரிகளைப் போரினாலும், மனைவியை உணவு மற்றும் பானங்களாலும் வென்றவனுக்கு வாழ்வு பயனுள்ளதே. ஆயிரம் உள்ளவர்களும் வாழ்கிறார்கள்; நூறு உள்ளவர்களும் வாழவே செய்கிறார்கள்.

ஓ! திருதராஷ்டிரரே ஆசையைத் துறப்பீராக. ஏதாவதொரு வழியில் தங்கள் வாழ்வைப் பராமரிக்க முடியாதவர்கள் என்று யாரும் இல்லை. இந்தப் பூமியில் இருக்கும் உமது நெல், கோதுமை, தங்கம், கால்நடைகள், பெண்கள் ஆகிய அனைத்தும் ஒரு மனிதனைக் கூட மனநிறைவு கொள்ளச் செய்யாது…

இதை நினைவில் கொண்டே, அறிவாளிகள் உலகளாவிய ஆளுகை இல்லை என்பதற்காக எப்போதுமே வருந்துவதில்லை.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நான் மீண்டும் உமக்குச் சொல்கிறேன். பாண்டுவின் மகன்கள் மற்றும் உமது மகன்கள் ஆகிய உமது பிள்ளைகளின் மீது சமமான நடத்தையைக் கடைப்பிடிப்பீராக. {அவர்களுக்குள் பாரபட்சம் பாராமல் இருப்பீராக}.” என்றான் {விதுரன்}.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்